search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெயிண்டர்"

    • மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு
    • கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிஅருகே உள்ளஆரோக்கியபுரத்தைச் சேர்ந்தவர் மனோகர் (வயது 52) பெயிண்டர். இவருக்கு மனைவியும் 2 மகனும் ஒரு மகளும் உள்ளனர். இதில் மகள் இறந்து விட்டாள்.

    இந்த நிலையில் இவருக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த குடும்ப பிரச்சினை காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்த மனோகர் நேற்று இரவு தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி அவரது மனைவி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி
    • சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் 4 பேர் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகிறார்.

    கன்னியாகுமரி:

    தெங்கம்புதூர் அருகே உள்ள வடக்குஅஞ்சு குடியிருப்பு சாஸ்தான் கோயில் விளையை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 24). இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தனுஷ் (23), ஜெகன் (35), வினோத் (24), சுயம்புலிங்கம் என்ற லிங்கம் (30) ஆகியோர்க்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நி லையில் நேற்று முன்தினம் இரவு விஷ்ணு தனது வீட்டின் அருகில் உள்ள கோவில் மடத்து சொத்தில் வைத்து மது அருந்தி கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த தனுஷ், ஜெகன், வினோத், சுயம்புலிங்கம் என்ற லிங்கம் ஆகியோர் விஷ்ணுவை தகாத வார்த்தைகள் பேசி, கத்தியால் குத்தினர்.

    இதில் படுகாயம் அடைந்த விஷ்ணு சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் 4 பேரும் அங்கி ருந்து தப்பி சென்று விட்டனர். காயம் அடைந்த விஷ்ணு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

    அங்கிருந்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விஷ்ணுவை தாக்கிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.

    • தக்கலை தீயணைப்பு துறையினரும், இரணியல் காவல் துறையினரும் உடலை மீட்டனர்
    • இவரது மனைவி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள நெட்டாங்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 43) பெயிண்டர். இவரது நண்பர் ஒருவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதை கொண்டாட நண்பர்களுடன் நேற்று வில்லுக்குறி மாம்பழத்துறையாறு அணை பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு நண்பர்களுடன் சமைத்து சாப்பிட்டுவிட்டு மதியம் அணையில் குளித்துள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஆழப்பகுதிக்குச் சென்ற சுரேஷ் தண்ணீரில் தத்தளித்துள்ளார். அவரை நண்பர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் சுரேஷ் தண்ணீரில் மூழ்கிவிட்டார். இது குறித்து தக்கலை தீயணைப்பு துறைக்கும், இரணியல் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தக்கலை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் தண்ணீரில் இறங்கி பல மணி நேரம் தேடி சுரேஷின் உடலை மீட்டனர். இரணியல் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தண்ணீரில் மூழ்கி பலியான சுரேஷிற்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மனைவி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கான உணவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நேற்று காலை உறவினர்கள் கூறியுள்ளனர். நண்பர்களுடன் வில்லுக்குறி சென்று விட்டு உடனடியாக வந்து மருத்துவமனைக்கு செல்வதாக சுரேஷ் கூறிச் சென்றுள்ளார். ஆனால் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார்.

    • எனது மகளிடம் பேசக்கூடாது என்று ராஜசேகர் கூறி கண்டித்தார்.
    • ஆத்திரமடைந்த வாலிபர் அரிவாளில் வெட்டினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசலை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 46) .

    இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகள் கீழவாசல் முள்ளுக்கார தெருவை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் (22) என்பவருடன் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று பிலோபாநந்தவனம் பகுதியில் நின்று கொண்டிருந்த ஆனஸ்ட்ராஜிடம், எனது மகளிடம் பேசக்கூடாது என்று ராஜசேகர் கூறி கண்டித்தார்.

    இதில் ஆனஸ்ட்ராஜ் ஆத்திரமடைந்து ராஜசேகரை அரிவாளால் வெட்டினார்.

    இதில் பலத்த காயமடைந்த ராஜசேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில் கிழக்குப் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனஸ்ட்ராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சேந்தமங்கலம் அருகே முட்டாஞ்செட்டி அருந்த தியர் தெருவை சேர்ந்தவர் நாமக்கல்லில் பகுதியில் பெயிண்டர் வேலை செய்து வந்தார்.
    • வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி- நாமக்கல் மெயின் ரோட்டில் வளையபட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது மோகனூரில் இருந்து வளையபட்டி நோக்கி வந்த லாரி நடேசன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே முட்டாஞ்செட்டி அருந்த தியர் தெருவை சேர்ந்தவர் நடேசன் (வயது 60). இவர் நாமக்கல்லில் பகுதியில் பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவர் தனது மகள் சண்முக வள்ளியின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் அவரது வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.

    வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி- நாமக்கல் மெயின் ரோட்டில் வளையபட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது மோகனூரில் இருந்து வளையபட்டி நோக்கி அதி வேகமாக வந்த லாரி நடேசன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    லாரியை ஒட்டி வந்த டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து நடேசன் மகன் செந்தில்குமார் மோகனூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயற்சி செய்யும் போது திடீரென பிரேக் போட்டதில் நிலை தடுமாறி சிவகுருநாதர் கீழே விழுந்தார்.
    • படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே ஆழ்வார் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவகுரு நாதர் (வயது51). பெயின்டர் வேலை செய்து வருகின்றார்.

    நேற்று மாலை சிவகுருநாதர் பணி முடிந்து வீட்டுக்கு செல்ல மோட்டார் சைக்கிளில் தக்கலை அருகே கல்குறிச்சி பகுதியில் வரும் போது முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயற்சி செய்யும் போது திடீரென பிரேக் போட்டதில் நிலை தடுமாறி சிவகுருநாதர் கீழே விழுந்தார்.படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மனைவி எழில் நேச சந்தியா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவருக்கு கடன்தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே வெண்டலிகோடு புனையன்குழி பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 29), பெயிண்டர். இவருக்கு கடன்தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் விஷ்ணு கடந்த 4-ந் தேதி விஷம் குடித்துவிட்டு வீட்டில் படுத்து இருந்தார். வெகுநேரமாகியும் அவர் எழும்பாததால் தாயார் சென்று பார்த்தார். அப்போது விஷ்ணு மயங்கிய நிலையில் இருந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் விஷ்ணு பரிதாபமாக இறந்தார். இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுஜித் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
    • சுஜித் கஞ்சம்பள்ளியில் உள்ள ஒரு தோட்டத்தில் மர்மமான முைறயில் இறந்து கிடந்தார்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ருத்திராயம்பாளையத்தை சேர்ந்தவர் சுஜித் (வயது 22). பெயிண்டர். இவருக்கும் மகேஷ் என்ற பெண்ணுக்கும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

    கடந்த 20-ந் தேதி இவர் தனது மனைவியிடம் கஞ்சம்பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அதன் பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரை அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது சுஜித் கஞ்சம்பள்ளியில் உள்ள ஒரு தோட்டத்தில் மர்மமான முைறயில் இறந்து கிடந்தார்.

    இதனை பார்த்து அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சுஜித்தின் உடலை ஆய்வு செய்த போது அவர் மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது.

    இது குறித்து அன்னூர் போலீசார் சந்தேக மரணம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சுஜித் திருட்டுத்தனமாக கள் எடுத்து குடிக்க மரத்தில் ஏறிய போது மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் விவசாயியான பனைமரத்து ேதாட்டத்தை சேர்ந்த துரை (59), ஊத்துபாளையத்தை சேர்ந்த ரங்கசாமி (45), ருத்திராயம்பாளையத்தை சேர்ந்த குணசேகரன் (49), கிழக்குவலவை சேர்ந்த பழனிசாமி (57), தாசம்பாளையத்தை சேர்ந்த வெங்கிட்டான் (50), கஞ்சம்பள்ளியை சேர்ந்த முத்துக்குமார் (50) ஆகியோரை கைது செய்தனர்.

    சுஜித் மின்சாரம் தாக்கி இறந்தது குறித்து முக்கிய குற்றவாளியான துரையிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:- நான் விவசாய தொழில் செய்து வருகிறேன். ஆனால் அதில் எனக்கு போதிய வருமானம் இல்லை. இதனையடுத்து எனது தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் கள் எடுத்து விற்பனை செய்யலாம் என முடிவு செய்தேன். அதன்படி 110 தென்னை மரத்தில் இருந்து கள் எடுத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தேன். இரவு நேரத்தில் நான் வீட்டிற்கு சென்ற போது தென்னை மரத்தில் இருந்து கள் திருட்டு போனது. இதனை தடுப்பதற்காக 110 தென்னை மரங்களிலும் இரும்பு கம்பியால் சுற்றி இரவு நேரத்தில் மட்டும் அதில் மின்சாரம் செலுத்தி வந்தேன். இதனால் கள் திருட்டு குறைந்தது. கடந்த 21-ந் தேதி ஏற்கனவே போதையில் இருந்த சுஜித் கள் குடிப்பதற்காக எனது ேதாட்டத்துக்கு வந்துள்ளார். நான் விற்பனையை முடித்து விட்டு சென்று விட்டேன். இதனையடுத்து அவர் தென்னை மரத்தில் மின் இணைப்பு இருப்பது தெரியாமல் கள் எடுப்பதற்காக தென்னை மரத்தில் ஏறி உள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசி இறந்தார். மறுநாள் காலையில் ேதாட்டத்துக்கு சென்ற நான் அவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். பின்னர் கள் குடிக்க வந்த 5 பேருடன் சேர்ந்து சுஜித்தின் உடலை சிறிது தூரம் கொண்டு சென்று போட்டு விட்டு வந்தோம்.

    சட்டவிரோதமாக மின் இைணப்பு கொடுத்து இருந்தால் விசாரணை நடத்தி போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் தென்னை மரங்களில் சுற்றி இருந்த இரும்பு கம்பிகளை அகற்றினேன். பின்னர் ஏதும் தெரியாதது போல இருந்தேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறினார். கைது செய்யப்பட்ட 6 பேர் மீது கொலைக்கு நிகரான உயிரிழப்பை ஏற்படுத்துதல், ஆதாரங்களை அளித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.   

    • சண்முகத்திடம், பிரபுகுமார் 100 ரூபாய் எனக்கு கடனாக கொடு என கேட்டுள்ளார். அதற்கு சண்முகம் என்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.
    • கடன் கொடுக்க வக்கில்லாத உனக்கு என்னடா மரியாதை எனக் கூறி அருகில் இருந்த பிராந்தி பாட்டிலை எடுத்து தலையில் அடித்ததில் சண்முகத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    நம்பியூர்:

    நம்பியூர் அருகே உள்ள மேட்டுக்கடை பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

    இதில் சம்பவத்தன்று மதியம் 2 மணி அளவில் சந்தனநகர் பகுதியை சேர்ந்த குமார் என்கிற சண்முகம் (45). பெயிண்டர். அவரது நண்பர் பிலியம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபுகுமார் (27) ரிக் வண்டி தொழிலாளி. இருவரும் மது குடிக்க சென்றுள்ளனர்.

    அப்போது சண்முகத்திடம், பிரபுகுமார் 100 ரூபாய் எனக்கு கடனாக கொடு என கேட்டுள்ளார். அதற்கு சண்முகம் என்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். அதற்கு பிரபுகுமார் பணத்தை வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்கிறாயா என தகாத வார்த்தையில் பேசி யுள்ளார்.

    100 ரூபாய் கூட கடன் கொடுக்க வக்கில்லாத உனக்கு என்னடா மரியாதை எனக் கூறி அருகில் இருந்த பிராந்தி பாட்டிலை எடுத்து தலையில் அடித்ததில் சண்முகத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சண்முகம் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ஒருவரை ஒருவர் தாக்கியதில் பிரபுகுமாருக்கு வாயின் கீழ் உதடு, வலது கண் புருவத்தில் காயம் ஏற்பட்டது.

    இதில் பலத்த காயமடை ந்த சண்முகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் வரப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரத்தவெள்ளத்தில்,படுகாயங்களுடன் ஒருவர் கிடப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் அவரை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் பஸ் நிலையத்தில் நேற்று காலை ரத்தவெள்ளத்தில்,படுகாயங்களுடன் ஒருவர் கிடப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடம் சென்ற போலீசார் அவரை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதுகுறித்த விசாரணையில் காயம் பட்டவர் பல்லடம் அருகே மாதப்பூரில் வசிக்கும் அய்யாசாமி மகன் மாரிமுத்து( 45) என்பதும் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் விசாரணையில், இவரும் பல்லடம் வடுகபாளையம் பகுதியில் வசிக்கும் சக பெயிண்டிங் தொழிலாளியான முத்துவேல்(52) என்பவரும் அதிகாலையிலேயே மதுபானம் அருந்திவிட்டு பஸ் நிலையத்திற்குள் வந்துள்ளனர். அங்கு ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது. இந்தநிலையில் முத்துவேல் அருகே கிடந்த மதுபான பாட்டிலை எடுத்து உடைத்து மாரிமுத்துவின் கழுத்து, மற்றும் முதுகு ஆகிய இடங்களில் குத்தியுள்ளார். இதில் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

    இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற, முத்துவேல் பல்லடம், பனப் பாளையம் செக்போஸ்ட் அருகே மறைந்திருந்த போது, போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சுடுகாட்டில் பெயிண்டர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
    • கொலை செய்த முத்துகிருஷ்ணன், அவரது தந்தை சுந்தர்ராஜன், தம்பி முத்துசெல்வம் ஆகிய 3 பேரை தேடி வருகிறார்.

    ராஜபாளையம்,

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன் பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் பாலமுருகன் (வயது 37). பெயிண்டர். நேற்று இவர் ராஜபாளையம் அருகே காளவாசலில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கு மாலையில் இறுதி ஊர்வலம் நடந்தது.அப்போது ஊர்வலத்தில் பங்கேற்ற பாலமுருகன் சுடுகாட்டுக்கு செல்லும் வழி நெடுகிலும் பூக்களை தூவியபடி சென்றார்.

    அப்ேபாது பால முருகனுக்கும், இறுதி சடங்கிற்கு வந்திருந்த சிவகாசி பாலையா புரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் சமரசம் செய்தனர். அதன்பின் காளவாசல் பகுதியில் உள்ள சுடுகாட்டில் உறவினர் உடலை தகனம் செய்யும் பணி நடந்தது.

    அப்போது முத்து கிருஷ்ணன் தனது தந்தை சுந்தர்ராஜன், சகோதரர் முத்து செல்வம் ஆகியோருடன் அங்கு வந்தார். சுடுகாட்டில் நின்றிருந்த பாலமுருகனிடம் மீண்டும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். திடீரென தந்தை மற்றும் 2 மகன்கள் உருட்டுக்கட்டையால் பாலமுருகன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து தந்தை-2 மகன்களும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த கொலை குறித்து பாலமுருகனின் மனைவி முத்துலட்சுமி கீழராஜகுலராமன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மன்னவன் வழக்குப்பதிவு செய்து வாலிபரை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்த முத்துகிருஷ்ணன், அவரது தந்தை சுந்தர்ராஜன், தம்பி முத்துசெல்வம் ஆகிய 3 பேரை தேடி வருகிறார்.

    • வடலூரில் இன்று மின்சாரம் தாக்கி பெயிண்டர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    • வடலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. அவரது மகன் பிரான்சிஸ் (வயது 28). பெயிண்டர். இவர் இன்று காலை வடலூர் கும்பகோணம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பெயிண்டு அடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக உயர் அழுத்த மின்கம்பி சென்றது. இதை கவனிக்காமல் பிரான்சிஸ் குனிந்து நிமிர்ந்தபோது அவரது தலை மின்கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி பிரான்சிஸ் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×