search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் பஸ் நிலையத்தில் தொழிலாளியை பாட்டிலால் குத்திய பெயிண்டர் கைது
    X

    முத்துவேல்.

    பல்லடம் பஸ் நிலையத்தில் தொழிலாளியை பாட்டிலால் குத்திய பெயிண்டர் கைது

    • ரத்தவெள்ளத்தில்,படுகாயங்களுடன் ஒருவர் கிடப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் அவரை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் பஸ் நிலையத்தில் நேற்று காலை ரத்தவெள்ளத்தில்,படுகாயங்களுடன் ஒருவர் கிடப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடம் சென்ற போலீசார் அவரை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதுகுறித்த விசாரணையில் காயம் பட்டவர் பல்லடம் அருகே மாதப்பூரில் வசிக்கும் அய்யாசாமி மகன் மாரிமுத்து( 45) என்பதும் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் விசாரணையில், இவரும் பல்லடம் வடுகபாளையம் பகுதியில் வசிக்கும் சக பெயிண்டிங் தொழிலாளியான முத்துவேல்(52) என்பவரும் அதிகாலையிலேயே மதுபானம் அருந்திவிட்டு பஸ் நிலையத்திற்குள் வந்துள்ளனர். அங்கு ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது. இந்தநிலையில் முத்துவேல் அருகே கிடந்த மதுபான பாட்டிலை எடுத்து உடைத்து மாரிமுத்துவின் கழுத்து, மற்றும் முதுகு ஆகிய இடங்களில் குத்தியுள்ளார். இதில் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

    இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற, முத்துவேல் பல்லடம், பனப் பாளையம் செக்போஸ்ட் அருகே மறைந்திருந்த போது, போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×