search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொகுசு கார்"

    • சொகுசு காரில் ரூ. 12 லட்சம் மதிப்பில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசாரை இடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- மதுரை ரோட்டில் தனியார் பள்ளி அருகே காவல்துறை சோத னை சாவடி உள்ளது. இங்கு ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸ்சார் தேவர் ஜெயந்தியை முன்னி ட்டு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த னர். ஆய்வாளர் கவுதம் விஜி தலைமையில் போலீ சார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த னர்.

    அப்போது சென்னை பதிவு எண் கொண்ட சொகு சு கார் வேகமாக வந்தது அதை நிறுத்த சென்ற சார்பு ஆய்வாளர் கவுதம்விஜி மீது இடித்த விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதை அறிந்த மற்ற போலீசார் அந்த காரை விரட்டி சென்ற னர். பின்னர் அந்த காரை சாத்தூரில் பிடித்து. போலீசார் சோதனை செய்த பொழுது காரில் 600 கிலோ கொண்ட 51 பண்டல்களில் சுமார் ரூ.12 லட்சம் மதிப்பி லான குட்காவை கடத்தி சென்றது தெரியவந்தது.

    அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ராஜஸ் தானை சேர்ந்த முகமது அஸ்லாம் மற்றும் சதன்சிங் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் பயன் படுத்திய சொகுசு கார் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மன்னார்குடி- திருத்துறைப்பூண்டியில் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
    • சொகுசு காரை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    மன்னார்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வைரவபுரம் பகுதியை சேர்ந்த அரபாத் (வயது 28), ஆறுமுகம் (50), செல்வராஜ் (55) ஆகிய 3 பேரும் சொகுசு காரில் மன்னார்குடிக்கு வந்துள்ளனர்.

    பின்னர், அந்த காரில் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டியில் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது கீழப்பாலம் அருகே மாரியம்மன் கோவில் பகுதியில் சென்றபோது சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த 4 ஆடுகளை பிடித்து தங்கள் காருக்குள் வைத்து கடத்திவிட்டு வேகமாய் சென்றனர்.

    இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மன்னார்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அப்பகுதி மக்களின் உதவியுடன் சொகுசு காரை கண்டறிந்து அதில் இருந்த 4 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பல ஆண்டுகளாக ஆடு திருடுவதை வழக்கமாக வைத்துள்ளது தெரியவந்தது.

    பட்டப்பகலில் ஆடுகள் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • புதுச்சேரியில் இருந்து வந்த 2 சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர் .
    • மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    வானூர்:

    புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு காரில் அதிக அளவு மது பாட்டில் கடத்தி வருவதாக மத்திய புலனாய்வு நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சின்னகா மணன், சப்-இன்ஸ்பெக்டர் இனயத் பாஷா தலைமையில் கோட்டக்குப்பம் மது விலக்கு சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து வந்த 2 சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர் .

    அதில் உயர் ரக புதுச்சேரி மதுபாட்டில்கள் 650 இருந்தது தெரியவந்தது. மேலும் காரில்வந்தவர்களிடம் விசாரணை செய்ததில் புதுச்சேரியில் இருந்து சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து மது பாட்டில்களை கடத்திய கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் சார்லஸ் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்த 650 உயர்ரக மது பாட்டில்களையும் சொகுசு காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். கைதான செல்வராஜ் மீது விழுப்புரம் மாவட்டத்தில் போலி மது பாட்டில்கள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சொகுசு கார் ஒன்று நெருக்கடி மிகுந்த சாலையில் மிக வேகமாக சென்றது.
    • 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு சொகுசு கார் பறிமுதல்

    கன்னியாகுமரி :

    குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் மற்றும் போலீசார் நேற்று இரணியல் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரியலூர் மாவட்டத்தின் பதிவு எண் கொண்ட சொகுசு கார் ஒன்று நெருக்கடி மிகுந்த சாலையில் மிக வேகமாக சென்றது.

    அதனை நிறுத்தி சோதனை செய்தபோது காரை ஓட்டி வந்தவர் மது போதையில் இருப்பது தெரிந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவரது பெயர் இர்வின்பால் (வயது 25) என்பதும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    அவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டு இரணியல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போக்கு வரத்து போலீசார் நட வடிக்கையை பொதுமக்கள் வரவேற்றனர்.

    • வாகனத்தினை சாலையில் விட்டுவிட்டு அருகில் உள்ள வாழைத் தோப்புக்குள் இறங்கி ஓட்டம் பிடித்தனர்
    • அரிசி தமிழ்நாடு உணவு பொருள் வாணிப கழகம் உடையார்விளை கிடங்கில் ஒப்படைக்கபடும்

    கன்னியாகுமரி :

    தக்கலையில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையில் ரேசன் பொருட்கள் கடத்தல் தடுப்பு பணியில் இருந்த போது இன்று அதிகாலை சுமார் 5.30 மணிக்கு குறும்பனை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமாக வந்த சொகுசு கார் நிறுத்த முற்பட்டபோது நிற்காமல் அதிவேகமாக சென்றது.

    வாகனத்தினை பின் தொடர்ந்து துரத்தி சென்ற போது ஆலஞ்சி, கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட விழுந்தயம்பலம், கிள்ளியூர், தொலையாவட்டம், வழியாக விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட கொல்லஞ்சி, இலவு விளை, விரிகோடு மற்றும் அதன் அருகில் உள்ள குக்கிராமங்களுக்கிடையே உள்ள உள் சாலைகள் வழியாக வந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் கடந்து மார்த்தாண்டம் அருகே உள்ள கீழக்காஞ்சிரங்கோடு என்னும் ஊரில் வைத்து வழிமறித்த போது அந்த வாகனத்தினை ஓட்டி வந்த ஓட்டுநர்  மற்றும் வாகனத்தில் இருந்த பெண் ஒருவரும் சேர்ந்து வாகனத்தினை சாலையில் விட்டுவிட்டு அருகில் உள்ள வாழைத் தோப்புக்குள் இறங்கி ஓட்டம் பிடித்தனர். பின்னர் வாகனத்தினை சோதனை செய்த போது அந்த வாகனத்தில் இருக்கைகள் இல்லாமல் நூதன முறையில் ரகசிய அறைகள் அமைத்து, மறைத்து வைத்திருந்த சுமார் 1000 கிலோ ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    பின்னர் அரிசியுடன் வாகனத்தினை பறிமுதல் செய்து, கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அரிசி தமிழ்நாடு உணவு பொருள் வாணிப கழகம் உடையார் விளை கிடங்கில் ஒப்படைக்கபடும். மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

    • ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்வதாக தெரிவித்தார்.
    • சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

    நாகர்கோவில், ஜூன்.24-

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், வரு வாய் துறை அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பொறுப்பு கலா, சப்-இன்ஸ்பெக்டர் பேபி இசக்கி பிரகலாம்பாள் தலைமையிலான போலீசார் படந்தாலுமூடு சோதனை சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சொகுசு காரையும், காரில் இருந்த 1 டன் ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிப்பட்ட டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் களியக்காவிளை ஓட்ட மரம்நெடுவிளை பகுதியை சேர்ந்த சதாம் உசைன் (வயது 29) என்பது தெரிய வந்தது.

    மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை நாகர்கோவிலில் உள்ள உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். சதாம்உசைனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட னர். ரேசன் அரிசி கடத்தலில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட் டது. இதைத்தொடர்ந்து போலீசார் சதாம்உசைனை ஜே.எம்.-3 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • சந்தேகத்துக்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருப்பதை பார்த்தனர்.
    • கார் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. ரேசன் அரிசி கடத்தும் கும்பலை பிடிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கன்னியாகுமரியை அடுத்த கோவளம் பகுதியில் இருந்து சொகுசு காரில் கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் கேரள பதிவு எண் கொண்ட ஒரு சொகுசு கார் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருப்பதை பார்த்தனர். போலீசாரை கண்டதும் சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    காரை போலீசார் சோதனை செய்தபோது அதில் 1½ டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கார் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய அந்த 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் தூத்துக்குடி சென்றுள்ளார்.
    • 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சாமளாபுரம் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ்.இவர் அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். தனது மனைவி மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார்.

    இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் தூத்துக்குடி சென்றுள்ளார்.திருமணம் முடிந்து வந்த போது அவரது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.அதனை தொடர்ந்து அவரது வீட்டில் வைத்திருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது சொகுசு காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் லாரன்ஸ் வீட்டின் உள்ளே செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

    சிசிடிவி., காட்சிகள் அடிப்படையில் மங்கலம் போலீசார் திருடர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மர்ம நபர்கள் சொகுசு காரில் வந்து திருடி செல்லும் சிசிடிவி., காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கர்நாடகாவில் பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலாமக நடைபெற்றது.
    • கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றிபெற்றதை அடுத்து கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா முதலமைச்சராகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர்.

    இதற்கான பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலாமக நடைபெற்றது. முதலில் முதலமைச்சராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் ஆகியோர் பதவி ஏற்றனர்.

    தொடர்ந்து அமைச்சர்களாக எம்.பி. பாட்டீல், டாக்டர் ஜி. பரமேஷ்வர், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜாரகிஹோலி, மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, ராமலிங்கரெட்டி, ஜமீர் அகமது ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்றார்கள். அவர்களுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

    இந்நிலையில், கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் சித்தராமையாவுக்கு ரூ. 1 கோடியில் புதிய சொகுசு கார் ( டொயோட்டா வெல்ஃபயர் ) கர்நாடக அரசு சார்பில் வாங்கப்பட்டுள்ளது. 

    • சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி நின்றது.
    • காரில் இருந்த வாலிபருக்கு காயம் ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் இருந்து நேற்று மாலை ஈரோடு நோக்கி வந்த சொகுசு கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சூளை, பாரதி நகர் பகுதியில் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி நின்றது.

    இந்த விபத்தில் காரின் முன் பகுதி சேதம் அடைந்தது. காரில் இருந்த வாலிபருக்கு காயம் ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த நபர் சிகிச்சைக்காக அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொ ண்டனர். விசாரணையில், சொகுசு காரில் வந்தவர் மூலப்பாளையம் பகுதியை சேர்ந்த ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஸ்ரீராம் ( 27 ) என்பதும், இவரின் கல்லூரி சான்றிதழ் பெறுவதற்காக தனியார் கல்லூரி சென்று வீடு திரும்பி கொண்டிருந்த போது இந்த விபத்து நடைபெற்றதாகவும் தெரிய வந்தது.

    விபத்து நடந்த பொழுது அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான பரபரப்பு காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    அதிகளவில் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் பயணிக்கும் சூளை பகுதியில் தொடர்ந்து இது போன்ற விபத்துகள் ஏற்படுவதால் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 500 கிலோ அரிசி பறிமுதல்
    • பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி கோணம் கிட்டங்கியில் போலீசார் ஒப்படைத்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் நாகர்கோவில் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி தலைமை யிலான குழுவினர் வெள்ளமடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகப்படும் படியாக வந்த சொகுசு கார் ஒன்றை தடுத்து நிறுத்தினார்.ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். போலீசார் காரை பின் தொடர்ந்து துரத்தி சென்றனர். சுமார் 10 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று தெரிசனம் கோப்பு பகுதியில் வைத்து காரை மடக்கி பிடித்தனர்.

    காரை சோதனை செய்த போது காரில் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. காரில் இருந்து 500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட கார் டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் அவர், தேரேக்கால் புதூர் பகுதியைச் சேர்ந்த அன்சார் என்பது தெரியவந்தது.போலீசார் டிரைவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அன்சாரிடம் விசாரணை நடத்திய போது ரேசன் அரிசியை கேரளாவுக்கு கடத்திச் சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி கோணம் கிட்டங்கியில் போலீசார் ஒப்படைத்தனர்.

    ரேஷன் அரிசி கடத்தலில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • அதிகாரிகள் நடவடிக்கை
    • கார் யாருடையது என்பது குறித்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படு வதை தடுக்க வருவாய் துறை அதிகாரிகள் பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் கள்.

    மாவட்ட எல்லை பகுதி களில் தீவிர கண்காணிப்பு பணியில் நடந்து வருகிறது. தக்கலை வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் தலைமையிலான குழுவினர் மண்டைக்காடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தினார்கள். டிரைவர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். அதிகாரிகள் காரை சோதனை செய்த போது அதில் சாக்கு மூட்டை களில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    காரில் இருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் காரை யும் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை காப்புக் காடு கிட்டங்கியில் ஒப்ப டைத்தனர். பறிமுதல் செய் யப்பட்ட கார் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    முதல் கட்ட விசார ணையில் ரேஷன் அரிசி குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்திச் சென்றது தெரிய வந்துள் ளது. ரேசன்அரிசி கடத்தல் வழக்கில் யார்? யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து அதிகாரிகள் விசா ரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ராஜாக்கமங்கலம் துறை கடற்கரை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் பின்னால் தென்னந்தோப்பில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப் பட்டுள்ளதாக ராஜாக்க மங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடி யாக போலீசார் அந்த இடத் துக்கு விரைந்து சென்ற னர். அங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவை சுமார் 2 டன் எடை இருக்கலாம் என தெரிகிறது. அவற்றை கைப்பற்றி போலீ சார் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

    இது குறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் கள் அரிசி மூடைகளை கோணத்தில் உள்ள அரிசி குடோனுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×