search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "falls"

    • ஆண்டு முழுவதும் அருவியில் தண்ணீர் கொட்டுவது இதன் சிறப்பாகும்.
    • சுற்றுலா தலமாக மாறினால் இப்பகுதி மக்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைவார்கள் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் உள்ள பரப்பலாறு அணையில் பாச்சலூர், பன்றிமலை, வடகாடு பகுதியில் உற்பத்தியாகும் நீரோடைகள் ஒரே இடத்தில் சங்கமிக்கின்றன. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் விருப்பாச்சி மலைக்குன்று வழியாக தலையூத்தில் அருவியாக கொட்டுகிறது.

    பல அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது காண்போரை மிகவும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. விருப்பாச்சியில் இருந்து 2 கி.மீ தூரம் பயணித்தால் மலையடிவாரத்தில் பெருமாள் கோவிலை சென்றடையலாம். அங்கிருந்து சிறிது தூரம் சென்றால் நல்காசி விருப்பாச்சி ஈஸ்வரர் கோவிலின் முன் பகுதியில் இந்த அருவியை காண முடியும்.

    ஆண்டு முழுவதும் அருவியில் தண்ணீர் கொட்டுவது இதன் சிறப்பாகும். மலையடிவாரத்தில் இன்னொரு அருவியாகவும், தலையூத்து அருவி கொட்டுகிறது. இதனை கீழ் தலையூத்து அருவி என்று அழைக்கின்றனர். மலையடிவாரத்தில் இருந்து பல கி.மீ தூரத்துக்கு இது நங்காஞ்சியாறாக ஓடுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவி இருக்கும் இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    அருவி பகுதியில் நீர் சுழல் மற்றும் சில இடங்களில் ஆழம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு கருதி இங்கு யாரையும் குளிக்க அனுமதிப்பது கிடையாது. இருந்தபோதும் உள்ளூர் மக்களும், அருவி பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்பவர்களும் அவ்வப்போது இந்த அருவியில் ஆனந்த குளியல் போட்டுச் செல்கின்றனர். தற்போது தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையிலும் தலையூத்து அருவியில் தண்ணீர் வற்றாத ஜீவநதி போல வருகிறது. இதனைப் பார்த்து பொதுமக்கள் ரசித்தும், புகைப்படம் எடுத்தும் செல்கின்றனர். ஒட்டன்சத்திரம் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பரப்பலாறு அணை மற்றும் தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை ஏற்று ரூ.8.22 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இருந்தபோதும் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்து சுற்றுலா தலமாக மாறினால் இப்பகுதி மக்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைவார்கள் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    • சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை கடந்த 4 நாட்களாக பெய்து வருகிறது.
    • தொடர் கனமழை காரணமாக சடையம்பட்டி, சித்தம்பட்டி சாலையில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறை சாலையில் நடுவே விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை கடந்த 4 நாட்களாக பெய்து வருகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முட்டல் வனப்பகுதியில் இருந்து கீழ்நாடு ஊராட்சிக்குட்பட்ட சடையம்பட்டி கல்லூர், சேம்பூர், நாகலூர், கணியான் வளைவு , அடியலூர் குன்னூர், சித்தம்பட்டி, சடையம்பட்டி உள்ளிட்ட 25 மலை கிராமங்களுக்கு செல்லும் பாதையில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது.

    இந்த தொடர் கனமழை காரணமாக சடையம்பட்டி, சித்தம்பட்டி சாலையில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறை சாலையில் நடுவே விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் 25 கிராம மலை வாழ் மக்கள் தீபாவளி பண்டிகை முன்னிட்டு எந்தவித பொருட்களும் வாங்க நகரப் பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று 4-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்த மண் சரிவு ஏற்பட்டு தகவலறிந்த வனத்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மலை கிராம மக்களே ஒன்றிணைந்து சாலையில் ஏற்பட்ட மண்சரிவை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வடகிழக்கு பருவமழை தொடங்கி கனமழை பெய்து வரும்நிலையில் இதுபோன்ற மண்சரிவு அடிக்கடி மலை கிராம பகுதியில் நடைபெற்று வருவதாகவும் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பூக்களை விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் உள்ள 2 பூக்கள் ஏல சந்தைகளுக்கும் கொண்டு வருகின்றனர்.
    • பூக்கள் விலை சரிவடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்பொழுது தேய்பிறை நடைபெற்று வருவதால் எந்த விசேஷங்களும் இல்லாததால் பூக்கள் நிலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நகப்பாளையம், செல்லப்பம்பாளையம் கபிலர்மலை, தண்ணீர் பந்தல், ஆனங்கூர், பாகம்பாளையம், சின்ன மருதூர், பெரிய மருதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லி, முல்லைப்பூ , அரளி, ரோஜா, செவ்வந்தி, கனகாம்பரம் சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.

    இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் உள்ள 2 பூக்கள் ஏல சந்தைகளுக்கும் கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    ஏலம் எடுத்த பூக்களை வியாபாரிகள் பல்வேறு வகையான மாலைகளாகவும் தோரணங்களாகவும் கட்டி விற்பனை செய்கின்றனர். அதேபோல் சில வியாபாரிகள் உதிரிப்பூக்களை பிளாஸ்டிக் கவரில் போட்டு பாக்கெட்டுகளாக உள்ளூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50- க்கும், அரளி கிலோ ரூ.80- க்கும், ரோஜா கிலோ ரூ.200- முல்லைப் பூ கிலோ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150- க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம். போனது.

    பூக்கள் விலை சரிவடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்பொழுது தேய்பிறை நடைபெற்று வருவதால் எந்த விசேஷங்களும் இல்லாததால் பூக்கள் நிலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    • சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
    • கோத்தகிரியில் தொடர் கனமழை எதிரொலி

    அருவங்காடு,

    குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள போக்குவரத்து சாலைகளில் மழைநீர் வழிந்து ஓடுகிறது. மேலும் மலைப்பாதைகளில் ஆங்காங்கே புதிய நீரூற்றுகள் உருவாகி உள்ளன.

    குன்னூர் அருகே உள்ள டால்பின் நோஸ் காட்சி முனை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் சென்று வருகின்றனர். அங்கிருந்து பள்ளத்தாக்குகள், வானுயர்ந்த மலைகள் மட்டுமின்றி அடர்ந்த வனப்பகுதிகள், ஆதிவாசி குடியிருப்புகள் மற்றும் மலை ரயில் பாதைகளையும் கண்டு ரசிக்கின்றனர்.

    இதற்கிடையே கோத்தகிரி பகுதியில் இருந்து வரும் தண்ணீர், கேத்தரின் நீர்வீழ்ச்சியில் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதுடன் புகைப்படங்களும் எடுத்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் 2-வது சீசனையொட்டி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்வதால் அங்கு உள்ள சுற்றுலா தலங்கள் களைகட்டி வருகின்றன.

    • கரூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பஸ் டிரை வராக கடந்த 2 வருடமாக பணியாற்றி வந்தார்.
    • கனகராஜ் தினசரி மாலை கல்லூரி மாணவ, மாணவிகளை இறக்கி விட்டு விட்டு பஸ்சை தனது வீட்டின் அருகே நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே அணியாபுரம் ஏ.டி.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (62).

    டிரைவர்

    இவர் கரூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பஸ் டிரை வராக கடந்த 2 வருடமாக பணியாற்றி வந்தார்.

    கனகராஜ் தினசரி மாலை கல்லூரி மாணவ, மாணவிகளை இறக்கி விட்டு விட்டு பஸ்சை தனது வீட்டின் அருகே நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் அணியாபுரம் 4 ரோடு பகுதியில் கல்லூரி பஸ்சில் மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு கனகராஜ் சென்று கொண்டிருந்தார்.

    நெஞ்சுவலி

    அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பஸ்சை ஓரமாக நிறுத்தினார்.

    கனகராஜ் பஸ்சை நிறுத்திய அடுத்த நிமிடமே டிரைவர் இருக்கையில் இருந்து சரிந்து கீழே விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் ஓடிச் சென்று கனகராஜை பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    இதையடுத்து உடனடி யாக ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டு அவரை நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கனகராஜை பரிசோ தனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    புகார்

    இது குறித்து கனக ராஜின் மனைவி ஜோதி (48) மோகனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பே ரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டிரைவர் கனகரா ஜூக்கு 2 மகள்கள் உள்ளனர். கல்லூரி பஸ்சை ஓட்டிக் கொண்டி ருந்தபோதே நெஞ்சு வலியால் டிரைவர் இறந்த சம்பவம் மாணவ, மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மேற்குத்தொடர்ச்சி மலையில் மழை பெய்யும் போது சிற்றாறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
    • சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என கருதப்பட்டது.

     உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து 900 மீட்டர் உயரத்தில் வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகும் பல்வேறு சிற்றாறுகள், பஞ்சலிங்க அருவியாக கொட்டுகிறது.ஆண்டு முழுவதும் அருவியில் நீர் வரத்து, சராசரி உயரத்திலிருந்து சாரல் போல கொட்டும் தண்ணீர் என பஞ்சலிங்க அருவியின் சிறப்புகளால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து செல்கின்றனர். மேற்குத்தொடர்ச்சி மலையில் மழை பெய்யும் போது சிற்றாறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

    அப்போது அருவியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள கம்பிகளை முழுவதுமாக மூடி, பல அடிக்கு தண்ணீர் கொட்டும். திடீர் வெள்ளப்பெருக்கினால் அருவியில் கொட்டும் தண்ணீர் சீரான நிலைக்கு திரும்ப பல மணி நேரம் ஆகும்.

    கடந்த 2008ல் சிற்றாறுகளில் தண்ணீர் வரத்து பல மடங்கு அதிகரித்து பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்து கொண்டிருந்த 13 சுற்றுலா பயணிகள் தண்ணீரில், இழுத்து செல்லப்பட்டனர். பஞ்சலிங்க அருவியின் சீற்றத்துக்கு அதிக உயிர்ப்பலி ஏற்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என கருதப்பட்டது.

    அப்போதைய தி.மு.க., அரசு, உடனடியாக வனத்துறை, இந்து அறநிலையத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உட்பட அமைச்சர்கள் அடங்கிய ஆலோசனைக்கூட்டம் நடத்தியது.இக்கூட்டத்தில், பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக பல்வேறு வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.பல ஆண்டுகளாகியும் பஞ்சலிங்க அருவி மேம்பாட்டு திட்டங்கள் எதுவும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.சுற்றுலா பயணிகள் உடை மாற்ற தேவையான அறைகள் இல்லை. கழிப்பிட வசதியும் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இப்பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்து, பஞ்சலிங்க அருவி பாதுகாப்பான அருவி என்ற பெயரை நிலை நிறுத்த அனைத்து துறையினரை ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தினமும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
    • சுற்றுலா பயணிகள் குளிர்ச்சியாக விழும் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில் மலைமேல் 960 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. மேலும் மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஓரிடத்தில் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை, வண்ண மீன் பூங்கா, நீச்சல் குளம் உள்ளது. ஆன்மீகம் மற்றும் சுற்றுலாத்தலமாக உள்ள இப்பகுதிக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் பஞ்சலிங்க அருவியில் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், அவ்வப்போது மழை பெய்து வருவதால் மலைப்பகுதிகளில் இருந்து மூலிகை குணங்களுடன் விழும் அருவியில் நீர்வரத்து திருப்தியாக உள்ளது. சுற்றுலா பயணிகள் குளிர்ச்சியாக விழும் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். நடப்பு ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் திருமூர்த்திமலையில் சீசன் களைகட்டி உள்ளது. 

    • மகள் கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலமுரளி, மகளை பாய்ந்து பிடிக்க முயன்றார்.
    • தந்தை, மகள் பலியானதை தொடர்ந்து நல்லூர் நீர்வீழ்ச்சியில் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்காடு:

    சென்னை மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் பாலமுரளி (வயது 43). இவர், ஐ.டி. நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி சந்திரலட்சுமி. இவர்களுக்கு சவுமியா (13), சாய் சுவேதா (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் சவுமியா சென்னையில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது 8-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார்.

    பள்ளி விடுமுறை விடப்பட்டதால் தனது குடும்பத்தினருடன் பாலமுரளி கடந்த வெள்ளிக்கிழமை ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்தார். ஏற்காட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருந்த அவர், குடும்பத்துடன் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்துள்ளனர்.

    நேற்று மதியம் ஏற்காட்டில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நல்லூர் நீர்வீழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றார். இங்கு வழுக்கு பாறைகள் நிறைந்து காணப்படுவதால் அங்கு குளிப்பது ஆபத்தானது என்று வருவாய்த்துறையினர் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

    அங்கு மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் பாலமுரளி உற்சாகமாக குளித்து மகிழ்ந்தார். இந்த மகிழ்ச்சி வெகு நேரம் நீடிக்கவில்லை. சவுமியா அங்குள்ள பாறையில் ஏறி விளையாடினாள்.

    அப்போது உடை மாற்றும் அறை கட்டுவதற்காக நீர்வீழ்ச்சி அருகில் 30 அடி உயர பாறையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதில் சவுமியா ஏறினாள். மகள் ஏறுவதை பார்த்த பாலமுரளி, அங்கு செல்லாதே என்று கூறிக்கொண்டே பின்னால் அவரும் பாறையில் ஏறினார். பாறையின் உச்சிப்பகுதிக்கு சென்ற சிறுமி அங்கிருந்து எதிர்பாராதவிதமாக பாறையில் வழுக்கி கீழே விழுந்தாள். மகள் கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலமுரளி, மகளை பாய்ந்து பிடிக்க முயன்றார். ஆனால் அவரது முயற்சி பலனளிக்காமல் போகவே அவரும் பாறையில் இருந்து கீழே விழுந்தார்.

    தந்தையும், மகளும் அடுத்தடுத்த பாறையில் மோதி நீர்வீழ்ச்சியில் விழுந்தனர். அவர்கள் இருவரது தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. கணவர், மகளின் உடலை கண்டு சந்திரலட்சுமி கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

    ஏற்காடு போலீசார் இருவருடைய உடல்களையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    2 உயிர்களை பலி வாங்கிய இந்த நல்லூர் நீர்வீழ்ச்சியில் குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டுமே நீர்வரத்து இருக்கும். இதர காலங்களில் பாறைகளில் பாசி படிந்து காணப்படும். இந்த நீர்வீழ்ச்சி பாதுகாப்பில்லாதது என்பது, ஏற்காடு பகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் வெளியூரிலிருந்து ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு, இந்த இடத்தின் நிலை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    இதனால் அவர்கள் பாறை மீது ஏறி நீராடி மகிழ முற்படும் போது, நீர்வரத்து காரணமாக பாறையின் மேற்பரப்பில் படிந்துள்ள பாசி வெளியில் தெரிய வாய்ப்பில்லை. அதனால் வழுக்கி விழுந்து உயிரிழப்பு ஏற்படுகிறது.

    பாதுகாப்பில்லாத காட்டுப் பகுதிக்கு நடுவில் இந்த இடம் அமைந்துள்ளதால், பெரும்பாலும் ஆட்கள் நடமாட்டத்திற்கான வாய்ப்புகள் குறைவு. யாராவது ஆபத்தில் சிக்கி அபாயக்குரல் எழுப்பினாலும், பள்ளத்தாக்கு பகுதியென்பதாலும், தண்ணீர் பாறைகளின் மீதிருந்து ஆக்ரோசமாக விழுவதாலும், அந்த இரைச்சலில் அபாயக்குரல் கேட்பதற்கு வாய்ப்பில்லை.

    எனவே பாதுகாப்பு வளையங்கள் அமைத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரையிலும், இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லவும், குளிக்கவும் தடை விதிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

    தந்தை, மகள் பலியானதை தொடர்ந்து நல்லூர் நீர்வீழ்ச்சியில் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்காக குழந்தைகளின் வற்புறுத்தலின்பேரில் அருவி, நீர்நிலைகளை கூகுள் மேப்பில் தேடி செல்லும் பெற்றோர்கள் அந்த அருவி, தடாகத்தின் தன்மை தெரியாமல் குளிக்கும் ஆர்வத்தில் சென்று அபாயத்தில் சிக்கி கொள்ள வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். 

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது.
    • மழை காரணமான அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்தது.

    இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கருப்பாநதி பகுதியில் 15.5 மில்லிமீட்டரும், அடவிநயினார், ஆய்க்குடி பகுதியில் 11 மில்லிமீட்டரும் மழை பதிவானது.

    இதேபோல் சேர்வலாறு, பாபநாசம், தென்காசி, செங்கோட்டை, ராமநதி, குண்டாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமான குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் காரணமாக வறண்டு காணப்பட்ட அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டுள்ளது.

    தற்போது பள்ளி காலாண்டு விடுமுறை மற்றும் சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறை காரணமாக இன்று காலை முதலே மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளிலும் பொதுமக்கள் குடும்பத்துடன் உற்சாக குளியல் போட்டனர்.

    இதேபோல் பாபநாசம் அகஸ்தியர் அருவி உள்ளிட்ட அருவிகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    • ஆப்பக்கூடல் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலியானார்.
    • இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்த ஓரிச்சேரிபுதூர், அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சாந்தி (52). இந்நிலையில் நேற்று சாந்தி ஓரிச்சேரிபுதூர், அய்யர் தோட்டத்திற்கு அருகே உள்ள ராட தன்னாட்சி முனியப்பன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

    தோட்டத்தின் வண்டி தடத்திற்கு மேற்புறம் உள்ள விவசாயத் தோட்ட கிணறு அருகே சாந்தி நின்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தார்.

    அக்கம் பக்கத்தினர் இது குறித்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கும்பாவுருட்டி அருவிக்கு காட்டு பாதையில் பயணித்து செல்லுவதால் சுற்றுலா பயணிகள் ரம்மியமான இயற்கை சூழலை அனுபவிக்க ஆர்வம் காட்டி வருவார்கள்.
    • கேரளாவில் பெய்துவரும் மழையால் அருவிகளில் அதிகளவில் தண்ணீர் வருவதையொட்டி சீசனுக்காக திறக்கப் பட்டுள்ளது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் மேக்கரைக்கு மிக அருகே கும்பவுருட்டி அருவி இயற்கை அழகுடன் அடர்ந்த வனபகுதியில் அமைந்துள்ளது.

    இதனை கேரள வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆண்டுதோறும் குற்றால சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குவிவது வழக்கமாக இருந்தது. காட்டு பாதையில் பயணித்து செல்லுவதால் சுற்றுலா பயணிகள் ரம்மியமான இயற்கை சூழலை அனுபவிக்க ஆர்வம் காட்டி வருவார்கள். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அருவிக்கு கீழே உள்ள குழியில் விழுந்து 2 சுற்றுலா பயணிகள் இறந்ததையடுத்து அருவி பகுதியில் குளிக்க வனத்துறை சார்பில் பாதை மூடப்பட்டது. சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட கோரிக்கைக்கு பின்னர் ரூ.25 லட்சம் செலவில் பாதை புதுப்பிக்கப்பட்டது. பெரிய பள்ளங்கள் முழுமையாக காங்கிரீட் போடப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அருவியில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு திறப்புவிழா நடந்தது. கிராம பஞ்சாயத்து தலைவர் சுஜா தாமஸ் தலைமை தாங்கினார்.

    அஞ்சல் தொகுதி பஞ்சாயத்து தலைவர் ராதா ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் அனில்குமார், தொகுதி உறுப்பினர் லேகா கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடக்க நாளான நேற்று நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்காக வந்தனர். ஏற்கனவே கேரளாவில் பெய்துவரும் மழையால் அருவிகளில் அதிகளவில் தண்ணீர் வருவதையொட்டி சீசனுக்காக திறக்கப் பட்டுள்ளது.

    குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்தது. மலைப்பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் பிற்பகலுக்கு பிறகு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என கருதப்படுகிறது.
    தென்காசி:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யும் போது நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் குளுகுளு சீசன் நிலவும். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்கள் குற்றாலத்தில் சீசன் ஜோராக இருக்கும்.

    சீசன் காலங்களில் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அதில் குளித்து மகிழ தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வருவார்கள்.

    இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை மே மாத இறுதியில் தொடங்கியது. இதையடுத்து அப்போதே குற்றாலத்திலும் சீசன் ஆரம்பித்தது. சீசன் தொடங்கிய போது முதல் 3 நாட்கள் சாரல் மழை, குளிர்ந்த காற்று என ரம்மியமான சூழல் நிலவியது.
     
    அப்போது கோடை விடுமுறை என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இந்த மாத தொடக்கத்தில் குற்றாலத்தில் சாரல் மழை பெய்யவில்லை. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. மெயினருவி, ஐந்தருவியில் பாறையை ஒட்டியவாறு தண்ணீர் விழுந்து வந்தது. அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்தது.

    இந்நிலையில் நேற்று குற்றாலம் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மீண்டும் சாரல்மழை பெய்யத் தொடங்கியது. மேலும் குளிர்ந்த காற்றும் வீசுகிறது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    மெயினருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது. சாரல் மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர். வேலை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை இன்று குறைவாகவே காணப்பட்டது.

    இந்நிலையில் காலை 8 மணி அளவில் குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்தது. 9 மணி வரை நீடித்தது. மலைப்பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் பிற்பகலுக்கு பிறகு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என கருதப்படுகிறது.

    இதனால் அருவியில் வரும் தண்ணீர் வரத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர். அவ்வப்போது சாரல்மழை, குளிர்ந்த காற்று என ரம்மியமான சூழலுடன் குற்றாலத்தில் சீசன் ஜோராக இருக்கிறது.
    ×