search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கிரமிப்பு வீடு"

    • மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

    ஆலந்தூர்:

    சென்னை, ஆதம்பாக்கம், ஜீவன் நகர், 2-வது தெருவில் இருந்து மேடவாக்கம் மெயின் ரோட்டை இணைக்கும் வகையில் சாலை அமைக்கப்பட உள்ளது. இதில் அங்குள்ள கால்வாய் மீது சிறிய பாலமும் கட்டப்பட இருக்கிறது.

    இந்த நிலையில் சாலை அமையும் பகுதியில் உள்ள சில வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக கூறி அதனை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். வீடுகளை காலி செய்யவும் உத்தரவு பிறப்பித்து இருந்தனர். ஆனால் இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கிடையே இன்று காலை தாசில்தார்கள் ராதிகா, காளிதாஸ் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் வீடுகளை இடிக்கும் பணியை தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அ.தி.மு.க.கிழக்கு பகுதி செயலாளர் பரணி பிரசாத், முன்னாள் கவுன்சிலர்கள் கோபாலகிருஷ்ணன், நரேஷ் குமார், லோகேஷ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து மேடவாக்கம் சாலையில் திடீர் மறியிலில் ஈடுபட்டனர். இதேபோல் பா.ஜ.க.வை சேர்ந்த வினோத், இன்பா தலைமையிலும் ஏராளமானோர் பொதுமக்களுக்கு ஆதரவாக மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்கு வாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • 100-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகளின் ஆக்கிரமிப்புகள் ஜே.சி.பி இயந்திரம் மூலமாக அகற்றப்பட்டது.
    • ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளிடம் பொது மக்கள் மற்றும் கடையின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அம்பத்தூர்:

    செங்குன்றம் அம்பத்தூர் நெடுஞ்சாலையில் கடைகள் மற்றும் வீடுகளின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அம்பத்தூர் போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை, அம்பத்தூர் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டல பணியாளர்கள் ஆகியோர் சட்டம் ஒழுங்கு காவலர்களின் பாதுகாப்புடன் அம்பத்தூரில் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    அம்பத்தூர் தனியார் திரையரங்கம் முதல் ஒரகடம், அம்பேத்கர் சிலை, புதூர், கள்ளிக்குப்பம் வரையிலான சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களிலும், மழைநீர் கால்வாய் உள்ள இடங்களிலும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 100-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகளின் ஆக்கிரமிப்புகள் ஜே.சி.பி இயந்திரம் மூலமாக அகற்றப்பட்டது.

    மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளிடம் பொது மக்கள் மற்றும் கடையின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×