search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெற்பயிர்கள் சேதம்"

    • நெல்லையில் 40 ஆயிரம் ஏக்கர், தூத்துக்குடியில் 46 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
    • இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்ததால் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் வரையிலும் நெற்பயிர் நடவு செய்யப்பட்டது.

    தென் மாவட்டங்களில் கடந்த 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை விடாமல் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத மழை மக்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டி போட்டது.

    குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு இடங்களில் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

    இதனால் நகரப்பகுதிகள் மற்றும் கிராமங்கள் என 2 மாவட்டங்களிலும் திரும்பிய இடமெல்லாம் வெள்ளக்காடாக மாறியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    மேலும் வெள்ளநீர் விவசாயிகளின் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் அவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தை பொருத்தவரை விவசாயத்தை முதன்மையாக கொண்ட மாவட்டமாகும்.

    இந்த மாவட்டத்தில் ஜூன் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலத்தில் கார் சாகுபடி மற்றும் நவம்பர்-பிப்ரவரி வரை வடகிழக்கு பருவமழை காலத்தில் பிசான சாகுபடியும் செய்யப்படுகிறது.

    இதேபோல் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பிரதான பயிராக நெல்லும், அடுத்தபடியாக பயிறு வகைகளும் சாகுபடி செய்யப்படுகிறது.

    தாமிரபரணி ஆற்று பாசனம் மூலம் மானூர், பாளை, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நாங்குநேரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் நெல் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மொத்த சாகுபடி பரப்பில் நன்செய் நெல் சாகுபடி முக்கிய பங்கு வகிக்கிறது.

    மானாவாரி பகுதிகளில் நீர் ஆதாரம் இருக்கும் பகுதிகளிலும் கூட நெற்பயிர் விவசாயிகளால் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் மக்காச்சோளம், பயறு, நிலக்கடலை, எள், தென்னை, வாழை, மிளகாய் ஆகிய பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இதில் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பருத்தி அதிகளவில் பயிரிடப்படுகிறது. களக்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வாழை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

    நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் ஆண்டுதோறும் கார் பருவ சாகுபடியானது சுமார் 23 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நடைபெறும்.

    தொடர்ந்து முக்கியமான பருவ சாகுபடியாக கருதப்படும் பிசான பருவ சாகுபடி காலகட்டத்தில் மாவட்டம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் நடவு பணிகள் நடைபெறும்.

    இவ்வாறாக தாமிரபரணி ஆற்று பாசனத்தின் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 86,107 ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதில் நெல்லையில் 40 ஆயிரம் ஏக்கர், தூத்துக்குடியில் 46 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

    இவை தவிர தாமிரபரணி ஆற்று நீர் பாசனம் அல்லாமல் மற்ற பாசனங்கள் வழியாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம், கடையம், ராதாபுரம், திசையன்விளை என மற்ற பகுதிகளில் அணைகளின் நீர்ப்பாசனத்தின் மூலம் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த நிலையில் இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்ததால் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் வரையிலும் நெற்பயிர் நடவு செய்யப்பட்டது. ஆனால் சமீபத்தில் 2 நாட்களாக பெய்த பெரும் மழை காரணமாக அணைகளில் கூடுதல் நீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு விளை நிலங்களுக்குள் மழை நீர் புகுந்தது.

    இது தவிர ஏராளமான குளங்களிலும் உடைப்பு ஏற்பட்டு வயலுக்குள் புகுந்ததால் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் நாசமாகி வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டம் திடியூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற விவசாயி கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழை காரணமாக குளங்கள் அனைத்தும் நிரம்பிய நிலையில் கடன் வாங்கி ஏராளமானவர்கள் நெல் நடவு பணியில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது பெய்த பெருமழையால் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் நாசமாகிவிட்டது.

    பொதுவாக நெல் நடவு செய்யும்போது ஒரு ஏக்கருக்கு உழவு செய்து மரம் அடிக்க ரூ.6 ஆயிரம் வரை டிராக்டருக்கு செலவாகிறது.

    அதன்பின்னர் வரப்பு வெட்டுவதற்கு ரூ.1,800-ம், நாற்று நடுவதற்கு வேலையாட்களுக்கு கூலியாக ஏக்கருக்கு ரூ.3,600 வரையிலும் செலவாகிறது. முன்னதாக நெல் விதை வாங்கி நாற்று வளர வைக்க ரூ.1,800 செலவாகிறது.

    அதன்பின்னர் நெல் நாற்று நடும்போதே அதற்கு அடி உரமாக ரூ.1,350 மதிப்பிலான டி.ஏ.பி. உரம், 266 ரூபாய்க்கு யூரியா உள்ளிட்டவையும் பயன்படுத்தப்படுகிறது. பின்னர் களை பறிக்க ரூ.3 ஆயிரம் வரை கூலியாக கொடுக்க வேண்டியுள்ளது.

    இதேபோல் 3 முறைகளை பறித்தல், மருந்து அடித்தல், உரம் போடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் கடந்து நெல் விளைந்தவுடன் எந்திரம் மூலம் அறுவடை செய்ய வேண்டும். ஒரு ஏக்கரை அறுவடை செய்ய 1 1/2 மணி நேரம் வரை ஆகிறது. இதற்கு கூலியாக ரூ.3,600 செலவு செய்ய வேண்டியுள்ளது.

    தற்போது நாங்கள் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து நாற்று நட்ட நிலையில், மழையால் அவை மூழ்கி நாசமாகி விட்டது. இந்த நிலங்களில் மீண்டும் உழவு செய்து நாற்று நட்டாலும், அவை நல்ல மகசூல் தராது. காலம் கடந்து விட்டதால் இனி விதை நெல் வாங்கி நாற்று பாவ முடியாது. மார்கழி மாத பயிறு மண்ணுக்கு ஆகாது என்பார்கள். எனவே இனி நாங்கள் நாற்று வாங்கி நடும்போது புகையான் உள்ளிட்ட நோய் தாக்குதல் தான் ஏற்படும்.

    எனவே அரசு எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார் கூறியதாவது:-

    தென் மாவட்டங்களில் பெய்த மிக கனமழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது. ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது.

    வாழை, நெல் பயிர்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது. குளம், கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விளைநிலங்களில் இன்னும் 1 ஆண்டுக்கு விவசாய பணிகள் மேற்கொள்ள முடியாது. எனவே ஒரு விவசாயி குடும்பத்துக்கு மாதம் தோறும் ரூ 10 ஆயிரம் என 1 ஆண்டுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது.
    • நெற்பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடவு செய்த நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தற்போது சேதமடைந்து உள்ளது.

    குறிப்பாக இரும்பாடி, கருப்பட்டி, நாச்சிகுளம் ஆகிய பகுதிகளில் கிணற்று பாசனம் மூலம் 100 ஏக்கருக்கு மேல் நெல் நடவு செய்து தற்போது அறு வடைக்கு தயாராக இருந்தது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக வயல்களில் உள்ள நெற்பயிர்களில் தண்ணீர் தேங்கி நெற் பயிர்கள் அழுகியது. இத னால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

    குறிப்பாக ஒருபோக சாகுபடி மட்டுமே இந்த ஆண்டு நடைபெறும் என்ற சூழ்நிலையில் கிணற்று பாசனத்தில் நடவு செய்து அறுவடை காலத்தில் மழை பெய்ததால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஆகையால் மாவட்ட கலெக்டர் விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு சேதம் அடைந்த நெற்பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தகுதியான விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை
    • அதிகாரி தகவல்

    நெமிலி:

    நெமிலி சுற்று வட்டார பகுதிகளான வேட்டாங்குளம், ரெட்டிவலம், பனப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது.

    இதனால் அப்பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும்பொருட்டு நேற்று பயிர் சேதங்களை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வடமலை நேரில் ஆய்வு செய்தார்.

    அப்போது 43 ஏக்கர் நெற்பயிர் மழையால் லேசாக சேதமடைந்துள்ளது. எனவே தகுதியான விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஸ்வநாதன், உதவி வேளாண்மை அலுவலர்கள் நவமணி, ஸ்ரீபிரியா, செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை நேரில் பார்வையிட மத்தியக்குழுவை அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • மத்தியக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் தமிழகத்துக்கு வருகை தந்து நேரில் பார்வையிட உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தணித்திடும் வகையில் நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார்.

    அந்தக் கடிதத்தில், 'பிப்ரவரி மாதத்தில் (இம்மாதம்) நெல் அறுவடை செய்ய தயாராக இருந்த நேரத்தில் துரதிஷ்டவசமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்த பருவம் தவறிய மழையால் சுமார் ஒரு லட்சம் எக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன என்று ஆரம்ப மதிப்பீட்டின்படி தெரிவிக்கப்பட்டுள்து.

    வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி அறுவடை பணியை மீண்டும் தொடங்க தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவரும் நிலையில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் அறுவடை செய்யப்பட்ட தானியத்தில் ஈரப்பதம் அளவு அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவும், முதிர்ச்சி அடையாத சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை தளர்த்தவும், சேதம் அடைந்த நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்லை 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் வரை தளர்த்தவும் தேவையான மதிப்பை இந்த சம்பா பயிருக்கும் குறைக்கவும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்' என கூறியிருந்தார்.

    இந்தக் கடிதத்தை மத்திய அரசு உடனடியாக பரிசீலித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை மத்திய அரசு உடனடியாக பரிசீலித்து உள்ளது. அதாவது, மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை நேரில் பார்வையிட மத்தியக்குழுவை அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மத்தியக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் தமிழகத்துக்கு வருகை தந்து நேரில் பார்வையிட உள்ளனர். அதன்பின்பு, மத்தியக்குழு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அறுவடைக்கு தயாரான 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது
    • பயிர்களை கையில் ஏந்தி கண்ணீர்வடிக்கும் விவசாயிகள்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய தாலுக்காக்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்களில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தனர்.

    கடந்த ஆண்டுகளை போல் அல்லாமல் இந்தாண்டு உரிய நேரத்தில் பருவமழை தொடங்கி அவ்வப்போது சிறு சிறு மழையாக பெய்தது. இதன் மூலம் கிடைத்த நீரை விவசாயிகள் நீர் நிலைகளில் சேமித்து வைத்து விவசாயம் செய்தனர். மேலும் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ள இடங்களில் வாகனங்களில் தண்ணீர் கொண்டு வந்து விவசாயிகள் விவசாயம் செய்திருந்தனர்.

    அவ்வாறு காப்பாற்றப்பட்டு வந்த நெற்பயிர்கள் நல்ல முறையில் விளைந்து அறுவடைக்கு தயாரானது. இன்னும் இரண்டொரு நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நேற்று பெய்த தொடர் மழையால் நெற்கதிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமாகியுள்ளது. இதனை பார்த்த விவசாயிகள் மூழ்கிய பயிர்களை கையில் எடுத்து கண்ணீருடன் பார்த்து வேதனையடைந்தனர்.

    இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில் விவசாயிகள் நாங்கள் ஆண்டு தோறும் அல்லல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம், நகைகளை வைத்தும், விவசாயக் கடன்கள் வாங்கியும் ஏக்கர் ஒன்றிற்கு 40 ஆயிரம் வரை செலவு செய்து விவசாயம் செய்தோம். இந்தாண்டு போதிய மழை இல்லாவிட்டாலும் கிடைத்த தண்ணீரை கொண்டும், வெளியிலிருந்து வாங்கியும் விவசாயம் செய்திருந்தோம். முழு விளைச்சல் இல்லாவிட்டாலும் விளைந்த நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தற்போது பெய்து வருகிற தொடர் மழையால் நெற்கதிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமாகிவிட்டது. எனவே விவசாயிகளின் துயர நிலையை அரசு அறிந்து பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீட்டுத் தொகை கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

    • கடந்த 2 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
    • தென்காசி மாவட்டத்திலும் விட்டு விட்டு பெய்த சாரல் மழையால் குளிர்ச்சியான காற்று வீசியது.

    தஞ்சாவூர்:

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் உள்பட 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி கடந்த 2 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் தஞ்சையில் நேற்று காலை 6 மணி முதல் தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. அவ்வப்போது மழை கொட்டி தீர்த்தது. மதியம் 3 மணி வரையிலும் இந்த மழை நீடித்தது.

    இதேபோல் தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அவ்வப்போது பலத்த மழையும், லேசான தூறலுமாக மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இதேபோல் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களிலும் நேற்று காலை முதல் மாலை வரையில் மழை பெய்தது. இடையிடையே கனமழையும் பெய்தது.

    இந்த கனமழை காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்தன. சில இடங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது.

    கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் பரிதவித்து வருகிறார்கள்.

    நேற்று பெய்த கனமழை காரணமாக நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 10.30 மணி முதல் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை அவ்வப்போது விட்டு, விட்டு பெய்து கொண்டிருந்தது. இதனால் ரம்மியமான சூழல் நிலவியது.

    இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் விட்டு, விட்டு பெய்த சாரல் மழையால் குளிர்ச்சியான காற்று வீசியது. குளுகுளு சீசன் நிலவியது. மொத்தத்தில் வெயில் தலை காட்டவில்லை.

    இதேபோல தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. இதனால் இதமான சூழல் நிலவியது. வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை தொடர்ந்து, நேற்று 3-வது நாளாக விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அதேபோன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் நேற்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    ராமேசுவரம் பகுதியில் விடிய விடிய மழை பெய்தது.

    • கன மழையினால் அணைகள் நிரம்பியதால் கூடுதலாக அளவுக்கு அதிகமான தண்ணீர் மதகு வழியாக திறக்கப்பட்டன.
    • இதனால் சிறு-குறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்ற னர்.

    விழுப்புரம்:

    பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறு, குளங்கள் நிறைம்பின. தொடர்ந்து கொட்டி தீர்த்த கன மழையினால் அணைகள் நிரம்பியதால் கூடுதலாக அளவுக்கு அதிகமான தண்ணீர் மதகு வழியாக திறக்கப்பட்டன. இதனால் தென்பெண்ணை ஆறு, சங்கராபரணி ஆறு, மலட்டாறு, பம்பை ஆறு போன்ற ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ள சிறுவந்தாடு, அகரம், ஆண்டியார் பாளையம் மேடு, பஞ்சமாதேவி, மோட்சகுளம், பரிசுரெட்டி பாளையம், கள்ளி ப்பட்டு, வடவா ம்பலம், பூவரசன்குப்பம், கொங்கம்பட்டு, வீராணம், சொரப்பூர், மேல்பாதி, கீழ்பாதி, கலிஞ்சிக்குப்பம், கிருஷ்ணாபுரம், மேட்டுப்பாளையம், பட்ட ரைபாதி, பேரிச்சம்பாக்கம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையாலும் சூறைக்காற்றாலும் கீேழ சாய்ந்து சேதமாகி உள்ளது. மேலும் தற்போது உரு வாகியுள்ள குறைந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டல த்தின் காரணமாக மழை பெய்தால் மடிந்த நெற்பயிர்கள் முளைக்கும் அவல நிலை ஏற்பட்டு ள்ளது. இதனால் சிறு-குறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்ற னர்.

    • தொடர்மழையால் தண்ணீரில் மூழ்கி சேதம்
    • ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள பயிர்களை அகற்ற உத்தரவு

    ஆற்காடு:

    கலவை தாலுகாவில் பெய்த மழையால் கலவைபகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.

    அதைத்தொடர்ந்து கலெக் டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவுப்படி, கலவை தாலுகாவில் உள்ள சென்ன சமுத்திரம் மாந்தாங்கல், மேட்டூர் போன்ற பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கலவை தாசில்தார் மதிவாணன் பார்வையிட்டார். மேலும் ஏரியின் அருகே உள்ள நீர் பிடிப்பு பகுதியில் உள்ள நிலங்களில் நெற்பயிர்களை அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டார்.

    வருவாய் ஆய்வாளர் வீரராகவன், கிராம அதிகாரி விஜி, கிராம உதவியாளர் குப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×