search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு மருத்துவ முகாம்"

    • செம்பரம்பாக்கம் ஏரியில் 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டபோதும் குடிசை பகுதி மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
    • எவ்வளவு கனமழை பெய்தாலும், அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்த பிறகு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு நிருபர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் அதை வடிய வைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாறில் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்த போதும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஒரே ஒரு பாதிப்பு, மாம்பலம் கால்வாய் அதை எதிர்கொள்ள திணறியதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செம்பரம்பாக்கம் தண்ணீரை 4 ஆயிரம் கனஅடியாக குறைக்க சொல்லி உள்ளார்.

    அதனால் 6 ஆயிரம் கன அடியில் இருந்து 4 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக மாம்பலம் பகுதியில் பாதிப்புக்கு உள்ளான இடங்களில் அதாவது தி.நகர் தொகுதிக்கு உட்பட்ட 20-க்கும் மேற்பட்ட தெருக்களின் தண்ணீர் படிப்படியாக குறைய தொடங்கும்.

    இது சம்பந்தமான விளக்கங்களை முதலமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்து கூறினார்கள்.

    இப்போது நாம் எவ்வளவு பெரிய கால்வாய் கட்டி இருந்தாலும், கடந்த 1 மாத காலமாக ஒவ்வொரு நாளும் 5, 6 செ.மீ. மழை பொழிந்தது. அப்போது மழைநீர் ஏதும் தேங்கவில்லை. 15 செ.மீ. மழை பெய்திருந்தாலும், பாதிப்பு என்பது ஒரு சில இடங்களில் தெரிய தொடங்கி உள்ளது.

    அந்த பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய அடுத்து 2, 3 நாட்களில் வர இருக்கிற கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ள ஏதுவாக இன்றைக்கே பாதிப்புக்கான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு மட்டுமல்லாது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எங்கெங்கு பாதிப்பு உள்ளதோ, அங்கெல்லாம் மோட்டார்களை வைப்பது போன்ற பல்வேறு நிலைகளை மேற்கொள்ள முதலமைச்சர் கூறி உள்ளார்.

    அதனால் மீட்பு படையினரும் ஏராளமான வகையில் தயார் நிலையில் உள்ளனர். 

    குடியிருப்பு பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யவும், பம்பிங் ஸ்டேஷன் முழு நேரமும் இயங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.

    தற்போது பல பகுதிகளில் கால்வாய் தூர்வாரப்பட்டதன் காரணமாக மழைநீர் வேகமாக வடிந்து வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள் பலன் அளித்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் விரைந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    வருகிற 1-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை பெய்யும் கனமழையை எதிர்கொள்ள அரசு நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முகாமில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் வட்டார வளமையத்தின் சார்பில் 6 முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

    மேலும், முகாமில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு நடைபயிற்சி உபகரணங்கள் (வாக்கர்), தேசிய அடையாள அட்டை போன்ற நலத் திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் குறித்து பேசினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்துசெல்வி வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுநர் ஆனந்தராஜ் பாக்கியம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் நோக்க உரை ஆற்றினார். கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தெய்வபிரியா வாழ்த்தி பேசினார். முகாமில் மனநல மருத்துவர் தேவிபிரபா கல்யாணி, காது மூக்கு தொண்டை மருத்துவர் ஜெயலட்சுமி, கண் மருத்துவர் முகமது அப்துல்லா, எலும்பு முறிவு மருத்துவர் விஸ்வநாத் பிரதாப்சிங் ஆகிய மருத்துவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளை பரிசோதனை செய்தனர்.

    தகுதியான குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் வாக்கர் போன்ற உபகரணங்கள் உடனடியாக வழங்கப்பட்டது. மேலும், காது கேட்கும் கருவி, ஸ்மார்ட் கார்ட், ரெயில் பாஸ், பஸ் பாஸ், மாதாந்திர உதவி தொகை, பெற்றோர்களுக்கு தையல் எந்திரம், வீல் சேர், கேலிபர், ட்ரை சைக்கிள் போன்ற உபகரணங்கள் வழங்குவதற்கு தகுதியான குழந்தைகள் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதில் தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் கார்த்திக், மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர் வீரமணி, தகவல் தொழில்நுட்ப அணி ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிறப்பாசிரியர் சிவகுமார் நன்றி கூறினார்.

    • உசிலம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் 75 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த முகாமில் 75 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அதில் 17 பேருக்கு தேசிய அடையாள அட்டை, நலவாரிய பதிவு செய்து பெறப்பட்டது. மேலும் 10 பேருக்கு தனித்துவ அடையாள அட்டைகளுக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் ெரயில்வே, பஸ் பயண சலுகைக்கான மருத்துவ சான்றுகள் வழங்கப்பட்டது.

    முகாமில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன் மாவட்ட, கல்வி அலுவலர் கணேசன், உதவி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கார்மேகம், சரவண முருகன், புள்ளியியல் ஆய்வாளர் பால்சாமி, வட்டார கல்வி அலுவலர்கள் சுப்புராஜ், திலகவதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்த்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெயந்தி, வளமைய சிறப்பு பயிற்றுநர் மகேஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
    • மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் தொடர்பான கோரிக்கை குறித்து பதிவு செய்யப்படுகிறது.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நாளை முதல் 20ந் தேதி வரை 8 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.

    11-ந் தேதி தேனி பி.சி.கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி , 12-ந் தேதி ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 13-ந் தேதி போடிநாயக்கனூர் ஜ.கா.நி.மேல்நிலைப் பள்ளி, 17-ந் தேதி சின்னமனூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி (காலனி) மற்றும் உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, 18-ந் தேதி கம்பம் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி (உத்தமபுரம்), 19-ந் தேதி பெரியகுளம் எட்வர்ட் நினைவு நடுநிலைப் பள்ளி, 20-ந் தேதி மயிலாடும்பாறை ஜி.ஆர்.வி.மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 8 நாட்கள் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

    இந்த சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்று வழங்குதல்,தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்தல், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உதவி உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கு ஆலோசனை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் தொடர்பான கோரிக்கை குறித்து பதிவு செய்யப்படுகிறது.

    மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 6, குடும்ப அட்டை நகல் , ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • திண்டுக்கல் மாநகராட்சி டெங்கு கொசுக்கள் தடுப்பு பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
    • திண்டுக்கல்லில் தினந்தோறும் 6 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கழிவுநீர் ஓடைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன் மூலம் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது.

    திண்டுக்கல் மாநகராட்சி டெங்கு கொசுக்கள் தடுப்பு பணியில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழைக்கு வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் தனிப் பிரிவு தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் வைரஸ் காய்ச்சல் தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த நகர ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    வைரஸ் காய்ச்சல் தொற்று அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதிகளில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேட்டுப்பட்டி பகுதியில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமை கமிஷனர் ரவிச்சந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    திண்டுக்கல்லில் தினந்தோறும் 6 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை கண்டறிந்து நிலவேம்பு கசாயம், ஓ.ஆர்.எஸ் கரைசல் மற்றும் மருந்துகள் வழங்கப்படுகிறது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பிற சேவைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
    • மேலும், மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கான 201 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

    தேனி:

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்து தெரிவித்ததாவது,

    தேனி மாவட்டத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் மருத்துவச் சான்று, தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்தல், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உதவி உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் தொடர்பான கோரிக்கை குறித்து பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான உதவி மையம் போன்ற பல்வேறு விதமான சேவைகள் வழங்கப்பட்டது.

    மேலும் இச்சிறப்பு முகாமிற்கு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பிற சேவைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    இம்முகாமில் 66 நபர்களுக்கு அடையாள அட்டை பதிவு செய்து வழங்கப்பட்டுள்ளது, 42 நபர்களுக்கு முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டைகளும், 132 நபர்களுக்கு ரயில் மற்றும் பஸ் பயண அட்டைகளையும், 89 நபர்களுக்கு தேசிய தரவுத்தள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு புதிய ஆதார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கான 201 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. முகாமில் 214 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, டாக்டர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வாகன விபத்து வழக்கில் ஊனச் சான்று பெறுவதற்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • இதில் விபத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 200 நபர்கள் முகாமின் மூலம் பயன் அடைந்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வாகன விபத்து வழக்கில் ஊனச் சான்று பெறுவதற்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.இதற்கு மாவட்ட நீதிபதி முத்துசாரதா தலைமை தாங்கினார்.

    விழாவில் தலைமை குற்றவியல் நீதிபதி மோகனா, டாக்டர்கள் கவிதா, லலித் குமார், வக்கீல்கள் சங்க தலைவர் செந்தில் குமார், செயலாளர் உதயகுமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக வக்கீல் சரவணகுமார் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதில் விபத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 200 நபர்கள் முகாமின் மூலம் பயன் அடைந்தனர்.

    • கால்நடைகளுக்கு ஏற்படும் நோயைக் கண்டறிந்து, நோய் பரவாமல் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் மாவட்டம் முழுவதும் கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.
    • தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை போன்ற அனைத்து விதமான கால்நடைகளை முகாமிற்கு கொண்டு வந்து பரிசோதனை செய்து தேவையான மருத்துவ உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

    தேனி:

    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ஏத்தக் கோவில் கிராமத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவினையொட்டி கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலையம் மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற சிறப்பு கால்நடை மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மகாராஜன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    முகாமில் கலெக்டர் பேசியதாவது:-

    கால்நடை பராமரிப்பு  மற்றும் வேளாண்மை ஆகிய இரு தொழில்கள் கிராமப்புறங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. மேலும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு ஆற்றிவருகிறது. தமிழர்களின் கலாச்சாரத்தில் கால்நடை வளர்ப்பு செல்வத்தின் குறியீடாக  திகழ்கிறது. இதனை பேணி காப்பதில் கால்நடை வளர்ப்பவர்களுடன் மாவட்ட நிர்வாகம் இணைந்து கால்நடைகளை பாதுகாக்க பல்வேறு தொடர் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

    கால்நடைகளுக்கு ஏற்படும் நோயைக்  கண்டறிந்து, நோய் பரவாமல் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் மாவட்டம் முழுவதும் கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

    கால்நடைகளின் முக்கியத்துவம் கருதி நடத்தப்படும் இந்த கால்நடை சிறப்பு முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பகுதியில் உள்ள அனைவரும் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை போன்ற அனைத்து விதமான கால்நடைகளை முகாமிற்கு கொண்டு வந்து பரிசோதனை செய்து தேவையான மருத்துவ உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

    கால்நடைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும் பொழுது 1962 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்தால் கால்நடைத்துறை டாக்டர்கள் தங்களது இல்லத்திற்கே வந்து தேவையான முதலுதவிகளை செய்து, கால்நடை மேல்சிகிச்சைக்காக அருகில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி அல்லது கால்நடை ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு சென்று தேவையான உயர் மருத்துவ சிகிச்சைகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இப்பகுதியில் அதிகளவில் மாடுகள் வளர்க்கப்படுகிறது. தங்கள் மாடுகள் மூலம் கறக்கப்படும் பால்களை அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் தர முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    முகாமில் கால்நடைகளுக்கான ஆண்மை நீக்கம், அறுவை சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், ஸ்கேன் மூலம் பரிசோதனை, மலடு நீக்குதல், குடற்புழு நீக்கம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்கான சிறப்பு டாக்டர்கள் வருகை தந்து தங்களது கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை இங்கே தீர்த்து வைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இளங்கன்றுகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டினை நீக்குவதற்கான தாது உப்புகள் வழங்கப்படுகிறது. தங்கள் வளர்ப்புப் பிராணிகளை நோய் தாக்குதலின்றி எவ்வாறு வளர்ப்பது குறித்து உரிமையாளர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. கால்நடை வளர்ப்பவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
    • நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு தொடங்கி வைத்தார்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த நாகவேடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப் போம் திட்ட சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள் முன்னிலை வகித்தார். மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிமாறன் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு கலந்துகொண்டு மருத்துவ முகாமைதொடங்கி வைத்தார். முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், காது, மூக்கு, தொண்டை, பல், கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்து, மருந்து, மாத் திரைகள் வழங்கப்பட்டன.

    மேலும், கர்ப்பிணிகளுக்கு தாய், சேய் நல பெட்டகம் வழங்கப்பட்டது. மகளிர் பல்வேறு ஸ்டால்கள் அமைத்து ஆலோசனைகளும் வழங் குழு சார்பில் கப்பட்டது. முகாமில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தீனதயாளன், நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் பெருமாள், அவைத்தலைவர் நரசிம்மன், மாவட்ட பிரதிநிதி சம்பத், வட்டார மருத்துவ அலுவலர் ரதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கந்த சாமி, டாக்டர்கள் வெற்றிச்செல்வன், கனிமொழி, சுகாதார ஆய்வாளர்கள் பூஞ்செழியன், பெருமாள், தேவநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • முகாமை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
    • பேரூராட்சி கவுன்சிலர் கேஎஸ்ஜி,கார்த்தி,மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    இதில் கூடுதல் ஆட்சியர் வசுந்த்ரா கார்க், மருத்துவ கல்லூரி முதல்வர் பூவதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜன், மாநில விவசாய அணி வெங்கடேசன், பேரூராட்சி தலைவர் சந்தோஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, பாலாஜி, தாசில்தார் திலகம், வட்டார மருத்துவ அலுவலர் சிவகுமார் ,பேரூராட்சி கவுன்சிலர் கேஎஸ்ஜி,கார்த்தி,மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்
    • சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    காங்கயம் : 

    காங்கேயம் கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் பரிசோதனைகள், சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. எனவே திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்று நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து இம்மருத்துவ முகாமில் 3 நபர்களுக்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை , 6 பள்ளி மாணவிகளுக்கு தமிழக முதல்வரின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கண் கண்ணாடிகள், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 5குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்கள், 10 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 13 பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவத்திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகத்தினை அமைச்சர் வழங்கினார்.முன்னதாக இந்த மருத்துவ முகாமில் இலவச சிறப்பு வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சியின் திட்ட இயக்குநர் லட்சுமணன், இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) கனகராணி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ஜெகதீஸ்குமார், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், வட்டார மருத்துவ அலுவலர் முரளி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அந்தியூரில் இலவச பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோச னைகளை வழங்கினார்.

    அந்தியூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அந்தியூரில் இலவச பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் நடைபெற்ற இம்முகாமை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடா ஜலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இதில் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் வரவேற்றார். முகாமில் இதயம், நுரையீரல், சிறுநீரகம், நரம்பியல் உள்ளிட்ட அனைத்து வகை யான சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோச னைகளை வழங்கினார்.

    இதில் 450-க்கும் மேற்பட்டோருக்கு இ.சி.ஜி., 150-க்கும் மேற்பட்டோருக்கு எகோ, 190 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை மற்றும் 800-க்கும் மேற்பட்டோருக்கு ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டன. உயர் சிகிச்சை தேவைப்படு வோருக்கு அரசு மருத்துவ மனை மற்றும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.

    முதல்- அமைச்சரின் விரி வான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை களும் வழங்க ப்பட்டன. நிகழ்ச்சியில் அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஷ், துணைத்தலைவர் ஏ.சி. பழனிச்சாமி, பேரூராட்சி செயல் அலுவலர் செல்வ குமார், துப்புரவு ஆய்வாளர் குணசேகரன், மேற்பா ர்வையாளர் ஈஸ்வரமூர்த்தி, அலுவலகப்பணியாளர் சாந்து முகமது, தினேஷ், சிவலிங்கம், தலைமை எழுத்தர் தாமரை,

    தாசில்தார் பெரியசாமி, நில வருவாய் ஆய்வாளர் சுதாகர், கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ், வருவாய்த்துறையினர், கவுன்சிலர்கள் சண்முகம், சேகர், யாஸ்மின் தாஜ், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் நாகராஜ், மைக்கேல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், சங்கரா பாளை யம் ஊராட்சி மன்ற தலைவர் குருசாமி, கெட்டி சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் மாறன், அல்ட்ரா தொண்டு நிறுவன தலைவர் தண்டாயுதபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×