search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஞ்சள்"

    • கிருத யுகத்தில் சிம்ம வாகனத்தில்தான் பிள்ளையார் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
    • பரப்பிரம்ம சொரூபமாக விளங்குபவர் கணபதி,

    விநாயகரின் வாகனங்கள்

    விநாயகர் மூஷிக வாகனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால் அவர் மூஞ்சுறுவைத் தவிர மயில், சிங்கம், ரிஷபம், யானை என்ற வாகனங்களிலும் பவனி வருவார் என்பது அனைவருக்கும் தெரியாத ஒன்றாகும்.

    கிருத யுகத்தில் சிம்ம வாகனத்தில்தான் பிள்ளையார் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இன்றும் ஹேரம்ப கணபதி சிம்ம வாகனத்தில்தான் வீற்றிருப்பார்.

    திரேதா யுகத்தில் முருகனுக்கு உதவுவதற்காக மயில் வாகனத்தில் வந்தார்.

    ஆண் குழந்தை தரும் விநாயகர்

    திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ மேற்கே அமைந்துள்ள கிராமம் தீவனூர்.

    அந்த கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.

    கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

    கணபதி என்ற சொல்லில் உள்ள "க" என்னும் எழுத்து ஞானத்தையும், "ண" என்னும் எழுத்து ஜீவன்களின் மோட்சத்தையும், "பதி" என்னும் சொல் தலைவன் என்பதையும் குறிக்கிறது.

    பரப்பிரம்ம சொரூபமாக விளங்குபவர் கணபதி, ஞானத்திற்கும் மோட்சத்திற்கும் அவரே தலைவன் என்பதால்தான் அவர் கணபதி என்றழைக்கப்படுகிறார்.

    மேலும் கணபதி என்னும் சொல் சிவபெருமானின் கணங்களுக்கு அதிபதி என்பதையும் குறிக்கும்.

    விநாயகரின் அன்பு வேண்டுமா?

    1. விநாயகர் அகவல்

    2. விநாயகர் கவசம்

    3. விநாயகர் சகஸ்ரநாமம்

    4. காரிய சித்தி மாலை

    5. விநாயகர் புராணம்

    ஆகியவற்றை தினமும் படித்து அருகம்புல்லால் விநாயகனை வழிபட்டு வந்தால் விநாயகரின் அருள் நமக்குக் கிடைக்கும்.

    • வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.
    • விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.

    பிள்ளையார் உருவ பலன்கள்

    மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட, சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

    மண்ணால் செய்த பிள்ளையாரை வழிபட, நல்ல பதவி, அரசு வேலை கிடைக்கும்.

    குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்.

    புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும்

    வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும்.வளம் தருவார்

    உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும்.எதிரிகளை விரட்டுவார்.

    வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வம் உயரச் செய்வார்.

    விபூதியால் விநாயகர் பிடித்து வழிபட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.

    சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.

    சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.

    வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.

    வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.

    சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.

    பசுஞ்சாண விநாயகர்- நோய்களை நீக்குவார்.

    கல் விநாயகர்- வெற்றி தருவார்.

    யானைத்தலை விளக்கம்

    தலை என்பது உள் அவயங்களான மூளை, கண், காது, வாய், மூக்கு என முக்கியமான உறுப்புகளைத் தன்னுள் கொண்ட ஒரு கூட்டமைப்பு.

    அறிவின் இருப்பிடத்தை விசாலமான நுண்ணறிவை, பேரறிவை, காக்க அமைந்ததே யானைத்தலை.

    யானைத்தலையானின் தலையில் கிரீடம் சூடி அவரை வணங்கும் மக்களுக்கு ராஜபோக வாழ்வுகிட்டும்.

    • மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த மழையினால் மஞ்சள் தரம் குறைந்துள்ளதால் ஈரோடு மஞ்சளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.
    • உலக அளவில் தேவை அதிகரிப்பால் கடந்த 6 மாத காலத்தில் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 22 சதவீதம் உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    உலக அளவில் 80 சதவீதம் மஞ்சள் உற்பத்தி நடைபெறும் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 70 லட்சம் மூட்டைகள் மஞ்சள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலி, தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மற்றும் தமிழகத்தில் ஈரோடு என 3 இடங்களில் தேசிய அளவில் தரமான மஞ்சள் சந்தைகள் உள்ளன. தெலுங்கானா மாநிலத்திற்கு அடுத்து ஈரோட்டில் அதிக அளவில் மஞ்சள் உற்பத்தியும் விற்பனையும் நடைபெறுகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக மஞ்சள் விலை சரிவடைந்த நிலையில், இந்த ஆண்டு உலக அளவிலும், உள்நாட்டிலும் தேவை அதிகரித்துள்ளதால் மஞ்சள் விற்பனை அதிகரித்துள்ளது.

    அதிலும், மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த மழையினால் மஞ்சள் தரம் குறைந்துள்ளதால் ஈரோடு மஞ்சளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 3 மாதத்தில் விலை இரு மடங்கு உயர்ந்து ஒரு குவிண்டால் மஞ்சள் 15 ஆயிரம் ரூபாயை எட்டி உள்ளது.

    இந்நிலையில் உலக அளவில் தேவை அதிகரிப்பால் கடந்த 6 மாத காலத்தில் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 22 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 86 ஆயிரத்து 92 டன் மஞ்சள் ஏற்றுமதியான நிலையில், இந்த ஆண்டு 6 மாத காலத்தில் 18 ஆயிரத்து 927 டன் அதிகரித்து 1 லட்சத்து 5 ஆயிரத்து 19 டன் மஞ்சள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது மஞ்சள் ஏற்றுமதியில் புதிய மைல் கல் என்றும் வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதே போல், அடுத்த ஆண்டு பற்றாக்குறை ஏற்படும் என்ற எதிர்பார்பினால், உள்நாட்டு விற்பனையும் அதிகரித்து, பல நிறுவனங்கள் கூடுதலாக மஞ்சள் மூட்டைகளை வாங்கி இருப்பு வைப்பதாகவும் வணிகர்கள் கூறினர்.

    பல ஆண்டுகளுக்கு இருப்பு வைத்து விற்பனை செய்யப்படும் மஞ்சள், தரமானதாக இருக்க, குளிர்பதன கிடங்குகளை அரசு அமைத்து தர வேண்டும் என மஞ்சள் வணிகர்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் மகாராஷ்டிர மாநிலத்திற்கு இணையாக தரமான மஞ்சள் ஆண்டு முழுவதும் ஈரோடு சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

    • மகாராஷ்டிர மாநிலத்தில் அறுவடையின்போது பெய்த கன மழையால் மஞ்சள் பயிர் தண்ணீரில் மூழ்கியது.
    • 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மஞ்சள் விலை உயர்ந்துள்ள நிலையில் இப்போது விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் 1.60 லட்சம் ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. அதில் 30 சதவீதத்துக்கு மேல் ஈரோடு மாவட்டத்தில் பயிரிடப்படுகிறது. நாட்டில் மொத்த மஞ்சள் உற்பத்தி சுமார் 35 முதல் 40 லட்சம் மூட்டைகள் (ஒரு மூட்டை 80 கிலோ). இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 7 லட்சம் மூட்டைகள் உற்பத்தியாகின்றன. இதில் சுமார் 3 லட்சம் மூட்டைகள் ஈரோடு சுற்றுவட்டாரங்களில் உற்பத்தி செய்யப்படுபவை.

    இந்தியாவைப் பொருத்தவரை தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத், மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலி, தமிழகத்தில் ஈரோடு என இந்தியாவில் 3 இடங்களில்தான் தேசிய அளவில் தரமான மஞ்சள் சந்தை உள்ளது. அதில் தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் விளையும் மஞ்சள் நிறமி (குர்குமின்) அளவு அதிகம். 3 முதல் 5 சதவீதம் வரை கிடைக்கும்.

    இருமுறை பாலிஷ் செய்ய முடியும். பொன் நிறம், மஞ்சள் நிறம், வெளிர் பொன் நிறம் உள்ளிட்ட அனைத்து நிற மஞ்சள்களும் ஈரோட்டில் கிடைக்கும் என்பதால் இந்திய மஞ்சள் சந்தை விலை நிலவரத்தைக் கட்டுப்படுத்தும் சந்தையாக ஈரோடு சந்தை இருந்தது.

    தெலுங்கானா மாநிலத்துக்கு அடுத்து ஈரோட்டில்தான் மஞ்சள் ஏலம் அதிக அளவில் நடைபெறும். நாட்டிலேயே அதிக அளவில் மஞ்சள் விளையும் இடத்திலும், ஏலம் நடைபெறும் இடத்திலும் ஈரோடு இரண்டாம் இடத்தை வகித்து வந்தது. நீர்ப்பற்றாக்குறை, விளைச்சல் குறைவு, போதிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் ஈரோட்டில் மஞ்சள் சாகுபடி பரப்பளவு குறையத் துவங்கியது.

    ஈரோடு மாவட்டத்தில் 2015 இல் 8,912 ஹெக்டேராக இருந்த மஞ்சள் சாகுபடி, 2016 இல் 2,966 ஹெக்டேராக குறைந்தது, 2017 இல் 8,988 ஹெக்டேராக அதிகரித்த மஞ்சள் சாகுபடி, 2018 இல் 5,625 ஹெக்டேராகவும், 2019 இல் 4,319 ஹெக்டேராகவும், 2020 இல் 4,100 ஹெக்டேராகவும், 2020 இல் 3,900 ஹெக்டேராகவும், 2021 இல் 3,850 ஹெக்டேராகவும், 2022 இல் 3,600 ஹெக்டேராகவும், 2023 இல் 3,500 ஹெக்டேராகவும் குறைந்துவிட்டது.

    இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் அறுவடையின்போது பெய்த கன மழையால் மஞ்சள் பயிர் தண்ணீரில் மூழ்கியது. இதனால் இந்த ஆண்டு அங்குள்ள சந்தைகளுக்கு தரமான மஞ்சள் வரவில்லை. இதனையடுத்து ஈரோடு மஞ்சளுக்கு தேவை அதிகரித்து இப்போது குவிண்டால் ரூ.13,000க்கும் மேல் விற்பனையாகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சம் மூட்டை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இருப்பு வைக்கப்படும் மஞ்சள் பூச்சி தாக்குதலால் தரம் குறைந்து விடுகிறது. இதனை தவிர்க்க, அரசு நேரடியாகவோ அல்லது தனியார் பங்களிப்பு மூலமாகவே குளிர்சாதன வசதி உள்ள மஞ்சள் சேமிப்புக் கிடங்குகளை ஈரோடு மாவட்டத்தில் அமைக்க வேண்டும். மேலும் குளிர்சாதன மஞ்சள் சேமிப்புக் கிடங்கு அமைக்க முன்வரும் தனியாருக்கு மின்சார மானியம் வழங்க அரசு முன்வர வேண்டும்.

    12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மஞ்சள் விலை உயர்ந்துள்ள நிலையில் இப்போது விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் மஞ்சள் சாகுபடிக்கு தகுதியான நிலங்களில் ஏற்கனவே கரும்பு, மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றை சாகுபடி செய்துள்ளதால் மஞ்சள் சாகுபடி செய்ய இயலாத நிலை உள்ளது. மேலும் ஏப்ரல் மாதத்திலேயே அறுவடை முடிந்து மஞ்சள் வேகவைக்கப்பட்டு விட்டதால் விதை மஞ்சள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஈரோடு மாவட்டத்தில் நிலையான மஞ்சள் சாகுபடி தொடர மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15,000 ஆதார விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என மஞ்சள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 14-ந் தேதி நடந்த ஏலத்தில் மஞ்சள் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது.
    • விராலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.14,569-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படியான மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மட்டும் விடுமுறை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை கூடம், கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை கூடம் என மாவட்டத்தில் 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது.

    ஈரோடு மார்க்கெட்டுக்கு தரமான மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது.

    கடந்த 14-ந் தேதி நடந்த ஏலத்தில் மஞ்சள் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு மஞ்சள் குவிண்டால் புதிய உச்சத்தை தொட்டது.

    இதற்கு முக்கிய காரணம் இந்த ஆண்டு மகாராஷ்டிர, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து தரமான மஞ்சள் சந்தைக்கு வராததால் ஈரோடு மஞ்சளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மஞ்சுளோடு ஈரோடு மஞ்சள் தரத்தில் அதிக அளவில் உள்ளதால் கடந்த சில நாட்களாகவே ஈரோடு மஞ்சளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மஞ்சளை வெளி மாநில வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்தில் நடந்த மஞ்சள் நிலத்தில் 2,049 மஞ்சள் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் விராலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.14,569-க்கு விற்பனையானது.

    அதாவது ஒரு வாரத்தில் மட்டும் மஞ்சள் குவிண்டால் ரூ.4,399 வரை உயர்ந்துள்ளது. மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரத்தை நெருங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனி வரும் காலங்களில் விலை மேலும் உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • ஆடி முதல் வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
    • அம்மனை வேண்டிக்கொண்டு உரலில் இடிக்கப்பட்ட மாவை குழந்தை இல்லாத பெண் பக்தர்கள் சாப்பிட்டனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் 19-ம் ஆண்டு ஆடிமாத திருவிழா நேற்று நடைபெற்றது.

    ஆடி முதல் வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பின்னர் அம்மன் வீதியுலா, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

    இதையடுத்து, சு.பொலக்குணம் கிராமத்தில் வசிக்கும் பக்தரின் மார்பு மீது உரல் வைத்து அரிசி, மஞ்சள் ஆகியவை கொட்டப்பட்டு உலக்கையால் மாவு இடிக்கப்பட்டது.

    உரலில் இடிக்கப்பட்ட மாவை உண்ணுபவர்களுக்கு திருமணம் கைகூடும், குழந்தை பேறு உண்டாகும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.

    இதனால், அம்மனை வேண்டிக்கொண்டு உரலில் இடிக்கப்பட்ட மாவை குழந்தை இல்லாத பெண் பக்தர்கள் சாப்பிட்டனர்.

    இதைத்தொடர்ந்து, கோவிலில் அம்மன் ஊஞ்சல் தாலாட்டும், ஆன்மிக சொற்பொழிவு மற்றும் நாடகமும் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

    • தரம் குறைந்த மஞ்சள் உற்பத்தியாவதால் வியாபாரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் தரமான மஞ்சள் அங்கு கிடைக்கவில்லை.
    • மஞ்சள் ஓராண்டு பயிர் என்பதால் அடுத்த ஆண்டு உற்பத்தியை கணக்கிட்டு மஞ்சள் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என 4 இடங்களில், திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. சராசரியாக நாள்தோறும் 5 ஆயிரம் மூட்டை வரை மஞ்சள் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    கடந்த மாதங்களில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.7 ஆயித்து 500 ரூபாய்க்கு விற்பனையானது. வடமாநிலங்களில் அதிக மழையால் மஞ்சள் விளைச்சல் பாதிக்கப்பட்டு தரம் குறைந்த மஞ்சள் உற்பத்தியாவதால் வியாபாரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் தரமான மஞ்சள் அங்கு கிடைக்கவில்லை. குறிப்பாக மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தரம் குறைந்த மஞ்சளே அதிகம் கிடைப்பதால் வியாபாரிகள் ஈரோடு பகுதி மஞ்சளை அதிகம் வாங்க தொடங்கியுள்ளனர்.

    தமிழகத்தில், ஈரோடு, சேலம் பகுதி மஞ்சள் தரமாக உள்ளதால் படிப்படியாக விலை அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் 8,500 ரூபாயாக இருந்த ஒரு குவிண்டால் மஞ்சள் கடந்த வாரம் 10 ஆயிரம் ரூபாயை எட்டியது. கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு மஞ்சள் குவிண்டால் ரூ. 10 ஆயிரத்தை எட்டியது. கடந்த வெள்ளியன்று 10,500 ரூபாயாக உயர்ந்தது. இந்நிலையில் இன்று மேலும் 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, முதல் தர மஞ்சள் அதிகபட்சமாக 12,600 ரூபாய்க்கு விற்பனையானது.

    கடந்த 6 மாதங்களில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மஞ்சளின் அளவு 25 சதவீதம் உயர்ந்துள்ளதாலும், வட மாநிலங்களில் பெய்த மழையினாலும் ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை உயர்ந்துள்ளதாக கூறும் வணிகர்கள், இன்னும் விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் பலரும் மஞ்சளை இருப்பு வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

    மஞ்சள் ஓராண்டு பயிர் என்பதால் அடுத்த ஆண்டு உற்பத்தியை கணக்கிட்டு மஞ்சள் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மராட்டியத்தில் மஞ்சள் மொத்த சாகுபடி பரப்பு அடுத்த மாதம் தெரியவரும் என்றும், அப்போது விலையில் மாற்றம் ஏற்படலாம், அதுவரை இதே விலை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மஞ்சள் விலை 3 மாதங்களில் குவிண்டாலுக்கு சுமார் 5 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்திருப்பது விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மஞ்சளுக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் வெளி மாநில வியாபாரிகள் ஈரோடு நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

    • பொதுவாகவே எல்லா சுபகாரியங்களிலும் மஞ்சளும், குங்குமமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
    • ஆலயங்களில் குங்குமம் முதல் இடம் பெற்றிருக்கும்.

    மஞ்சளும், குங்குமமும் மகத்துவம் நிறைந்தது என்று நமது இந்து மத சாஸ்திரங்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளன.

    பொதுவாகவே எல்லா சுபகாரியங்களிலும் மஞ்சளும், குங்குமமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த இரண்டும் இல்லாமல் எந்த மங்கள செய்கைகளும் மகத்துவம் பெற முடியாது.

    கோவிலாக இருந்தாலும், வீடாக இருந்தாலும் சரி, அவசியம் வழிபாடுகளில் மஞ்சள், குங்குமம் இடம் பெற்றிருக்கும்.

    குறிப்பாக அம்பாள் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆலயங்களில் குங்குமம் முதல் இடம் பெற்றிருக்கும். அந்த அளவுக்கு குங்குமம் முக்கியமானது.

    திருமணம், வீடு கிரகபிரவேசம் உள்ளிட்ட சடங்குகளில் நாம் உன்னிப்பாக கவனித்தால் முதலில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, அதில் குங்குமமிட்ட பிறகுதான் மற்ற செயல்கள் தொடங்குவதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். அது போலத்தான் ஒரு பெண்ணை மங்களகரமாக தோன்ற செய்வதும் மஞ்சள்-குங்குமம்தான்.

    ஒரு பெண் தன் நெற்றில் குங்குமம் வைத்துக் கொண்ட பிறகு பாருங்கள், அந்த பெண்ணுக்கும் குங்குமத்துக்கும் தனி மரியாதை உண்டு.

    பெண்கள் தங்கள் திருமாங்கல்யத்தில் குங்குமம் வைத்து கண்ணில் ஒற்றிக் கொள்வதுண்டு. இதுதான் சுமங்கலிக்கு ஆதாரமாகக் கருதப்படுகிறது.

    இதனால்தான் அம்பாள் தலங்களில் வழங்கப்படும் குங்குமத்தை பெண்கள் மிகப்பெரும் பாக்கியமாகக் கருதிப் பெற்றுக் கொள்வதுண்டு. அதிலும் சில அம்பாள் தலங்களில் வழங்கப்படும் குங்குமத்துக்கு இரட்டிப்பு சக்தி உண்டு.

    அந்த வகையில் பாரிமுனை காளிகாம்பாள் தலத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் குங்குமத்துக்கு தனித்துவம் உண்டு.

    இத்தலத்தில் பக்தர்கள் அனைவருக்கும் பெரும்பாலும் குங்குமத்துடன் எலுமிச்சம் பழமும் சேர்த்துக் கொடுக்கிறார்கள்.

    காளிகாம்பாளை மனம் குளிர தரிசனம் செய்து விட்டு, முடிந்தால் அவள் முன் உள்ள சன்னதியில் சிறிது நேரம் அமர்ந்து அவளை வழிபட்டு தியானிக்கலாம். மனம் நிறைவு பெறும் வரை இந்த தரிசனத்தை மேற்கொள்ளலாம்.

    பிறகு அம்பாளிடம் விடை பெற்று, வலது புறம் உள்ள கமடேஸ்வரர் சன்னதிக்கு வந்து வழிபட வேண்டும். அந்த சன்னதி அருகில்தான் குங்கும பிரசாதம் வழங்குவார்கள்.

    அந்த குங்குமம் உங்கள் திருக்கரங்களில் பட்டதுமே நீங்கள் மெய்சிலிர்த்துப் போவீர்கள். அந்த குங்குமத்துக்கு அவ்வளவு சக்தி உண்டு.

    அத்தகைய குங்குமம் உங்கள் பரந்த நெற்றியை அலங்கரிக்கும் போது, மகத்துவம் அதிகரித்து விடும்.

    உங்களை எந்த பார்வையும், திருஷ்டியும், ஏவலும் அண்டவே அண்டாது. இது நிஜம்.

    ஆண்டாள் சன்னதியில் பாருங்கள், அவள் நெற்றிக் குங்குமம் இல்லாமல் இருப்பதே இல்லை. அந்த குங்குமம், அவள் கண்ணன் மீது கொண்டுள்ள அன்பை காட்டும்.

    அதுபோலவே காளிகாம்பாள் தலத்தில் தரும் குங்கும் இட்ட பெண்களைப் பாருங்கள், அவர்கள் அம்பாளின் நல்ல அருளை முழுமையாகப் பெற்றவர்களாகக் காட்சியளிப்பார்கள்.

    • மாத தொடக்கத்தில் ரூ.8 ஆயிரத்து 500க்கு விற்பனையானது.
    • விலை உயர்வால் இருப்பு வைத்துள்ள மஞ்சள் இனி வரும் நாட்களில் விற்பனைக்கு வரும்.

    ஈரோடு:

    தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படியான மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. இதனால் ஈரோடு மஞ்சள் நகரம் என்று அழைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 4 இடங்களில் மஞ்சள் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது.

    கடந்த மாதம் ஈரோடு சந்தையில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ. 7 ஆயிரத்து 500 வரை விற்பனையானது. இதனிடையே மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வடமாநிலங்களில் அதிக மழை பெய்ததன் காரணமாக மஞ்சள் சாகுபடி பாதிக்கப்பட்டு தரம் குறைந்ததோடு, விலையும் குறைந்தது. இதன் காரணமாக வியாபாரிகளுக்கும், நிறுவனங்களுக்கும் தரமான மஞ்சள் கிடைக்கவில்லை.

    ஈரோடு மற்றும் சேலம் பகுதிகளில் விளையும் மஞ்சள் தரமாக இருப்பதால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் ரூ.8 ஆயிரத்து 500க்கு விற்பனையான ஒரு குவிண்டால் மஞ்சள் மேலும் விலை உயர்ந்து வெள்ளிக்கிழமை ரூ.10 ஆயிரத்து 500க்கு விற்பனை ஆனது.

    பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 568 முதல் ரூ.9 ஆயிரத்து 919 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.7 ஆயிரத்து 236 முதல் ரூ.9 ஆயிரத்து 779 வரைக்கும் விற்பனை ஆனது. இங்கு 962 மஞ்சள் மூட்டைகள் கொண்டு வரப்பட்டதில் 909 மூட்டைகள் ஏலம் போனது.

    ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.7 ஆயித்து 550 முதல், ரூ.10 ஆயிரத்து 500 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.7 ஆயிரத்து 119 முதல் ரூ.9 ஆயிரத்து 980 வரையும் ஏலம் போனது. இங்கு 1,246 மஞ்சள் மூட்டைகளில் 1,067 மூட்டைகள் ஏலம் போனது.

    ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரத்து 400 வரைக்கும், கிழங்கு மஞ்சள் ரூ.6 ஆயிரத்து 789 முதல் ரூ.9 ஆயிரத்து 999 வரையும் விற்பனை ஆனது. இங்கு கொண்டு வரப்பட்ட 3 ஆயிரத்து 508 மஞ்சள் மூட்டைகளில் 1,482 மூட்டைகள் ஏலம் போனது.

    கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 569 முதல் ரூ.9 ஆயிரத்து 459 வரைக்கும், கிழங்கு மஞ்சள் ரூ.8 ஆயிரத்து 529 முதல், ரூ.9 ஆயிரத்து 499 வரைக்கும் விற்பனையானது. இங்கு 182 மூட்டைகள் மஞ்சளில் 88 மூட்டைகள் ஏலம் போனது.

    கடந்த 2011-ம் ஆண்டு மஞ்சள் விலை குவிண்டால் ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் விற்பனையானது. அதன்பிறகு 12 ஆண்டுகளில் சராசரியாக குவிண்டால் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை மட்டும் விற்பனையானது. மராட்டியம், தெலுங்கானா மாநிலங்களில் சாகுபடி பரப்பு அதிகரித்து, தரத்திலும் ஈரோடு மஞ்சளோடு போட்டிபோட்டதால் மஞ்சள் விலை கடந்த 12 ஆண்டுகளாக உயரவில்லை. இந்த ஆண்டு மராட்டிய மாநிலத்தில் இருந்து தரமான மஞ்சள் சந்தைக்கு வராததால் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 500 வரை உயர்ந்துள்ளது.

    மஞ்சள் விலை உயராததால் ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 10 ஆண்டுகளாக இருப்பு வைத்துள்ளனர். விலை உயர்வால் இருப்பு வைத்துள்ள மஞ்சள் இனி வரும் நாட்களில் விற்பனைக்கு வரும். இருப்பினும் தரத்தில் வேறுபாடு இருக்கும் என்பதால் புதிய மஞ்சளுக்கு கிடைக்கும் விலை பழைய மஞ்சளுக்கு கிடைக்காது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ராசிபுரம் அருகே நாமகி ரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத் தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.
    • ஆர்.சி.எம்.எஸ். சங்கம் மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடம் சார்பில் நடந்த ஏலங்களில் 580 மஞ்சள் மூட்டைகள் ரூ.29 லட்சத்து 22 ஆயிரத்து 475-க்கு ஏலம் விடப்பட்டது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகி ரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத் தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் அரியாக்க வுண்டம்பட்டி, நாமகிரிப் பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா உள்பட பல் வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஏலத்திற்கு மஞ்சளை கொண்டு வந்திருந்தனர்.

    அதேபோல் ஒடுவன் குறிச்சி, ஈரோடு, சேலம், ஆத்தூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மஞ்சளை ஏலம் எடுப்பதற்காக வந்தி ருந்தனர். இதில் விரலி ரகம் 330 மூட்டைகளும், உருண் டைய ரகம் 100 மூட்டைகளும், பனங்காலி ரகம் 20 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன.

    விரலி ரகம் குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 322 முதல் அதிகப்பட்சமாக ரூ.9 ஆயிரத்து 999-க்கும், உருண்டை ரகம் குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரத்து 138-க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 312-க்கும், பனங்காலி ரகம் குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரத்து 999-க்கும், அதிகப்பட்சமாக ரூ.14 ஆயிரத்து 269-க்கும் ஏலம் விடப்பட்டது. மொத்தம் 450 மஞ்சள் மூட்டைகள் ரூ.22 லட்சத்துக்கு ஏலம் போ னதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்

    அதேபோல் நாமகிரிப் பேட்டையில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த மஞ்சள் ஏலத்தில் 130 மஞ்சள் மூட்டைகள் ரூ.7 லட்சத்து 22 ஆயிரத்து 475-க்கு ஏலம் விடப்பட்டது. இதில் விரலி ரகம் குறைந்த பட்சம் ரூ.8 ஆயிரத்து 802 முதல் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரத்து 705-க்கும் ஏலம் விடப்பட்டது. உருண்டை ரகம் குறைந்த பட்சம் ரூ. 8 ஆயிரத்து 399 முதல் அதிகபட்சமாக ரூ. 8 ஆயிரத்து 802-க்கும் ஏலம் விடப்பட்டது.

    இதன்படி, ஆர்.சி.எம்.எஸ். சங்கம் மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடம் சார்பில் நடந்த ஏலங்களில் 580 மஞ்சள் மூட்டைகள் ரூ.29 லட்சத்து 22 ஆயிரத்து 475-க்கு ஏலம் விடப்பட்டது.

    • அன்னை தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் பவுர்ணமி தோறும் 108 சுமங்கலிகளை கொண்டு திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.
    • நெய் தீபம் ஏற்றுவது அனைத்து தீபங்களிலும் சால சிறந்தது.

    மஞ்சளின் மகத்துவம்

    நாகலோகத்து மங்கையர் இருவர் பெயர் சுந்தரி, சாரதை, இருவரும் சகோதரிகள். அவர்களின் திருமணம் கைகூடாத நிலையில் நாரதரின் ஆலோசனைப்படி திருவேற்காட்டுறை கருமாரியை பணிந்தனர்.

    அன்னை அவர்களுக்கு அருள்புரிந்தாள்.

    'குழந்தைகளே! ஒரு மண்டலம் சாம்பர்ப் பொய்கையில் நீராடி மஞ்சள் நீரை அருந்துங்கள்' என்றாள்.

    அவ்வாறே செய்து வந்தனர்.

    ஒரு மண்டலம் முடிகின்ற தருவாயில் சம்பு, மாலன் என்ற இரண்டு அரச குமாரர்கள் அங்கு வந்து நாக கன்னியர்களை கண்டனர்.

    மனங்கள் இணைந்தன.

    அன்னையின் அருளால் திருமணம் கூடியது.

    இன்றளவும் மணம் கைகூடாத கன்னியர்களின் கவலை தீர்த்து அவர்களுக்கு இல்லற வாழ்வை வழங்குகிறாள் தாய்!

    திருவிளக்கில் விளங்கும் தேவி கருமாரி

    அன்னை கருமாரியின் அம்சங்களில் ஒன்று திருவிளக்கு. மங்கல விளக்கை ஏற்றி மனதார பணிந்தால் மங்கலம் சூழும்.

    விளக்கை சுத்தமாக துடைத்து திரியிட்டு எண்ணெயிட்டு மலர் சூட்டி திலகம் வைத்து அதன் முன்னே பணிய வேண்டும்.

    விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே

    சோதி மணிவிளக்கே சீதேவி பொன்மணியே

    அந்தி விளக்கே அலங்கார நாயகியே

    காந்தி விளக்கே காமாட்சி தாயாரே!

    என்று மனமுருகிப் பாடினால் நினைத்த காரியம் கைக்கூடும். வெற்றிமேல் வெற்றி கிட்டும்.

    பக்தர்கள் திருவிளக்கு பூஜை முறை குறிப்புகள்

    இதை உணர்த்தும் வண்ணம் நமது அன்னை தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் பவுர்ணமி தோறும் 108 சுமங்கலிகளை கொண்டு திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.

    அப்பூஜையில் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொள்வோர் அன்னையின் அருள் பெற்று வாழ்வில் உயர்வர்.

    தேவியின் அம்சம் திருவிளக்கு என்று முன்பு கூறினோம். அந்த அம்சம் அனைத்து தீபங்களிலும் உள்ளுறையாக பொதிந்து கிடக்கிறது. எனவே அன்னையின் அம்சமாகிய திருவிளக்கையும் அது தாங்கும் தீபத்தையும் பற்றி சற்று விரிவாக காண்போம்.

    தீப முறைகளும், அதன் நன்மைகளும்

    நெய் தீபம் ஏற்றுவது அனைத்து தீபங்களிலும் சால சிறந்தது. நெய் தீபம் ஏற்றி பரம்பொருளை துதித்தால் சகல சவுபாக்கியங்களும் கிட்டி வீட்டில் நன்மை வந்து சேரும்.

    விளக்கெண்ணெய் தீபம் தேக நலன் தரும். புகழ் வழங்கும். நல்ல நட்பு வாய்க்க பெறும். ஆரோக்கிய உணவு கிடைக்கும். சுகம் வரும். சுற்றத்தாரும் சுகமடைவர். அனைத்திற்கும் மேலாக இல்லற இன்பம் கிட்டும்.

    எக்காரணத்தை முன்னிட்டும் கடலை எண்ணெயில் தீபமிடக்கூடாது.

    வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்றிடின் சகல சுகங்களும் சித்திக்கும். நன்மை வந்து சேரும்.

    நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் கலந்து தீபமிட்டு ஒரு மண்டலம் எம்பிராட்டியை எண்ணி பூஜை செய்தால் அம்பிகையின் அருள் கிடைப்பது திண்ணம். சகல சவுபாக்கியங்களும் தானாய் வரும். ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

    பொதுவாக பிரம்ம முகூர்த்தம் என்று குறிப்பிடப்படும் விடியற்காலை நேரம் 4.30 மணி முதல் 6 மணி வரை தீபமேற்றி வழிபடுதல் சிறப்பானதாகும். அவ்வாறு செய்தால் அனைத்து நலன்களும் அடைய பெற்று மண்ணில் வாழ்வாங்கு வாழ்வர்.

    • மஞ்சள் ஏலம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது.
    • ரூ 2.கோடியே 30 லட்சத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. இதில் விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.6113 முதல் ரூ.7533 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.5584 முதல் ரூ.6443 வரையிலும் பனங்காளி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10312 முதல் ரூ.11699 வரையிலும் மொத்தம் 6000 மூட்டைகள் தொகை ரூ 2.கோடியே 30 லட்சத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×