search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடந்தது"

    • மஞ்சள் ஏலம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது.
    • ரூ 2.கோடியே 30 லட்சத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. இதில் விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.6113 முதல் ரூ.7533 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.5584 முதல் ரூ.6443 வரையிலும் பனங்காளி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10312 முதல் ரூ.11699 வரையிலும் மொத்தம் 6000 மூட்டைகள் தொகை ரூ 2.கோடியே 30 லட்சத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளுக்குள் செஸ் போட்டி இன்று நடந்தது.
    • போட்டியில் முதல் 3 இடங்கள் பிடிக்கும் மாணவ-மாணவிகள் அடுத்தடுத்த போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

    ஈரோடு:

    சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதையொட்டி தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவி களுக்கு இடையேயான செஸ் போட்டி நடத்த உத்தரவிடப்பட்டு இருந்தது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த போட்டியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் மாணவ-மாணவிகளுக்கு இடையே செஸ் போட்டி நடைபெறுகிறது.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளுக்குள் செஸ் போட்டி இன்று நடந்தது. இந்த போட்டி ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையும், 11-12 வகுப்பு வரை என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    6 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 120-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுகந்தி பார்வை யிட்டார். உடற்கல்வி ஆசிரியர்கள் உடன் இருந்தனர். போட்டியில் முதல் 3 இடங்கள் பிடிக்கும் மாணவ-மாணவிகள் அடுத்தடுத்த போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

    ×