search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு
    X

    5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு

    • மாணவியின் தந்தை புகார்
    • தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே அரசு பள்ளி 5-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள மாச்சம்பட்டில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பேர்ணாம்பட்டு கோவில் தெருவை சேர்த்த பால்வண்ணன் (55) என்பவரும், மற்றொரு ஆசிரியரும் பணியாற்றி வருகின்றனர்.

    75 மாணவ, மாணவியர் மாச்சம் பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளைக்கு மாணவ, மாணவியர் சென்றிருந்தனர்.

    அப்போது 5-ம் வகுப்பு மாணவியை வகுப்பறைக்கு தலைமை ஆசிரியர் பால்வண்ணன் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது அங்கு வந்த மாணவியின் உறவினரான அதே பள்ளியில் படித்து வரும் மாணவி பார்த்துள்ளார். உடனே தலைமை ஆசிரியர் அந்த மாணவியை அடித்ததாக கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் வீடு திரும்பிய மாணவிகள் இருவரும் நடந்த சம்பவத்தை தங்களது பெற்ேறாரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சிஅடைந்த மாணவியின் தந்தை இது பற்றி உமாராபாத் போலீசில் புகார்செய்தார்.

    இது பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் பால்வண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்தசம்பம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×