search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் தொந்தரவு"

    • 12 வயது மகளிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
    • சிறுமி தான் படிக்கும் பள்ளி ஆசிரியரிடம் விவரத்தை தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் :

    உடுமலை பொன்னேரியை சேர்ந்த 59 வயது கூலித் தொழிலாளி தனது 12 வயது மகளிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.கடந்த 2-12-2019 அன்று வீட்டில் இருந்த சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளார். மேலும் தொடர்ச்சியாக தனது மகளை மிரட்டி பலமுறை உடலுறவு கொண்டுள்ளார்.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தான் படிக்கும் பள்ளி ஆசிரியரிடம் விவரத்தை தெரிவித்துள்ளார். உடனடியாக உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

    மகளை பாலியல் கொடுமை செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனையும்,ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அபராத தொகையை சிறுமியின் படிப்புக்கு வழங்கவும், மேலும் சிறுமியின் மறுவாழ்வுக்காக அரசு ரூ.2.50 லட்சம் வழங்கவும் நீதிபதி பாலு உத்தரவிட்டார்.இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

    • முனியாண்டி அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியை கடந்த 2016-ம் ஆண்டு பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.
    • குற்றம் சுமத்தப்பட்ட முனியாண்டிக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தமிழரசி உத்தரவிட்டார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அரசன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (32) இவர் அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியை கடந்த 2016-ம் ஆண்டு பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. அதன்பேரில் முனியாண்டி மீது படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் மீது செங்கல்பட்டு போக்சோ கோட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இதனையடுத்து இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முனியாண்டிக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தமிழரசி உத்தரவிட்டார். அரசு தாப்பில் வக்கீல் புவனேஷ்வரி ஆஜரானார்.

    • டியூசன் வகுப்புக்கு சென்ற அந்த சிறுமி வீட்டிற்கு ஆட்டோவில் வந்துள்ளார்.
    • பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    அவுரங்காபாத்:

    மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோவில் இருந்து, 17 வயது சிறுமி, திடீரென வெளியே எகிறிக் குதித்துள்ளார். இதனால் அவரது தலையில் பலத்த அடிபட்டது. அவர் வந்த ஆட்டோ வேகமாக சென்றுவிட்டது. கீழே விழுந்து கிடந்த அவர் மீது, பின்னால் வந்த ஒரு கார் மோதும் அபாயம் இருந்தது. ஆனால் அந்த சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அந்த வழியாக நடந்து சென்றவர்கள் சிலர் உதவி செய்து சிறுமியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆட்டோ டிரைவரின் பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிக்க அந்த பெண், ஆட்டோவில் இருந்து குதித்தது தெரியவந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

    டியூசன் வகுப்புக்கு சென்ற அந்த சிறுமி வீட்டிற்கு ஆட்டோவில் வந்துள்ளார். அப்போது ஆட்டோ டிரைவர் சையத் அக்பர் ஹமீத், அந்த சிறுமியிடம் நைசாக பேச்சுகொடுத்து பொதுவான சில கேள்விகளை கேட்டுள்ளார். சிறுமியும் சாதாரணமாக பதில் அளித்துள்ளார். அதன்பின் ஆட்டோ டிரைவர் படிப்படியாக அந்த சிறுமியை அச்சம் கொள்ள செய்யும் வகையில் ஆபாசமாக பேசியிருக்கிறார். ஆட்டோவையும் மிக வேகமாக ஓட்டியிருக்கிறார். இதனால் பயந்துபோன சிறுமி, கீழே குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    காயமடைந்த சிறுமி உள்ளூர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த சாலையில் இருந்த சுமார் 40 சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து ஆட்டோ டிரைவரின் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட ஹமீத் மும்பையைச் சேர்ந்தவர். அவர் நான்கைந்து மாதங்களுக்கு முன்பு அவுரங்காபாத் வந்து ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    • நான் பாதி மயக்கத்தில் இருந்தபோது, நான் விருப்பப்பட்டு கல்யாணம் செய்ததாக சொல்ல வைத்தார்கள்.
    • எனது சாவிற்கு முழுக்க முழுக்க ராணி, ராமசாமி, மாரிமுத்து, மணி ஆகியோர் தான் காரணம்.

    சேலம்:

    சேலம் அருகே பாலியல் தொந்தரவு செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்த மாணவி எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 31.08.2022 அன்று பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராணி என்பவர் என்னை அழைத்து பேசி என்னுடைய சான்றிதழை பொய் சொல்லி வாங்கி வைத்துக்கொண்டார்.

    நான் குளியல் அறைக்கு சென்றபோது, பக்கத்து வீட்டில் உள்ள ராணி, ராமசாமி, மணி ஆகிய 3 பேரும் மயக்க மருந்து அடித்து ஆட்டோவில் கடத்தி சென்றனர். அப்போது எனது அருகில் 2 பேர் இருந்தனர்.

    நான் பாதி மயக்கத்தில் இருந்தபோது, நான் விருப்பப்பட்டு கல்யாணம் செய்ததாக சொல்ல வைத்தார்கள். அப்படி சொல்லவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினார்கள்.

    என்னை தவறாக படம் பிடித்து மிரட்டினார்கள். மறு நாள் சமயபுரம் கோவிலுக்கு சென்றதாக சொல் என்று சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். இல்லையென்றால் தவறாக படம் எடுத்து வைத்து இருப்பதை உனது அண்ணனுக்கு அனுப்பினால் உனது குடும்பம் தற்கொலை செய்து கொள்ளும் என்று மிரட்டினர். தொடர்ந்து மணி என்னை மிரட்டினார். இதனால் பயத்தில் மன குழப்பத்துடன் தவித்த நான் போலீஸ் நிலையத்தில் சென்று கோவிலுக்கு சென்றதாக சொன்னேன்.

    தினமும் என்னை பக்கத்து வீட்டில் உள்ள அனைவரும் மிரட்டினார்கள். ராமசாமி என்பவர், மேஜர் ஆனதும் என்னை கடத்தி விடுவேன் என மிரட்டினார். எனது சாவிற்கு முழுக்க முழுக்க ராணி, ராமசாமி, மாரிமுத்து, மணி ஆகியோர் தான் காரணம். என் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் காரணம் இல்லை. என் குடும்பத்தார் என்னை துன்புறுத்தவில்லை. என் குடும்பத்தை துன்புறுத்த வேண்டாம். தற்கொலைக்கு காரணமான மாரிமுத்து என்பவர் செல்போனில் உள்ள எனது போட்டோக்களை காண்பித்து மிரட்டுகின்றனர்.

    இவ்வாறு அந்த மாணவி கண்ணீர் மல்க எழுதியிருந்தார்.

    மேலும் திருமணத்தின்போது சாந்தி, சத்யா, சத்யாவின் கணவர், மற்றும் மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர் எனவும் அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.

    • மீட்கப்பட்ட சிறுமியை மணியின் தந்தை மற்றும் சித்தப்பா மகன் ஆகியோர் மீண்டும் மிரட்டியதாக புகார்
    • ஆபாசமாக எடுத்த படத்தை வெளியிடுவதாக மிரட்டவே சிறுமி கடந்த மாதம் 25-ந் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    சேலம்:

    பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த சிறுமியுடன் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் மணி (வயது 23) என்பவர் பழகி வந்தார். தொடர்ந்து ஆசைவார்த்தைகள் கூறி பழக்கத்தை அதிகப்படுத்தினார்.

    இதனால் மாணவி அவர் நல்லவர் என நம்பினார். திடீரென மணி, மாணவியிடம் காதலிப்பதாக கூறினார். இதற்கு மாணவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மணி, தனது ஆதரவாளர்களுடன் கடத்திச் சென்று மாணவியை திருமணம் செய்து கொண்டு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து அதனை வீடியோ எடுத்து மிரட்டினார். இதனால் மாணவி மனம் உடைந்தார்.

    அதிர்ச்சியில் உறைந்த மாணவி இது தொடர்பாக கைகாத்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    இந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமியை மணியின் தந்தை மற்றும் சித்தப்பா மகன் ஆகியோர் மீண்டும் மிரட்டியதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து வாலிபரின் தந்தை அவரது சித்தப்பா மகன் இருவரையும் கைகாத்தான் போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து ஆபாசமாக எடுத்த படத்தை வெளியிடுவதாக மிரட்டவே சிறுமி கடந்த மாதம் 25-ந் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை மீட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வீரகனூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.

    சிறுமி தற்கொலை செய்வதற்கு முன்பு சாவுக்கு காரணமானவர்கள் பற்றி உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். 

    • திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
    • சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து தாயிடம் கூறியுள்ளார்.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த நாரணாபுரத்தை சேர்ந்த பரமசிவன் மகன் பாலசுப்பிரமணி (வயது 23).கோழிப்பண்ணையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள 14 வயது சிறுமியிடம் அவரது தாய், தந்தை இல்லாத நேரத்தில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து இந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து தாயிடம் கூறியுள்ளார்.

    இதனை அறிந்த பெற்றோர்.தாராபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் பாலசுப்பிரமணி மீது புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா, அவரை அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது பாலசுப்பிரமணி சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக் குப்பதிவு செய்து கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட பாலசுப்பிரமணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வீட்டில் ஒரு பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.
    • செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி சொர்ணம் நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் அனுப்பர்பாளையம், பாரதி நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி ராக்கப்பன் (வயது 41). இவரின் 2-வது மனைவி ஜெயலட்சுமி, (30). முதல் மனைவியின் மகன் அருண்பாண்டியன் (19)

    இந்த நிலையில் தண்ணீர் பந்தல் காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் திருவரசு (26) ராக்கப்பனுடன் நெருங்கி பழகிவந்தார். அப்போது ஜெயலட்சுமியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராக்கப்பன்கடந்த 2014 ஏப்ரலில் போன் செய்து திருவரசுவை தன் வீட்டுக்கு வரவழைத்தார். வீட்டுக்கு வந்த அவரை சுத்தியலால் தாக்கியும், முகத்தை தலையணையால் அழுத்தியும் ராக்கப்பன், ஜெயலட்சுமி, அருண்பாண்டின் ஆகியோர் சேர்ந்து கொலை செய்து, வீட்டில் ஒரு பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.திருவரசுவைக் காணவில்லை என அவரது தம்பி இளையராஜா அளித்த புகாரின்படி, அனுப்பர்பாளையம் போலீசார் விசாரித்த போது, இந்த கொலை தெரியவந்தது.கொலை தொடர்பாக 3பேரும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு, திருப்பூர் மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி சொர்ணம் நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் குற்றவியல் வக்கீல் கனகசபாபதி ஆஜரானார்.இதில் 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்புக்குப் பின் 3பேரும் ேகாவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • காரிப்பட்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி மாயமானார்
    • போலீசார் விசாரணையில் இசிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் சம்பத் (21). என்பவர், திருமண ஆசைக்காட்டி கடத்திச் சென்று, பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி மாயமானார். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் இசிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் சம்பத் (21). என்பவர், திருமண ஆசைக்காட்டி கடத்திச் சென்று, பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து, சிறுமியை மீட்ட போலீசார், சேலம் பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் சம்பத்தை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதுகுறித்து வாழப்பாடி அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவியின் தந்தை புகார்
    • தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே அரசு பள்ளி 5-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள மாச்சம்பட்டில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பேர்ணாம்பட்டு கோவில் தெருவை சேர்த்த பால்வண்ணன் (55) என்பவரும், மற்றொரு ஆசிரியரும் பணியாற்றி வருகின்றனர்.

    75 மாணவ, மாணவியர் மாச்சம் பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளைக்கு மாணவ, மாணவியர் சென்றிருந்தனர்.

    அப்போது 5-ம் வகுப்பு மாணவியை வகுப்பறைக்கு தலைமை ஆசிரியர் பால்வண்ணன் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது அங்கு வந்த மாணவியின் உறவினரான அதே பள்ளியில் படித்து வரும் மாணவி பார்த்துள்ளார். உடனே தலைமை ஆசிரியர் அந்த மாணவியை அடித்ததாக கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் வீடு திரும்பிய மாணவிகள் இருவரும் நடந்த சம்பவத்தை தங்களது பெற்ேறாரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சிஅடைந்த மாணவியின் தந்தை இது பற்றி உமாராபாத் போலீசில் புகார்செய்தார்.

    இது பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் பால்வண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்தசம்பம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போக்சோ சட்டத்தில் கைது
    • ேபாலீசார் விசாரணை

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே உள்ள வெங்களத்தூர் கிராமத்தை சேர்ந்த 45 வயது விவசாயி ஒருவர் அப்பகுதியை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி அழுது கொண்டே தனது தாயாரிடம் கூறி உள்ளார்.

    சிறுமியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பிரியா வழக்கு பதிவு நடத்தி விவசாயியை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • பண்ருட்டி அருகே தாய், மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 வாலிபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
    • கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்ப ட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழக்குப்பத்தை சேர்ந்த 35 வயது பெண் தனது 12 வயது மகளுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தோப்புகொல்லைஅருகே இருசக்கர வாகனத்தில்சென்றார். அப்பொழுது நடுகுப்பம் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் (24), ஆதிகுரு (22) ஆகிய இருவரும், மகளுடன் சென்ற அந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தைவழிமறித்து சாவியை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த தோப்புக்குள்செ ன்றுள்ளனர். சாவி யை கொடுங்கள் என கேட்டுஅவர்களை பின்தொடர்ந்து சென்ற அந்த பெண்ணிடம் பாலியல்சீண்டலில்ஈடுபட்டுள்ளனர். அப்போது 2 பேரும் சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்தனர்.

    அவர்கள் பிடியில் இருந்து தப்பி வந்த அந்த பெண் இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்காந்திமதி புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி இது குறித்து வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தினார். விசாரணையில் 2 வாலிபர்களும் தாய்- மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்துபோக்சோ, பெண் வன்கொடுமைதடுப்பு சட்டம் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்ப ட்டனர்.

    • பண்ருட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சிறுமியின் தாயார் மற்றும் அவரது மாமியார் ஆகியோர் ஓடிச்சென்று பார்த்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (வயது 62). இவர் அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று கையைப்பிடித்து இழுத்து சென்று வீட்டினுள் தாழ்ப்பாள் போட்டு கொண்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சிறுமியின் தாயார்மற்றும் அவரது மாமியார் ஆகியோர் ஓடிச்சென்று பார்த்தபோது ஜோதியின் வீட்டிலிருந்து பாதிக்கப்பட்ட சிறுமி அழுது கொண்டே வெளியே வந்ததாகவும் இதைப்பற்றி கேட்டபோது அசிங்கமாகதிட்டிவிட்டு ஜோதி அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி போக்சோவில் வழக்கு பதிந்து முதியவர் ஜோதியை கைது செய்தனர். கைதான அவர் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 

    ×