search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிவாரணம்"

    • சுமார் 2 லட்சம் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. பல இடங்களில் தரை தளம் முற்றிலும் மூழ்கியது.
    • மொத்தத்தில் சிட்கோ சிறு நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.2,800 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    மிக்ஜம்... மிக் ரக போர் விமான போல் சுழன்று வந்தது. சென்னையை போட்டு தாக்கி விட்டு சென்றது. அது ஏற்படுத்திய பாதிப்புகள், இழப்புகளில் இருந்து மீள முடியாமல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தவித்து கொண்டிருக்கிறார்கள்.

    சாதாரண மக்கள், வணிகர்கள், தொழில் நிறுவனங்கள் என்று எந்த தரப்பையும் விட்டு வைக்கவில்லை.

    சுமார் 2 லட்சம் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. பல இடங்களில் தரை தளம் முற்றிலும் மூழ்கியது.

    இந்த வீடுகளில் இருந்த பிரிட்ஜ், வாஷிங்மெஷின், தொலைக்காட்சி பெட்டிகள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் நாசமாகிவிட்டன.

    சேறும், சகதியும் நிறைந்து கிடக்கும் இந்த வீடுகளை சுத்தம் செய்து, மின் சாதனைங்களை பழுது பார்த்து மீண்டும் குடியேற வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை ஆகும். புதிய வீட்டு உபயோக பொருட்களை வாங்க வேண்டும்.

    பல வீடுகளில் கார்கள், இரு சக்கர வாகனங்களும் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன.

    அம்பத்தூர் பகுதியில் 1,800 தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் ரூ.2 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிறு தொழில் நிறுவன சங்க தலைவர் கன்னியப்பன் தெரிவித்தார்.

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த எந்திரங்களும் தண்ணீரில் மூழ்கி பழுதாகி உள்ளன. இனி வெளிநாடுகளில் இருந்து பொறியாளர்கள் வந்தால்தான் இந்த பழுதை சரி செய்ய முடியும் என்கிறார்கள்.


    பெருங்குடியில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்யும் 250 நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதியில் ரூ.400 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சங்க தலைவர் அன்பு செல்வம் தெரிவித்துள்ளார்.

    திருமுடிவாக்கத்தில் 600 நிறுவனங்களில் தண்ணீர் புகுந்தது. 6 அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த பகுதியில் மட்டும் ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதே போல் திருமழிசையில் 200 தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் தண்ணீர் புகுந்ததால் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் சிட்கோ சிறு நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.2,800 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த 4 மாவட்டங்களிலும் டீ கடைகள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை சுமார் 8 ஆயிரம் ஓட்டல்கள் உள்ளன.

    இந்த ஓட்டல்களை 3 நாட்கள் மூடியது மற்றும் பொருட்கள் சேதம் காரணமாக சுமார் ரூ.700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ரவி தெரிவித்தார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் வந்து குவிந்த காய்கறிகள் வாங்குவதற்கு ஆள் இல்லாமலும், மழைத் தண்ணீரில் அழுகியும் லாரி லாரியாக குப்பையில் கொட்டப்பட்டது. கொட்டிய காய்கறிகள் மட்டும் ரூ.2 கோடி இருக்கும் என்று காய்கறி மொத்த வியாபாரி எஸ்.எஸ்.டி. ராஜேந்திரன் கூறினார்.


    அழுகிய பூக்களும், பழங்களும் டன் கணக்கில் குப்பையில் கொட்டப்பட்டது. இதன் மதிப்பும் சுமார் ரூ.2 கோடி வரை இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இந்த 4 மாவட்டங்களிலும் சிறிய பெட்டிக் கடை முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை 60 ஆயிரம் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வியாபாரம் பாதிப்பு, பொருட்கள் சேதம் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்று வணிகர் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

    முக்கியமாக வியாபாரிகளுக்கு கிடைக்க வேண்டிய லாபம், அரசுக்கு கிடைக்க வேண்டிய வரிகள் சுமார் ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

    • ரூ.7 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டது.
    • மீனவ தினத்தை முன்னிட்டு மீனவ கிராமங்களுக்கான கபடி போட்டி நடந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகையில் தமிழக மீன்வளத்துறை சார்பில் உலக மீனவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

    நாகை துறைமுகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், மற்றும் 27 கிராம மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் கல்லார், நாகூர், சாமந்தான் பேட்டை, செருதூர், ஆற்காட்டுதுறை வேதாரண்யம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பைபர் படகு மீனவர்களுக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான அதிக ஒளி வீச்சும் டார்ச் லைட், மழைக்கான கோட்,மற்றும் துறைமுகத்தில் பணியாற்றும் மீனவ பெண் பயனாளிகளுக்கு புடவை உள்ளிட்ட அலுமினிய கூடைகளை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் வழங்கினர்.

    பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், கடலுக்கு செல்லும் மீனவர்கள் அனைவரும் உயிரை பணயம் வைத்து தான் மீன்பிடி தொழில் செய்கிறார்கள். காற்று, மழை, சுனாமி, போன்ற பேரழிவுகள் வரும் என்று தெரிந்தும் அவர்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் கடலுக்கு செல்லும் மீனவர்கள் அனைவருக்கும் தனது மீனவர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார்.

    மீனவர் தினத்தை முன்னிட்டு மீனவ கிராமங்களுக்கான கபடி போட்டி நடைப்பெற்றது.

    • கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    • பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்க ஏதுவாக 12 புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன.

    நாகப்பட்டினம்:

    கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பலபகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இதனால் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த இளம் நெற்பயிர்கள் மழை நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் பகுதிகளை அமைச்சர் ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

    பின்னர் செய்தியாளர்க ளிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை மீட்டு தங்க வைக்க ஏதுவாக, மாவட்டத்தில் மண்டல அளவிலான குழுக்கள், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து வட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    பாதிக்கப்படும் மக்களை மீட்டு தற்காலிக பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்க ஏதுவாக 12 புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன.

    இதில் ஒரு முகாமில் 300 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் மக்களை மீட்க மாவட்ட நிர்வாகத்திற்கு துணையாக 5000 முதல்நிலை பொறுப்பாளர்களும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அபாய குறைப்பு முகமை சார்பில் 300 தன்னார்வலர்களுக்கான பேரிடர் கால பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

    தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 206 மரம் அறுக்கும் இயந்திரம், 4,300 மணல் மூட்டைகள், 40,000 சாக்கு பைகள், 2,115 சவுக்கு மரங்கள், 59 நீர் இறைக்கும் இயந்திரம், 24 நீர் உறிஞ்சும் இயந்திரம், 163 லைப்பாய், 142 லைப் ஜாக்கெட் மற்றும் தேவையான மீட்பு உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    பொது சுகாதாத்துறை சார்பில் மருந்து பொருட்கள் மற்றும் இதர வசதிகள் தயார்நிலையில் உள்ளது.

    மின் பகிர்மான கழகம் சார்பில் 4,500 மின் கம்பம், 100 மின்மாற்றிகள், 120கி.மீ. மின் கம்பிகள் போன்ற மின்சாதன உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், தற்போது பெய்துள்ள கனமழையின் காரணமாக 16,000 ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதேபோல குறுவை நெற்பயிர் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    விரைவில் நிவாரண கிடைக்க நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.

    • அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது.
    • நெற்பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடவு செய்த நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தற்போது சேதமடைந்து உள்ளது.

    குறிப்பாக இரும்பாடி, கருப்பட்டி, நாச்சிகுளம் ஆகிய பகுதிகளில் கிணற்று பாசனம் மூலம் 100 ஏக்கருக்கு மேல் நெல் நடவு செய்து தற்போது அறு வடைக்கு தயாராக இருந்தது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக வயல்களில் உள்ள நெற்பயிர்களில் தண்ணீர் தேங்கி நெற் பயிர்கள் அழுகியது. இத னால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

    குறிப்பாக ஒருபோக சாகுபடி மட்டுமே இந்த ஆண்டு நடைபெறும் என்ற சூழ்நிலையில் கிணற்று பாசனத்தில் நடவு செய்து அறுவடை காலத்தில் மழை பெய்ததால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஆகையால் மாவட்ட கலெக்டர் விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு சேதம் அடைந்த நெற்பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
    • தற்போது ஹெக்டருக்கு ரூ.13 ஆயிரத்து 500 மட்டுமே நிவாரணமாக அரசு வழங்குகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த பாமணி கடைதெருவில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சிங்காரவேலு தலைமை தாங்கினார். நகர செயலாளர் டி.ஜி. சண்முகசுந்தர், முன்னாள் ஒன்றிய செயலாளர் வெற்றிவேல், முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில்:-

    டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஆனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாததால் 3 லட்சம் ஏக்கர் குறுவை பயிர்கள் கருகி நாசமாகின. முந்தைய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்களும், பயிர் காப்பீடும் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது ஹெக்டருக்கு ரூ.13 ஆயிரத்து 500 மட்டுமே நிவாரணமாக அரசு வழங்குகிறது.

    நாங்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஒரு பிரச்சினை என்றால் கண்டிப்பாக கேட்போம். கேட்பது மட்டுமல்லாமல் அதை நிறைவேற்றும் அதிகாரத்திற்கும் கூடிய விரைவில் வருவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி தலைவர் தமிழ்மணி நன்றி கூறினார்.

    • பருவமழையும் பொய்த்து விட்ட நிலையில் நீராதாரங்கள் முற்றிலுமாக வற்றிப் போனது.
    • ஒரு சில தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிந்து விட்டது.

    உடுமலை:

    நீண்ட காலத்திற்கு நிலைத்து நின்று பலன் தரக்கூடிய நிலைப்பயிரான தென்னை விவசாயம் உடுமலை பகுதியில் பிரதான தொழிலாக உள்ளது.விவசாயியோடு சேர்த்து எண்ணற்ற தொழிலாளர்களின் குடும்பத்தை காப்பாற்றி வந்த தென்னை விவசாயம் இன்று குற்றுயிரும் குலைஉயிருமாக அழிவின் விளிம்பில் உள்ளது. கொப்பரை விலை வீழ்ச்சி, ஆட்கள் பற்றாக்குறை, பருவநிலை மாறுபாட்டால் நோய் தாக்குதல், பராமரிப்பு, இடுபொருட்கள் விலை உயர்வு, தேங்காய் மற்றும் இளநீருக்கு போதிய விலை இன்மை காரணமாக தேங்காய் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    ஒரு சிலர் தென்னை விவசாயத்தை கைவிட்டும் வருகின்றனர். இந்த நிலையில் வறட்சியும் தென்னை விவசாயிகளை கடுமையாக தாக்கி வருகிறது. பருவமழையும் பொய்த்து விட்ட நிலையில் நீராதாரங்கள் முற்றிலுமாக வற்றிப் போனது. அதன் தாக்குதலில் இருந்து சமாளிக்க முடியாமல் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.அதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக தண்ணீரை விலைக்கு வாங்கி தென்னை மரங்களுக்கு ஊற்றி காப்பாற்றி வந்தனர்.ஆனாலும் காற்று மற்றும் வெப்பத்தின் கோர தாண்டவத்திற்கு முன்பு விவசாயிகளின் முயற்சி வீணற்று போனது.கண்ணும் கருத்துமாக பிள்ளை போன்று பார்த்து பார்த்து வளர்த்த தென்னை மரங்கள் பலன் கொடுத்து வந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் துடித்து துடித்து மாண்டு போனது கண்டு விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

    ஒரு சில தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிந்து விட்டது. இதனால் வாழ்வாதாரத்திற்காக மாற்றுத் தொழிலை நாடிச்செல்ல வேண்டிய சூழல் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்றும் வகையில் உடுமலை பகுதியில் வறட்சியால் பட்டுப்போன தென்னை மரங்களை கணக்கீடு செய்து உரிய நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசு மற்றும் அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றுள்ளனர்.
    • மரக்காணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட நகரான் தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன் வயது (45)இவர் மரக்காணத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக உதவி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் தனது வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். இவரது குழந்தைகளும் பள்ளிக்கு சென்று உள்ளனர் .இந்நிலையில் நேற்று மாலை இவரது வீடு திடீரென தீ பற்றி எரிந்துள்ளது இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றுள்ளனர். அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென கூரை வீடு முழுக்க பரவி உள்ளது. இவரது வீட்டின் அருகில் உள்ள ராஜேந்திரன் வீடும் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த தீ விபத்து குறித்து அப்பகுதி பொதுமக்கள் மரக்காணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் 2 கூரை வீடுகளும் தீப்பற்றி முழுவதுமாக எரிந்துவிட்டது

    இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி, டி.வி, கட்டில், பாத்திரங்கள், நில பத்திரம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சுமார் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகிவிட்டது இது பற்றி தகவல் அறிந்த விழுப்புரம் வடக்கு மாவட்டதி.மு.க. துணை செயலாளர் ரவிக்குமார், மரக்காணம் பேரூராட்சி துணை தலைவர் தலைவர் பலராமன், கவுன்சிலர்கள் தயாளன், பிரபாகரன் வருவாய் ஆய்வாளர் தினகரன், கிராம நிர்வாக அலுவலர் முத்து கணேஷ் மற்றும் வருவாய் துறையினர் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஜனார்த்தனன் வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து ஏற்பட்ட மின் கசிவால் தான் இந்த தீ விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட 2குடும்பத்திற்கும்தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் அரிசி ,காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

    • படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்.
    • சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    அரியலூர் வெடிவிபத்தில் காயமடை ந்தவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவர்களை அமைச்சர்கள் சிவசங்கர், கணேசன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணத்தொகை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அரியலூர் வெடி விபத்து குறித்து தகவல் அறிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களை சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண தொகை வழங்கி வர வேண்டும் என உத்தரவிட்டார்.

    அதன்படி, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சமும், காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் உயர்சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்களை அறிவுறுத்தி உள்ளோம்.

    தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    விதிகளை மீறும் தொழில் நிறுவனங்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சி யர் இலக்கியா, தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் பொறுப்பு செல்வகுமார், தாசில்தார் சக்திவேல் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.

    • 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்ட சம்பா பயிர்கள் கருக தொடங்கின.
    • ஹெக்டருக்கு ரூ.13 ஆயிரத்து 500 அரசு நிவாரணம் தொகை அறிவித்துள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதியில் டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதியாகும்.

    முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் இந்த பகுதிக்கு மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் பாசனத்திற்கான நீரை மட்டுமே கொண்டு இப்பகுதியில் குருவை, சம்பா, தாளடி, பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது.

    ஜூன் 12-ம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டும் கடைமடை பகுதிகளான திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பகுதிகளுக்கு முள்ளி ஆறு. பாமணி கோரையாறு. அரிச்சந்திரா அடப்பாறு என அனைத்து ஆறுகளின் பாசன வாய்க்கால்கள் வடிகால்களை முறையாக முழுமையாக தண்ணீர் வந்துசேரவில்லை.

    இதனால் நடப்பாண்டில் திருத்துறைப்பூண்டி பகுதியில் 20 ஆயிரம் ஏக்கர், முத்துப்பேட்டை பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்ட குருவைப் பயிர்கள் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டது.

    இதனால் பல விவசாயிகள் கருகிய குருவைப் பயிர்களை டிராக்டர்களை கொண்டு அழித்து சம்பா பயிரை நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா விவசாய பணிகளை மேற்கொண்டனர்.

    தற்பொழுது கர்நாடகாவில் காவேரியில் தண்ணீர் தர முடியாது என பல்வேறு போராட்டங்களில் தீவிரமடைந்த நிலையில் பாசனத்திற்காக தண்ணீர் வராத நிலையிலும், மழை இல்லாத காரணத்தினாலும் திருத்துறைப்பூண்டி பகுதியில் 14 ஆயிரம் ஏக்கரில், முத்துப்பேட்டை பகுதியில் 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும் பயிர் செய்யப்பட்ட சம்பா பயிர்கள் தண்ணீர் மழை இன்றி கருக தொடங்கியுள்ளது.

    இதனால் விவசாயிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான குளங்களில் இருந்து இறவை இஞ்சின் மூலம் வயல்கலுக்கு தண்ணீரை பாய்ச்சி வருகின்றனர்.

    குளங்களில் உள்ள தண்ணீரை இறைப்பதால் கால்நடைகள் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் பாதிக்கபடுகின்றது.

    மேலும் குளங்களில் வாய்க்காலில் உள்ள நீரை கொண்டு தற்போது பயிரை காப்பாற்றினாலும் மழை இல்லாமல் கடும் வெயிலால் கருகும் பயிரை வரும் காலங்களில் எப்படி காப்பாற்றுவது என விவசாயிகள் கண்ணீர் வடிகின்றனர்.

    குறுவை பாதிப்பிற்கு ஹெக்டருக்கு 13.500 ரூ அரசு நிவாரணம் தொகை அறிவித்துள்ளது. அதனை அதிகாரிகள் பாரபட்சமின்றி ஆய்வு செய்து உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மளமளவென பரவிய தீயால் அருகில் இருந்த ஏழுமலை வீடும் தீப்பிடித்து எரிந்தது.
    • நிவாரண நிதியாக அரிசி, வேட்டி, சேலை,மண் எண்ணெய் மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் வழங்கினர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 48) கூலித் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கூலி வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் இவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அக்கம், பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். மளமளவென பரவிய தீயால் அருகில் இருந்த ஏழுமலை வீடும் தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து தண்ணீரை ஊற்றி பொதுமக்கள் தீயை அனணத்தனர். இதில் கோவிந்தனின் வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. ஏழுமலை வீடு பகுதி சேதம் மட்டும் அடைந்தது. தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோவிந்தன் மற்றும் ஏழுமலை குடும்பத்தினரை சந்தித்து சொந்த பணம் தலா ரூ.5 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறினார்.

    இதனை தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் ஆகியோர் வீடு முழுவதும் சேதம் அடைந்த கோவிந்தனுக்கு தமிழக அரசின் நிவாரண நிதியாக அரிசி, வேட்டி, சேலை,மண் எண்ணெய் மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் வழங்கினர். இதேபோல் வீடு பகுதி சேதம் அடைந்த ஏழுமலைக்கு அரிசி, வேட்டி, சேலை, மண்எண்ணெய் ரூ.2 ஆயிரத்து 500 பணம் ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினர். மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும் சேதமதிப்பு1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என வும் கூறப்படுகிறது.

    • காதுகளில் உண்டாகும் தொற்று சிலசமயங்களில் வலியை உண்டுபண்ணலாம்.
    • பெரியவர்களுக்கு காதுவலி தொற்று காரணமாக ஏற்படுகிறது.

    காதுகளில் உண்டாகும் தொற்று சிலசமயங்களில் வலியை உண்டுபண்ணலாம். சில நேரங்களில் மந்தமான வலியையும், மற்ற நேரங்களில் ஊசியை வைத்து குத்துவது போன்ற வலியையும் ஏற்படுத்தலாம். காதில் உள்ள குழாய் திரவத்தால் நிரப்பப்பட்டு தடுக்கப்படும் போது அவை செவிப்பறை அல்லது காது தொற்றுக்கு பின்னால் அழுத்தம் அதிகரிக்க செய்கிறது. இதனால் காது வலி உண்டாகலாம். பெரியவர்களுக்கு காதுவலி தொற்று காரணமாக ஏற்படுகிறது. இவை பற்கள், தாடை அல்லது தொண்டை போன்ற வேறு சில பகுதிகளின் வலியாலும் உண்டாகிறது.

    காதுவலியை ஏற்படுத்தும் காரணங்கள்:

    தொண்டை வலி

    சைனஸ் தொற்று

    பல் தொற்று

    குறுகிய கால அல்லது நீண்ட கால காது தொற்று

    தாடையின் கீல்வாதம்

    ஜாயிண்ட் சிண்ட்ரோம்

    காதில் காயம்

    மெழுகு அல்லது சில பொருள் காதில் மாட்டிகொள்வது

    நீச்சல் காது (காதுகால்வாயின் தொற்று)

    மண்டை ஓட்டின் எலும்புகளில் தொற்று மற்றும் சேதம்

    குழந்தைகளுக்கு குளிக்கும் போது சோப்பு உள்ளே செல்வது, ஷாம்பு உள்ளே சென்று விடுவது மற்றும் குளியலுக்கு பிறகு காது சுத்தம் செய்கிறேன் என்று பருத்தி நுனி கொண்ட துணியால் காதினுள் விடுவது போன்ற காரணங்களால் காதுவலி உண்டாகலாம்.

    வீட்டு வைத்தியம்:

    * காதுவலி இருக்கும் போது எளிமையான வீட்டு சிகிச்சை முறையே முக்கியமானது. சுத்தமான துணி அல்லது துண்டை வெதுவெதுப்பான நீரில் நனைத்து நீரை பிழிந்து துணியை கையடக்கமாக மடித்து காதுக்கு எதிராக சூடான அழுத்தத்தை ஒற்றி எடுங்கள். இப்படி 15 நிமிடங்கள் வரை செய்தால் காது வலி, வீக்கம் குறையும்.

    * காதுவலி சமயங்களில் சைனஸ் அல்லது நாசி நெரிசலால் வந்தால் நீராவியை உள்ளிழுப்பது நிவாரணம் அளிக்கும். தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கி உடல் முழுவதும் கனமான போர்வை கொண்டு போர்த்தி முகம் நன்றாக பானையின் மீது இருக்கும்படி சாய்ந்து கொள்ளவும். மூக்கு வழியாக நீராவியை மெதுவாக உள்ளிழுக்க வேண்டும் சில நிமிடங்கள் வரை வைத்திருந்து மீண்டும் உள்ளிழுக்கவும். இது காதுகளுக்கு அழுத்தம் குறைத்து நெரிசலை குறைக்கும்.

    * இது பெரும்பாலும் நீச்சல் பயில்பவர்களுக்கு வரக்கூடிய காதுவலிக்கு உதவும். அதேபோன்று காற்று மற்றும் மழை நாட்களில் வெளியில் இருப்பதும் தொற்றுநோயை உண்டு செய்யலாம். காதுக்கு அருகில் குறைந்த வெப்பத்தில் ப்ளோ- ட்ரையரை காட்டுவது காதில் எஞ்சியிருக்கும் ஈரப்பதத்தை உலர வைக்க உதவும். நீங்கள் மழையில் நீச்சல் பழகிய பிறகு காதில் ஈரப்பதம் இருந்தால் இம்முறை உங்களுக்கு காதுவலியை தவிர்க்கும்.

    * காது வலியை குணப்படுத்த வெங்காயசாறு உதவும் என்பது 1800-களில் இருந்ததாக சொல்லப்படுகிறது. வெங்காயத்தில் உள்ள குர்செடின் என்னும் ஃப்ளவனாய்டு அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. ஒரு முறை வெங்காயத்தை 450 டிகிரி ஃபாரன்ஹீட்டில் வைத்து 15 நிமிடங்கள் சூடாக்க வேண்டும். பிறகு அது ஆறியதும் வெங்காயத்தை இரண்டாக வெட்டி, பாத்திரத்தில் சாற்றை பிழிந்து சில துளிகள் காதுகளில் விட வேண்டும் அல்லது பாதிக்கப்பட்ட இடத்தில் வெங்காயத்தை நேரடியாகவும் வைக்கலாம். எனினும் மூன்று நாட்கள் கடந்தும் வலி உணர்வு குறையாத நிலையில் நீங்கள் மருத்துவரை பார்ப்பது பாதுகாப்பானது.

    * காதில் ஆலிவ் எண்ணெய் விடுவது வலியை ஆற்றும் என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆலிவ் எண்ணெய் மெழுகு திரட்டி அல்லது இலேசான காது தொற்று வலிகளுக்கு நிவாரணம் அளிக்கும். சிறிது ஆலிவ் எண்ணெயை சூடாக்கி வெதுவெதுப்பான நிலையில் ஒரு துளியை காதில் விடலாம். சூடான எண்ணெய் காதை பாதிக்கலாம். அதனால் கவனம் வேண்டும். இந்த ஆலிவ் எண்ணெய் காதில் விட்டு அப்படியே எதிர்புறமாக படுத்தபடி இருந்தால் அது வலியை குறைத்து அசவுகரியத்தை குறைக்கும் காதில் இருக்கும் மெழுகை மென்மையாக்கும்.

    * இஞ்சியில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இஞ்சி சாறு அல்லது இஞ்சி சேர்த்து சூடுபடுத்தப்பட்ட எண்ணெயை இளஞ்சூட்டில் காதை சுற்றி தடவ வேண்டும். இப்படி செய்தால் வலி ஓரளவு கட்டுப்படும். வெளிப்புறமாக காது பகுதியை சுற்றி தடவ வேண்டும். இதனை காதுகளின் உள்ளே விடக்கூடாது.

    * பூண்டு ஆண்டிபயாடிக் மற்றும் வலி நிவாரணி பண்புகள் கொண்டவை. பூண்டை சூடான ஆலிவ் அல்லது நல்லெண்ணெயில் ௩௦ நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு இதை வடிகட்டி காது பகுதியில் தடவி விடவும். இதை காதுக்குள் விட வேண்டாம். இது எரிச்சலை உண்டு செய்துவிடலாம்.

    * ஹைட்ரஹன் பெராக்சைடு காதுவலிக்கு இயற்கையான தீர்வாக பயன்படுத்தலாம். காதுவலிக்கு காரணம் மெழுகு கட்டியாக இருந்தால் சிகிச்சையில் இந்த முறை சிறப்பாக உதவும். காதுவலி இருக்கும் பகுதியில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு சொட்டுகள் வைத்து சில நிமிடங்கள் உட்காரவும். பிறகு சுத்தமான காய்ச்சி வடிகட்டிய நீரில் காதை சுத்தம் செய்யவும். இது மெழுகு கட்டியை பாதுகாப்பாக வெளியேற்ற செய்யும்.

    இதனை எல்லாம் செய்தும் காதுவலி சரியாக வில்லை என்றால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகலாம்.

    • லோக் அதாலத் முகாம்களில் ரூ.3.85 ேகாடி நிவாரணம் கிடைத்தது.
    • இதன் மூலம் ரூ.81 லட்சத்து 1,600 வரையில் வங்கிகளுக்கு கிடைத்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட ஆணைக்குழு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 9 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, அனைத்து நீதிமன்றங்க ளிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்ற வியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

    தலைவா், முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, தலைவா், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்த வச்சலு, போக்சோ நீதிபதி சரத்ராஜ், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் சார்பு நீதிபதி பரமேஸ்வரி சுந்தர ராஜ், குற்றவியல் நீதிதுறை நடுவா்கள் அனிதா கிரிஸ்டி, குற்றவியல் செல்வம், வழக்கறிஞா் ராம்பிரபாகா்் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனா்.

    இதில் 65 குற்றவியல் வழக்குகளும், 131 காசோலை மோசடி வழக்குகளும்இ 88 வங்கிக் கடன் வழக்குகளும், 73 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 49 குடும்ப பிரச்சனை சம்பந்தப்பட்ட வழக்குகளும், 136 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 2 ஆயிரம் மற்ற குற்றவியல் வழக்கு களும் என மொத்தம் 2 ஆயிரத்து 542 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப் பட்டு 1,878 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டன.இதன் மூலம் ரூ.3 கோடியே 4 லட்சத்து 2 ஆயிரத்து 433 வரை வழக்காடிகளுக்கு கிடைத்தது.

    அதுபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 500 வழக்குகள் பரிசீல னைக்கு எடுக்கப்பட்டு, 74 வழக்குகள் சமரசமாக தீர்வு காணப்பட்டன.

    இதன் மூலம் ரூ.81 லட்சத்து 1,600 வரையில் வங்கிகளுக்கு கிடைத்தது.

    ×