search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ்களில் ஆபத்தான முறையில் தொங்கி செல்லும் மாணவர்கள்- கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
    X

    பஸ்களில் ஆபத்தான முறையில் தொங்கி செல்லும் மாணவர்கள்- கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

    • உத்திரமேரூர் செல்லும் பஸ்களில் மாணவர்கள் அதிகம் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள்.
    • பல நேரங்களில் மாணவர்களுக்கும், பஸ்டிரைவர், கண்டக்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து ஏராளமான மாணவ மாண விகள் படித்து வருகிறார்கள்.

    பெரும்பாலும் இவர்கள் அரசு பஸ்களில் வந்து செல்கிறார்கள். காலை மற்றும் மாலை நேரத்தில் போதிய பஸ்கள் இல்லாததால் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் பஸ்நிலையத்தில் இருந்து மானாம்பதி, கீழ்ரோடு வழியாக உத்திரமேரூர் செல்லும் பஸ்களில் மாணவர்கள் அதிகம் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள்.

    இதனால் பல நேரங்களில் மாணவர்களுக்கும், பஸ்டிரைவர், கண்டக்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து செல்லும் நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×