search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெயிண்டர் அடித்துக்கொலை
    X

    பெயிண்டர் அடித்துக்கொலை

    • சுடுகாட்டில் பெயிண்டர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
    • கொலை செய்த முத்துகிருஷ்ணன், அவரது தந்தை சுந்தர்ராஜன், தம்பி முத்துசெல்வம் ஆகிய 3 பேரை தேடி வருகிறார்.

    ராஜபாளையம்,

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன் பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் பாலமுருகன் (வயது 37). பெயிண்டர். நேற்று இவர் ராஜபாளையம் அருகே காளவாசலில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கு மாலையில் இறுதி ஊர்வலம் நடந்தது.அப்போது ஊர்வலத்தில் பங்கேற்ற பாலமுருகன் சுடுகாட்டுக்கு செல்லும் வழி நெடுகிலும் பூக்களை தூவியபடி சென்றார்.

    அப்ேபாது பால முருகனுக்கும், இறுதி சடங்கிற்கு வந்திருந்த சிவகாசி பாலையா புரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் சமரசம் செய்தனர். அதன்பின் காளவாசல் பகுதியில் உள்ள சுடுகாட்டில் உறவினர் உடலை தகனம் செய்யும் பணி நடந்தது.

    அப்போது முத்து கிருஷ்ணன் தனது தந்தை சுந்தர்ராஜன், சகோதரர் முத்து செல்வம் ஆகியோருடன் அங்கு வந்தார். சுடுகாட்டில் நின்றிருந்த பாலமுருகனிடம் மீண்டும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். திடீரென தந்தை மற்றும் 2 மகன்கள் உருட்டுக்கட்டையால் பாலமுருகன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து தந்தை-2 மகன்களும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த கொலை குறித்து பாலமுருகனின் மனைவி முத்துலட்சுமி கீழராஜகுலராமன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மன்னவன் வழக்குப்பதிவு செய்து வாலிபரை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்த முத்துகிருஷ்ணன், அவரது தந்தை சுந்தர்ராஜன், தம்பி முத்துசெல்வம் ஆகிய 3 பேரை தேடி வருகிறார்.

    Next Story
    ×