search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெறும் நாகர்.அண்ணா விளையாட்டரங்கத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
    X

    சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெறும் நாகர்.அண்ணா விளையாட்டரங்கத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

    • லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை
    • 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.

    நாகர்கோவில் :

    நாடு முழுவதும் 76-வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடக்கிறது.

    இதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் தேசிய கொடி ஏற்றி வைக்கிறார். இதைத்தொடர்ந்து சிறந்த போலீசாருக்கு பதக்கங்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

    பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி களும் நடக்கிறது. சுதந்திர தினத்தையொட்டி போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்றும் நடந்தது. மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், ஒத்திகை நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.

    சுதந்திர தினம் கொண்டாட்டத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெறும் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடட்டுள்ளது. மைதானம் போலீசாரின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உ ள்ளது.

    மாவட்ட எல்லை பகுதி களில் உள்ள சோதனை சாவடிகளிலும் கண் காணிப்பு பலப்படுத்தப்பட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள். நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள கடற்கரை கிராமங்களி லும் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. கடலோர காவல் படையினர் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள் ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சுசீந்திரம் தாணுமாலை யன் சாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உட்பட அனைத்து கோவில்க ளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகி றார்கள். லாட்ஜ்களி லும் அதிரடி சோதனை நடத்தபபட்டது.

    கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் சந்தேகப்படும்படியாக நபர்கள் தங்கி உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் சோதனை மேற்கொண்ட னர்.

    லாட்ஜில் உள்ள வருகை பதிவேட்டையும் அவர்கள் சோதனை செய்தனர். மார்த்தாண்டம், நாகர் கோவில் பகுதியில் உள்ள லாட்ஜ்களிலும் சோதனை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் போலீசார் இன்று 2-வது நாளாக சோதனை மேற்கொ ண்டனர். நாகர்கோவிலில் இருந்து வெளியூர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் முழுமையான சோதனைக்கு பிறகு அனுப்பி வைக்கப்பட் டது. மேலும் ரெயில்வே தண்டவாளங்களில் மெட் டல் டிடெக்டர் கருவியின் மூலம் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    ரெயில்வே பாலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நாங்குநேரி, வள்ளியூர், இரணியல், குழித்துறை ரெயில் நிலையங்களிலும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×