search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி அருகே பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    கன்னியாகுமரி அருகே பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை

    • மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு
    • கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிஅருகே உள்ளஆரோக்கியபுரத்தைச் சேர்ந்தவர் மனோகர் (வயது 52) பெயிண்டர். இவருக்கு மனைவியும் 2 மகனும் ஒரு மகளும் உள்ளனர். இதில் மகள் இறந்து விட்டாள்.

    இந்த நிலையில் இவருக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த குடும்ப பிரச்சினை காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்த மனோகர் நேற்று இரவு தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி அவரது மனைவி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×