search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலை உச்சி"

    • மாலை 6 மணிக்கு 2,668அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
    • 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 14-ந்தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவமும், தொடர்ந்து 25-ந் தேதி பிடாரி அம்மன் உற்சவமும் விநாயகர் உற்சவம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து நவம்பர் 17-ந்தேதி கோவில் சாமி சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு மகாதீப திருவிழா தொடங்கியது.

    10 நாள் காலை இரவு என இரு வேளைகளிலும் பஞ்சமூர்த்திகள் மாடவீதி உலா வருகின்றனர்.

    கார்த்திகை தீப விழாவின் உச்ச நிகழ்வாக நாளை அதிகாலை 4 மணி அளவில் கோவில் சாமி சன்னதி அருகில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    இதற்காக 5 ½ அடி உயரம் கொண்ட செப்பு கொப்பரை தயார் செய்யப்பட்டது.

    இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலை மீது எடுத்து சென்றனர்.

    இதற்காக 4500 கிலோ நெய் மற்றும் 1500 மீட்டர் காடா துணி தயார் நிலையில் வைக்கப்பட்டு அதனையும் மலைக்கு கொண்டு சென்றனர்.

    கார்த்திகை தீப திருவிழாவில் பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    • பண்ணாரி சோதனை சாவடியில் நின்றிருந்த போலீசார் சிறுமியை அழைத்து விசாரித்த போது, சிறுமி நடந்தவற்றை கூறினார்.
    • போலீசார் அவரை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பாசூரை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது50).

    இவர் ஈரோடு மாவட்டம் கொடிவேரியில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் காண்டிராக்டராக உள்ளார்.

    இவரது மனைவி சித்ரா (34). இவர்களுக்கு வேத விக்னேஷ்வரி(13) என்ற மகளும் மோகன்ராம், அகிலேஷ்வரன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    வேத விக்னேஷ்வரி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சுப்புராஜூக்கு தொழிலில் போதிய வருமானம் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் அவரது மில்லில் வேலை பார்ப்பவர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாமல் இருந்துள்ளார்.

    தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்புராஜ் ரூ.2 லட்சம் கடன் வாங்கி தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்தார்.

    ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி அடைக்க முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாகவே அவர் யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்தார். கடனை அடைக்க முடியாததை நினைத்து வருத்தப்பட்டும் வந்துள்ளார்.

    வேதவிக்னேஷ்வரியை, தினமும் சுப்புராஜ் தான் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு, மீண்டும் அழைத்து வருவது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று மகளை அழைப்பதற்காக பள்ளிக்கு சென்றார்.

    பின்னர் அங்கு மகளை அழைத்து கொண்டு கொல்லிமலைக்கு சென்றார். அங்குள்ள மலை உச்சிக்கு சென்ற அவர், திடீரென, அங்கிருந்து, மகளை தள்ளி விட முயற்சித்தார்.

    அப்போது சிறுமி தனது தந்தையிடம் பஸ்சுக்கு லேட் ஆகுது, எனக்கு பசிக்கிறது என கூறி தந்தையை அழைத்தார். இதையடுத்து, சுப்புராஜ் மகளுடன் ஈரோட்டுக்கு சென்றார்.

    பின்னர் பன்னாரி அம்மன் கோவில் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அவர் பூச்சி மருந்தை குடித்து விட்டு, அதனை மகளின் வாயில் ஊற்றி குடிக்க சொல்லியுள்ளார். ஆனால் சிறுமி குடிக்க மறுப்பு தெரிவித்து கதறி அழுதார்.

    குழந்தை அழுததை பார்த்ததும் பதறிபோன சுப்புராஜ், தனது மகளிடம் ரூ.70-யை கொடுத்து, நீ வீட்டுக்கு செல் நான் வந்து விடுகிறேன் என தெரிவித்து அனுப்பி வைத்தார்.

    சிறுமியும் அங்கிருந்து நேராக வீட்டிற்கு புறப்பட்டு வந்தார். வரும் வழியில் பண்ணாரி சோதனை சாவடியில் நின்றிருந்த போலீசார் சிறுமியை அழைத்து விசாரித்த போது, சிறுமி நடந்தவற்றை கூறினார்.

    இதையடுத்து போலீசார் சிறுமியை மீட்டு அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறுமியை மீட்டு அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.

    அன்னூர் போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பூச்சி மருந்துடன் காட்டுக்குள் சென்ற சுப்புராஜை வனத்துறையினரும், போலீசாரும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுவரை அவரை பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. அவரின் கதி என்ன என்பது தெரியவில்லை. போலீசார் அவரை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • மழை வேண்டி பாறை மீது சோறிட்டு பக்தர்கள் உணவருந்தும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி நடந்து வருகிறது.
    • வடப்புளி பெருமாள், ஆஞ்சநேயர் கோவில் மற்றும் கிராம தெய்வங்களை வழிபட்டு ராமச்சந்திர மூர்த்தி கோவிலை வந்தடைந்தனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கொப்பையாசாமி மலை உச்சியில் பிரசித்தி பெற்ற கொப்புக்கொண்ட பெருமாள்சாமி கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவிலில் மழை வேண்டி பாறை மீது சோறிட்டு பக்தர்கள் உணவருந்தும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டும் பி.தொட்டியபட்டியிலுள்ள ராமச்சந்திர மூர்த்தி கோவிலிலிருந்து கடந்த இருதினங்களாக அங்குள்ள முக்கிய வீதிகளில் மருளாளி ஆடிவர பொதுமக்கள் சாமிக்கு காணிக்கையாக அரிசி, தானிய வகைகளை வழங்கினர். அவை அனைத்தையும் வாங்கி சேமித்து நேற்று முன்தினம் இரவு கொப்பையா சாமி மலை உச்சியிலுள்ள கொப்புக்கொண்ட பெருமாள் கோவிலில் பக்தர்கள் அனைவரும் தங்கி வழிபட்டனர்.

    இந்த வழிபாடு நேற்று காலை தொடங்கி சாமிக்கு 11 விதமான பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு கொப்புக் கொண்ட பெருமாள் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். காணிக்கையாக வாங்கி சேமித்து வைத்த அரிசி தானியங்களைக் கொண்டு மழை வேண்டி சாமிக்கு பொங்கல் மற்றும் சோறு படையிலிட்டு மருளாளி ஆடி வந்தார்.

    அப்போது பக்தர்கள் மழை வேண்டியும், தம்பதிகள் குழந்தை வரம் வேண்டி யும் மருளாளியிடம் வரமாக கேட்டு பிரசாதம் பெற்றனர். சாமிக்கு படையிலிட்ட சோற்றை கோவிலை சுற்றியுள்ள பாறைகளில் பக்தர் கள் அமர்ந்து பாறையில் சோறிட்டு உணவருந்தி வழிபட்டனர்.

    அவ்வாறு உணவருந்திய பின்பு பாறையில் கிடக்கும் எச்சத்தை சாமி வருணபகவானை வரவழைத்து மழை பெய்யச் செய்து அதனை சுத்தம் செய்யும் என்பது அப்பகுதி பொதுமக்களின் பராம்பரிய ஐதீகமாக இருந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பாறையில் உணவருந்திய பின்பு மருளாளியுடன் மீண்டும் மலையிலிருந்து கீழறங்கி ஊர்வலமாக பி.தொட்டிய பட்டி கண்மாய் பகுதியிலுள்ள வடப்புளி பெருமாள், ஆஞ்சநேயர் கோவில் மற் றும் கிராம தெய்வங்களை வழிபட்டு ராமச்சந்திர மூர்த்தி கோவிலை வந்தடைந்தனர்.

    இந்த திருவிழா இப்பகுதியிலுள்ள பக்தர்கள் பலரும் பெருமிதமாக கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று மழை வேண்டுதலால் விவசாயங்கள் செழிக்கும் என்று கூறுகின்றனர். மேலும் அந்த பகுதியில் பக்தர்கள் தங்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு கொப்பையா என பெயர் சூட்டி சாமிக்கு நன்றி கடன் செலுத்துகின்றனர்.

    • கார்த்திகை தீபத்திருவிழாவை யொட்டி 6-ந்தேதி ஏற்றப்படுகிறது
    • சிறுவர்கள் இரவு நேரங்களில் சுக்குநாரி புல், தீப்பந்தங்கள் போன்றவைகளை கொளுத்தி விளையாடுவார்கள்.

    கன்னியாகுமரி:

    ஆண்டு தோறும் கார்த்திகைமாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதே போல இந்த ஆண்டு கார்த்திகை மாதம்கிருத்திகை நட்சத்திரமான வருகிற 6-ந்தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி வைகுண்ட பகுதியில் அமைந்துஉள்ள 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் "மகாதீபம்" ஏற்றப்படுகிறது.

    முன்னதாக மருந்துவாழ் மலையில் உள்ள பரமார்த்த லிங்க சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் அன்னதானமும் நடக்கிறது. பரம்பரை தர்மகர்த்தா மந்தாரம்புதூரை சேர்ந்த பெரியசாமி தேவர் குடும்பத்தினர் பரமார்த்தலிங்க சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துஉள்ளனர்.

    முன்னதாக மருந்துவாழ் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்துக்கான எண்ணெய் கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் குடங்களில் காணிக்கையாக பெறப்பட்டு வருகிறது. அந்த எண்ணெய் குடங்கள் அனைத்தும் 6-ந்தேதி மதியம் பொற்றையடியில் அமைந்துஉள்ள ஸ்ரீதேவி முத்தாரம்மன் கோவிலுக்கு எடுத்துவரப்படுகிறது.

    பின்னர் அங்குஇருந்து மருந்துவாழ்மலை தெய்வீகப் பேரவை சார்பில் எண்ணெய் குடங்கள் மருந்துவாழ் மலைஉச்சிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. மாலை 6 மணிக்கு மருந்துவாழ் மலை உச்சியில் "மகா தீபம்" ஏற்றப்படுகிறது மருந்துவாழ்மலை உச்சியில் ஏற்றப்படும் இந்த மகா தீபம் கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் தெரியும்.

    3 நாட்கள் இரவு- பகலாக தொடர்ந்து இந்த மகா தீபம் எரிந்து கொண்டே இருக்கும். மருந்துவாழ் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகுவீடுகளில்உள்ள வாசல் முன்பு பெண்கள் வண்ண கோலமிட்டு அகல் விளக்குகள் ஏற்றி கார்த்திகை தீபத் திருவிழாவை கொண்டாடுவார்கள்.

    வீடுகள்தோறும் கொழுக்கட்டை, அப்பம், திரளி, போன்றவைகளை தயார்செய்து இறைவனுக்கு படைத்து வழிபட்டு பின்னர் உண்டு மகிழ்வார்கள். கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. சிறுவர்கள் இரவு நேரங்களில் சுக்குநாரி புல், டயர், தீப்பந்தங்கள் போன்றவைகளை கொளுத்தி விளையாடுவார்கள்.

    ×