கே.செட்டிப்பாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் 28-ந் தேதி நடக்கிறது

விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. கண்புரை நோயாளிகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படும்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டப் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மற்றும் விவேகானந்தா சேவா அறக்கட்டளை, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் திருப்பூர் தாராபுரம் சாலை கே. செட்டிப்பாளையம் விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் நாளை மறுநாள் 28ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

முகாமில் கண்புரை நோய், நீர் அழுத்த நோய், மாலைக்கண் நோய், மாறுகண்நோய்,சீழ் நீர்வடிதல், தூரப்பார்வை, கிட்டப்பார்வை ஆகிய கண் நோய்களுக்களுக்கான பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது. முகாமுக்கு வருபவர்கள் தெளிவான வீட்டு முகவரியையும், போன் நம்பரையும் எழுதிக்கொண்டு வர வேண்டும். கண்புரை நோயாளிகளுக்கு கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படும். கிட்டப்பார்வை, தூரப்பார்வையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோதனை முகாமிலேயே குறைந்த விலையில் கண்ணாடிகள் வழங்கப்படும். இந்த முகாமில் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு 96552 39828 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com