search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
    X

    கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

    • 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்
    • கன்னியாகுமரியில் உள்ள அனைத்து லாட்ஜ்களிலும் போலீசார் அதிரடி சோதனை

    கன்னியாகுமரி :

    76-வது சுதந்திர தின விழா நாளை (செவ்வாய்கி ழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டா டப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியா குமரியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளது.

    அந்த அடிப்படையில் கன்னியாகுமரி கடல் நடு வில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அங்கு 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தவிர கன்னியாகுமரி கட லோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கட லோர பாதுகாப்பு குழும போலீசார் அதிநவீன ரோந்து படகுகளில் கடல் வழியாக சென்று தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சொந்தமான 11 சோதனை சாவடிகளில் போலீசார் இரவு-பகலாக சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரியில் உள்ள அனைத்து லாட்ஜ்களிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரியில் உள்ள ரெயில் நிலையம், பஸ் நிலையம், கலங்கரை விளக்கம் மற்றும் கடற்கரை பகுதியில் போலீசார் தீவி ரமாக கண்காணித்து வரு கிறார்கள். கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 72 கிலோமீட்டர் தூரம் அமைந்துள்ள 42 கடற்கரை கிராமங்களில் போலீசார் தீவிரமாக ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள்.

    Next Story
    ×