search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீ தவளகிரீஸ்வரர் மலைக்கோவில் மகா தீபம்
    X

    ஸ்ரீ தவளகிரீஸ்வரர் மலைக்கோவில் மகா தீபம்

    • 1,440 அடி உயரத்தில் அமைந்துள்ளது
    • தீபம் ஏற்றும் போது வெறிச்சோடி காணப்பட்டது

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 1,440 அடி உயரத்தில் ஸ்ரீ தவளகிரீஸ்வரர் மலைக்கோவிலில் அமைந்துள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வந்தவாசி சுற்றியுள்ள சென்னாவரம், காரம் கொசப்பட்டு பெருநகர் தெள்ளார் கீழ்க்கொடுங்காலூர், அம்மையப்பட்டு, மும்முனி பாதிரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    அந்த வகையில் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றுவது போல் ஸ்ரீ தவளகிரி ஈஸ்வரர் மலைக்கோவிலில் மகா தீபமானது ஏற்றப்பட்டது. கோவிலின் புனரமைப்பு பணி காரணமாக பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் தீபம் ஏற்றும் போது மழை உச்சியில் வெறிச்சோடி காணப்பட்டது.

    Next Story
    ×