search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் தொந்தரவு"

    • சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் வந்த மோட்டார் சைக்கிள் எண்ணை போலீசார் கண்டு பிடித்தனர்.
    • இரவில் தனியாக நடந்து செல்லும் பெண்களின் பாதுகாப்புக்காக ‘காவலன்’ செயலி உள்ளது.

    சென்னை:

    சென்னை டி.பி.சத்திரம் போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்தார். அந்த புகாரில், 'எனது 13 வயது மகள் கடந்த 17-ந்தேதி இரவில் டியூசனுக்கு சென்று விட்டு வீட்டுக்கு தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் எனது மகளை வழிமறித்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். என் மகளிடம் தவறாக நடந்த அந்த வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சக்தி வேலாயுதம் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த தெருவில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சிறுமியிடம் மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் சில்மிஷம் செய்த காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த மோட்டார் சைக்கிளின் எண் சரியாக தெரியாததால் போலீசார் சம்பவம் நடந்த பகுதியை சுற்றியுள்ள 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்தனர்.

    அப்போது சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் வந்த மோட்டார் சைக்கிள் எண்ணை போலீசார் கண்டு பிடித்தனர். அதை வைத்து விசாரனை நடத்தியபோது அந்த மோட்டார்சைக்கிள் டி.பி.சத்திரம் பூஜ்ஜி தெருவை சேர்ந்த யோகேஸ்வரன் (வயது24) என்பவருக்கு சொந்தமான மோட்டார்சைக்கிள் என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது வீட்டுக்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது அவர்தான் என்று தெரியவந்தது. இதையடுத்து யோகேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, புகார் செய்த சிறுமி உள்பட இரவில் தனியாக நடந்து சென்ற 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது கிடைத்த திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:-

    யோகேஸ்வரனுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை இல்லை. அவர் ஏற்கெனவே தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்தார். அவரது நடவடிக்கை சரியில்லாததால் அவரை பணியில் இருந்து நீக்கி உள்ளனர். அதன் பிறகு அவர் கடந்த 6 மாதமாக பைக்டாக்சி ஓட்டினார். இரவில் பைக்டாக்சி ஓட்டினால் போனஸ் அதிகமாக கிடைக்கும், சாலையும் வெறிச்சோடி இருக்கும் என்பதால் அவர் இரவு நேரத்தில் பைக் டாக்சி ஓட்டி வந்தார்.

    இரவில் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் இளம்பெண்களை பைக் டாக்சியில் இவர் ஏற்றி செல்லும்போது, அவர்களை தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது சில பெண்கள் இவரை கண்டித்துள்ளனர். அப்படி கண்டிக்கும் பெண்களிடம் அவர் மன்னிப்பு கேட்டு விட்டு நைசாக தப்பி விடுவார். சில்மிஷத்தில் ஈடுபடும்போது கண்டு கொள்ளாத பெண்களுக்கு அவ்வப்போது செல்போனில் மெசேஜ் அனுப்பி நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.

    மேலும் இரவில் பைக் டாக்சி ஓட்டும்போது நள்ளிரவில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை நோட்டமிட்டு அவர்களை பின் தொடர்ந்து சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார். இது பற்றி வெளியில் சொன்னால் உங்களுக்குத்தான் பிரச்சனை என்று மிரட்டியுள்ளார். இதனால் அவர் மீது எந்த பெண்களும் புகார் செய்யவில்லை.

    இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இரவில் தனியாக செல்லும் பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுபோல இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அவர் 50-க்கும் மேற்பட்ட இளம்பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நிலையில் அவர் தனது தாயாரிடம் தெரிவித்ததால் யோகேஸ்வரன் தற்போது போலீசில் சிக்கிக்கொண்டார்.

    இந்த வழக்கு டி.பி.சத்திரம் போலீஸ் நிலையத்தில் இருந்து தற்போது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதையடுத்து யோகேஸ்வரனை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கைதான யோகேஸ்வரன் இரவில் பணி முடிந்து பைக் டாக்சியில் சென்ற பெண்களிடமும், சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்களிடமும், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.

    அவர் மீது இதுவரை ஒரே ஒரு சிறுமி மட்டுமே புகார் செய்துள்ளார். அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் செய்தால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இரவில் தனியாக நடந்து செல்லும் பெண்களின் பாதுகாப்புக்காக 'காவலன்' செயலி உள்ளது. இந்த செயலியை பெண்கள் தங்கள் செல்போனில் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் இதுபோன்ற வாலிபர்களால் பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தால் உடனடியாக காவலன் செயலியை பயன்படுத்தி போலீசை உதவிக்கு அழைக்கலாம்.

    பைக் டாக்சியில் முன்பதிவு செய்து செல்லும் பெண்கள் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தால் உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். முன்பதிவு செய்யும்போது அந்த டிரைவரின் செல்போன் எண், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அனுப்பப்பட்டு இருக்கும் என்பதால் அதுபோன்ற நபர்களை எளிதில் பிடித்து விட முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த மாணவி மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி இறந்தார்.
    • குற்றவாளிகளுக்கு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணவியின் துப்பட்டாவை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த மாணவி மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி இறந்தார். அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அங்கு நடந்த 343 கோடி மதிப்பிலான திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழாவில் அவர் பேசியதாவது:

    சட்டத்தை சீர்குலைக்க யாரும் சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம். பெண்களை துன்புறுத்துவது போன்ற பாலியல் குற்றத்தை யாராவது செய்தால் அவர்களுக்காக மரண தெய்வமான எமராஜ் காத்து கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • போக்சா சட்டத்தில் நடவடிக்கை
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கப்பட்டார்

    புதுப்பாளையம்:

    விழுப்புரம் மாவட்டம், கண்டமானடி கிராமம் கன்னிமாநகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 27). இவர் செங்கம் அடுத்த காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் சமூக வலைத்தளம் மூலம் பழகி வந்தார்.

    மோகன்ராஜ், சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி புதுபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புதுப்பாளையம் போலீசார் இந்த வழக்கை, செங்கம் அனைத்து மகளிர் போலீசாருக்கு மாற்றம் செய்தனர். அதன் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோ ன்மணி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மோகன்ராஜை கைது செய்தனர். கைது செய்ய ப்பட்டவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • போலீசார் விசாரணை
    • இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சி, குன்னத்தூர் பகு தியை சேர்ந்த மாணவர் ஒரு வர் வாணியம்பாடி தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த மே மாதம், மாணவர் ஆசை வார்த்தை கூறி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத் துள்ளார்.

    இது குறித்து ஜோலார் பேட்டை போலீஸ் நிலையத் தில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மங் கையர்கரசி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை மாரியப்பன்அவதூறாக பேசி உள்ளார்.
    • இளம் பெண் வீட்டுக்குள் இருந்தபடியே தனது உறவினர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.

    நெல்லை:

    ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வி.கே.புதூர் பகுதியில் தனியாக வீட்டில் இருந்த திருமணமான ஒரு இளம்பெண்ணை அவதூறாக பேசி உள்ளார்.

    மேலும் ஆட்கள் இல்லாததை அறிந்த அவர் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து, கதவை தட்டி உள்ளார். அந்த இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    உடனே அந்த பெண், வீட்டுக்குள் இருந்தபடியே தனது உறவினர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு உறவினர்கள் விரைந்து வந்தனர்.

    வழக்கு

    அதனை பார்த்த மாரியப்பன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரில் வி.கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • டாக்டர் மீது போலீசார் வழக்கு
    • பெண் அலுவலர், மகளிர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    நாகர்கோவில், ஜூலை.6-

    நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பாதுகாப்பு அலுவலராக பெண் ஒருவர் செயல்பட்டு வந்தார்.

    சம்பவத்தன்று இவர் அலுவலக பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு ஒரு டாக்டர் வந்துள்ளார். அவர், பெண் அலுவலர் இருந்த அறையை பூட்டிவிட்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    பெண் அலுவலர் எதிர்ப்பு தெரிவித்ததால், டாக்டர் அவரை தாக்கியதோடு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் அலுவலர், மகளிர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதி, பெண் அலுலவரின் புகார் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்பேரில் நேசமணி நகர் போலீசார், டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேர் போக்சோவில் கைது
    • சிறையில் அடைப்பு

    ராணிப்பேட்டை:

    ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சிறுமியின் பெற்றோர் இருவரும் காலையில் வேலைக்காக வீட்டை விட்டு சென்று, இரவு வீடு திரும்புவது வழக்கம்.

    அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி (37) என்பவர் சிறுமியின் வீட்டின் சுவர் ஏறி குதித்து வீட்டினுள் சென்று தனியாக இருந்த சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

    இதை வெளியில் கூறினால் உன் அப்பா, அம்மாவை ஒழித்துவிடுவேன் என மிரட்டி அடிக்கடி வீட்டுக்கு வந்து சிறுமியிடம் முனியாண்டி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார். முனியாண்டி சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வதை பார்த்த, அப்பகுதியைச் சேர்ந்த சந்திரன் (55) என்பவரும், சிறுமியிடம் தொந்தரவில் ஈடுபட்டது தெரிந்தது.

    கடந்த சில நாட்களாக வீட்டில் சோர்வாக இருந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்து உள்ளனர். அப்போது, சிறுமி நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாகின், சப் - இன்ஸ்பெக்டர் சீதா ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முனியாண்டி மற்றும் சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சிறுமியின் பெற்றோர்களுக்கு கொலை மிரட்டல்
    • வாலிபருக்கு வலைவீச்சு

    செய்யாறு:

    செய்யாறு பகுதியை சேர்ந்த தொழிலாளியின் 10 வயது மகள், அதே பகுதியில் அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர்களது எதிர் வீட்டில் 20 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். தொழிலாளியின் வீட்டில் அடிக்கடி வாலிபர் சென்று நெருங்கி பழகி உள்ளார். இந்த நிலையில் பள்ளி மாணவியை வாலிபருடன் கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கி வர அனுப்பி உள்ளனர்.

    வாலிபர் பள்ளி மாணவியை அந்தப் பகுதியில் உள்ள ஏரி பகுதிக்கு அழைத்து சென்றார். அங்குள்ள முட் புதரில் வைத்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இச்சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் வாலிபரிடம் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் சிறுமியின் பெற்றோர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    பின்னர் இது குறித்து சிறுமியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் போக்சோ மற்றும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.

    • சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது.
    • வாலிபரை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசியை சேர்ந்தவர் 10 வயது சிறுமி. இவரது தாய்-தந்தை கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். வீட்டில் சிறுமி மற்றும் அவரது தம்பியையும் பாட்டி பராமரித்து கொள்வார். இந்த நிலையில் பாட்டி ஊருக்கு சென்றார். சிறுமியும், தம்பியும் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அருகே வசிக்கும் சிவஜெயராம் என்ற வாலிபர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தாயிடம் தெரிவித்தார். சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தாய் புகார் செய்தார்.

    போலீசார் ேபாக்சோவில் வழக்குப்பதிந்து வாலிபரை தேடி வருகின்றனர்.

    • தட்சிணாமூர்த்தி 4 வயது பெண் குழந்தையிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
    • சேத்தியாத்தோப்பு மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் கொடுக்கப்பட்டது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அடுத்த பெரிய நெல்லிக்காய் கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 63). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது பெண் குழந்தையிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து பெற்றோர் சேத்தியாத்தோப்பு மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் போக்சோ சட்ட த்தில் வழக்கு பதிவு செய்து தட்சிணாமூர்த்தி கைது செய்தனர்.

    • செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்
    • வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்

    செய்யாறு:

    வெம்பாக்கம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி அதே பகுதியில் பிளஸ் டூ படித்து தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். தென்கழனி பகுதியைச் சேர்ந்த வாலிபர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    இச்சம்பவம் குறித்து மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர் இது குறித்து மாணவியரின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி பொருட்கள் வாங்க வந்துள்ளார்
    • சிறுமிக்கு சிவானந்தன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் பழவிளை அருகே உள்ள எறும்புக்காடு அகதிகள் முகாமில் பெட்டிக் கடை நடத்தி வருபவர் சிவானந்தன் (வயது 54).

    இவரது கடைக்கு சம்பவத்தன்று 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி பொருட்கள் வாங்க வந்துள்ளார். அப்போது யாரும் இல்லாததை பயன்படுத்தி, அந்த சிறுமிக்கு சிவானந்தன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் பயந்த சிறுமி, வீட்டிற்கு சென்று தனது தாயாரிடம் கூறி உள்ளார். அவர், உடனடியாக கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாணவியை அழைத்து சென்று புகார் செய்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வியாபாரி சிவானந்தனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×