search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் பாதுகாப்பு"

    • பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வந்தனர்.
    • நில எடுப்புக்கு தனியாக அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5250 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 1500 ஏக்கர் அரசு நிலம் ஆகும். மீதி உள்ளவை பட்டா நிலங்கள் ஆகும்.

    விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் புதிய விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் விமான நிலைய எதிர்ப்பு குழுவையும் உருவாக்கி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வந்தனர்.

    இதற்கிடையே விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் நிலங்களை கையகப்படுத்துவதற்கான நிர்வாக அனுமதியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு வழங்கி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நில எடுப்புக்கு தனியாக அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் பரந்தூர் விமானநிலையத்துக்கு முதல் கட்டமாக நிலம் எடுப்பதற்காக அறிவிப்பை அரசு வெளியிட்டு உள்ளது. பொடாவூர் கிராமத்தில் 218 பேரிடம் இருந்து 93 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த இடங்களில் 566 பனை மரங்கள் மற்றும் காட்டுவாமரம், அரசமரம், மாமரம், வேப்பமரம், தைலமரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பட்டாதாரர்களுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்பட இருக்கிறது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பரந்தூர் விமான நிலைய பணிக்கு முதல் கட்டமாக பொடாபூர் கிராமத்தில் 218 பேரிடம் இருந்து 93 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பொது அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. நிலத்தின் உரிமையாளர்களுக்கு தனித்தனியே நோட்டீஸ் தரப்படும். அவர்கள் 30 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம். அதன்மீது ஏப்ரல் மாதம் 4-ந்தேதி விசாரணை மேற் கொள்ளப்படும். அரசு அறிவித்தபடி நிலம் வழங்கு வோருக்கு சந்தை மதிப்பை விடம கூடுதல் இழப்பீடு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பு வெளியான நிலையில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் இன்று இது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளனர். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

    • காஞ்சிபுரம் என்ற முகவரியில் எழுத்து மூலமாக அளிக்கலாம்.
    • ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 4-ந்தேதி விசாரணை மேற்கொள்ளப்படும்.

    காஞ்சிபுரம்:

    பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக நில எடுப்புக்கான முதல் நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் 32.4.05 சதுர மீட்டர் மற்றும் 2.77.76 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சே பனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். தனி மாவட்ட வருவாய் அலுவலர், புதிய பசுமை வெளி விமான நிலைய திட்டம், மண்டலம் 3, ஆர். ஆர்.கார்டன், பரந்தூர் சாலை கற்பூரம் கம்பெனி அருகில், அங்காள பரமேஸ்வரி கோவில் பின் புறம், பொன்னேரிக்கரை, காஞ்சிபுரம் என்ற முகவரியில் எழுத்து மூலமாக அளிக்கலாம். ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 4-ந்தேதி விசாரணை மேற்கொள்ளப்படும்.

    • சூர்யா சிவா, தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
    • “இப்போதெல்லாம் ஒருவர் 2 போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது பேஷனாக மாறிவிட்டது"

    பாஜகவில் ஓபிசி அணியின் மாநில பொதுச்செயலாளராக உள்ள சூர்யா சிவா, தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

    பொதுமக்கள் சேவைக்காக மாநிலம் முழுவதும் பயணம் செய்து வருவதாகவும், தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டுமென சூர்யா சிவா மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    சூர்யா சிவா மீது குற்ற வழக்குகள் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியாது என அரசுத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய நீதிபதி தண்டபாணி, "இப்போதெல்லாம் ஒருவர் 2 போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது பேஷனாக மாறிவிட்டது" என கூறி சூர்யா சிவாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    திருச்சி சூர்யா சிவா மீது பல்வேறு கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. திருச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளி இடத்தை ஆக்கிரமித்து, வாடகை தராமல் ஏமாற்றி வருவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் மீது பெண் ஒருவர் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, ஆம்னி பேருந்தை கடத்திய வழக்கில் சூர்யா சிவா கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவாவின் மகனான சூர்யா சிவா கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

    பாஜகவில் இணைந்த சூர்யா சிவாவிற்கு ஓபிசி அணியில் மாநில பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் சூர்யா சிவா, பாஜகவின் சிறுபான்மை அணியைச் சேர்ந்த டெய்சியை ஆபாசமாக பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.madurai highcourt dismisses trichy surya siva plea

    இதையடுத்து இருவரும் சமரசம் செய்து கொண்டாலும், சூர்யா சிவா தற்காலிகமாக பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் பாஜகவில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக திருச்சி சூர்யா அறிவித்தார். கடந்த நவம்பர் மாதம் மீண்டும் சூர்யா சிவா பாஜகவில் சேர்க்கப்பட்டு, முன்பு அவர் வகித்து வந்த ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளராக தொடர்வார் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முக்கிய வீதிகளில் போலீசார் மோட்டார் சைக்கிள், வாகனங்களில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(வயது45). இவர் இந்து மக்கள் கட்சி (தமிழகம்) தேர்தல் பிரிவு செயலாளராக உள்ளார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதனை எடுத்து இவர் பேசினார். அப்போது எதிர்முனையில் இந்தியில் பேசிய மர்மநபர், தான் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன்.

    நான் மும்பையில் வெடிகுண்டு வைத்து உள்ளதாகவும், அது விரைவில் வெடிக்கும் எனவும் கூறியதாக கூறப்படுகிறது. அந்த நபர் இந்தியில் பேசியது, சுப்பிரமணியத்துக்கு புரியவில்லை.

    இதையடுத்து அவர் தனது அருகே இருந்த நண்பரான செந்தில்குமாரிடம் கொடுத்தார். அவர், ஆங்கிலத்தில் பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய நபரும் ஆங்கிலத்தில் மும்பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் விரைவில் வெடிக்கும் என கூறி விட்டு இணைப்பை துண்டித்தார்.

    இதனால் அதிர்ச்சியான இவர்கள் கோவை மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கோவை போலீசார் மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் சுப்பிரமணியம், செந்தில்குமார் ஆகியோரை கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் அழைத்து விசாரித்தனர். இவர்களிடம் மும்பை போலீசாரும் விசாரித்தனர்.

    தொடர்ந்து, அவர்களுக்கு வந்த செல்போன் எண்ணை வாங்கி ஆய்வு செய்தனர். அப்போது, அந்த மர்மநபர் இன்டர்நெட்டில் இருந்து பேசியது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த ஐ.டி. யாருடையது. எங்கிருந்து அழைத்தார். அவர் கூறியது உண்மைதானா? என்பது தொடர்பாகவும் விசாரித்து வருகிறார்கள்.

    இன்னும் சில தினங்களில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் கும்பிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த சமயத்தில் மும்பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இந்து மக்கள் கட்சியை சேர்ந்த பிரமுகருக்கு மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்தது கோவையில பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து கோவை மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மக்கள் அதிகமாக கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மார்க்கெட், சந்தை பகுதி, கடைவீதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    முக்கிய வீதிகளில் போலீசார் மோட்டார் சைக்கிள், வாகனங்களில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்திற்கிடமாக யாராவது சுற்றி திரிந்தால் அவர்களை பிடித்து விசாரித்தும் வருகின்றனர்.

    பஸ் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடமைகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. பஸ் நிலையங்களிலும் யாராவது சந்தேகத்திற்கி டமாக சுற்றி திரிகின்றனரா? என்பதையும் போலீசார் கண்காணிக்கின்றனர். பஸ்களில் ஏறியும் சோதனை மேற்கொள்கின்றனர்.

    இதுதவிர வெடிகுண்டு நிபுணர்கள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு 24 மணி நேரமும் கோவை மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் மெட்டல் டிடெக்கர், மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொள்கின்றனர்.

    கோவில்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவை சந்திப்பு ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ரெயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்புபடை போலீசார் இணைந்து ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்கள் மற்றும் தண்டவாளங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.

    ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அவர்களது உடமைகளும் சோதனை செய்யப்படுகிறது. சோதனைக்கு பின்னரே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    கடைவீதிகளில் போலீசார் சாதாரண உடை அணிந்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    அங்கு வரும் பயணிகளும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்க ப்பட்டு வருகிறார்கள். இதுதவிர மாவட்ட எல்லைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அந்த வழியாக வரும் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

    வாகனங்களில் வருபவர்களிடம் உரிய ஆவணம் உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்து விசாரித்த பின்னர் கோவைக்குள் அனுமதித்து வருகின்றனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் காரை ஓட்டி வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
    • சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த பாதுகாப்பு வளையத்தை மீறி நேற்று ஒரு மர்ம கார் வெள்ளை மாளிகை நோக்கி வந்தது. திடீரென அந்த காரை ஓட்டி வந்தவர் வெள்ளை மாளிகை வளாகத்தில் உள்ள வெளிப்புற நுழைவு வாயில் மீது பயங்கரமாக மோதினார்.

    இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் காரை ஓட்டி வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். இது தற்செயலாக நடந்த விபத்தா?அல்லது சதி செயலில் ஈடுபடும் வகையில் அவர் காரை மோதினாரா? என்பது தொடர்பாக அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் நடந்த போது அமெரிக்க அதிபர் ஜோபைடன் வெள்ளை மாளிகையில் இல்லை. அவர் வெளியூரில் சுற்றுப்பயணத்தில் இருந்தார்.

    வெள்ளை மாளிகையில் இது போன்ற அத்துமீறல்கள் அவ்வப்போது நடந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த 2014-ம் ஆண்டு பராக் ஒபாமா அதிபராக இருந்த போது ராணுவ வீரர் ஒருவர் வெள்ளை மாளிகை புல்வெளி பகுதியில் சட்டைப்பையில் கத்தியுடன் நுழைந்து பரபரப்பாக்கினார்.

    இதன் தொடர்ச்சியாக 2017-ம் ஆண்டு டிரம்ப் அதிபராக இருந்த போது வெள்ளை மாளிகை வேலியை அளந்த ஒருவர் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடுகிறார்கள்.
    • கடற்கரையை ஒட்டி கடல் நடுவே உள்ள ஆபத்தான பாறைகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டில் பாலம், பத்ம நாபபுரம் அரண்மனை, வட்டக்கோட்டை, சங்கு துறை-சொத்தவிளை, கணபதிபுரம் உள்ளிட்ட கடற்கரைகள் என ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரை என பல இடங்கள் இருக்கும் கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, பல மாநிலங்களை சேர்ந்த வர்கள், வெளிநாட்டினர் சுற்றுலாவாக வருகிறார்கள்.

    சூரிய உதயம், அஸ்தமனம் இரண்டையுமே கன்னியாகுமரியில் பார்க்கலாம். குமரி மாவட்டத்துக்கு சுற்றுலா வருபவர்கள் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்க்க தவறுவதில்லை. அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடுகிறார்கள்.

    மேலும் கடலுக்கு நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்த்து மகிழ்வார்கள். அது மட்டுமல்லாமல் சிறந்த ஆன்மீக தலமாகவும் கன்னியாகுமரி திகழ்கிறது. இங்குள்ள பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கும் சுற்றுலா பயணி கள் செல்கின்றனர். கன்னியாகுமரியில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் இந்த மாதங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் மிக அதிக அளவில் இருக்கும். அதோடு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வருகையும் இந்த மாதங்களில் அதிகமாக இருக்கும்.

    இந்த ஆண்டும் சீசன் காலமான தற்போது கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. அதுவும் சபரிமலைக்கு செல்லக்கூடிய அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் கன்னியாகுமரியில் திரும்பிய இடமெல்லாம் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்படுகிறது.

    அவர்கள் விவேகானந்தர் மண்டபத்தை காண படகு போக்குவரத்து தொடங்கு வதற்கு முன்பே படகு குழாம் முன்பு நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். பராமரிப்பு மற்றும் பாலம் பணிகள் காரணமாக திருவள்ளுவர் சிலையை பார்க்க சுற்றுலா பயணிகள் தற்போது அனுமதிக்கப்படுவதில்லை.

    சுற்றுலாவை ஆனந்தமாக கொண்டாடும் நோக்கத்தில் கன்னியாகுமரிக்கு வருபவர்களில் சிலர் ஆபத்தை உணராமல் செயல்படுவது தான் அதிர்ச்சிகரமான விஷயமாக உள்ளது. கன்னியாகுமரி கடலில் அவ்வப்போது ராட்சத அலைகள் எழும். காற்றின் வேகமும் அதிகமாகும்.

    இதனால் கடற்கரையை ஒட்டி கடல் நடுவே உள்ள ஆபத்தான பாறைகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த பாறைகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீறி சிலர் அங்கு சென்று விடுகிறார்கள்.

    அவ்வாறு தடையை மீறி செல்பவர்கள் பாறைகளில் அமர்ந்தும், நின்று கொண்டும் செல்போனில் செல்பி எடுக்கின்றனர். மேலும் சிலர் குரூப்பாக நின்று போட்டோ எடுக்கிறார்கள். அவர்கள் பாறைகளுக்கு செல்லும் வழியும், பாறைகள் மீது நிற்பதும் ஆபத்தானது என போலீசார் எச்சரித்துள்ள போதிலும் பலர் கண்டு கொள்வதில்லை.

    தற்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்று அதிகமாக அடித்து வரும் நிலையிலும் இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப, இளைஞர்கள் பலரும் ஆபத்தான பகுதிகளுக்கு சர்வசாதாரணமாக சென்று வருகின்றனர். அதனை தடுக்க அந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்பை தீவிரப் படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    இந்த விஷயத்தில் போலீசார் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பது ஒரு புறம் இருந்தாலும், ஆபத்து என தெரிந்தும் அந்த பகுதிகளுக்கு செல்வோர் தங்களின் எதிர்காலம், குடும்பம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு கவனமாக செயல்படவேண்டும் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.

    • மெரினா கடற்கரையில் கடந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் ஒரு லட்சம் பேர் திரண்டனர்.
    • தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    2023-ம் ஆண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடைபெறுகிறது. நாளை நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கப்போகும் 2024-ம் ஆண்டை வரவேற்க உலகமே தயாராகி வருகிறது.

    நாடு முழுவதும் நாளை நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்ட உள்ளன. தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். இந்த ஆண்டும் சென்னையில் புத்தாண்டை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

    கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றன.

    புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து சென்னை மாநகர போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளனர். கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    நாளை இரவு 7 மணியில் இருந்து புத்தாண்டு தினமான ஜனவரி 1-ந்தேதி காலை 6 மணி வரை மெரினா கடற்கரை சாலையில் எந்த வாகனங்களும் செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மெரினா கடற்கரையில் கடந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் ஒரு லட்சம் பேர் திரண்டனர். இந்த ஆண்டும் அதேபோன்று பொதுமக்கள் அதிகளவில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து அங்கு தற்காலிக புற காவல் நிலையங்களை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் நாளை இரவு ஈடுபட உள்ளனர். போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, அஸ்ரா கார்க் சுதாகர் மற்றும் இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோரின் மேற்பார்வையில் புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. மெரினாவில் நாளை இரவு குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    கடற்கரை பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து பைனாகுலர் மூலமாக போலீசார் கண்காணிக்க உள்ளனர். கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக அவர்களது கைகளில் அடையாள வளையம் ஒன்றும் கட்டப்படுகிறது.

    அதில் பெற்றோர்கள் மற்றும் போலீசாரின் உதவி எண்கள் இடம் பெற்று இருக்கும். இதன் மூலம் காணாமல் போய் தவிக்கும் குழந்தைகளை உடனடியாக மீட்க முடியும் என்பதால் இந்த நடைமுறையை கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை போலீசார் பின்பற்றி வருகிறார்கள்.

    சென்னை மாநகரில் மட்டும் சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டு உள்ளது.

    அதில் அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்தி முடிக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகரில் நாளை நள்ளிரவில் போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு விட்டு மதுபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது என்றும் போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களில் மதுபோதையில் வருபவர்களை வீட்டில் கொண்டு போய் விடுவதற்கும் நிகழ்ச்சி நடத்துபவர்கள் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை மாநகரில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பெரிய மேம்பாலங்களை நாளை நள்ளிரவில் மூடுவதற்கும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். விபத்துகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புத்தாண்டு தினத்தில் வாலிபர்கள் சிலர் பைக் ரேசில் ஈடுபடுவார்கள் அதனை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக சுமார் 500 இடங்களில் சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக ஒவ்வொரு பகுதிகளிலும் போலீஸ் ரோந்து வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

    புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடித்து அமைதியான முறையில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று சென்னை மாநகர காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    சென்னையில் உள்ள 100 முக்கிய கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுதலங்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நாளை மாலை முதல் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ. குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால், மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் ஆளிநர்கள், குதிரைப்படைகள் மற்றும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மணல் பகுதியிலும் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

    மெரினா, சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலையிலும் இதுபோன்று உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்படும். மேலும், முக்கிய இடங்களில் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல் துறை, கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையும், எச்சரிக்கை பதாகைகளும் பொருத்தப்பட்டு கடலில் மூழ்கி உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக குதிரைப் படைகள் கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும்.

    மேலும், அவசர மருத்துவ உதவிக்கு முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும்.

    குற்றத்தடுப்பு நடவடிக்கை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் ஆகிய பணிகளுக்கு தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும்.

    மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வாகனம் அதிகம் சேரும் இடங்களில் உபயோகிக்கப்படும். பொது இடங்களில் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டு உள்ளது.

    அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும். ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் காவல்துறை மற்றும் இதர துறைகளில் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்த வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

    கடற்கரை மட்டுமில்லாமல் சென்னையில் உள்ள அனைத்து இடங்களிலும் ஒரு காவல் நிலையத்திற்கு 5ல் இருந்து 10 ரோந்து வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வது மட்டும் அல்லாது குற்ற ஆவண காப்பகத்தில் குற்றம் செய்தவரின் தகவல்கள் சேர்க்கப்பட்டு மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் மீது பதியப்பட்ட வழக்கு குறித்த தகவல்கள் இடம் பெறும் பட்சத்தில் தடையில்லாச் சான்று பெறுவதில் சிரமம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மெரினா கடற்கரையில் 31-ந்தேதி அன்று இரவு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்பார்கள்.
    • மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

    சென்னை:

    புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாகி உள்ளன.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முழு வீச்சில் தயாராகி வருகின்றன. இதையொட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

    இதன்படி புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை மாநகர போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை மாநகரில் வருகிற 31-ந் தேதி அன்று இரவு 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் முழுவதிலும் போலீசார் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளனர்.

    புத்தாண்டு கொண்டாட்ட தினமான வருகிற 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று கடற்கரை பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

    இதன்படி கடற்கரை பகுதிகளில் ரோந்து பணியை தீவிரப்படுத்தவும், தடுப்பு வேலிகளை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மெரினா கடற்கரையில் 31-ந்தேதி அன்று இரவு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்பார்கள். குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் மெரினாவில் கூடுவார்கள் என்பதால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க சிறப்பு படைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தற்காலிக புறக்காவல் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.

    இந்த புறக்காவல் நிலையங்களில் பெண் போலீசார் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    சிறுவர், சிறுமிகள் கூட்டத்தில் காணாமல் போனால் அவர்களை கண்டுபிடிப்பதற்காக கைகளில் 'அடையாள வளையம்' கட்டிவிடப்படுகிறது. இதில் பெற்றோர்களின் செல்போன் எண் மற்றும் போலீஸ் உதவியை நாடும் செல்போன் எண்கள் ஆகியவை இடம்பெற்று இருக்கும்.

    இதன் மூலம் மாயமாகும் சிறுமிகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும். இந்த நடைமுறையை சென்னை மாநகர போலீசார் கடந்த சில ஆண்டுகளாகவே பின்பற்றி வருகிறார்கள். இதனால் மெரினாவில் காணாமல் போகும் குழந்தைகள் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விடுவார்கள்.

    இப்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உள்ள போலீசார் சென்னை மாநகர் முழுவதும் 400 இடங்களில் வாகன சோதனையிலும் ஈடுபடுகிறார்கள்.

    கிழக்கு கடற்கரை சாலை, மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசாரை நியமித்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் போலீசார் மோட்டார் சைக்கிள் பந்தயத்தை தடுக்கவும் நடவடிக்கைகளை எடுத்து உள்ளனர்.

    இதற்காக 20 தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் மணலிலும், கடலிலும் செல்லும் வகையிலான வாகனங்களில் ரோந்து சென்று கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    மதுபோதையில் வாகனங்களை ஓட்டிச்சென்று விபத்துக்களை ஏற்படுத்துபவர்களை பிடிக்க சென்னை மாநகர் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்தி போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது. மெரினா உள்ளிட்ட கடல் பகுதிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கண்காணிக்கும் வகையில் டிரோன் பாதுகாப்பிலும் போலீசார் ஈடுபட உள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் மற்றும் பெண்களிடம் சில்மிஷம் போன்ற செயல்களில் ஈடுபடுவோரையும் டிரோன் மூலமாக போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துக்களை தடுப்பதற்கு அடையாறு பகுதியில் இருந்து மாமல்லபுரம் வரை சுமார் 50 இடங்களில் தடுப்புகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

    இதற்கு முன்பு புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது விபத்துகள் நடைபெற்ற இடங்கள் கண்டறியப்பட்டு 500-க்கும் மேற்பட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து விபத்துகளை கட்டுப்படுத்தவும் போலீசார் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.

    • மாலை 6 மணிக்கு 2,668அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
    • 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 14-ந்தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவமும், தொடர்ந்து 25-ந் தேதி பிடாரி அம்மன் உற்சவமும் விநாயகர் உற்சவம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து நவம்பர் 17-ந்தேதி கோவில் சாமி சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு மகாதீப திருவிழா தொடங்கியது.

    10 நாள் காலை இரவு என இரு வேளைகளிலும் பஞ்சமூர்த்திகள் மாடவீதி உலா வருகின்றனர்.

    கார்த்திகை தீப விழாவின் உச்ச நிகழ்வாக நாளை அதிகாலை 4 மணி அளவில் கோவில் சாமி சன்னதி அருகில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    இதற்காக 5 ½ அடி உயரம் கொண்ட செப்பு கொப்பரை தயார் செய்யப்பட்டது.

    இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலை மீது எடுத்து சென்றனர்.

    இதற்காக 4500 கிலோ நெய் மற்றும் 1500 மீட்டர் காடா துணி தயார் நிலையில் வைக்கப்பட்டு அதனையும் மலைக்கு கொண்டு சென்றனர்.

    கார்த்திகை தீப திருவிழாவில் பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    • 123 சீசன் கடைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது.
    • கட்டண கழிப்பறை ரூ.4 லட்சத்து 21 ஆயிரத்துக்கு ஏலம்போனது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சீசன் காலத்தில் கன்னியாகுமரியில் நடை பாதைகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீசன் கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்படும்.

    இந்த ஆண்டு கோவளம் ரோட்டில் இருந்து கன்னியா குமரி சன்செட் பாயிண்ட் கடற்கரைக்கு செல்லும் சிலுவை நகர் பகுதியில் 73 சீசன் கடைகளும், கன்னியா குமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு அருகில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை முன்பு இருந்து காந்தி மண்டபம் முன்புஉள்ள முக்கோண பூங்கா சந்திப்பு வரை உள்ள மெயின் ரோட்டின் மேற்கு பகுதியில் 27 சீசன் கடைகளும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் சன்னதி தெருவில் உள்ள விவேகானந்தா ராக் ரோடு பகுதியில் 23 சீசன் கடைகளும் ஆக மொத்தம் 123 சீசன் கடைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது.

    இந்த சீசன் கடைகள் ஏலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, கன்னியாகுமரிசிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சிரஸ்தார் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் இந்த சீசன் கடைகள் ஏலம் நடந்தது.

    ஏலம் எடுப்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து குவிந்திருந்தனர். சீசன் கடைகளை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

    இதையொட்டி கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ்குமார், இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகி யோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும் சீசனையொட்டி கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அய்யப்ப பக்தர்கள் மற்றும் யாத்திரிகர்களுக்கு கார் பார்க்கிங் வசதி கன்னியாகுமரி சன்செட் பாய்ண்ட் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் கன்னியாகுமரி சிலுவைநகர் பகுதி மற்றும் சன்செட் பாய்ண்ட் கடற்கரை பகுதியில் உள்ள கார் பார்க்கிங் இடம் ஆகிய இடங்களில் கட்டண கழிப்பிட வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இவற்றை பேரூராட்சி நிர்வாகம் ஆண்டுதோறும் சீசனையொட்டி ஏலம் மூலம் தனியாருக்கு குத்தகைக்கு விட்டுவருகிறது. அந்த அடிப்படையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில் கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை கட்டணம் வசூலிக்கும் உரிமை ரூ.22 லட்சத்து 51 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இதனை மாதவபுரத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் ஏலம் எடுத்துள்ளார். இந்த கார் பார்க்கிங் அருகில் உள்ள கட்டண கழிப்பறை ரூ.4 லட்சத்து 21 ஆயிரத்துக்கு ஏலம்போனது. இதனை ஒற்றையால்விளையை சேர்ந்த நாகராஜன் என்பவர் ஏலம் எடுத்துள்ளார்.

    இதேபோல கன்னியாகுமரி கடற்கரை சாலையில் சிலுவை நகர் பகுதியில் உள்ள கட்டண கழிப்பறை ரூ.3 லட்சத்து 9 ஆயிரத்துக்கு ஏலம்போனது. இதனை சுக்குப்பாறை தேரிவிளையை சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவர் ஏலம் எடுத்துள்ளார்.

    • சுமார் 100 மீட்டர் உயரத்திற்கு தீ பிழம்பு எழுந்ததால் காலாப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • ஆத்திரமடைந்த பொதுமக்கள் தொழிற்சாலையின் வரவேற்பு அறை கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

    சேதராப்பட்டு:

    புதுவை காலாப்பட்டு பகுதி சிறைச்சாலை செல்லும் சாலையில் தனியார் மருந்து கம்பெனி உள்ளது.

    இங்கு மருந்து மாத்திரைகள் தயாரிக்கும் மூலப்பொருள் பவுடராக தயாரிக்கப்படுகிறது.

    இந்த நிறுவனத்தில் வட மாநில மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று இரவு சுமார் 9.30மணி அளவில் இரவு ஷிப்டுக்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் பதிவேட்டில் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தனர். அதுபோல் ஏற்கனவே முதல் ஷிப்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியே வர தயாராகிக்கொண்டிருந்தனர்.

    அந்த நேரத்தில் திடீரென பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் தொழிற்சாலையில் இருந்த ஊழியர்கள் சிதறி ஓடினர்.

    சுனாமி குடியிருப்பு மற்றும் அருகில் உள்ள தமிழகப் பகுதியான மாத்தூர், கொழுவாரி கிராமம் வரை லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

    சிறிது நேரத்தில் தொழிற்சாலையில் மற்றொரு பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    சுமார் 100 மீட்டர் உயரத்திற்கு தீ பிழம்பு எழுந்ததால் காலாப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பயங்கர விபத்து ஏற்பட்டு பலர் தொழிற்சாலைக்குள் சிக்கி தவிப்பதாக தகவல் வந்ததும் 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் தொழிற்சாலைக்குள் நுழைந்து மீட்பு பணியில் ஈடுபட்டது.

    அப்போது தொழிற்சாலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

    பாய்லர் வெடித்ததில் 5 வட மாநில தொழிலாளர்கள் உட்பட 14 பேர் தீக்காயம் அடைந்தனர். அவர்களை ஆம்புலன்சில் மீட்டு காலாப்பட்டு பிம்ஸ் தனியார் மருத்துவமனை, லாஸ்பேட்டை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தை அறிந்த காலாப்பட்டு பொதுமக்கள் அங்கு குவிந்து தொழிற் சாலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தொழிற்சாலையின் வரவேற்பு அறை கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். அங்கிருந்த பொருட்களையும் அடித்து உடைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு மேலும் பரபரப்பு மற்றும் பதட்டம் ஏற்பட்டது.

    இதையடுத்து அங்கு காலாப்பட்டு மற்றும் புதுவையின் பல்வேறு பகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தொழிற்சாலையை சூறையாடிய பொதுமக்களை போலீசார் விரட்டினர்.

    இதற்கிடையே தீக்காயமடைந்து புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • டி.ஐ.ஜி பேட்டி
    • புதிய பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார்

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். சமூக விரோதிகள் பயணிகளிடம் செல்போன் பணம் பறிப்பு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

    இதனால் புதிய பஸ் நிலையத்தில் புறநகர் காவல் நிலையம் அமைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

    பொது மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பஸ் நிலையத்தில் பொதுமக்களின் அவசர உதவிகளுக்கும் உடைமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும் குற்றங்களை குறைக்கவும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் புறநகர் காவல் நிலையம் கட்டப்பட்டது.

    புறநகர் காவல் நிலையத்தை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கோடீஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், நாகராஜ், ரவி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    பின்னர் டி.ஐ.ஜி முத்துசாமி கூறியதாவது:-

    புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர் மேலும் பயணிகளை வழியனுப்ப உறவினர்கள் வருகின்றனர்.

    பஸ் நிலையத்துக்கு வருபவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புறநகர் போலீஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை ஏற்று புறநகர் போலீஸ்களையும் திறக்கப்பட்டு உள்ளது. குற்ற சம்பவங்களை பாதுகாப்பு தடுக்கவும் ஏற்கனவே நடந்த குற்ற சம்பவங்களை கண்டுபிடிக்கவும் இது உதவும்.

    புதிய பஸ் நிலையத்தில் 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்ற சம்பவங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் மார்க்கெட், பஸ் நிலையம் ெரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

    இவ்வாறு அவர்கூறினார்.

    முன்னதாக பாலாற்றங்கரையோரம் உள்ள டோபிக்கானா பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த 10 கண்காணிப்பு கேமராக்களை டிஐஜி முத்துசாமி தொடங்கி வைத்தார்.

    ×