search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓடைகள்"

    • 2 ஓடைகளிலும் முட்செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளது.
    • தற்போது புஞ்சை நிலங்களில் இடையே உள்ள சிறு வாய்க்கால்களை தூர்வாரும் பணி வேளாண்துறை மூலம் நடந்து வருகிறது.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூருக்கு தென்புறம் மற்றும் ஊருக்கு வடபுறம் மழைநீர் செல்லும் ஓடை உள்ளது. இங்குள்ள மலர் குளத்தின் மறுகால் தளத்தில் இருந்து ராஜாவின் கோவில்குளம் வரை உள்ள ஓடை 2 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அதுபோல் திருச்சிற்றம்பலபேரி குளத்திலிருந்து சாமி நத்தம் குளம் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

    இந்த 2 ஓடைகளிலும் முட்செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளது. இதனால் மழைக்காலத்தில் மலர்குளம் மற்றும் திருச்சிற்றம்பல பேரிகுளத்தின் மறுகால் மழைநீர் ஓடையில் வழியாக செல்லும் போது முட்செடிகளின் ஆக்கிரமிப்பால் மழைநீர் ஓடைகளின் பக்கவாட்டு சுவரில் அரிப்பு ஏற்பட்டு மழைநீர் வெளியே செல்கிறது.

    தற்போது புஞ்சை நிலங்களில் இடையே உள்ள சிறு வாய்க்கால்களை தூர்வாரும் பணி வேளாண்துறை மூலம் நடந்து வருகிறது. எனவே இந்த 2 ஓடைகளில் உள்ள முட்செடிகளை வேளாண்துறை நிதி அல்லது ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×