என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாற்றுதிறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
- மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
- 35 மாணவர்கள் நல வாரியத்தில் சேர்க்கப்பட்டனர்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் வட்டார கல்வி வளமையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
மருத்துவ முகாமை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேட்டு தலைமையேற்று நடத்தினார் . வட்டார கல்வி அலுவலர்கள் கிருஷ்ண தேஜஸ், வேதா மற்றும் கோவிந்தப்பா முன்னிலை வகித்தனர்.
மருத்துவ முகாமில் கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், குழந்தைகள் நல மருத்துவர், மனநல மருத்துவர், முட நீக்கியல் மருத்துவர், கண் மருத்துவர், காது மூக்கு தொண்டை நிபுணர் உள்ளிட்ட சிறப்பு நிபுணர்கள் கலந்து கொண்டு மாணவர்களை பரிசோதனை செய்து அரசு நல திட்டங்களை பெறவும், மருத்துவ சிகிச்சை பெறவும் பரிந்துரை செய்தனர்.
இம்மருத்துவ முகாமில் மாற்றுத்திறன் கொண்ட பள்ளி குழந்தைகள் 62 பேர் கலந்து கொண்டனர். 28 மாணவர்களுக்கு புதிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
35 மாணவர்கள் நல வாரியத்தில் சேர்க்கப்பட்டனர். 33 மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் பெற பரிந்துரைக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்