search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகா தீபம்"

    • மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.
    • அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.

    இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 26-ந் தேதி காலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.

    அன்றுமுதல் தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் மலை உச்சியில் காட்சி அளித்தது. மலையில் காட்சி அளித்த மகா தீபத்தை காண பக்தர்கள் பலர் மலை உச்சிக்கு சென்று தரிசித்து வந்தனர்.

    திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுவதால் அத்தகைய சிறப்பு வாய்ந்த மலையின் உச்சிக்கு பக்தர்கள் ஏறி சென்று வந்ததையொட்டி வழக்கமாக தீபத் திருவிழா நிறைவுற்ற பிறகு பிராயச்சித்த பூஜை நடத்தப்படும். அதன்படி தீபத் திருவிழா நிறைவடைந்த பிறகு இந்த ஆண்டிற்கான பிராயச்சித்த பூஜை நேற்று நடந்தது.

    இதனையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டு சாமிக்கும், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புனிதநீர் கலசத்தை மலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிராயச்சித்த பூஜை நடந்தது.

    பின்னர் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் கோவில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு பூஜை நடந்தது
    • 6 மணிக்கு 600 அடி உயரத்தில் ஏற்றப்பட்டது

    வேலூர்:

    வேலூர் வேலப்பாடி பகவதி மலையில் பழமை வாய்ந்த வேப்பங்காடு பகவதி அம்மன், பண்ணபேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை தீபத்திருவிழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 6 மணிக்கு ஸ்ரீமதி பகவதி மலர் அம்மா, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து பரணி தீபம் ஏற்றினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் மாலை 6 மணிக்கு சுமார் 600 அடி உயரமுடைய பகவதி மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் அரோகரா என்று பக்தி கோஷமிட்டு வணங்கினர்.

    மலையில் மகாதீபம் ஏற்றிய பின்னர் வேலப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    2-வது நாளாக நேற்று மாலை 6 மணிக்கு பகவதி மலை மீது கார்த்திகை தீபம் ஏற்பட்டது. கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பட்டாசு, வாணவேடிக்கை நடை பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை தலைவர் தமிழ் புகழேந்தி செய்திருந்தார்.

    • 1,440 அடி உயரத்தில் அமைந்துள்ளது
    • தீபம் ஏற்றும் போது வெறிச்சோடி காணப்பட்டது

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 1,440 அடி உயரத்தில் ஸ்ரீ தவளகிரீஸ்வரர் மலைக்கோவிலில் அமைந்துள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வந்தவாசி சுற்றியுள்ள சென்னாவரம், காரம் கொசப்பட்டு பெருநகர் தெள்ளார் கீழ்க்கொடுங்காலூர், அம்மையப்பட்டு, மும்முனி பாதிரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    அந்த வகையில் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றுவது போல் ஸ்ரீ தவளகிரி ஈஸ்வரர் மலைக்கோவிலில் மகா தீபமானது ஏற்றப்பட்டது. கோவிலின் புனரமைப்பு பணி காரணமாக பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் தீபம் ஏற்றும் போது மழை உச்சியில் வெறிச்சோடி காணப்பட்டது.

    • மகா தீபத்திற்கு நாள் ஒன்றுக் சுமார் 650 கிலோ நெய் பயன்படுத்தப்பட உள்ளது.
    • தீபத்தை ஏற்ற நாள்தோறும் 2 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் பிரகாரத்தில் சாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், 10-ம் திருநாளான இன்று அதிகாலை அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, சிறப்பு ஹோமம் ஆகியவை நடந்தது. 

    இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர்.

    பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது. பிறகு, பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் 5 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு அங்கு தீபம் ஏற்றப்பட்டது.

    மூலவர் சன்னதி வழியாக உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா "என்று விண்ணதிர கோஷம் எழுப்பி வணங்கினர்.

    தொடர்ந்து பிற்பகல் 3.30 மணியளவில் மகாதீபம் ஏற்றப்படுவதற்கு முன்பாக நிகழ்வுகள் நிடைபெற்றது. கொப்பரையில் காடா துணி நிரப்பப்பட்டது. சுமார் 175 கிலோ எடை கொண்ட கொப்பரையின் உயரமானது 6.5 அடி ஆகும். மகா தீபத்திற்கு நாள் ஒன்றுக் சுமார் 650 கிலோ நெய் பயன்படுத்தப்பட உள்ளது. தீபத்தை ஏற்ற நாள்தோறும் 2 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது.

    நிகழ்வின் ஒரு பகுதியாக, பராசக்தியம்மன் மற்றும் சண்டிகேஷ்வரர் ஆகியோரும் கொடி மரத்தின் முன்பாக எழுந்தருளினர்.

    அண்ணாமலையார் கோயில் கொடிமரம் முன்பு உள்ள அலங்கார மண்டபத்திற்கு விநாயகர் வருகை தந்தார்.

    முருகன், உண்ணாமலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் ஆகியோரும் வருகை தந்தனர்.

    இந்நிலையில், 2668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலையின் மகா தீபம் ஏற்றப்பட்டது. 

    பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கோயில் வளாகத்தில் சரியாக மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதே நேரத்தில் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. அப்போது கோவில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்பட்டது.

    ஆண்டுக்கு ஒரு முறை காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். 40 கிலோமீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தைப் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 1,400 அடி உயரத்தில் உள்ள வெள்ளிமலையில் இன்று மாலை கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.
    • பனை ஓலைகளை வைத்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வும் நடை பெறுகிறது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அழ கர்கோவில் மலை மேலுள்ள முருகப்பெருமானின் ஆறா வது படைவீடான சோலை மலை முருகன் கோவிலில் கார்த்திகை மாத தீபத்திரு விழா இன்று நடைபெறு கிறது. இதையொட்டி இன்று காலையில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், தீபார தனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து கோவில் முன்பாக பனை ஓலைகளை வைத்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வும் நடைபெறுகிறது.

    இதற்காக பனை ஓலைகள் ஒன்றின் மேல் ஒன்றாக சுமார் 7 அடி உயரத்திற்கு அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடை பெற உள்ளது. இதேபோல கள்ளழகர் திருக்கோவில் ராஜகோபுரம் முன்பாக பனை ஓலையில் குடில் அமைத்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடை பெற உள்ளது.

    அழகர்கோவில், ஏழும லைகளில் கிட்டத்தட்ட 1,400 அடி உயரமுள்ள, வெள்ளி மலையில் கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்ற கொப்பரையில் திரி ஏற்றி தயார் நிலையில் உள்ளது. விழா குழுவினர் சுமார் 300 கிலோ நெய்யை தலைச் சுமையாக எடுத்துச் சென்று சரியாக மாலை 6 மணி அள வில் வெள்ளி மலையில் தீபத் திருவிழா நடைபெறுகி றது.

    முன்னதாக கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அழகர்கோவில், ராக்காயி அம்மன் கோவிலில் அதிக அளவிலான அய்யப்ப, முருக பக்தர்கள் வருகை தந்து நூபுர கங்கை தீர்த் தத்தில் புனித நீராடி சுவா மிக்கு மாலை அணிவித்து சென்றனர்.

    கார்த்திகை தீப திருநா ளையொட்டி அங்குள்ள ராக்காயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கா ரம் நடைபெற்றது. இதற் கான ஏற்பாடுகளை அறங் காவலர் குழு தலைவர் வெங்கடாசலம் கோவில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான ராமசாமி மற்றும் அறங்காவ லர் குழுவினர், கோவில் பணியாளர்கள் செய்திருந்த னர்.

    • அண்ணாமலையார் கோவிலில் இருந்து பார்பதற்காக கோவில் இணைய தளத்தில் முன்பதிவு வசதி செய்யப்பட்டு இருந்தது.
    • 10.2 மணிக்கு முடிந்தது. 2 நிமிடத்தில் ஆயிரத்து 700 அனுமதி சீட்டுகளும் விற்று தீர்ந்தன.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஆகியவற்றை அண்ணாமலையார் கோவிலில் இருந்து பார்பதற்காக கோவில் இணைய தளத்தில் முன்பதிவு வசதி செய்யப்பட்டு இருந்தது.

    நாளை அதிகாலை ஏற்றப்படும் பரணி தீப தரிசனம் காண 500 ரூபாய் விலையில் 500 அனுமதி சீட்டுகளும், நாளை மாலை அண்ணாமலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீப தரிசனம் காண 600 ரூபாய் விலையில் 100 அனுமதி சீட்டுகளும், 500 ரூபாய் விலையில் ஆயிரம் அனுமதி சீட்டுகளும் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

    இதற்கான முன்பதிவு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. 10.2 மணிக்கு முடிந்தது. 2 நிமிடத்தில் ஆயிரத்து 700 அனுமதி சீட்டுகளும் விற்று தீர்ந்தன.

    இந்த இணையதளத்தில் அனுமதி சீட்டு பெற முயன்ற பெரும்பாலான பக்தர்கள் ஒரு அனுமதி சீட்டினை மட்டுமே பெறமுடிந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

    • மாலை 6 மணிக்கு 2,668அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
    • 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 14-ந்தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவமும், தொடர்ந்து 25-ந் தேதி பிடாரி அம்மன் உற்சவமும் விநாயகர் உற்சவம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து நவம்பர் 17-ந்தேதி கோவில் சாமி சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு மகாதீப திருவிழா தொடங்கியது.

    10 நாள் காலை இரவு என இரு வேளைகளிலும் பஞ்சமூர்த்திகள் மாடவீதி உலா வருகின்றனர்.

    கார்த்திகை தீப விழாவின் உச்ச நிகழ்வாக நாளை அதிகாலை 4 மணி அளவில் கோவில் சாமி சன்னதி அருகில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    இதற்காக 5 ½ அடி உயரம் கொண்ட செப்பு கொப்பரை தயார் செய்யப்பட்டது.

    இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலை மீது எடுத்து சென்றனர்.

    இதற்காக 4500 கிலோ நெய் மற்றும் 1500 மீட்டர் காடா துணி தயார் நிலையில் வைக்கப்பட்டு அதனையும் மலைக்கு கொண்டு சென்றனர்.

    கார்த்திகை தீப திருவிழாவில் பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    • நாளை மறுநாள் ஏற்றப்படுகிறது
    • கடற்கரையில் இருந்தவாரே சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் விவேகானந்தர் பாறையில் ஏற்றப்படும் மகா தீபத்தை பார்த்து வணங்கி வழிபடுவார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நாளை மறுநாள் (26-ந்தேதி) மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி தனிப்படகில் சென்று பாறையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதையொட்டி அங்கு ஸ்ரீபாத மண்டபத்தில் உள்ள பாறையில் இயற்கையாகவே அமைந்துள்ள பகவதி அம்மன் கால் தடம் பதிந்து இருந்த இடத்தில் எண்ணெய், பால், பன்னீர், தயிர், இளநீர், மஞ்சள் பொடி, சந்தனம், குங்குமம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதன் பின்னர் அம்மனின் பாதத்திற்கு விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீபாத மண்டபத்தில் இருந்து கோவில் மேல்சாந்தி கார்த்திகை தீபத்தை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து ஸ்ரீபாதமண்டபத்தின் மேற்கு பக்கம் கடற்கரையில் உள்ள பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசலை நோக்கி மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. விவேகானந்தர் பாறையில் ஏற்றப்படும் கார்த்திகை மகா தீபம் விடியவிடிய எரிந்து கொண்டே இருக்கும். கடற்கரையில் இருந்தவாரே சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் விவேகானந்தர் பாறையில் ஏற்றப்படும் மகா தீபத்தை பார்த்து வணங்கி வழிபடுவார்கள்.

    • கலெக்டர் தகவல்
    • விவரங்களை தெரிந்துகொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திரு விழாவை தரிசிக்க வரும் பக் தர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக செய்யப்ப ட்டுள்ளது.

    தீபத்திருவிழா பற்றிய விவரங்களை பக்தர்கள் தெரிந்துகொள்ள வசதி யாக, கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே, இந்த எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறலாம். மேலும், அருணா சலேஸ்வரர் கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள கியூ ஆர் கோடு பயன்படுத்தி பக்தர்கள் நன் கொடைகளை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

    மகாதீபத்திற்கு பிரார்த்தனை நெய்கு டத்திற்கான காணிக்கை கட்டணத்தை, கோவில் ராஜகோபுரம் (கிழக்கு கோபுரம்) அரு கில் உள்ள திட்டிவாயில் பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் திருமஞ்சன கோபுரம் (தெற்குகோபுரம்) நுழைவு வாயில் ஆகிய இடங்களில் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 26-ந் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீப ஏற் றும் நிகழ்வுகளை அகன்ற திரைகளில் பக்தர்கள் கண்டு தரிசிக்க வசதியாக, கோவில் உட்பிரகாரத்தில் 4 இடங்க ளிலும், கோபுரங்களின் வெளியே மற்றும் தற்காலிக பஸ் நிலையங்கள் உள்ளிட்ட 20 இடங்களிலும் அகன்ற திரைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்மூலம், விழா நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

    கோவிலில் நடைபெ றும் முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களை, https://youtube. com/@arunachaleswarar என்ற இனைய தளம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்ப டுகிறது. இந்த வசதிகளை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெய்தீபத்தை ஏந்தியவாறு பிரகாஷ் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
    • மலைக்கோவிலின் ஒரு பகுதியில் தயாராக வைக்கப்பட்டிருந்த கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

    ஓசூர்,

    கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.

    இதில் உதவி கலெக்டர் சரண்யா, ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மேற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் நாகராஜ் மற்றும் மாநகர கிழக்கு பகுதி தி.மு.க. செயலாளர் ஜி.ராமு உள்பட பலர் கலந்து கொண்டு தீப தரிசனம் செய்தனர்.

    முன்னதாக நாதஸ்வர வாத்தியம் முழங்க, நெய்தீபத்தை ஏந்தியவாறு பிரகாஷ் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, மலைக்கோவிலின் ஒரு பகுதியில் தயாராக வைக்கப்பட்டிருந்த கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

    அப்போது கூடியிருந்த பக்தர்கள் தீபத்தை தரிசித்து, அரோகாரா, அரோகரா சிவனே போற்றி போற்றி என்று பக்தி முழக்கமிட்டனர்.

    தொடர்ந்து மூலவர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

    விழாவையொட்டி மலைக் கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் தீபத் திருவிழாவை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு நடத்தினார்கள்.

    • பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி படகில் சென்று நாளை மாலை ஏற்றுகிறார்
    • பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசலை நோக்கி மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நாளை (6-ந்தேதி) மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி தனிப்படகில் சென்று பாறையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றுகிறார்.

    இதைெயாட்டி அங்குள்ள ஸ்ரீபாத மண்டபத்தில் பாறையில் இயற்கையாகவே அமைந்துள்ள பகவதி அம்மன் கால் தடம் பதிந்து இருந்த இடத்தில் எண்ணெய், பால், பன்னீர், தயிர், இளநீர், மஞ்சள் பொடி, சந்தனம், குங்குமம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    அதன்பின்னர் அம்மனின் பாதத்திற்கு விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஸ்ரீபாத மண்டபத்தில் இருந்து கோவில் மேல்சாந்தி கார்த்திகை தீபத்தை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து மண்டபத்தின் மேற்கு பக்கம் கடற்கரையில் உள்ள பகவதிஅம்மன் கோவில் கிழக்கு வாசலை நோக்கி மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த தீபம் விடிய விடிய எரிந்து கொண்டே இருக்கும். இந்த தீபத்தை கடற்கரையில் இருந்தவாரே சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வணங்கி வழிபடுவார்கள்.

    • கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்ற மலையில் நாளை மகா தீபம் ஏற்றப்படுகிறது.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பிரசித்தி பெற்றது கார்த்திகை தீபத் திருவிழா. இந்த ஆண்டுக்கான விழா கடந்த நவம்பர் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பட்டாபிஷேகம்

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று(5-ந் தேதி) மாலை பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இதை யொட்டி சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு சந்தனம், பால், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் சுவாமி- அம்பாள் கோவில் ஆறுகால் மண்டபத்தில் எழுந்தருளுவர். அங்கு நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி சுப்பிரமணியசாமிக்கு பட்டா பிஷேகம் நடைபெறும்.தொடர்ந்து சுவாமி தெய்வானையுடன் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (6-ந் தேதி) காலை 11 மணி அளவில் சிறிய வைர தேரோட்டம் நடைபெறும். தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கோவிலில் பாலதீபம் ஏற்றி மலை மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக 3½ அடி உயரம், 2½ அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரையில் 300 லிட்டர் நெய், 100 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் கொண்டு மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும்.இந்த தீபத்தை பார்த்த பின்பு பொதுமக்கள் தங்களது வீடுகளில் தீபமேற்றி வழிபாடு செய்வார்கள்.

    இதையடுத்து இரவு 8 மணி அளவில் 16 கால் மண்டபத்தில் சொக்கப்பனை எரிக்கப்படும். விவசாயிகள் விவசாயம் செழிக்க வேண்டி அங்கு சுவாமி தரிசனம் செய்து எரிந்த சொக்கப்பனை சாம்பல்களை தங்களது வயல்களில் தூவுவார்கள். இதன் மூலம் பயிர்கள் நன்கு வளரும் என்பது நம்பிக்கை.

    கார்த்திகை தீபதிருவிழாவை முன்னிட்டு கோவில் சார்பில் மலை மேல் உள்ள விநாயகர் கோவில் மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. அந்தப் பகுதி மோட்ச தீபம் ஏற்றும் பகுதி எனக் கூறி, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் 3 நாட்களுக்கு மலைக்குச் செல்ல காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    தடையை மீறி யாரும் செல்லாத வகையில் மலையைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவான நாளை மலைக்குச் செல்லும் பழனியாண்டவர் கோவில் பாதை மற்றும் புதிய படிக்கட்டு பாதைகளில் பேரிகார்டு அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். இதேபோல மலையைச் சுற்றிலும் மலை மேல் உள்ள நெல்லி தோப்பு, காசி விசுவநாதர் கோவில் பகுதி, மலை உச்சியில் உள்ள தீப தூணில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    ×