search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாறை"

    • முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடுகிறார்கள்.
    • கடற்கரையை ஒட்டி கடல் நடுவே உள்ள ஆபத்தான பாறைகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டில் பாலம், பத்ம நாபபுரம் அரண்மனை, வட்டக்கோட்டை, சங்கு துறை-சொத்தவிளை, கணபதிபுரம் உள்ளிட்ட கடற்கரைகள் என ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரை என பல இடங்கள் இருக்கும் கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, பல மாநிலங்களை சேர்ந்த வர்கள், வெளிநாட்டினர் சுற்றுலாவாக வருகிறார்கள்.

    சூரிய உதயம், அஸ்தமனம் இரண்டையுமே கன்னியாகுமரியில் பார்க்கலாம். குமரி மாவட்டத்துக்கு சுற்றுலா வருபவர்கள் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்க்க தவறுவதில்லை. அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடுகிறார்கள்.

    மேலும் கடலுக்கு நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்த்து மகிழ்வார்கள். அது மட்டுமல்லாமல் சிறந்த ஆன்மீக தலமாகவும் கன்னியாகுமரி திகழ்கிறது. இங்குள்ள பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கும் சுற்றுலா பயணி கள் செல்கின்றனர். கன்னியாகுமரியில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் இந்த மாதங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் மிக அதிக அளவில் இருக்கும். அதோடு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வருகையும் இந்த மாதங்களில் அதிகமாக இருக்கும்.

    இந்த ஆண்டும் சீசன் காலமான தற்போது கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. அதுவும் சபரிமலைக்கு செல்லக்கூடிய அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் கன்னியாகுமரியில் திரும்பிய இடமெல்லாம் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்படுகிறது.

    அவர்கள் விவேகானந்தர் மண்டபத்தை காண படகு போக்குவரத்து தொடங்கு வதற்கு முன்பே படகு குழாம் முன்பு நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். பராமரிப்பு மற்றும் பாலம் பணிகள் காரணமாக திருவள்ளுவர் சிலையை பார்க்க சுற்றுலா பயணிகள் தற்போது அனுமதிக்கப்படுவதில்லை.

    சுற்றுலாவை ஆனந்தமாக கொண்டாடும் நோக்கத்தில் கன்னியாகுமரிக்கு வருபவர்களில் சிலர் ஆபத்தை உணராமல் செயல்படுவது தான் அதிர்ச்சிகரமான விஷயமாக உள்ளது. கன்னியாகுமரி கடலில் அவ்வப்போது ராட்சத அலைகள் எழும். காற்றின் வேகமும் அதிகமாகும்.

    இதனால் கடற்கரையை ஒட்டி கடல் நடுவே உள்ள ஆபத்தான பாறைகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த பாறைகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீறி சிலர் அங்கு சென்று விடுகிறார்கள்.

    அவ்வாறு தடையை மீறி செல்பவர்கள் பாறைகளில் அமர்ந்தும், நின்று கொண்டும் செல்போனில் செல்பி எடுக்கின்றனர். மேலும் சிலர் குரூப்பாக நின்று போட்டோ எடுக்கிறார்கள். அவர்கள் பாறைகளுக்கு செல்லும் வழியும், பாறைகள் மீது நிற்பதும் ஆபத்தானது என போலீசார் எச்சரித்துள்ள போதிலும் பலர் கண்டு கொள்வதில்லை.

    தற்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்று அதிகமாக அடித்து வரும் நிலையிலும் இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப, இளைஞர்கள் பலரும் ஆபத்தான பகுதிகளுக்கு சர்வசாதாரணமாக சென்று வருகின்றனர். அதனை தடுக்க அந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்பை தீவிரப் படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    இந்த விஷயத்தில் போலீசார் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பது ஒரு புறம் இருந்தாலும், ஆபத்து என தெரிந்தும் அந்த பகுதிகளுக்கு செல்வோர் தங்களின் எதிர்காலம், குடும்பம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு கவனமாக செயல்படவேண்டும் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.

    • மழை காரணமாக, பல இடங்களில் மண்சரிவும், மரங்களும் முறிந்து விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
    • தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதுடன், சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கால நிலை மாற்றத்தால் கடந்த ஒரு வாரங்களாக மழை பெய்து வருகிறது.

    இந்த மழை காரணமாக, பல இடங்களில் மண்சரிவும், மரங்களும் முறிந்து விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    நேற்றிரவும் கோத்தகிரி, குன்னூர், அருவங்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்தது. இரவில் தொடங்கிய மழை, விடிய, விடிய பெய்தது.

    தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால், கோத்தகிரி-மேட்டுப்பாளையம், சாலை, குன்னூர் சாலை, ஊட்டி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதுடன், சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

    இந்த மழைக்கு கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், குஞ்சப்பனை என்ற இடத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது.

    மண் திட்டுகள், பாறைகள் உருண்டு நடுரோட்டில் விழுந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சாலையின் இருபுறங்களிலும் அணிவகுத்து நின்றன.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மண்திட்டுக்கள், பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த பகுதியில் 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜே.சி.பி.எந்திரம் கொண்டு ராட்சதபாறைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. மேலும் மண்திட்டுகளை ஒழுங்குபடுத்தி சீர் செய்யும் பணி நடந்து வருகிறது.

    மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால், மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குந்தா, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட 4 தாலூக்காவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

    • பாறை உருண்டு விழுந்து சாலையில் நின்றது.
    • யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடகா மாநிலத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.

    இந்த சாலை வழியாக தினந்தோறும் ஏராளமான இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகிறது. மேலும் கனரக வாகனங்களும் அதிக அளவில் இந்த பாதையில் வந்து கொண்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் மழை அவ்வப்போது பொழிந்து வருவதால் மலைப் பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டு பாறைகளில் பிடிப்பு தன்மை குறைந்து பாறைகள் சாலையில் சரிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலை அந்தியூர் பர்கூர் சாலையில் செட்டிநெடு என்ற இடத்தின் அருகே பாறை உருண்டு விழுந்து சாலையில் நின்றது. அந்த சமயத்தில் வாகனங்கள் எதுவும் வராமல் இருந்த தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • தகவல் அறிந்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து, காரில் சிக்கியவரை மீட்டனர்.
    • ஜெயச்சந்திரன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பி விட்டார்.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சோலூர்மட்டத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது64). இவர் நேற்றிரவு ஊட்டியில் இருந்து கோவைக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

    அந்த சமயம் மழை பெய்து கொண்டிருந்தது. இவரது கார் குன்னூர் அருகே உள்ள மரப்பாலம் பகுதியில் வந்த போது, மலையில் இருந்து திடீரென பாறை ஒன்று உருண்டு வந்து, காரின் முன் பகுதி மீது விழுந்தது.

    இதில் கார் இடிபாடுகளில் சிக்கி கொண்டது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து, காரில் சிக்கியவரை மீட்டனர். அவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பி விட்டார்.

    • வீட்டில் ஆனந்த், அவரது மனைவி மற்றும் தாயார் வேறு அறையில் இருந்ததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
    • பாறை விழுந்ததில் வீட்டின் அறை முற்றிலுமாக உடைந்து சேதம் அடைந்துள்ளது.

    களியக்காவிளை:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக ஆறுகள், குளங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் விளைநிலங்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    தொடர் மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து, மின்கம்பங்களும் சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில் களியக்காவிளை அருகே உள்ள திருத்துவபுரம் அடுத்த தோப்புவிளை பகுதியில் ஆனந்த் என்பவரது வீட்டில் அருகில் இருந்த பெரிய பாறாங்கல் உடைந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டின் ஒரு பகுதி கடும் சேதம் அடைந்தது.

    பாறை உடைந்து விழுந்த நேரத்தில் வீட்டில் ஆனந்த், அவரது மனைவி மற்றும் தாயார் வேறு அறையில் இருந்ததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். பாறை விழுந்ததில் வீட்டின் அறை முற்றிலுமாக உடைந்து சேதம் அடைந்துள்ளது.

    • கிட்டாச்சியால் பாறைகளை உடைத்து டெம்போவில் சிலர் ஏற்றிக்கொண்டிருப்பதை பார்த்தனர்.
    • சம்பவ இடத்துக்குச்சென்று கிட்டாச்சியையும், டெம்போவையும் பறிமுதல்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகளுக்கு திருவட்டார் அருகே கும ரன்குடி கிராமத்துக்குட்பட்ட புல்லுவிளைப்பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் கிட்டாச்சி எந்திரம் வைத்து பாறைகளை உடைத்து டெம்போவில் கடத்தவி ருப்பதாக தகவல் வந்தது.

    இதையடுத்து நேற்று புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் தங்க முனியசாமி, உதவி இயக்குநர் சுரேஷ்கு மார். மதுரை மண்டல புவியியல் துறை பறக்கும் படை அதிகாரிகள் நாகரா ஜன், அரவிந்த், திருவட்டார் வட்ட வருவாய் அதிகாரி அமுதா, கிராம நிர்வாக அதிகாரி மகேஷ்வரி ஆகியோர் புல்லுவிளைக்கு சென்றனர்.

    அப்போது அங்கே கிட்டாச்சியால் பாறைகளை உடைத்து டெம்போவில் சிலர் ஏற்றிக்கொண்டிருப்பதை பார்த்தனர். அதிகாரிகளை கண்டதும் வாகனங்களை விட்டு விட்டு அவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதுதொடர்பாக திருவட்டார் போலீசில் சுரங்கத்துறை துணை இயக்குநர் தங்க முனியசாமி, பாறை உடைத்த இடத்தின் உரிமையாளர் அகஸ்தீஸ்வரம் மரிய பிரான்சிஸ், பராமாரிப்பாளர் பூவன் கோடு சுனில்ராஜ், டெம்போ ஓட்டுநர் அஜின், கிட்டாச்சி உரிமையாளர் காரியங்கோணம் ஜெனித் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்தார். திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஜானகி போலீசாருடன் சம்பவ இடத்துக்குச்சென்று கிட்டாச்சியையும், டெம்போ வையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போலீ சார் அந்த எலும்பு கூடை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • மீட்கப்பட்ட எலும்புக்கூடின் மண்டை ஓடு பாகங்கள் சூப்பர் இம்போசிசன் மற்றும் தொடை எலும்பு பாகங்களை டி.என்.ஏ. ஆய்வுக்கு உட்படுத்த போலீசார் திட்டமிட்டு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி மாம்பழத்து றையாறு அணை அருகே நாடாங் கோணம் பொற்றை உள்ளது. இங்கு பாறை களுக்கிடையே மனித எலும்புக் கூடு கிடப்பதாக இரணியல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் இரணி யல் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சுந்தர்மூர்த்தி தலைமையிலான போலீ சார் சம்பவ இடம் சென்று எலும்பு கூடை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அது ஆண் எலும்பு கூடு என ெதரிய வந்தது.

    எனவே யாரையாவது கொலை செய்து உடலை இங்கு வீசியிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீ சார் விசாரணை நடத்தினர்.மேலும் மாயமானவர்கள் குறித்தும் விசாரணை நடத்தினர்.

    அப்போது திருவிடை க்கோடு கோபாலப்பிள்ளை மகன் கிருஷ்ணன்குட்டி (வயது75) காணாமல் போயிருந்ததும், இது குறித்து அவரது மகள் பிரியா (43) கடந்த 24-ந் தேதி புகார் கொடுத்து இருப்பதும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து கிருஷ்ணன் குட்டியின் உறவினர்களை அழைத்து வந்து போலீசார் காண்பித்த னர். எலும்பு கூட்டில் இருந்த லுங்கியைத்தான் காணாமல் போன அன்று கிருஷ்ணன்குட்டி கட்டி இருந்ததாக அவரது மகள் மற்றும் உறவினர்கள் தெரி வித்தனர். காவலாளி யாக வேலை பார்த்த கிருஷ்ணன்குட்டி கடந்த சில காலமாக மன நலம் பாதிக்கப்பட்டு இருந்தததும் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து போலீ சார் அந்த எலும்பு கூடை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் கிருஷ்ணன் குட்டிதானா என்பதை உறுதி செய்ய, மீட்கப்பட்ட எலும்புக்கூடின் மண்டை ஓடு பாகங்கள் சூப்பர் இம்போசிசன் மற்றும் தொடை எலும்பு பாகங்களை டி.என்.ஏ. ஆய்வுக்கு உட்படுத்த போலீசார் திட்டமிட்டு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

    • வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது
    • டிரைவர் தப்பி ஓட்டம்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் மஞ்சாலும் மூடு அருகே முக்கூட்டுகல் பகுதியில் அனுமதியின்றி பாறை உடைப்பதாக ரகசிய பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ரகசிய பிரிவு போலீசார் அப்பகுதியில் நோட்டமிட்டு வந்தனர்.

    இந்நிலையில் நேற்றைய தினம் பாறை உடைப்பதாகவும் உடைக்கப்பட்ட பாறை களை கேரளாவுக்கு கொண்டு செல்வதாகவும் தகவல் கிடைத்தது. இதன் பெயரில் அருமனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்களை பார்த்ததும் பாறை உடைக்கும் நபர்களும் டிரைவரும் தப்பி ஓடி விட்டனர். பின்னர்போலீசார் விசாரணைமேற்கண்ட போது பனச்சமூடு அருகே வேங்கோடு பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் விட்டுச் சென்ற ஜே.சி.பி. வாகனம் மற்றும் பாறை உடைக்க கூடிய கம்ப்ரஸர் மோட்டார், டெம்போஆகியவற்றை போலீசார் கைப்பற்றி வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×