search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழவிளை அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு-வியாபாரி கைது
    X

    பழவிளை அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு-வியாபாரி கைது

    • 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி பொருட்கள் வாங்க வந்துள்ளார்
    • சிறுமிக்கு சிவானந்தன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் பழவிளை அருகே உள்ள எறும்புக்காடு அகதிகள் முகாமில் பெட்டிக் கடை நடத்தி வருபவர் சிவானந்தன் (வயது 54).

    இவரது கடைக்கு சம்பவத்தன்று 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி பொருட்கள் வாங்க வந்துள்ளார். அப்போது யாரும் இல்லாததை பயன்படுத்தி, அந்த சிறுமிக்கு சிவானந்தன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் பயந்த சிறுமி, வீட்டிற்கு சென்று தனது தாயாரிடம் கூறி உள்ளார். அவர், உடனடியாக கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாணவியை அழைத்து சென்று புகார் செய்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வியாபாரி சிவானந்தனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×