தடையை மீறி அருவியில் குளித்தவர்களின் ஆடைகளை எடுத்துவந்த போலீசார் - வீடியோ

கர்நாடகாவில் பல அருவிகளில் குளிக்க ஜூலை 1ஆம் தேதியில் இருந்து தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக அருவிகளில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி அருவியில் குளித்தவர்களின் ஆடைகளை எடுத்துவந்த போலீசார் - வீடியோ
Published on

கர்நாடகாவில் பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல அருவிகளில் குளிக்க ஜூலை 1ஆம் தேதியில் இருந்து தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக அருவிகளில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவை மீறி பலரும் அருவிகளில் குளித்து வருகின்றனர். இப்படி தடையை மீறி அருவியில் குளித்தவர்களுக்கு வினோத தண்டனை ஒன்றை வனத்துறை அதிகாரிகள் கொடுத்துள்ளனர்.

சிக்மகளூர் நகரில் உள்ள சார்மதி அருவியில் தடையை மீறி பலர் குளித்துள்ளனர். அப்போது அவர்களின் உடைகளை காவல்துறை அதிகாரிகள் எடுத்து வந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஆண்கள் தங்கள் ஆடைகளைத் திருப்பித் தருமாறு காவல்துறையினரிடம் கெஞ்சுகின்றனர். சுற்றுலாப் பயணிகளை எச்சரித்த பின்னர் கர்நாடக காவல்துறை அதிகாரிகள் ஆடைகளைத் திருப்பித் தந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com