என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சுதந்திர தினத்துக்கு 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு- சென்னையில், வணிக வளாகங்கள், கோவில்களில் கண்காணிப்பு
- சுதந்திர தின விழா முடியும் வரையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே போலீசார் விடுமுறை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
- சோதனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் 16-ந்தேதி வரை நீடிக்கும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
சென்னை:
நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி சுதந்திர தின கொண்டாட்டங்கள் களைகட்ட உள்ளன.
இதையொட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சென்னையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் வாகன சோதனை, தங்கும் விடுதிகளில் சோதனை ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மாநகர் முழுவதும் இரவு ரோந்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வாகன சோதனையின் போது சந்தேக நபர்கள் சுற்றி திரிந்தால் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று இன்ஸ்பெக்டர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
திருவல்லிக்கேணி, பெரியமேடு, எழும்பூர், கோயம்பேடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சந்தேகத்துக்கிடமான லாட்ஜூகளில் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பதை கண்டறிய திடீர் சோதனையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழா முடியும் வரையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே போலீசார் விடுமுறை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வணிக வளாகங்கள், கோவில்கள் ஆகியவற்றில் பாதுகாப்பை பலப்படுத்தி போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்த சோதனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் 16-ந்தேதி வரை நீடிக்கும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்