search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boiler"

    • சுமார் 100 மீட்டர் உயரத்திற்கு தீ பிழம்பு எழுந்ததால் காலாப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • ஆத்திரமடைந்த பொதுமக்கள் தொழிற்சாலையின் வரவேற்பு அறை கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

    சேதராப்பட்டு:

    புதுவை காலாப்பட்டு பகுதி சிறைச்சாலை செல்லும் சாலையில் தனியார் மருந்து கம்பெனி உள்ளது.

    இங்கு மருந்து மாத்திரைகள் தயாரிக்கும் மூலப்பொருள் பவுடராக தயாரிக்கப்படுகிறது.

    இந்த நிறுவனத்தில் வட மாநில மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று இரவு சுமார் 9.30மணி அளவில் இரவு ஷிப்டுக்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் பதிவேட்டில் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தனர். அதுபோல் ஏற்கனவே முதல் ஷிப்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியே வர தயாராகிக்கொண்டிருந்தனர்.

    அந்த நேரத்தில் திடீரென பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் தொழிற்சாலையில் இருந்த ஊழியர்கள் சிதறி ஓடினர்.

    சுனாமி குடியிருப்பு மற்றும் அருகில் உள்ள தமிழகப் பகுதியான மாத்தூர், கொழுவாரி கிராமம் வரை லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

    சிறிது நேரத்தில் தொழிற்சாலையில் மற்றொரு பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    சுமார் 100 மீட்டர் உயரத்திற்கு தீ பிழம்பு எழுந்ததால் காலாப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பயங்கர விபத்து ஏற்பட்டு பலர் தொழிற்சாலைக்குள் சிக்கி தவிப்பதாக தகவல் வந்ததும் 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் தொழிற்சாலைக்குள் நுழைந்து மீட்பு பணியில் ஈடுபட்டது.

    அப்போது தொழிற்சாலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

    பாய்லர் வெடித்ததில் 5 வட மாநில தொழிலாளர்கள் உட்பட 14 பேர் தீக்காயம் அடைந்தனர். அவர்களை ஆம்புலன்சில் மீட்டு காலாப்பட்டு பிம்ஸ் தனியார் மருத்துவமனை, லாஸ்பேட்டை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தை அறிந்த காலாப்பட்டு பொதுமக்கள் அங்கு குவிந்து தொழிற் சாலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தொழிற்சாலையின் வரவேற்பு அறை கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். அங்கிருந்த பொருட்களையும் அடித்து உடைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு மேலும் பரபரப்பு மற்றும் பதட்டம் ஏற்பட்டது.

    இதையடுத்து அங்கு காலாப்பட்டு மற்றும் புதுவையின் பல்வேறு பகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தொழிற்சாலையை சூறையாடிய பொதுமக்களை போலீசார் விரட்டினர்.

    இதற்கிடையே தீக்காயமடைந்து புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து, ஒரிசா அனல் மின் நிலையத்திற்கு கொதிகலன் அனுப்பப்பட்டது
    • பொது மேலாளர் கொடியசைத்து அனுப்பிவைத்தார்

    திருச்சி, 

    திருச்சி பெல் நிறுவனத்தில் ஒரிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் உள்ள தால்ச்சர் அனல் மின் திட்டம் நிலை 3-ல் அமையவுள்ள இரண்டு 660 மெகாவாட் (சூப்பர் கிரிட்டிக்கல்) அனல் மின் நிலையத்திற்கான பிரதான தூண்களை உள்ளடக்கிய சுமார் 25 டன் எடையுள்ள கொதிகலன் மற்றும் கூறுகளின் தொகுப்பு தயாரானது. பெல் நிறுவனத்திலிருந்து அவற்றை ஒரிசாவுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி பெல் நிறுவன வளாக பொறுப்பு பொது மேலாளர் எஸ்.எம். ராமநாதன், தூண்கள் சென்ற வாகனத்தை கொடியசைத்து அனுப்பிவைத்தார்.

    • உடனே தொழிலாளர்கள் அனைவரும் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை வெளியேறியது.

    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் சாலை குளத்துப்புதூர் பகுதியில் தனியார் சாய ஆலை உள்ளது. இங்கு பனியன் துணிகளுக்கு சாயமேற்றி கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனே தொழிலாளர்கள் அனைவரும் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.

    இதையடுத்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை வெளியேறியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    ×