search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ்"

    • பொது மேலாளரிடம் கோரிக்கை மனு
    • கொரோனா காலகட்டத்தில் இருந்து அந்த பேருந்து தற்போது வரை இயக்கபடவில்லை.

    என்.ஜி.ஓ.காலனி :

    நாகர்கோவில் மாநக ராட்சி 50-வது வார்டுக் குட்பட்ட பொட்டல் விளை, வண்டிகுடியிருப்பு கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு முகிலன் விளை, என்.ஜி.ஓ.காலனி வழியாக நாகர்கோவிலுக்கு செல்வதற்கு போதுமான பேருந்து வசதி இல்லை. இதனால் பொதுமக்களும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும், அரசு மற்றும் தனியார் அலுவல கங்களில் பணிபுரிபவர்க ளுக்கும் செல்வதற்கு சிரம மாக இருந்து வருகின்றனர்.

    இதற்கு முன் இந்த வழித்தடத்தில் 37 ஏ நாகர்கோவிலில் இருந்து பேருந்து இந்த வழித்தடத்தில் இயங்கி கொண்டு இருந்தது. ஆனால் கொரோனா காலகட்டத்தில் இருந்து அந்த பேருந்து தற்போது வரை இயக்கபடவில்லை.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலரும், பா.ஜ.க.பொருளாதார பிரிவு குமரி மாவட்ட தலைவருமான ஜவான் டி.அய்யப்பனிடம் கோரிக்கை வைத்தார்கள். அவர் நிறுத்தப்பட்ட அந்த பேருந்தை மீண்டும் இயக்க நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தியிடம் நேரில் சென்று வலியுறுத்தினார். உடனடியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ராணித்தோட்ட பொது மேலாளரை எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ.வும், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் ஜவான்.டி.அய்யப்பனும் சேர்ந்து நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கி வலியுறுத்தினார்கள்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்
    • ஒரு மாதத்தில் மட்டும் 35 பவுன் நகைகள் கொள்ளைய டிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகரில் ஓடும் பஸ்சில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 35 பவுன் நகைகள் கொள்ளைய டிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தனி கவனம் செலுத்தி நட வடிக்கை மேற்கொண்டு வரு கிறார். கொள்ளை யர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பெண்களிடம் பெண் கொள்ளையர்கள் கைவரிசை காட்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் பெண் கொள்ளை யர்கள் கூட்டம் நெரிசல் அதிகமாக உள்ள பஸ்களில் கைவரிசை காட்டிவிட்டு உடனடியாக வெளியூர்க ளுக்கு தப்பி செல்வது தெரியவந்துள்ளது. மேலும் கொள்ளையில் ஈடுபடும் பெண்கள் கை குழந்தைக ளுடன் டிப்டாப் உடையில் வந்து கொள்ளையை அரங்கேற்றுவதும் தெரி யவந்துள்ளது. கொள்ளை கும்பலை பிடிக்க பஸ் நிலையங்களில் கண் காணிப்பு பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

    வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையத்தில் மப்டி உடையில் பெண் போலீசார் ரோந்து சுற்றி வருவதற்கு ஏற்பாடு செய்யட்டுள்ளது. மேலும் பஸ்களிலும் சந்தேகப்ப டும்படியாக பெண்கள் இருந்தால் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் வழிப்பறி திருட்டு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது. தற்பொழுது பஸ்களில் செயின் திருட்டு, செயின் மாயம் போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் கும்பல் கைவரிசை காட்டுகிறார்கள். இவர் களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீ சார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கொள்ளை சம்பவங்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க நவீன கருவி வாங்கப்பட்டுள்ளது. தற்பொழுது நாகர்கோவிலில் அந்த கருவி மூலமாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவிலை தொடர்ந்து கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் சப்- டிவிஷனலுக்குட்பட்ட பகுதிகளிலும் அபராதம் விற்பதற்கு நவீன கருவி வாங்க நடவடிக்கை எடுக் கப்படும். இந்த கருவியின் மூலமாக ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வரும் வாகனங் களை கண்காணிக்க முடியும். 400 மீட்டர் தொலைவில் அந்த வாகனம் வரும்போது அந்த வாகனத்தில் பதிவு எண் இந்த கருவியில் பதிவாகி விடும். ஹெல்மட் அணியாமல் வருபவர்களை யும் இந்த கருவி மூலமாக கண்டறிந்து அபராதம் விதிக்கலாம். செல்போனில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டு பவர்களை கண்ட றிந்தும் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • உத்திரமேரூர் செல்லும் பஸ்களில் மாணவர்கள் அதிகம் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள்.
    • பல நேரங்களில் மாணவர்களுக்கும், பஸ்டிரைவர், கண்டக்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து ஏராளமான மாணவ மாண விகள் படித்து வருகிறார்கள்.

    பெரும்பாலும் இவர்கள் அரசு பஸ்களில் வந்து செல்கிறார்கள். காலை மற்றும் மாலை நேரத்தில் போதிய பஸ்கள் இல்லாததால் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் பஸ்நிலையத்தில் இருந்து மானாம்பதி, கீழ்ரோடு வழியாக உத்திரமேரூர் செல்லும் பஸ்களில் மாணவர்கள் அதிகம் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள்.

    இதனால் பல நேரங்களில் மாணவர்களுக்கும், பஸ்டிரைவர், கண்டக்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து செல்லும் நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வேதாரண்யத்திலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற தனியார் பஸ்சில் ஏறினார்.
    • காயமடைந்த இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் சுராஜ்முகமது(வயது58).

    விவசாயியான இவர் கட்டி மேட்டிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்வதற்காக வேதாரண்யத்திலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற தனியார் பஸ்சில் ஏறினார்.

    கட்டி மேடு பகுதி வளைவில் பஸ் திரும்பிய போது பஸ்சின் பின்பக்க படியில் நின்று கொண்டிருந்த சுராஜ்முகமது மற்றும் கண்டக்டர் பிரசன்னா ஆகிய இருவரும் பஸ்சில் இருந்து வெளியே சென்று விழுந்தனர்.

    இதில் சுராஜ் முகமதுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    கண்டக்டா் பிரசன்னாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

    காயமடைந்த இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    அங்கு அவர்களை பாிசோதனை செய்த டாக்டர்கள் சுராஜ்முகமது உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.

    கண்டக்டர் பிரசன்னா உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிைரவர் வருண்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிலர் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தனர்.
    • தொடர்விடுமுறை வரும்போது பயணிகள் வசிதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    செங்கல்பட்டு:

    விநாயகர் சதூர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தொடர் விடுமுறை வந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசித்த பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்குசென்றனர்.

    இதேபோல் வடமாநில தொழிலாளர்களும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் பஸ், ரெயில்நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. நேற்று இரவு வழக்கத்தை விட ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பஸ்நிலையத்தில் குவிந்தனர். இதனால் அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு செய்யாத பயணிகள் முண்டியடித்து ஏறினர். நேற்று மாலை முதல் பலத்த மழை கொட்டியதால் வெளியூர் செல்ல வந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அனைத்து அரசு பஸ்கள், மற்றும் ஆம்னி பஸ்களில் முன்பதிவு முழுவதும் முடிந்ததால் பல பயணிகள் நின்றபடியும் படிக்கட்டில் தொங்கிய படியும் சென்றனர். மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வந்த ஏராளமான பயணிகள் பஸ் கிடைக்காமல் குடும்பத்துடன் தவித்தனர்.

    சென்னையின் நுழைவு வாயிலான பரனூர் சுங்கச்சாவடியில் நேற்று நள்ளிரவு வரை ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல காத்திருந்தனர். ஏற்கனவே சென்னையில் இருந்து வந்த பஸ்களில் இருக்கைகள் முழுவதும் நிரம்பியதால் அவர்கள் செல்ல முடியாத நிலையில் தவித்தனர். சிலர் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தனர். கூடு வாஞ்சேரி பகுதியிலும் நள்ளிரவு வரை பஸ்கள் கிடைக்காமல் பயணிகள் தவித்தனர்.

    இதைத்தொடர்ந்து சிலர் சரக்கு வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு சென்றனர். விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் வேறு வழியின்றி சென்னையில் இருந்து வந்த சரக்கு வாகனங்களில் சென்றனர். அதிலும் இடம் கிடைக்காமல் போட்டி போட்டு ஏறிச்சென்றனர்.

    இதுகுறித்து பயணிகள் கூறும்போது, தொடர்விடுமுறை வரும்போது பயணிகள் வசிதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • 2-3 பஸ்கள் மாறி பயணம் செய்து தான் மருதமலை செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
    • கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

    குனியமுத்தூர்,

    கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள மலுமிச்சம்பட்டி, ஈச்சனாரி, காந்திநகர், சுந்தராபுரம், குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மருதமலைக்கு பஸ்கள் இயங்கி வந்தன. அது மருதமலை செல்லும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது. எளிதாக பயணம் செய்து மருதமலை சென்று முருகனை தரிசித்து வந்தனர்.

    ஆனால் தற்போது சில ஆண்டுகளாக அந்த பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். மருதமலை பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று. தமிழகத்தில் உள்ள பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் மருதமலைக்கு செல்வது வழக்கம்.

    வெவ்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் கூட காந்திபுரம் அல்லது ரயில் நிலையத்திலிருந்து மருதமலைக்கு எளிதாக பஸ் ஏறி செல்கின்றனர். ஆனால் கோவையிலேயே பொள்ளாச்சி ரோட்டில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு மருதமலைக்கு செல்லும் அவல நிலை தற்போது உள்ளது.

    2-3 பஸ்கள் மாறி பயணம் செய்து தான் மருதமலை செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே பொள்ளாச்சி சாலையில் இருந்து மருதமலைக்கு மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டால், இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    பொள்ளாச்சி ரோட்டில் இருந்து மருதமலைக்கும், திருச்சி சாலை சிங்காநல்லூருக்கும், மேட்டுப்பாளையம் ரோடு துடியலூருக்கும் நேரடி பஸ் வசதி கிடையாது. ஏற்கனவே 8 ஏ பேருந்து போத்தனூரில் இருந்து திருச்சி சாலை வழியாக சிங்காநல்லூர் மற்றும் இருகூர் பகுதிக்கு இயங்கி வந்தது.

    46-ம் நம்பர் பஸ் போத்தனூரில் இருந்து மருதமலைக்கு சென்று வந்தது. 4-ம் நம்பர் பஸ் கோவை பொள்ளாச்சி ரோடு குறிச்சி ஹவுசிங் யூனிட்டில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையத்திற்கு சென்று வந்தது. இவை அனைத்தும் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.

    இத்தகைய வழித்தடங்களில் பேருந்து இல்லாத காரணத்தால் இந்த பகுதிக்கு செல்லும் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்த நிலையில் உள்ளனர். மேலும் அங்கு வசிக்கும் பயணிகள் 2-3 பஸ்கள் மாறி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    கோவை பொள்ளாச்சி ரோடு, குறிச்சி, சுந்தராபுரம் பகுதியில் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் உள்ளன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் அன்றாடம் வேலைக்கு செல்பவர்களும், கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

    எனவே போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை பொள்ளாச்சி ரோட்டில் இருந்து மேற்படி வழித்த டங்களில் பேருந்துகளை இயக்கினால் பயணிகளின் சிரமம் குறைவது மட்டுமின்றி, இனிதான பயணமும் மேற்கொள்ள முடியும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • பிரதமரின் இ.பஸ் சேவை திட்டத்தில் திருச்சி மாநகரம் தேர்வு
    • சுற்றுச்சூழல் மாசு குறைந்து பசுமை அதிகரிக்கும்

    திருச்சி,

    சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத ெ பாதுப் போக்கு வரத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடி க்கைகளை எடுத்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசு மின்சாரத்தால் இயங்கும் எலக்ட்ரிக் பஸ்கள (இ.பஸ்) அதிகம் பயன்படுத்த நடிவடிக்கை எடுத்து வருகி றது. அடுத்த 10 ஆண்டுகளில் பொது போக்குவரத்தில் இ.பஸ்களின் பங்கு அதிகம் இருக்கும்.கடந்த மாதம் 16-ந் தேதி நடந்த மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமரின் இ.பஸ் சேவா திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.இத்திட்டத்துக்காக ரூ.57 ஆயிரத்து 613 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 10 ஆயிரம் எலக்ட்ரிக் பஸ்களை நாடு முழுவதும் பல்வேறு நகரங்க ளில் இயக்க முடிவு செய்ய ப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம் நகர பஸ் சேவையை விரிவு படுத்துவது, சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமையான நகர்ப்புற சேவையை அளி ப்பது ஆகிய இலக்குகள் எட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இத்திட்டம் 3 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகரங்களில் அமல்படுத்த ப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கு தகுதி யான 169 நகரங்களை தேர்வு செய்து பட்டியலை வெளியிட்டுள்ளது.அதன்படி தமிழகத்தில் இத்திட்டத்திற்காக 10 லட்சம் முதல் 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட பிரிவில் திருச்சி மாநகரம் இடம் ெபற்றுள்ளது.20 முதல் 40 லட்சம் மக்கள் தொகை பிரிவில் ேகாவையும், 5 முதல் 10 லட்சம் மக்கள் தொகை பிரிவல் ஈரோடு, சேலம், திருப்பூரும், 5 லட்சத்துக்கு குறைவாக மக்கள் தொகை பிரிவல் அம்பத்தூர், ஆவடி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர் நகரங்களும் இடம் பெற்றுள்ளன.அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படு த்தப்பட உள்ள இத்திட்ட த்தின் கீழ் பஸ் பணிம னைகள், பராமரித்தல், மேம்படுத்துதல் உள்ளிட்ட வசதிகளை அரசு தரப்பு ஏற்படுத்தி தரும் இ.பஸ்கள் ஸ்டாண்டர்டு, மிடி, மினி என 3 பிரிவுகளில் இ.பஸ் கள் வழங்கப்பட உள்ளன.திருச்சி மாநகரத்துக்கு இத்திட்டத்தின் கீழ் 100 பஸ்கள் வழங்கப்படும் என தெரிகிறது.இது குறித்து போக்குவ ரத்துத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கும் போது, பிரதம ரின் இ.பஸ் சேவை திட்டத்தி ன் கீழ் திருச்சி தேர்வு யெ்ய ப்பட்டுள்ளது.திருச்சியில், இத்திட்டம் செயல்படுத்தப்படும் போது, இபைக், சைக்கிள் பயன்பாடு மற்றும் அதற்கான வழித்த டம் ஏற்படுத்துதல் ஆகியவை உருவாக்க வாய்ப்புண்டு.இதன் மூலம் சுற்றுசுழல் மாசுபடுவது குறைந்து, பசுமை அதிகரிக்கும் என்ற னர்.

    • பஸ்ஸில் இருந்த சக பயணிகளும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக வாலிபரை தாக்கினார்கள்.
    • பஸ்சில் நடந்த சம்பவங்களை அந்த இளம் பெண் நாகர்கோவிலில் உள்ள தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். அந்த பெண் அங்கேயே தங்கி வேலை பார்க்கிறார். வாரத்தின் கடைசி நாட்களில் ஊருக்கு வருவது வழக்கம்.

    அதேபோல் நேற்று இரவு வேலை முடிந்ததையடுத்து, இன்று அதிகாலை ஊருக்கு புறப்பட்டார். திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த கேரளா அரசு பஸ்ஸில் பயணம் செய்தார். இளம்பெண்ணின் பின்னால் இருந்த இருக்கையில் வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

    அவர் பஸ்புறப்பட்ட சிறிது நேரத்திலேயே முன் சீட்டில் அமர்ந்திருந்த பெண் என்ஜினியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அந்த இளம்பெண், வாலிபரை எச்சரித்தார். இதனால் உஷாரான அந்த வாலிபர் சிறிது நேரம் எதுவும் செய்யாமல் இருந்தார்.

    பின்பு மீண்டும் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் கூச்சலிட்டதுடன், அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினார். அப்போது பஸ்ஸில் இருந்த சக பயணிகளும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக வாலிபரை தாக்கினார்கள்.

    இதைத் தொடர்ந்து அந்த வாலிபர் மார்த்தாண்டத்தில் பஸ்சை விட்டு இறங்க முயன்றார். ஆனால் அவரை பஸ்சை விட்டு இறங்கவிடாமல் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். பஸ்சில் நடந்த சம்பவங்களை அந்த இளம் பெண் நாகர்கோவிலில் உள்ள தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    அவர்கள் வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த பஸ் வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்ததும், இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் பஸ்சை விட்டு இறங்கினார். அப்போது அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பிடிபட்ட வாலிபரை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    அப்போது அவர் மதுரை பகுதியை சேர்ந்தவர் என்பதும், என்ஜினீயராக இருப்பதாகவும் கூறினார். மேலும் அவர் நண்பர் ஒருவரை பார்த்துவிட்டு ஊருக்கு செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    ஓடும் பஸ்ஸில் பெண் என்ஜினீயரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு சக பயணிகள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் இன்று திடீரென கைது செய்யப்பட்டார்.
    • பஸ் லாரி கார் ஆட்டோ உள்ளிட்ட வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்திவிழா கடந்த 2 நாட்களாக கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் இன்று திடீரென கைது செய்யப்பட்டார்.

    இதனால் ஆந்திரா முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் லாரி கார் ஆட்டோ உள்ளிட்ட வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது.

    திருப்பதியில் இருந்து திருமலைக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன.

    கீழ் திருப்பதியில் ஓட்டல்கள், கடைகள், டீக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது.

    இதனால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தரிசனத்திற்கு வந்த முதியவர்கள் குழந்தைகள் உள்படபக்தர்கள் உணவு, டீ, காபி, குடிநீர் இன்றி அவதி அடைந்து வருகின்றனர்.

    பஸ் போக்குவரத்து இல்லாததால் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல பக்தர்கள் தவித்தனர். ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்படுகிறது.

    இதனால் திருப்பதி ரெயில் நிலையத்தில் பக்தர்கள் குவிந்து உள்ளனர். திருப்பதி ரெயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து வருகின்றனர்.

    • வட சென்னை பகுதியில் இருந்து பட்டாபிராம் பகுதிக்கு செல்லும் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
    • பஸ்களின் சேவையும் குறைக்கப்பட்டு பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

    ஆவடி பகுதியில் மாநகர பேருந்து சேவை பாதியாக குறைக்கப்பட்டிருப்பதால் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    சென்னை மாநகரத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த பஸ் போக்குவரத்து பாதியாக குறைக்கப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

    பயணிகள் இதனால் பஸ்சை பிடித்து வீட்டுக்கு போய் சேர்வதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது என்றும் புகார் தெரிவித்துள்னர். பட்டாபிராமில் இருந்து பூந்தமல்லி வரை இயக்கப்படும் 54 சி பேருந்தை அப்பகுதி மக்கள் பலர் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்த பேருந்தை மக்கள் முழுமையாக பயன்படுத்தி வந்த போதிலும் இதன் சேவை குறைக்கப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டும் பயணிகள் இதுபோன்று மேலும் பல பஸ்களையும் பட்டியலிடுகிறார்கள்.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து பந்தூர் செல்லும் '153 பி' பஸ்கள் சேவையும் குறைக்கப்பட்டு உள்ளதால் இந்த வழித்தடத்தில் பயணிக்கும் பொது மக்களும் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

    121 இ எண் கொண்ட பஸ் எம்.கே.பி. நகரில் இருந்து பட்டாபிராமுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதன் சேவையும் குறைக்கப்பட்டுள்ளதால் வட சென்னை பகுதியில் இருந்து பட்டாபிராம் பகுதிக்கு செல்லும் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

    இதே போன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இருந்து 536 எண் கொண்ட பேருந்து பட்டாபிராமுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதே போன்று 65 பி எண் பேருந்து அம்பத்தூரில் இருந்து ஆவடிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களின் சேவையும் குறைக்கப்பட்டு பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

    இப்படி வழித் தடங்களில் பஸ்கள் குறைக்கப்பட்டதால் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஷேர் ஆட்டோ டிரைவர்கள் இந்த வழித் தடங்களில் கூடுதல் கட்டணங்களுடன் அதிக அளவிலான ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

    எனவே மேற்கண்ட வழித்தடங்களில் தேவையான அளவு பஸ்களை சீரான இடைவெளியில் இயக்க வேண்டும் என்று ஆவடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கரூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பஸ் டிரை வராக கடந்த 2 வருடமாக பணியாற்றி வந்தார்.
    • கனகராஜ் தினசரி மாலை கல்லூரி மாணவ, மாணவிகளை இறக்கி விட்டு விட்டு பஸ்சை தனது வீட்டின் அருகே நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே அணியாபுரம் ஏ.டி.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (62).

    டிரைவர்

    இவர் கரூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பஸ் டிரை வராக கடந்த 2 வருடமாக பணியாற்றி வந்தார்.

    கனகராஜ் தினசரி மாலை கல்லூரி மாணவ, மாணவிகளை இறக்கி விட்டு விட்டு பஸ்சை தனது வீட்டின் அருகே நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் அணியாபுரம் 4 ரோடு பகுதியில் கல்லூரி பஸ்சில் மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு கனகராஜ் சென்று கொண்டிருந்தார்.

    நெஞ்சுவலி

    அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பஸ்சை ஓரமாக நிறுத்தினார்.

    கனகராஜ் பஸ்சை நிறுத்திய அடுத்த நிமிடமே டிரைவர் இருக்கையில் இருந்து சரிந்து கீழே விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் ஓடிச் சென்று கனகராஜை பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    இதையடுத்து உடனடி யாக ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டு அவரை நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கனகராஜை பரிசோ தனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    புகார்

    இது குறித்து கனக ராஜின் மனைவி ஜோதி (48) மோகனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பே ரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டிரைவர் கனகரா ஜூக்கு 2 மகள்கள் உள்ளனர். கல்லூரி பஸ்சை ஓட்டிக் கொண்டி ருந்தபோதே நெஞ்சு வலியால் டிரைவர் இறந்த சம்பவம் மாணவ, மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி பஸ் நிலையத்தில் செந்தில்ராஜா என்பவர் சலூன் கடை நடத்தி வந்தார்.
    • நாமக்கல் மாவட்டம் வேலூரில் இருந்து மேட்டூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் செந்தில்ராஜா மீது மோதியது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி பஸ் நிலையத்தில் செந்தில்ராஜா (41) என்பவர் சலூன் கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று இரவு 7 மணியளவில் நங்கவள்ளி பஸ் நிலைய பகுதியில் நடந்து சென்று கொண்டி ருந்தார்.

    சக்கரத்தில் சிக்கி பலி

    அப்போது நாமக்கல் மாவட்டம் வேலூரில் இருந்து மேட்டூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் செந்தில்ராஜா மீது மோதியது. இதில் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி செந்தில்ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நங்கவள்ளி போலீசார் செந்தில்ராஜா உடலை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனியார் பஸ்சை பறிமுதல் செய்தனர். மேலும் பஸ்சை ஓட்டி வந்த எடப்பாடி அருகே இருப்பாலியை சேர்ந்த டிரைவர் கண்ணன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×