search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வார்டு"

    • சுமார் 13 தெருக்களில் 800-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன
    • 16-வது வார்டு கவுன்சிலருமான ஜவகர் புதிய மின்மோட்டார் பொருத்த நடவடிக்கை மேற்கொண்டார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 16-வது வார்டு ஜோதி தெரு மற்றும் அதை சுற்றி சுமார் 13 தெருக்களில் 800-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதிக்கு ஜோதி தெரு சந்திப்பில் அமைந்துள்ள ஆழ்துளை கிணறு மூலமே குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கான மோட்டார் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது. அடிக்கடி செயல்படாத நிலை இருந்ததால் புதிய மின்மோட்டார் பொருத்த வேண்டும் என்று மாநகராட்சிக்கு அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதுதொடர்பாக மண்டல தலைவரும், 16-வது வார்டு கவுன்சிலருமான ஜவகர் புதிய மின்மோட்டார் பொருத்த நடவடிக்கை மேற்கொண்டார்.

    அதன்பேரில் தற்போது புதிய மின்மோட்டார் பொருத்தப்பட்டு ஜோதி தெரு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தெருக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள 13 தெருக்களில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    மேலும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய மின்மோட்டார் பொருத்த நடவடிக்கை மேற்கொண்ட மாநகராட்சி மேயர் மகேஷ், மண்டல தலைவர் ஜவகர் மற்றும் அதிகாரிகளுக்கு அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • பொது மேலாளரிடம் கோரிக்கை மனு
    • கொரோனா காலகட்டத்தில் இருந்து அந்த பேருந்து தற்போது வரை இயக்கபடவில்லை.

    என்.ஜி.ஓ.காலனி :

    நாகர்கோவில் மாநக ராட்சி 50-வது வார்டுக் குட்பட்ட பொட்டல் விளை, வண்டிகுடியிருப்பு கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு முகிலன் விளை, என்.ஜி.ஓ.காலனி வழியாக நாகர்கோவிலுக்கு செல்வதற்கு போதுமான பேருந்து வசதி இல்லை. இதனால் பொதுமக்களும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும், அரசு மற்றும் தனியார் அலுவல கங்களில் பணிபுரிபவர்க ளுக்கும் செல்வதற்கு சிரம மாக இருந்து வருகின்றனர்.

    இதற்கு முன் இந்த வழித்தடத்தில் 37 ஏ நாகர்கோவிலில் இருந்து பேருந்து இந்த வழித்தடத்தில் இயங்கி கொண்டு இருந்தது. ஆனால் கொரோனா காலகட்டத்தில் இருந்து அந்த பேருந்து தற்போது வரை இயக்கபடவில்லை.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலரும், பா.ஜ.க.பொருளாதார பிரிவு குமரி மாவட்ட தலைவருமான ஜவான் டி.அய்யப்பனிடம் கோரிக்கை வைத்தார்கள். அவர் நிறுத்தப்பட்ட அந்த பேருந்தை மீண்டும் இயக்க நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தியிடம் நேரில் சென்று வலியுறுத்தினார். உடனடியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ராணித்தோட்ட பொது மேலாளரை எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ.வும், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் ஜவான்.டி.அய்யப்பனும் சேர்ந்து நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கி வலியுறுத்தினார்கள்.

    • கட்டண சிகிச்சை வார்டு அமைக்க ரூ.97 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • 26 படுக்கை வசதியுடன் கூடிய கட்டண சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    கோவை,

    கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் 6,500-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாகவும், வெளிநோயாளிகளாகவும் சிகிச்சைக்காக வருகின்றனர்.

    கோவை மட்டுமின்றி கேரளா, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.

    இங்கு தனியார் மருத்துவனைகளுக்கு இணையான அதிநுட்பமான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களையும் அரசு மருத்துவமனையின் மூலம் சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகள் போல் நோயாளிகளிடம் கட்டணம் அடிப்படையில் சிகிச்சை அளிக்க "பே வார்டு" திட்டத்ைத ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

    இந்த திட்டம் ஏற்கனவே சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட சில மருத்துவமனைகளில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, கோவை, மதுரை மற்றும் சேலம் ஆகிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை வார்டு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    குறைந்த கட்டணத்தில் தனியார் மருத்துவமனைக்கு இணையான மருத்துவ சேவையை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் கட்டண சிகிச்சை வார்டு அமைக்க ரூ.97 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதையடுத்து அங்கு 26 படுக்கை வசதியுடன் கூடிய கட்டண சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மருத்துவமனையின் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் 15 படுக்கை வசதியுடனும், மகப்பேறு பிரிவில் 11 படுக்கை வசதியுடனும் வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வார்டில் உள்ள தனி அறையில் கழிப்பிட வசதி, இருக்கை வசதி, டி.வி. உள்ளிட்டவை தனியார் மருத்துவனைகளில் இருப்பது போன்றே இருக்கும். தவிர, இரண்டு பேர் தங்கும் வகையில் டுவின் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டுவின் அறையில் கழிப்பிடம் மட்டும் ஒன்றுதான் இருக்கும்.

    ஆனால் உடை மாற்றும் வசதிகள் ஆகியவை தனித்தனியாக இருக்கும். இந்த பொது சிகிச்சை வார்டில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக வார்டுகள் பிரிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் மகப்பேறு சிகிச்சைக்காக மட்டும் பிரத்யேகமாக கட்டண சிகிச்சை வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வார்டின் பணிகள் அனைத்தும் முடிந்தநிலையில் விரைவில் கட்டண சிகிச்சை வார்டினை தொடங்கி வைக்க உள்ளதாக மருத்துவமனையின் டீன் நிர்மலா தெரிவித்தார்.

    • தியாகதுருகத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • மாவட்ட மாணவரணி இணை செயலாளர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    கள்ளக்குறிச்சி:

    :தியாகதுருகத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர அவைத் தலைவர் அய்யம்பெருமாள், துணை செயலாளர் கிருஷ்ணராஜ் மாவட்ட மாணவரணி இணை செயலாளர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் வேல் நம்பி வரவேற்றார். நகர செயலாளர் ஷியாம் சுந்தர் தலைமை தாங்கி தியாக துருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

    குறிப்பாக இளை ஞர்கள், இளம்பெண்கள் மற்றும் புதிய வாக்காளர்களையும் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து வார்டு செயலாளர்களிடம் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினார். இதில் நகர பொருளாளர் பாண்டு, மாவட்ட பிரதிநிதி வேலுமணி, ரமேஷ், இளைஞரணி செயலாளர் ஏழுமலை உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் நகர இணை செயலாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

    • பண்ருட்டி நகர தி.மு.க. சார்பில் வார்டு செய லாளர்கள் ஆலோசணை கூட்டம்கட்சிஅலுவலகத்தில்நடந்தது.
    • கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமைவகித்தார்,

    கடலூர்:

    பண்ருட்டி நகர தி.மு.க. சார்பில் வார்டு செய லாளர்கள் ஆலோசணை கூட்டம்கட்சிஅலுவலகத்தில்நடந்தது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமைவகித்தார். அவை தலைவர் ராஜா, பொருளாளர் ராமலிங்கம் முன்னிலைவகித்தனர். கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள் பிரபு, துணை செயலாளர்கவுரி அன்பழகன், இளைஞரணி அமைப்பாளர் சம்பத், துணை அமைப்பாளர்கள் பாலசந்தர், பார்த்திபன், மதி, ராஜா, பாலமுருகன்மற்றும் தி.மு.க. நகர மன்ற உறுப்பி னர்கள் உள்ளிட்ட தி.மு.க. வினர் பலர்கலந்து கொண்டனர். கூட்டத்தில் பண்ருட்டி நகரத்தில் உள்ள 33 வார்டுகளில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிர படுத்த வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை அளிக்கப்படும் என மேயர் மகேஷ் தகவல்
    • உயர் கோபுர விளக்குகளும் எரியாமல் உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சி கவுன்சில் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடந்தது. மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆணையர் ஆனந்த் மோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர் கள் பேசியதாவது:-

    வட்டவிளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 10 வருடத்திற்கு முன்பு பிரசவம் பார்க்கப்பட்டது. அது தற்போது தொல்ல விளைக்கு மாற்றப் பட்டுள்ளது. அதனால் வட்டவிளையில் தொடர்ந்து பிரசவம் பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அது போல் பெண்கள் வந்து செல்வதற்கு பேருந்து இயக்க வேண்டும்.

    மாநகர பகுதியில் தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை. மேலும் உயர் கோபுர விளக்குகளும் எரியாமல் உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வார்டுகளில் குடிநீர் பிரச்சினை இருந்து வரு கிறது. குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டாலும் சரி செய்வது இல்லை. தெருக்களில் தண்ணீர் ஓடும் நிலை இருந்து வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வலம்புரி குப்பை கிடங்கில் மலைபோல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது இதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 50-வது வார்டு பகுதியில் இரண்டு மாதங்களாக தண்ணீர் பிரச்சினை இருந்து வருகிறது. ஆழ்துளை கிணறுகள் நிறைய உள்ளது. அந்த கிணறுகளில் இருந்து தண்ணீர் வழங்க மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும். களியங்காடு, பனைவிளை பகுதியில் தண்ணீர் பிரச்சனை இருந்து வருகிறது என்று கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து மேயர் மகேஷ் கூறிய தாவது:-

    மின்வாரியத்திற்கு ரூ.5 கோடி பாக்கி உள்ளது. அதனால் புதிய மின் இணைப்புகள் பெறுவதற்கு டெபாசிட் கொடுக்க வேண்டி உள்ளது. இது குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப் படும். மேலும் ரூ.16 கோடி செலவில் தெரு விளக்குகள் மாற்றப்பட்டு எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட உள்ளது. மேலும் மின்கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும் மின்வாரியம் கூறி வருகிறது. ஆனால் ஆன்லைனில் கட்டுவதற்கு மாநகராட்சிக்கு சிரமமாக இருக்கிறது. அதனால் காசோலை மற்றும் டி.டி. கொடுத்து சரி செய்வதற்கு மின்வாரிய அதிகாரிகளுடன் பேசி வருகிறோம்.

    குடிநீர் குழாய்களை சரி செய்யாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்ப டும். தற்போது குப்பையை அகற்றும் பணியில் 2 இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டு வருகிறது. இதனை 5 எந்திரங்களாக மாற்றுவதற்கு புதிய டெண்டர் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆழ்குழாய் கிணறுகளை ஆய்வு செய்து நல்ல நிலைமையில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப் படும். இது தொடர்பாக வருகிற 8-ந்தேதி ஆலோ சனை கூட்டம் நடத்தப்பட்டு வார்டுகளில் தண்ணீர் பிரச்சினையை நிவர்த்தி செய்து கொடுக்கப்படும்.

    நாகர்கோவில் மாநக ராட்சி பகுதி முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு என்னென்ன பணிகள் செய்வது என முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற் காக ரூ.267.50 கோடிக்கு எஸ்டிமேட் தயாரிக்கப் பட்டுள்ளது. இந்த நிதி கிடைத்தால் அனைத்து பணிகளும் செய்து முடிக் கப்படும்.

    ஆய்வு செய்த அறிக்கை மற்றும் எஸ்டிமேட்டை குமரிக்கு வருகிற தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட உள்ளது. மேலும் தற்போது பல்வேறு திட்டங்களுக்காக நிதிகள் வந்து கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறி னார். கூட்டத்தில் மண்டல தலைவர் செல்வகுமார், கவுன்சிலர்கள் அனிலா சுகுமாரன், டி.ஆர். செல்வம் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டது.
    • கொரோனாவை எதிர்கொள்ள தேவையான அனைத்து எற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்றார்.

    மதுரை

    சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனா பரவ தொடங்கி உள்ளது. இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    அதில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவை மையங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கான முன்னேற்பாடு பணிகளை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

    அதன்படி மதுரை அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான ஒத்திகை நடந்தது.

    நோயாளிகள் சிகிச்சைக்கு வரும் போது அவர்களை எப்படி அணுக வேண்டும்? நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வது, சிகிச்சைக்கு அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக ஒத்திகை நடத்தப்பட்டது.

    மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், படுக்கைகள், ஆக்சிஜன், முழுக்கவசம் ஆகியவற்றின் இருப்பு நிலவரம் குறித்து டீன் ரத்னவேல், மருத்துவக் குழுவினருடன் சென்று ஆய்வு செய்தார்.

    அந்த சிகிச்சை மையத்தில் உள்ள ஆக்சிஜன் வெண்டிலேட்டர் கருவி, ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய ஸ்டெரெச்சர்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் டீன் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு என்பது தற்போது ஜீரோ நிலையில் உள்ளது.

    கொரோனாவை எதிர்கொள்ள தேவையான அனைத்து எற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்றார்.

    • வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கண்காணிப்பு
    • பண்டிகை காலமாக இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும்.

    நாகர்கோவில்:

    சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவின் பி.எப். 7 வகை வைரஸ் மற்ற நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.

    இதையடுத்து இந்தியா வில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சுகாதாரத் துறை அதிகாரிகள் உட்பட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் படுக்கைகள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலை யில் இருக்க வேண்டும் என்றும் போதிய அளவில் மருந்துகள் இருப்பு வைத்தி ருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கலெக்டர் அரவிந்த் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளனர். குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் கொேரானா அறிகுறி யுடன் 5 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் வீட்டுத் தனிமை யில் உள்ளனர். இவர்களை சுகாதாரத் துறை அதிகாரி கள் கண்காணித்து வருகிறார்கள்.

    வெளிநாட்டிலிருந்து குமரி மாவட்டத்திற்கு வருப வர்களை கண்காணிக்கவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.கன்னியாகுமரி ஆசாரிப்பள் ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் 100 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    இவற்றில் 20 படுக்கை வசதிகள் அதிதீவிர சிகிச்சை வசதிகளை கொண்ட படுக்கைகளாகும். 40 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை. 40 படுக்கை கள் சாதாரண படுக்கைகள் ஆகும். ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டை மருத்துவக் கல்லூரி கண்காணிப் பாளர் அருள் பிரகாஷ் தலைமை யிலான குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் டாக்டர்கள் கூறுகையில், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவையான அளவு ஆக்சிஜன்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு ஆக்ஸிஜன் நிரப்பகம் உள்ளது. 3000 லிட்டர் கொண்ட ஆக்ஸிஜன் நிரப்பகமும் செயல்பாட்டில் உள்ளது. இது தவிர ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் மற்றும் 550 லிட்டர் உற்பத்தி செய்யக்கூடிய ஆக்சிஜன் உற்பத்தி மையமும் உள்ளது. இது தவிர 296 சிலிண்டர்களும் உள்ளன.

    ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிய வேண்டும். கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

    பண்டிகை காலமாக இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். காய்ச்சல் இருமல், சளி உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றனர்.

    • மேயர் மகேஷ் தகவல்
    • 33-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சாலைகள் மிக மோசமான நிலையில் இருந்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி வார்டுகளில் மேயர் மகேஷ் வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    இன்று 33-வது வார்டுக்கு உட்பட்ட தொல்லவிளை, குருசடி, மேலச்சூரங்குடி பகுதிகளில் நடந்து சென்று ஆய்வு செய்தார். அப்போது மூவேந்தர் நகர் பகுதியில் செயல்படாமல் இருந்த குடிநீர் தொட்டியை பார்வையிட்ட அவர் அதன் விவரங்களை அதிகாரியிடம் கேட்டறிந்தார்.

    மேலும் 33-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சாலைகள் மிக மோசமான நிலையில் இருந்தது. அந்த சாலைகளை சீரமைக்கவும் பொதுமக்கள் மேயரிடம் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்த மேயர் மகேஷ் அதை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சியை குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து வார்டுகளிலும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தற்போது சாலை சீரமைப்புக்கு ரூ. 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளுக்கும் எந்த ஒரு பாகுபாடும் இன்றி நிதி சரிவர பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். நாகர்கோ வில் மாநகரப் பகுதியிலுள்ள 52 வார்டுகளில் என்னென்ன வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து நானே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறேன்.

    இன்று வரை 50 வார்டுகளில் ஆய்வு முடிவு பெற்றுள்ளது. இன்னும் எனது வார்டான 4-வது வார்டு மற்றும் 5-வது வார்டு மட்டும் ஆய்வு பணியை மேற்கொள்ள வேண்டியது உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த ஆய்வு பணி நிறைவடையும். மாநகர வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்பதை முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவ டிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மாநகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர் ஜவகர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கோவில் விளை, காட்டு விளை, சின்னணைந்தன் விளை, வடக்கு அஞ்சு குடியிருப்பு புல்லுவிளை, மேலகாட்டு விளை, உடையப்பன் குடியிருப்பு பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்
    • நாகர்கோவில் மாநக ராட்சியை முன்மாதிரியான மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 51-வது வார்டுக்கு உட்பட்ட பகுதி யில் இன்று காலை மோட்டார் சைக்கிள், நடந்து சென்றும் ஆய்வு மேற் கொண்டார். ஆய்வின் போது அந்த வார்டு கவுன்சிலரும் மண்டல தலைவருமான முத்துராமன் மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தார்.

    கோவில் விளை, காட்டு விளை, சின்னணைந்தன் விளை, வடக்கு அஞ்சு குடியிருப்பு புல்லுவிளை, மேலகாட்டு விளை, உடையப்பன் குடியிருப்பு பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அந்த பகுதியில் சாலை வசதி, கழிவுநீர், ஓடை வசதி, மின்விளக்கு வசதி அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் மகேஷ் உறுதி அளித்தார்.

    இதை தொடர்ந்து மேயர் மகேஷ் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநக ராட்சியை முன்மாதிரியான மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக 52 வார்டுகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கழிவுநீர் ஓடைகள் சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. புல்லுவிளை பகுதியில் சாக்கடை ஓடையை சீரமைக்க உடனடி நடவ டிக்கை எடுக்கப்படும்.

    கோவில்விளை, காட்டு விளை, சின்னணைந்தன் விளை, வடக்கு அஞ்சு குடியிருப்பு பகுதியில் மண் சாலைகளை தார்சாலையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    மேலும் வடக்கு அஞ்சு குடியிருப்பு பகுதியில் பேவர் பிளாக் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.பிள்ளையார்புரம், உடை யப்பன் குடியிருப்பு பகுதியில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் மின்னொளியில் ஜொலித்தது.
    • 51 வார்டுகளிலும் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் பகுதி சபா கூட்டம்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நேற்று முதன் முறையாக நகரம், மாநகரம், பேரூராட்சிகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. அதன்படி தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகளிலும் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடந்தது.

    இந்த நிலையில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் மின்னொளியில் ஜொலித்தது.

    பகுதி சபா கூட்டம் குறித்து மேயர் சண்.ராமநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு மாநகரங்களிலும் பகுதி சபா கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி குறுகிய காலத்தில் தஞ்சை மாநகராட்சியில் பகுதி சபா கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.

    இதற்கு மாநகராட்சி அலுவலர்கள் துரிதமாக பணி மேற்கொண்டு கூட்டம் சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுத்தனர். பகுதி சபா கூட்டத்தில் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகள் குறித்து அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் முன் வைத்துள்ளனர். அந்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது ஆணையர் சரவணகுமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் ஒவ்வொரு வார்டுகளும் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
    • வார்டு குழு உறுப்பினர்கள் பட்டியலை உடனே வெளியிட வேண்டும்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் மாநகராட்சி உறுப்பினர்கள் அவசர கூட்டம் பழைய நகராட்சி அலுவலகம் படேல் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை தாங்கினார்.

    துணை மேயர் தமிழழகன், ஆணையர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் ஒவ்வொரு வார்டுகளும் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் பெறப்பட்டு, மாவட்ட அரசிதழில் பிரசுரமாக வெளியிடப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து 48 வார்டுகளில் உருவாக்க ப்பட்ட 192 வார்டு பகுதிகளுக்கு அரசாணையில் தெரிவித்துள்ளபடி வார்டு குழு உறுப்பினர்களை நியமனம் செய்ய பட்டியல் தயாரிக்க அனுமதிக்க ப்பட்டுள்ளது என்ற தீர்மானம் வாசிக்கப்ப ட்டது.

    அப்போது குறுக்கிட்ட 19 மற்றும் 33-வது வார்டு அ.தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் ஆதிலட்சுமி, கவுசல்யா ஆகியோர் தங்களது வார்டில், வார்டு குழு உறுப்பினர்கள் பட்டியல் வழங்கியுள்ளதை அங்கீகரிக்க வேண்டும் எனக்கூறி வாக்குவாதம் செய்தனர்.

    ஆனால் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறி மேயர், துணைமேயர் எழுந்து சென்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த ஆதிலட்சுமி, கவுசல்யா தங்களுக்கு உரிய விளக்கத்தை மாநகராட்சி மன்றம் தெரிவிக்காததாலும், வார்டு குழு உறுப்பினர்கள் பட்டியலை உடனே வெளியிடக்கோரியும் கூட்டம் நடைபெற்ற படேல் அரங்கில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த 19,33-வது வார்டு கவுன்சிலர்களின் ஆதரவாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் மாநகராட்சி மேயர், துணை மேயர் ஆகியோரிடம் வார்டு குழு பட்டியல் விவரத்தை கேட்டறிந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் 48 வார்டுகளில் உள்ள 192 வார்டு குழு உறுப்பினர்கள் பட்டியலை நாளை வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டது.

    இதையடு த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    ×