search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் பாதுகாப்பு"

    • டி.ஐ.ஜி பேட்டி
    • புதிய பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார்

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். சமூக விரோதிகள் பயணிகளிடம் செல்போன் பணம் பறிப்பு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

    இதனால் புதிய பஸ் நிலையத்தில் புறநகர் காவல் நிலையம் அமைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

    பொது மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பஸ் நிலையத்தில் பொதுமக்களின் அவசர உதவிகளுக்கும் உடைமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும் குற்றங்களை குறைக்கவும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் புறநகர் காவல் நிலையம் கட்டப்பட்டது.

    புறநகர் காவல் நிலையத்தை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கோடீஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், நாகராஜ், ரவி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    பின்னர் டி.ஐ.ஜி முத்துசாமி கூறியதாவது:-

    புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர் மேலும் பயணிகளை வழியனுப்ப உறவினர்கள் வருகின்றனர்.

    பஸ் நிலையத்துக்கு வருபவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புறநகர் போலீஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை ஏற்று புறநகர் போலீஸ்களையும் திறக்கப்பட்டு உள்ளது. குற்ற சம்பவங்களை பாதுகாப்பு தடுக்கவும் ஏற்கனவே நடந்த குற்ற சம்பவங்களை கண்டுபிடிக்கவும் இது உதவும்.

    புதிய பஸ் நிலையத்தில் 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்ற சம்பவங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் மார்க்கெட், பஸ் நிலையம் ெரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

    இவ்வாறு அவர்கூறினார்.

    முன்னதாக பாலாற்றங்கரையோரம் உள்ள டோபிக்கானா பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த 10 கண்காணிப்பு கேமராக்களை டிஐஜி முத்துசாமி தொடங்கி வைத்தார்.

    யெகோவின் சாட்சிகள் தவறான தகவல்களை கற்றுத்தந்து, தேச விரோத செயல்களில் ஈடுபட தூண்டுகின்றனர். இதனால் அந்த மாநாட்டு அரங்கிற்கு வெடிகுண்டு வைத்ததாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    விழுப்புரம்:

    கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் ஜம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் நேற்று காலை யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபையினரின் ஜெபக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.ஜெபக் கூட்டம் நடைபெற்ற போது காலை 9.45 மணிக்கு அரங்கின் மையப்பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடி குண்டு வெடித்தது. அடுத்த சில நிமிடங்களில் அரங்கின் பக்கவாட்டில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன.இந்த குண்டு வெடிப்பில் 2 பேர் பலியானர். 51-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த பயங்கர சம்பவம் தொடர்பா கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் திருச்சூர் மாவட்டம் கொடகரா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.அவர், யெகோவின் சாட்சிகள் தவறான தகவல்களை கற்றுத்தந்து, தேச விரோத செயல்களில் ஈடுபட தூண்டுகின்றனர். இதனால் அந்த மாநாட்டு அரங்கிற்கு வெடிகுண்டு வைத்ததாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் யெகோவின் சாட்சிகள் குழுவினருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சர்வதேச நகரமான ஆரோவில்லில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.குறிப்பாக ஆரோவில் நுழைவு வாயில், மாத்ரி மந்திர், இஸ்ரேலை சேர்ந்த யெகோவின் சாட்சிகள் குழுவினர் 30 பேர் வசிக்கும் பகுதி ஆகிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் சர்வதேச நகரமான ஆரோவில்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • டி.ஜி.பி உத்தரவின்பேரில் கண்காணிப்பு, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • அனைத்து தேவாலயங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    கேரள மாநிலம் கொச்சியில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் தேவாலயங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் டி.ஜி.பி உத்தரவின்பேரில் கண்காணிப்பு, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மிஷன்வீதி ஜென்ம ராக்கினி, தூய இருதய ஆண்டவர் ஆலயம், வில்லியனூர் லூர்தன்னை, நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை தேவாலயம் உட்பட அனைத்து தேவாலயங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநில எல்லைகளிலும் சோதனை நடத்தப்படுகிறது.

    • மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

    ஆலந்தூர்:

    சென்னை, ஆதம்பாக்கம், ஜீவன் நகர், 2-வது தெருவில் இருந்து மேடவாக்கம் மெயின் ரோட்டை இணைக்கும் வகையில் சாலை அமைக்கப்பட உள்ளது. இதில் அங்குள்ள கால்வாய் மீது சிறிய பாலமும் கட்டப்பட இருக்கிறது.

    இந்த நிலையில் சாலை அமையும் பகுதியில் உள்ள சில வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக கூறி அதனை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். வீடுகளை காலி செய்யவும் உத்தரவு பிறப்பித்து இருந்தனர். ஆனால் இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கிடையே இன்று காலை தாசில்தார்கள் ராதிகா, காளிதாஸ் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் வீடுகளை இடிக்கும் பணியை தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அ.தி.மு.க.கிழக்கு பகுதி செயலாளர் பரணி பிரசாத், முன்னாள் கவுன்சிலர்கள் கோபாலகிருஷ்ணன், நரேஷ் குமார், லோகேஷ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து மேடவாக்கம் சாலையில் திடீர் மறியிலில் ஈடுபட்டனர். இதேபோல் பா.ஜ.க.வை சேர்ந்த வினோத், இன்பா தலைமையிலும் ஏராளமானோர் பொதுமக்களுக்கு ஆதரவாக மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்கு வாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 4 பெட்டிகளை கொண்ட மெட்ரோ ரெயிலில் பெண்கள் மட்டும் பயணம் செய்ய 2 பெட்டிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
    • போலீஸ் பாதுகாப்பு போதுமான அளவு மெட்ரோ ரெயிலில் இல்லாததால் ஆண்கள் அத்துமீறுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை 2 வழித் தடத்தில் இயக்கப்படுகிறது. தினமும் 2.5 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

    மெட்ரோ ரெயில் மற்றும் நிலையங்களில் தனியார் பாதுகாப்புக்கு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து வரும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் பெண்கள் பயணம் செய்யக் கூடிய பெட்டியில் ஆண் பயணிகள் சமீப காலமாக ஆக்கிரமித்து பயணம் செய்வதால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன.

    4 பெட்டிகளை கொண்ட மெட்ரோ ரெயிலில் பெண்கள் மட்டும் பயணம் செய்ய 2 பெட்டிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. போலீஸ் பாதுகாப்பு போதுமான அளவு மெட்ரோ ரெயிலில் இல்லாததால் ஆண்கள் அத்துமீறுவதாக குற்றம் சாட்டுகின்றனர். தனியார் பாதுகாப்பு ஊழியர்களை பயணிகள் கண்டு கொள்வதில்லை.

    மெட்ரோ ரெயில்களில் கூடுதலாக தனியார் பாதுகாப்பு ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று அதன் ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

    பெண்கள் பெட்டியில் ஆண் பயணிகள் அமர்ந்து கொண்டு செல்போனில் அதிக சத்தத்துடன் பாடல்களை கேட்பது, பெட்டியில் உணவு அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் வந்ததையடுத்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளது. தமிழக அரசிடம் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரி உள்ளது.

    இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

    மெட்ரோ ரெயில்களில் கூட்ட நெரிசல் நேரங்களில் ஆண் பயணிகள் பெண் பயணிகள் பெட்டியில் பயணம் செய்கின்றனர். அதை தடுக்க கூடுதலாக போலீஸ் படை கேட்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களிடமும் கூடுதல் ஊழியர்களை நியமிக்க கூறியுள்ளோம்.

    புறநகர் மின்சார ரெயில்களில் பாதுகாப்புபடை போலீசார் ஈடுபடுவது போல் கூடுதலாக மாநில போலீஸ் படை வழங்கினால் இதுபோன்ற பிரச்சினைகளை தடுக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தற்போது பெட்டி மாறி பயணம் செய்யும் ஆண்களுக்கு அபராதம் எதுவும் விதிப்பது இல்லை. பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணம் செய்யக் கூடாது என தொடர்ச்சியாக அறிவிப்பு வெளியிட வேண்டும்.

    டெல்லி மெட்ரோ ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணம் செய்தால் ரூ.250 அபராதம் கடந்த மாதம் முதல் விதிக்கப்படுகிறது. அது போல சென்னை மெட்ரோ ரெயில்களிலும் அமல்படுத்த வேண்டும் என்று பெண் பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

    • வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் பீர் பாட்டில்களை அள்ளிச் சென்றனர்.
    • விபத்தில் லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    மதுராந்தகம்:

    திருவள்ளூரில் இருந்து விழுப்புரம் நோக்கி பீர் பாட்டில் ஏற்றிக்கொண்டு நேற்று நள்ளிரவு லாரி சென்றது. இரவு 12 மணியளவில் மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது.

    இதில் லாரியில் இருந்த பீர்பாட்டில்கள் உடைந்து பீர் ஆறாக ஓடியது. நள்ளிரவு நேரம் என்பதால் லாரியை மீட்டு அதில் இருந்த பீர் பாட்டில் பெட்டிகளை வேறொரு லாரிக்கு மாற்றமுடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் மின்விளக்கு இல்லை. இதைத்தொடர்ந்து மதுராந்தகம் போலீசார் லாரி கவிழ்ந்த இடத்தில் விடிய, விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    எனினும் விபத்து நடந்த சிறிது நேரத்தில் போலீசார் வருவதற்கு முன்பே அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் பீர் பாட்டில்களை அள்ளிச் சென்றனர். அவர்களை போலீசார் எச்சரித்தனர்.

    இதையடுத்து பீர்பாட்டில்களை எடுத்தவர்கள் அங்கேயே ஆங்காங்கே வீசி விட்டு சென்றனர். அந்த பீர் பாட்டில்களை போலீசார் சேகரித்தனர். இந்த விபத்தில் லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    இன்று காலை மீட்பு வாகனம் வந்ததும் லாரி மீட்கப்பட்டது. எனினும் ஏராளமான பீர்பாட்டில்கள் உடைந்து வீணானது. சாலை யோரம் லாரி கவிழ்ந்து கிடந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று காலை முதல் ஞாயிறு நள்ளிரவு வரை பலத்த பாதுகாப்பு
    • பொதுமக்கள் இந்தியா கேட் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தல்

    டெல்லியில் நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய இரண்டு நாட்கள் ஜி20 மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் டெல்லி வந்த வண்ணம் உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டுள்ளார்.

    தலைவர்கள் அனைவரும் டெல்லியில் கூட இருப்பதால், இன்று காலை ஐநது மணி முதல் ஞாயிறு இரவு 11.59 மணி வரையிலான உச்சக்கட்ட பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    டெலிவரி சேவை உள்ளிட்ட அனைத்திற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. முக்கியமான மருந்து தொடர்பான சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் இந்தியா கேட், கார்தவ்யா பாத் போன்ற இடங்களில் நடைபயிற்சி, சைக்கிளிங் மற்றும் பிக்னிக் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த பகுதி கட்டுப்பாட்டு பகுதி-1 என வரையறுக்கப்பட்டுள்ளது.

    டெல்லி மாவட்டத்தில் வாகன போக்குவரத்து ஒழுங்கு படுத்தப்பட்ட நிலையில், ஆம்புலன்ஸ் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. உள்ளூர் மற்றும் சுற்றுலா வந்தவர்கள் உரிய ஆவணங்களுடன் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    டெல்லி போலீசார் கேட்டுக்கொண்டதன்படி, இன்று முதல் 10-ந்தேி வரை மெட்ரோ ரெயில் சேவை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், மோப்ப நாய்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்
    • கன்னியாகுமரியில் உள்ள அனைத்து லாட்ஜ்களிலும் போலீசார் அதிரடி சோதனை

    கன்னியாகுமரி :

    76-வது சுதந்திர தின விழா நாளை (செவ்வாய்கி ழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டா டப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியா குமரியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளது.

    அந்த அடிப்படையில் கன்னியாகுமரி கடல் நடு வில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அங்கு 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தவிர கன்னியாகுமரி கட லோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கட லோர பாதுகாப்பு குழும போலீசார் அதிநவீன ரோந்து படகுகளில் கடல் வழியாக சென்று தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சொந்தமான 11 சோதனை சாவடிகளில் போலீசார் இரவு-பகலாக சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரியில் உள்ள அனைத்து லாட்ஜ்களிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரியில் உள்ள ரெயில் நிலையம், பஸ் நிலையம், கலங்கரை விளக்கம் மற்றும் கடற்கரை பகுதியில் போலீசார் தீவி ரமாக கண்காணித்து வரு கிறார்கள். கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 72 கிலோமீட்டர் தூரம் அமைந்துள்ள 42 கடற்கரை கிராமங்களில் போலீசார் தீவிரமாக ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள்.

    • லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை
    • 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.

    நாகர்கோவில் :

    நாடு முழுவதும் 76-வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடக்கிறது.

    இதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் தேசிய கொடி ஏற்றி வைக்கிறார். இதைத்தொடர்ந்து சிறந்த போலீசாருக்கு பதக்கங்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

    பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி களும் நடக்கிறது. சுதந்திர தினத்தையொட்டி போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்றும் நடந்தது. மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், ஒத்திகை நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.

    சுதந்திர தினம் கொண்டாட்டத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெறும் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடட்டுள்ளது. மைதானம் போலீசாரின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உ ள்ளது.

    மாவட்ட எல்லை பகுதி களில் உள்ள சோதனை சாவடிகளிலும் கண் காணிப்பு பலப்படுத்தப்பட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள். நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள கடற்கரை கிராமங்களி லும் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. கடலோர காவல் படையினர் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள் ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சுசீந்திரம் தாணுமாலை யன் சாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உட்பட அனைத்து கோவில்க ளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகி றார்கள். லாட்ஜ்களி லும் அதிரடி சோதனை நடத்தபபட்டது.

    கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் சந்தேகப்படும்படியாக நபர்கள் தங்கி உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் சோதனை மேற்கொண்ட னர்.

    லாட்ஜில் உள்ள வருகை பதிவேட்டையும் அவர்கள் சோதனை செய்தனர். மார்த்தாண்டம், நாகர் கோவில் பகுதியில் உள்ள லாட்ஜ்களிலும் சோதனை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் போலீசார் இன்று 2-வது நாளாக சோதனை மேற்கொ ண்டனர். நாகர்கோவிலில் இருந்து வெளியூர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் முழுமையான சோதனைக்கு பிறகு அனுப்பி வைக்கப்பட் டது. மேலும் ரெயில்வே தண்டவாளங்களில் மெட் டல் டிடெக்டர் கருவியின் மூலம் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    ரெயில்வே பாலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நாங்குநேரி, வள்ளியூர், இரணியல், குழித்துறை ரெயில் நிலையங்களிலும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    • சுதந்திர தின விழா முடியும் வரையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே போலீசார் விடுமுறை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    • சோதனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் 16-ந்தேதி வரை நீடிக்கும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி சுதந்திர தின கொண்டாட்டங்கள் களைகட்ட உள்ளன.

    இதையொட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    சென்னையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் வாகன சோதனை, தங்கும் விடுதிகளில் சோதனை ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மாநகர் முழுவதும் இரவு ரோந்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    வாகன சோதனையின் போது சந்தேக நபர்கள் சுற்றி திரிந்தால் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று இன்ஸ்பெக்டர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    திருவல்லிக்கேணி, பெரியமேடு, எழும்பூர், கோயம்பேடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சந்தேகத்துக்கிடமான லாட்ஜூகளில் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பதை கண்டறிய திடீர் சோதனையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சுதந்திர தின விழா முடியும் வரையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே போலீசார் விடுமுறை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    வணிக வளாகங்கள், கோவில்கள் ஆகியவற்றில் பாதுகாப்பை பலப்படுத்தி போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்த சோதனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் 16-ந்தேதி வரை நீடிக்கும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • வனத்துறையினர் அவர்களை விரட்டி சென்றபோது மோட்டார் சைக்கிளில் தப்பிஓடிய 3 பேரும் சிறிது தூரத்தில் தவறி விழுந்தனர்.
    • வெங்கடேஷ் இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் கானட்டி முனியப்பன் கோவில் அருகில் வனக் காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களை வனத்துறையினர் நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் நிற்காமல் சென்றனர். அவர்களில் ஒருவர் நெற்றியில் டார்ச் லைட் மாட்டி இருந்தார். மற்ற 2 பேரில் ஒருவர் கையில் நாட்டுத் துப்பாக்கியும், மற்றொருவர் வாகனத்தை ஓட்டியபடியும் இருந்தார்.

    இதையடுத்து வனத்துறையினர் அவர்களை விரட்டி சென்றபோது மோட்டார் சைக்கிளில் தப்பிஓடிய 3 பேரும் சிறிது தூரத்தில் தவறி விழுந்தனர்.

    இந்நிலையில் தவறி விழுந்தவர்களில் ஒருவர் மட்டும் வனத்துறையினரிடம் பிடிபட்டார்.

    வனத்துறையினர் பிடித்த நேரத்தில் அந்த நபர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கிய அவருக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நாட்றாம்பாளையத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்தனர்.

    அவர்கள் பரிசோதித்த போது அவர் இறந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கும், அஞ்செட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் அஞ்செட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் இறந்தவர் பெயர் வெங்கடேஷ் (வயது 48), கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா சேசுராஜபுரம் அருகே உள்ள அட்டப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், முயல் வேட்டைக்காக அங்கு வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் உடலை தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் வெங்கடேஷ் இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    இந்நிலையில் வெங்கடேஷ் இறந்த தகவல் அறிந்து அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் அட்டப்பள்ளம் அருகே பூமரத்துகுழி என்னும் இடத்தில் திரண்டனர்.

    அவர்கள் அங்குள்ள வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடியை சூறையாடி தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் வெங்கடேஷின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள 2 பேரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, அட்டப்பள்ளம் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மெரினா போலீசார் சட்ட விரோதமாக கூடுதல், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுதல் என்பன உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    • மெரினாவில் நடைபெற்ற திடீர் போராட்டத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    மணிப்பூரில் 2 இளம்பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சென்னையில் மெரினா கடற்கரையில் நேற்று இரவு போராட்டம் நடத்தப்பட்டு உள்ளது. மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி உள்பட 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். காந்தி சிலை அருகே திடீரென திரண்டு அனுமதி இல்லாத இடத்தில் போராட்டம் நடைபெற்றதால் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இதுதொடர்பாக மெரினா போலீசார் சட்ட விரோதமாக கூடுதல், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுதல் என்பன உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மெரினாவில் நடைபெற்ற இந்த திடீர் போராட்டத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நேப்பியர் பாலத்தில் தொடங்கி கலங்கரை விளக்கம் வரையில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். சந்தேகத்துக்கிடமாக சுற்றி திரிபவர்களை பிடித்து விசாரணை நடத்தி வெளியில் அனுப்பி வருகிறார்கள்.

    ×