search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் கண்டிப்பாக கேட்போம்- ஆர். காமராஜ் எம்.எல்.ஏ
    X

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. பேசினார்.

    விவசாயிகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் கண்டிப்பாக கேட்போம்- ஆர். காமராஜ் எம்.எல்.ஏ

    • குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
    • தற்போது ஹெக்டருக்கு ரூ.13 ஆயிரத்து 500 மட்டுமே நிவாரணமாக அரசு வழங்குகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த பாமணி கடைதெருவில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சிங்காரவேலு தலைமை தாங்கினார். நகர செயலாளர் டி.ஜி. சண்முகசுந்தர், முன்னாள் ஒன்றிய செயலாளர் வெற்றிவேல், முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில்:-

    டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஆனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாததால் 3 லட்சம் ஏக்கர் குறுவை பயிர்கள் கருகி நாசமாகின. முந்தைய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்களும், பயிர் காப்பீடும் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது ஹெக்டருக்கு ரூ.13 ஆயிரத்து 500 மட்டுமே நிவாரணமாக அரசு வழங்குகிறது.

    நாங்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஒரு பிரச்சினை என்றால் கண்டிப்பாக கேட்போம். கேட்பது மட்டுமல்லாமல் அதை நிறைவேற்றும் அதிகாரத்திற்கும் கூடிய விரைவில் வருவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி தலைவர் தமிழ்மணி நன்றி கூறினார்.

    Next Story
    ×