என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு-போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
- திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
- சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து தாயிடம் கூறியுள்ளார்.
தாராபுரம் :
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த நாரணாபுரத்தை சேர்ந்த பரமசிவன் மகன் பாலசுப்பிரமணி (வயது 23).கோழிப்பண்ணையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள 14 வயது சிறுமியிடம் அவரது தாய், தந்தை இல்லாத நேரத்தில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து இந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து தாயிடம் கூறியுள்ளார்.
இதனை அறிந்த பெற்றோர்.தாராபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் பாலசுப்பிரமணி மீது புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா, அவரை அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது பாலசுப்பிரமணி சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக் குப்பதிவு செய்து கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட பாலசுப்பிரமணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்