என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மீனவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்
- ரூ.7 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டது.
- மீனவ தினத்தை முன்னிட்டு மீனவ கிராமங்களுக்கான கபடி போட்டி நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகையில் தமிழக மீன்வளத்துறை சார்பில் உலக மீனவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
நாகை துறைமுகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், மற்றும் 27 கிராம மீனவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் கல்லார், நாகூர், சாமந்தான் பேட்டை, செருதூர், ஆற்காட்டுதுறை வேதாரண்யம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பைபர் படகு மீனவர்களுக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான அதிக ஒளி வீச்சும் டார்ச் லைட், மழைக்கான கோட்,மற்றும் துறைமுகத்தில் பணியாற்றும் மீனவ பெண் பயனாளிகளுக்கு புடவை உள்ளிட்ட அலுமினிய கூடைகளை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் வழங்கினர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், கடலுக்கு செல்லும் மீனவர்கள் அனைவரும் உயிரை பணயம் வைத்து தான் மீன்பிடி தொழில் செய்கிறார்கள். காற்று, மழை, சுனாமி, போன்ற பேரழிவுகள் வரும் என்று தெரிந்தும் அவர்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் கடலுக்கு செல்லும் மீனவர்கள் அனைவருக்கும் தனது மீனவர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார்.
மீனவர் தினத்தை முன்னிட்டு மீனவ கிராமங்களுக்கான கபடி போட்டி நடைப்பெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்