search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
    X

    வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

    • வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • வட்டார மருத்துவ அலுவலர் அரசு தலைமை வகித்தார்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் தாசிரஅள்ளி கிராமத்தில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.இம்முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் அரசு தலைமை வகித்தார்.மொரப்பூர் அரசு மருத்துவ அலுவலர் வனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி.வி.ரவிச்சந்திரன்,ஜி.ரவிச்சந்திரன், தாசிர அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.தமிழ் செல்வி ரங்கநாதன்,துணைத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சுகாதார ஆய்வாளர் சங்கர் வரவேற்று பேசினார்.மொரப்பூர் ஒன்றிய குழு தலைவர் இ.டி.டி.சுமதி செங்கண்ணன்இம் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து முகாமின் நோக்கங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்து பேசினார். முகாமில் ரத்த அழுத்தம்,சக்கரை நோய் அளவு,உப்பு அளவு மற்றும் அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்து உரிய சிகிச்சைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து குறித்தும் விளக்கப்பட்டது.

    இம்முகாமில் தாசிர அள்ளி,அண்ணா நகர்,தாசிர அள்ளி புதூர்,காந்திநகர், போடிநா யக்கன்பட்டி,ரெட்டிபட்டி, ஆவலம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து உரிய சிகிச்சைகள் பெற்று பயனடைந்தனர்.இம் முகாமில் முல்லை கோபால்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருமால், முன்னாள் துணை தலைவர் ஜெமினி, டி.ஆர்.எஸ். செந்தில் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.முடிவில் ஊராட்சி செயலாளர் ராம்தாஸ் நன்றி கூறினார்.

    Next Story
    ×