search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "maha deepam"

    • மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.
    • அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.

    இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 26-ந் தேதி காலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.

    அன்றுமுதல் தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் மலை உச்சியில் காட்சி அளித்தது. மலையில் காட்சி அளித்த மகா தீபத்தை காண பக்தர்கள் பலர் மலை உச்சிக்கு சென்று தரிசித்து வந்தனர்.

    திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுவதால் அத்தகைய சிறப்பு வாய்ந்த மலையின் உச்சிக்கு பக்தர்கள் ஏறி சென்று வந்ததையொட்டி வழக்கமாக தீபத் திருவிழா நிறைவுற்ற பிறகு பிராயச்சித்த பூஜை நடத்தப்படும். அதன்படி தீபத் திருவிழா நிறைவடைந்த பிறகு இந்த ஆண்டிற்கான பிராயச்சித்த பூஜை நேற்று நடந்தது.

    இதனையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டு சாமிக்கும், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புனிதநீர் கலசத்தை மலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிராயச்சித்த பூஜை நடந்தது.

    பின்னர் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் கோவில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு பூஜை நடந்தது
    • 6 மணிக்கு 600 அடி உயரத்தில் ஏற்றப்பட்டது

    வேலூர்:

    வேலூர் வேலப்பாடி பகவதி மலையில் பழமை வாய்ந்த வேப்பங்காடு பகவதி அம்மன், பண்ணபேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை தீபத்திருவிழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 6 மணிக்கு ஸ்ரீமதி பகவதி மலர் அம்மா, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து பரணி தீபம் ஏற்றினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் மாலை 6 மணிக்கு சுமார் 600 அடி உயரமுடைய பகவதி மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் அரோகரா என்று பக்தி கோஷமிட்டு வணங்கினர்.

    மலையில் மகாதீபம் ஏற்றிய பின்னர் வேலப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    2-வது நாளாக நேற்று மாலை 6 மணிக்கு பகவதி மலை மீது கார்த்திகை தீபம் ஏற்பட்டது. கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பட்டாசு, வாணவேடிக்கை நடை பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை தலைவர் தமிழ் புகழேந்தி செய்திருந்தார்.

    • 1,440 அடி உயரத்தில் அமைந்துள்ளது
    • தீபம் ஏற்றும் போது வெறிச்சோடி காணப்பட்டது

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 1,440 அடி உயரத்தில் ஸ்ரீ தவளகிரீஸ்வரர் மலைக்கோவிலில் அமைந்துள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வந்தவாசி சுற்றியுள்ள சென்னாவரம், காரம் கொசப்பட்டு பெருநகர் தெள்ளார் கீழ்க்கொடுங்காலூர், அம்மையப்பட்டு, மும்முனி பாதிரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    அந்த வகையில் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றுவது போல் ஸ்ரீ தவளகிரி ஈஸ்வரர் மலைக்கோவிலில் மகா தீபமானது ஏற்றப்பட்டது. கோவிலின் புனரமைப்பு பணி காரணமாக பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் தீபம் ஏற்றும் போது மழை உச்சியில் வெறிச்சோடி காணப்பட்டது.

    • மகா தீபத்திற்கு நாள் ஒன்றுக் சுமார் 650 கிலோ நெய் பயன்படுத்தப்பட உள்ளது.
    • தீபத்தை ஏற்ற நாள்தோறும் 2 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் பிரகாரத்தில் சாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், 10-ம் திருநாளான இன்று அதிகாலை அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, சிறப்பு ஹோமம் ஆகியவை நடந்தது. 

    இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர்.

    பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது. பிறகு, பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் 5 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு அங்கு தீபம் ஏற்றப்பட்டது.

    மூலவர் சன்னதி வழியாக உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா "என்று விண்ணதிர கோஷம் எழுப்பி வணங்கினர்.

    தொடர்ந்து பிற்பகல் 3.30 மணியளவில் மகாதீபம் ஏற்றப்படுவதற்கு முன்பாக நிகழ்வுகள் நிடைபெற்றது. கொப்பரையில் காடா துணி நிரப்பப்பட்டது. சுமார் 175 கிலோ எடை கொண்ட கொப்பரையின் உயரமானது 6.5 அடி ஆகும். மகா தீபத்திற்கு நாள் ஒன்றுக் சுமார் 650 கிலோ நெய் பயன்படுத்தப்பட உள்ளது. தீபத்தை ஏற்ற நாள்தோறும் 2 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது.

    நிகழ்வின் ஒரு பகுதியாக, பராசக்தியம்மன் மற்றும் சண்டிகேஷ்வரர் ஆகியோரும் கொடி மரத்தின் முன்பாக எழுந்தருளினர்.

    அண்ணாமலையார் கோயில் கொடிமரம் முன்பு உள்ள அலங்கார மண்டபத்திற்கு விநாயகர் வருகை தந்தார்.

    முருகன், உண்ணாமலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் ஆகியோரும் வருகை தந்தனர்.

    இந்நிலையில், 2668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலையின் மகா தீபம் ஏற்றப்பட்டது. 

    பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கோயில் வளாகத்தில் சரியாக மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதே நேரத்தில் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. அப்போது கோவில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்பட்டது.

    ஆண்டுக்கு ஒரு முறை காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். 40 கிலோமீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தைப் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அண்ணாமலையார் கோவிலில் இருந்து பார்பதற்காக கோவில் இணைய தளத்தில் முன்பதிவு வசதி செய்யப்பட்டு இருந்தது.
    • 10.2 மணிக்கு முடிந்தது. 2 நிமிடத்தில் ஆயிரத்து 700 அனுமதி சீட்டுகளும் விற்று தீர்ந்தன.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஆகியவற்றை அண்ணாமலையார் கோவிலில் இருந்து பார்பதற்காக கோவில் இணைய தளத்தில் முன்பதிவு வசதி செய்யப்பட்டு இருந்தது.

    நாளை அதிகாலை ஏற்றப்படும் பரணி தீப தரிசனம் காண 500 ரூபாய் விலையில் 500 அனுமதி சீட்டுகளும், நாளை மாலை அண்ணாமலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீப தரிசனம் காண 600 ரூபாய் விலையில் 100 அனுமதி சீட்டுகளும், 500 ரூபாய் விலையில் ஆயிரம் அனுமதி சீட்டுகளும் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

    இதற்கான முன்பதிவு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. 10.2 மணிக்கு முடிந்தது. 2 நிமிடத்தில் ஆயிரத்து 700 அனுமதி சீட்டுகளும் விற்று தீர்ந்தன.

    இந்த இணையதளத்தில் அனுமதி சீட்டு பெற முயன்ற பெரும்பாலான பக்தர்கள் ஒரு அனுமதி சீட்டினை மட்டுமே பெறமுடிந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

    • கலெக்டர் தகவல்
    • விவரங்களை தெரிந்துகொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திரு விழாவை தரிசிக்க வரும் பக் தர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக செய்யப்ப ட்டுள்ளது.

    தீபத்திருவிழா பற்றிய விவரங்களை பக்தர்கள் தெரிந்துகொள்ள வசதி யாக, கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே, இந்த எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறலாம். மேலும், அருணா சலேஸ்வரர் கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள கியூ ஆர் கோடு பயன்படுத்தி பக்தர்கள் நன் கொடைகளை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

    மகாதீபத்திற்கு பிரார்த்தனை நெய்கு டத்திற்கான காணிக்கை கட்டணத்தை, கோவில் ராஜகோபுரம் (கிழக்கு கோபுரம்) அரு கில் உள்ள திட்டிவாயில் பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் திருமஞ்சன கோபுரம் (தெற்குகோபுரம்) நுழைவு வாயில் ஆகிய இடங்களில் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 26-ந் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீப ஏற் றும் நிகழ்வுகளை அகன்ற திரைகளில் பக்தர்கள் கண்டு தரிசிக்க வசதியாக, கோவில் உட்பிரகாரத்தில் 4 இடங்க ளிலும், கோபுரங்களின் வெளியே மற்றும் தற்காலிக பஸ் நிலையங்கள் உள்ளிட்ட 20 இடங்களிலும் அகன்ற திரைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்மூலம், விழா நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

    கோவிலில் நடைபெ றும் முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களை, https://youtube. com/@arunachaleswarar என்ற இனைய தளம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்ப டுகிறது. இந்த வசதிகளை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு மகா தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது
    • மாலை 6 மணியளவில் பிரம்மரிஷி மலை உச்சியில் 5 அடி உயர செப்பு கொப்பரையில், 2 ஆயிரத்து 100 மீட்டர் திரி கொண்டு தீபம் ஏற்றப்பட்டது

    பெரம்பலூர்:

    மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் ஆண்டுதோறும் பெரம்பலூர் பிரம்மரிஷி மலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வருகிறது.

    இதன்படி 40-வது ஆண்டாக நேற்று கார்த்திகை தீபதிருநாள் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி நேற்று காலை கோமாதா பூஜையும், கஜ, அஸ்வ பூஜையும் நடந்தது.

    தொடர்ந்து பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வர் கோவிலில் மகா தீப செப்பு க்கொப்பரை வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு எளம்பலூர் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பூஜை செய்து பின்னர் பிரம்மரிஷி மலைக்கு எடுத்து செல்லப்பட்டது.

    மாலை 6 மணியளவில் பிரம்மரிஷி மலை உச்சியில் 5 அடி உயர செப்பு கொப்பரையில், 2 ஆயிரத்து 100 மீட்டர் திரி கொண்டு, ஆயிரத்து 8 லிட்டர் பசு நெய், செக்கு நல்லெண்ணை ஆகிய 5 வகையான கலவை எண்ணைகளுடன், 108 கிலோ கற்பூரம் கொண்டு வானவேடிக்கையுடன் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஸ்ரீ நாராயண தீர்த்த மகாசுவாமிகள் தீபத்தை ஏற்றி வைத்தார்.

    விழாவில் மகா சித்தர்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் மாதாஜி ரோகிணி, தவயோகிகள் சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள், மாதாஜி ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலும் இதில் மனித உரிமைகள் கழக பொதுச்செயலாளர் சுரேஷ் கண்ணன், சென்னை ஜெகத் ராம்ஜி, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், பா.ஜ.க. விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் ராஜேஷ், திட்டக்குடி ராஜன், அரசு வக்கீல் சுந்தரராஜன், டாக்டர் ராஜா சிதம்பரம்,

    வக்கீல் சீனிவாச மூர்த்தி, ஓய்வுபெற்ற இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நாள்முழுவதும் அன்னதானம் நடந்தது.

    • கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்ற மலையில் நாளை மகா தீபம் ஏற்றப்படுகிறது.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பிரசித்தி பெற்றது கார்த்திகை தீபத் திருவிழா. இந்த ஆண்டுக்கான விழா கடந்த நவம்பர் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பட்டாபிஷேகம்

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று(5-ந் தேதி) மாலை பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இதை யொட்டி சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு சந்தனம், பால், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் சுவாமி- அம்பாள் கோவில் ஆறுகால் மண்டபத்தில் எழுந்தருளுவர். அங்கு நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி சுப்பிரமணியசாமிக்கு பட்டா பிஷேகம் நடைபெறும்.தொடர்ந்து சுவாமி தெய்வானையுடன் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (6-ந் தேதி) காலை 11 மணி அளவில் சிறிய வைர தேரோட்டம் நடைபெறும். தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கோவிலில் பாலதீபம் ஏற்றி மலை மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக 3½ அடி உயரம், 2½ அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரையில் 300 லிட்டர் நெய், 100 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் கொண்டு மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும்.இந்த தீபத்தை பார்த்த பின்பு பொதுமக்கள் தங்களது வீடுகளில் தீபமேற்றி வழிபாடு செய்வார்கள்.

    இதையடுத்து இரவு 8 மணி அளவில் 16 கால் மண்டபத்தில் சொக்கப்பனை எரிக்கப்படும். விவசாயிகள் விவசாயம் செழிக்க வேண்டி அங்கு சுவாமி தரிசனம் செய்து எரிந்த சொக்கப்பனை சாம்பல்களை தங்களது வயல்களில் தூவுவார்கள். இதன் மூலம் பயிர்கள் நன்கு வளரும் என்பது நம்பிக்கை.

    கார்த்திகை தீபதிருவிழாவை முன்னிட்டு கோவில் சார்பில் மலை மேல் உள்ள விநாயகர் கோவில் மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. அந்தப் பகுதி மோட்ச தீபம் ஏற்றும் பகுதி எனக் கூறி, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் 3 நாட்களுக்கு மலைக்குச் செல்ல காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    தடையை மீறி யாரும் செல்லாத வகையில் மலையைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவான நாளை மலைக்குச் செல்லும் பழனியாண்டவர் கோவில் பாதை மற்றும் புதிய படிக்கட்டு பாதைகளில் பேரிகார்டு அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். இதேபோல மலையைச் சுற்றிலும் மலை மேல் உள்ள நெல்லி தோப்பு, காசி விசுவநாதர் கோவில் பகுதி, மலை உச்சியில் உள்ள தீப தூணில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    • பக்தர்கள் ஏராளமானோர் நெய் காணிக்கை செய்து வருகின்றனர்
    • டிசம்பர் 6-ம் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில் தீபம் ஏற்ற பயன்படுத்த கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஆவின் நெய் 4,500 கிலோ கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

    டிசம்பர் 6-ம் தேதி அன்று 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலை மீது ஏற்றப்படும் தீபத்திற்கு தொடர்ந்து 11 நாட்கள் இந்த நெய் பயன்படுத்தப்படும்.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆயிரம் கிலோ கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்று வகையில் கோவிலில் நெய் காணிக்கையை செய்து வருகின்றனர்.

    அன்னை பராசக்திக்கு தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்ததை நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
    திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள்.

    ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார்.

    அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார். அதற்கு சிவபெருமான், அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார்.



    அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போது ‘மலையை இடதுபுறமாக சுற்றிவா’ என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார். இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    அண்ணாமலைக்கு அரோகரா கோஷங்கள் விண்ணைப் பிளக்க, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. #AnnamalaiyarTemple #MahaDeepam
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப விழாவின் சிகர நிகழ்ச்சியாக, 10-வது நாளான இன்று மாலை 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றியதை கண்ட பக்தர்கள், அண்ணாமலைக்கு அரோகரா என கோஷ்ங்கள் எழுப்பி அண்ணாமலையாரை வழிபட்டனர்.
     
    மகா தீபத்தையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கலெக்டர் கந்தசாமி மற்றும் பிரமுகர்கள், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மகா தீபத்தை தரிசனம் செய்தனர்.



    திருவண்ணாமலையில் விட்டு விட்டு மழை கொட்டினாலும் பக்தர்கள் எதையும் பொருட்படுத்தாமல் மகா தீபத்தை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

    மலையுச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் கோவில் கொடி மரம் எதிரேயுள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும். சுமார் 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.

    திருவண்ணாமலை மகா தீபத்தை காண வேலூர், சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருச்சி, சேலம் உள்பட தமிழகம் முழுவதும் இருந்தும், அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். #AnnamalaiyarTemple #BharaniDeepam
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மாலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. #AnnamalaiyarTemple #BharaniDeepam
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப விழாவின் உச்ச கட்டமாக, 10-வது நாளான இன்று மாலை 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    மகா தீபத்தையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர். பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது.

    பக்தர்கள் தரிசனத்துக்கும் பரணி தீபம் கொண்டு செல்லப்பட்டது. பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்தி கோ‌ஷம் முழங்கி தீபத்தை தரிசித்தனர்.

    பிறகு, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் 5 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு அங்கு தீபம் ஏற்றப்பட்டது.


    அதிகாலை 3 மணி முதல் பகல் 11 மணி வரை கோவிலுக்குள் வந்த பக்தர்கள் பரணி தீபத்தை தரிசனம் செய்தனர். கிளி கோபுரம் உட்புறம், மூலவர், அம்மன் சன்னதிகளில் பக்தர்கள் வரிசையாக நின்று தரிசனம் செய்தனர்.

    புரவி மண்டபத்தில் இருந்து கிளி கோபுரம் வரை இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கலெக்டர் கந்தசாமி மற்றும் பிரமுகர்கள், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பரணி தீபத்தை தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலையில் விட்டு விட்டு மழை கொட்டியது. அதையும் பொருட்படுத்தாமல் பரணி தீபத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. முன்னதாக அர்த்த நாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். இதே நேரத்தில் பருவத ராஜகுல சமுதாயத்தினர் மகா தீபம் ஏற்றுவார்கள்.

    அப்போது கோவில் கொடி மரம் எதிரேயுள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்படும். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும். 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.

    மகா தீபம் ஏற்றப்படும் போது கோவிலில் குவிந்திருக்கும் பக்தர்கள் ‘‘அரோகரா அரோகரா அண்ணாமலையாருக்கு அரோகரா’’ என்று பக்தி கோ‌ஷம் முழங்குவர். பவுர்ணமி நேற்று 12 மணிக்கு தொடங்கியதால் நேற்று முதலே பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இன்று மதியம் 12 மணியளவில் பவுர்ணமி முடிந்தாலும் தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். திருவண்ணாமலையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இருந்தாலும் மழையில் நனைந்தவாறு பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    வேலூர், சென்னை, விழுப்புரம், காஞ்சீபுரம், திருச்சி, சேலம் உள்பட தமிழகம் முழுவதும் இருந்தும், அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். இதனால் பக்தர்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை தத்தளிக்கிறது.

    பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக, 16 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 10 ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆளில்லா குட்டி விமானம் மூலமும் தீவிரமாக கண்காணிப்பு பணி நடக்கிறது.

    கிரிவலப்பாதை கோவிலுக்குள்ளும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    மகா தீபம் ஏற்றப்படும் வரை திருவண்ணாமலை நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வீடுகளில் யாரும் மின் விளக்குகளை போட மாட்டார்கள். மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகே, அனைவரும் மின்விளக்குகளை போடுவார்கள்.

    அப்போது திருவண்ணாமலை நகரமே ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும். கோவிலில் நடக்கும் வாண வேடிக்கை பக்தர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும். பரணி தீபத்தை போலவே மகா தீப தரிசனமும், மெகா திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  #AnnamalaiyarTemple #BharaniDeepam
    ×