search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சண்முகையா எம்.எல்.ஏ."

    • மேலலட்சுமிபுரம் கிராமத்தில் ரூ. 1 கோடி 39 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் யூனியன் தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலலட்சுமிபுரம் கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் ரூ. 1 கோடி 39 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

    சண்முகையா எம்.எல்.ஏ.

    இதனை தொடர்ந்து மேலலட்சுமிபுரம் புதிய துணை மின் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் சண்முகையா எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி துணை மின் நிலையத்தை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஒட்டப்பி டாரம் யூனியன் தலைவர் ரமேஷ், துணை தலைவர் காசிவிஸ்வநாதன், தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை பொறியாளர்கள் குருவம்மாள் (தூத்துக்குடி), பிரேமலதா (மதுரை)

    செயற்பொறியாளர்கள் கணேசன், சாமுவேல் சுந்தராஜ், ராம்குமார், உதவி செயற்பொறியாளர்கள் மாரிமுத்து, ஜெகதீசன், அருணாச்சலம் ராஜ்குமார், சுடலைமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் நவநீத கிருஷ்ணன், கனக ரத்தினம் சுகுமார், பஞ்சாயத்து தலைவர்கள் இளைய ராஜா, அருண்குமார், முத்து மகாலட்சுமி உட்பட மின்சார வாரிய உதவி பொறியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அரசுப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர தனி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
    • அ.தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுய உதவி குழு இல்லாத நிலை ஏற்பட்டிருந்தது.

    ஓட்டப்பிடாரம்:

    ஒட்டப்பிடாரம் தி.மு.க. மேற்கு ஒன்றியம் சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒட்டநத்தம் கிராம் விநாயகர் கோவில் திடலில் முன்பு நடந்தது. சண்முகையா எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சந்திரசேகர், ஒட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வைத்தார். மாவட்ட பிரதிநிதி சோசுப மோகன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சண்முகையா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    மாதம் ரூ. 1000

    தி.மு.க அரசின் இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கல்லூரி படிக்கும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்ட மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

    அரசுப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கு தனி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதனால் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுய உதவி குழு இல்லாத நிலை ஏற்பட்டிருந்தது.

    தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொழில்கள் கடன் வழங்குவது மூலம் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை செயலாளர் சிவராஜ், தமிழக அரசின் 2 ஆண்டுகள் சாதனைகள் குறித்தும், மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் பேசினார்.

    கூட்டத்தில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூரமணி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார், யூனியன் கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், கொடியன்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் சிவா நன்றி கூறினார்.

    • சிறப்பு மருத்துவ முகாமிற்கு யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
    • மருத்துவ முகாமை சண்முகையா எம்.எல்.ஏ. குத்து விளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஓசநூத்து கிராமத்தில் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி யில் நடந்தது.

    யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவ லர் டாக்டர் தங்கமணி முன்னிலை வகித்தார். எஸ்.கைலாசபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஜீவராஜ் பாண்டியன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சண்மு கையா எம்.எல்.ஏ. குத்து விளக்கேற்றி வைத்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக் கியத்தை பேணும் வகையில் ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பிட்டு அட்டைகளை சண்முகையா எம்.எல்.ஏ வழங்கினார்.

    மேலும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் தயார் செய்யப்பட்டிருந்த பாரம்பரிய உணவு முறை களை பார்வையிட்டனர். மருத்துவ முகாமில் நூற் றுக்கணக்கான பொது மக்கள் சிகிச்சை பெற்று சென்றனர்.

    நிகழ்ச்சியில் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகவதி, மாவட்ட தலைமை அலுவலர் ஐஷ்வர்யா, குலசேகரநல் லூர் பஞ்சாயத்து தலைவர் வேலாயுதசாமி, யூனியன் கவுன்சிலர் மொட்டையச் சாமி, மருத்துவ அலுவலர்கள் ஜெய பிரபா, இலக்கியா, ஜீவிதா, சுப்ரமணியன், சித்த மருத்துவர் மல்லிகா, கண் மருத்துவர் வேல்குமார்,

    வட்டார மருத்துவ மேற் பார்வையாளர் முருக ராஜ், வட்டார சுகாதார மேற் பார்வையாளர் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர்கள் காளி முத்து, பாபு, தினேஷ், மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், அங்கன்வாடி கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சண்முகையா எம்.எல்.ஏ, மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் ஆகியோர் மின் நுகர்வோரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
    • 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என முதல் -அமைச்சர் அறிவித்துள்ளதாக எம்.எல்.ஏ தெரிவித்தார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமை தாங்கினார். மின்சார வாரிய செயற்பொறியாளர்கள் ராம்குமார், முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி செயற்பொறியாளர் சித்திவிநாயகமூர்த்தி வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சண்முகையா எம்.எல்.ஏ, மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் ஆகியோர் மின் நுகர்வோரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். அப்போது சண்முகையா எம்.எல்.ஏ பேசியதாவது:-

    தமிழக அரசு விவசாயத்திற்கு தனி பட்ஜெட் உருவாக்கி அதற்கென விவசாயத் துறையும் உருவாக்கி விவசாயத்திற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் விண்ணப்பித்து காத்திருந்தனர். விவசாயம் வளர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டன.

    தற்போது மீண்டும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் முதல் -அமைச்சர் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக ரூ.4.50 கோடி செலவில் மின்சாரத்துறை உள் கட்டமைப்பை ஊக்குவிக்கும் விதத்தில் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஆரைக்குளம், குலசேகரநல்லூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகளுக்கு தனியாக மின் தொடர் அமைப்பு விரைவில் உருவாக்கப்பட உள்ளது. இதனால் இப்பகுதிகளில் தங்கு தடையின்றி மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு கிடைக்கும்.

    வருகிற 31-ந் தேதிக்குள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ள வேண்டும். ஓட்டப்பிடாரம் பகுதிகளில் உள்ள கிராமங்களில் தங்கு தடையின்றி தொடர் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு சண்முகையா எம்.எல்.ஏ. பேசினார்.

    கூட்டத்தில் போது மின்வாரிய மக்கள் தொடர்பு அலுவலர் ஆறுமுகம், உதவி செய்ய பொறியாளர்கள் ஜெயக்குமார், முனியசாமி, பஞ்சாயத்து தலைவர்கள் வேலாயுதசாமி, இளையராஜா, சின்னத்துரை, உதவி பொறியாளர்கள் மணிசேகர், செந்தில்ராஜ், பால்முனியசாமி, ஜெயசுதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மாடசாமி உட்பட பொதுமக்கள், மின்வாரிய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×