search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Industries"

    • தொழிற்சாலை இயங்க எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
    • தொழிற்சாலைக்கு வெளியே மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் ஒட்டியுள்ளது.

    சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வாயு கசிவு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, தொழிற்சாலை இயங்க எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

    பின்னர், அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து மக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

    இந்நிலையில், சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு வெளியே மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் ஒட்டியுள்ளது.

    ஐஆர்எஸ், அனுமதி பெறும் வரை தொழிற்சாலை இயங்க கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், எந்த இடத்தில் வாயு கசிவு ஏற்பட்டதோ, அதை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய வேண்டும்.

    • சுமார் 2 லட்சம் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. பல இடங்களில் தரை தளம் முற்றிலும் மூழ்கியது.
    • மொத்தத்தில் சிட்கோ சிறு நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.2,800 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    மிக்ஜம்... மிக் ரக போர் விமான போல் சுழன்று வந்தது. சென்னையை போட்டு தாக்கி விட்டு சென்றது. அது ஏற்படுத்திய பாதிப்புகள், இழப்புகளில் இருந்து மீள முடியாமல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தவித்து கொண்டிருக்கிறார்கள்.

    சாதாரண மக்கள், வணிகர்கள், தொழில் நிறுவனங்கள் என்று எந்த தரப்பையும் விட்டு வைக்கவில்லை.

    சுமார் 2 லட்சம் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. பல இடங்களில் தரை தளம் முற்றிலும் மூழ்கியது.

    இந்த வீடுகளில் இருந்த பிரிட்ஜ், வாஷிங்மெஷின், தொலைக்காட்சி பெட்டிகள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் நாசமாகிவிட்டன.

    சேறும், சகதியும் நிறைந்து கிடக்கும் இந்த வீடுகளை சுத்தம் செய்து, மின் சாதனைங்களை பழுது பார்த்து மீண்டும் குடியேற வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை ஆகும். புதிய வீட்டு உபயோக பொருட்களை வாங்க வேண்டும்.

    பல வீடுகளில் கார்கள், இரு சக்கர வாகனங்களும் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன.

    அம்பத்தூர் பகுதியில் 1,800 தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் ரூ.2 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிறு தொழில் நிறுவன சங்க தலைவர் கன்னியப்பன் தெரிவித்தார்.

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த எந்திரங்களும் தண்ணீரில் மூழ்கி பழுதாகி உள்ளன. இனி வெளிநாடுகளில் இருந்து பொறியாளர்கள் வந்தால்தான் இந்த பழுதை சரி செய்ய முடியும் என்கிறார்கள்.


    பெருங்குடியில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்யும் 250 நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதியில் ரூ.400 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சங்க தலைவர் அன்பு செல்வம் தெரிவித்துள்ளார்.

    திருமுடிவாக்கத்தில் 600 நிறுவனங்களில் தண்ணீர் புகுந்தது. 6 அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த பகுதியில் மட்டும் ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதே போல் திருமழிசையில் 200 தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் தண்ணீர் புகுந்ததால் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் சிட்கோ சிறு நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.2,800 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த 4 மாவட்டங்களிலும் டீ கடைகள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை சுமார் 8 ஆயிரம் ஓட்டல்கள் உள்ளன.

    இந்த ஓட்டல்களை 3 நாட்கள் மூடியது மற்றும் பொருட்கள் சேதம் காரணமாக சுமார் ரூ.700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ரவி தெரிவித்தார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் வந்து குவிந்த காய்கறிகள் வாங்குவதற்கு ஆள் இல்லாமலும், மழைத் தண்ணீரில் அழுகியும் லாரி லாரியாக குப்பையில் கொட்டப்பட்டது. கொட்டிய காய்கறிகள் மட்டும் ரூ.2 கோடி இருக்கும் என்று காய்கறி மொத்த வியாபாரி எஸ்.எஸ்.டி. ராஜேந்திரன் கூறினார்.


    அழுகிய பூக்களும், பழங்களும் டன் கணக்கில் குப்பையில் கொட்டப்பட்டது. இதன் மதிப்பும் சுமார் ரூ.2 கோடி வரை இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இந்த 4 மாவட்டங்களிலும் சிறிய பெட்டிக் கடை முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை 60 ஆயிரம் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வியாபாரம் பாதிப்பு, பொருட்கள் சேதம் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்று வணிகர் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

    முக்கியமாக வியாபாரிகளுக்கு கிடைக்க வேண்டிய லாபம், அரசுக்கு கிடைக்க வேண்டிய வரிகள் சுமார் ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

    • சிவகாசி பகுதியில் உரிமமின்றி இயங்கும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும்.
    • இந்த தகவலை ஊராட்சி ஒன்றிய தலைவி தெரிவித்துள்ளார்.

    சிவகாசி

    சிவகாசி ஊராட்சி ஒன்றிய தலைவி முத்துலட்சுமி கூறியதாவது:-

    சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் உரிமம் பெறாமல் இயங்கி வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது தொடா்பாக கள ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.

    எனவே, சிவகாசி ஊராட்சி ஒன்றியப் பகுதி யில் உரிமம் பெறாமல் இயங்கும் தொழில் சாலைகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவா், ஆணையா் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தக்குழு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 54 ஊராட்சிகளிலும் இயங்கி வரும் தொழில் சாலைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் வழங்கும். அதன் பிறகு உரிமம் பெறாமல் இயங்கும் தொழில் சாலைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிராம நிர்வாகிகள் கூட்டாக பேட்டி
    • காலாப்பட்டில் அமைந்துள்ள இது போன்ற கம்பெனிகளால் எங்களுடைய குடிநீர் உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பாதிப்படைந்துள்ளது.

    புதுச்சேரி:

    கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில் மண்டபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு, பிள்ளைசாவடி, கனகச்செசெட்டிகுளம் பகுதி பஞ்சாயத்தார்கள் சரவணன், கண்ணன், கோதண்டம், அருணகிரி, தமிழ்மாறன், சங்கர், ஜானகிராமன் உள்ளிட்ட பலர் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    காலாப்பட்டில் இயங்கி வரும் தனியார் மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலை 1986-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு தொடர்ந்து இதுபோன்ற எதிர்பாராத விபத்துக்கள் நடந்து வண்ணம் உள்ளது. காலாப்பட்டில் அமைந்துள்ள இது போன்ற கம்பெனிகளால் எங்களுடைய குடிநீர் உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பாதிப்படைந்துள்ளது.

    காலாப்பட்டு தொகுதியில் ஒரு அ.தி.மு.க. உறுப்பினர் கூட இல்லதா நிலையில் சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு ஆதரவாக காலாப்பட்டு பகுதியை சேர்ந்த கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் செயல்படுவதாக அ.தி.மு.க.வினர் கூறிய குற்றச்சாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.

    கடந்த 4-ந் தேதி இரவு தொழிற்சாலையில் விபத்து நடந்து தீக்காயம் அடைந்த தொழிலாளர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்ல சொல்லி தொழிலாளர்களின் உறவினர்கள் வற்புறுத்தியதின் அடிப்படையிலேயே அவர்கள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திருப்பூர் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடந்தது.
    • வணிக கட்டடத்தில் இயங்கி வரும் குறு, சிறு தொழில்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

    திருப்பூர் :

    திருப்பூர் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடந்தது. மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சுமதி தலைமை வகித்தார். செயற்பொறியாளர் ராமச்சந்திரன் முன்னிலையில் மின்வாரிய அலுவலர்கள் பங்கேற்ற கூட்டம் குமார் நகர் அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்தில் வணிக ரீதியான கட்டடங்களில் இயங்கும் சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு மின்சார இணைப்பு வழங்குவதில் உள்ள குளறு படியை களைய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு பொதுசெயலாளர் சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    குறு, சிறு பனியன் தொழில்கள், வணிக ரீதியான, கடைகளில் இயங்கி வருகின்றன. திருப்பூரில் சிறு, குறு தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்பு வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. வணிக கட்டடத்தில் குறு, சிறு தொழிற்சாலைகள் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கின்றன.

    மின்வரிய அலுவலர்கள், மனுக்கள் கிடப்பில் இருப்பதால் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டாமென தடுக்கின்றனர். மின் இணைப்பு வழங்கப்படாமல் இருப்பதால் குறு, சிறு தொழில்கள் துவங்கும் தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளில் 2,500க்கும் அதிகமான புதிய வணிக நிறுவனங்கள், கடைகள், வணிக கட்டடத்தில் இயங்கி வரும் குறு, சிறு தொழில்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. தற்காலிக மின் இணைப்பில் தொழில் நடத்தி வருவதால் பல மடங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

    கட்டிட உரிமையாளர்கள், மின் கட்டண செலவை சமாளிக்க முடியாமல் வங்கிக்கடன் தவணை செலுத்த முடியாமல் பரிதவித்து வருகின்றனர். வணிக ரீதியாக கட்டியுள்ள கட்டடங்களில் இயங்கி வரும் குறு, சிறு பனியன் தொழிற்சாலைகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மின்வாரிய அலுவலர்களிடம் கேட்டபோது, மின்வாரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு, மின் இணைப்பு வழங்கி வருகிறோம். பதிவு மூப்பு அடிப்படையில் இணைப்பு வழங்கப்படும் என்றனர்.

    • 42 விண்ணப்பங்கள் பெறப்பட்டு வங்கி பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • பி.எம்.இ.ஜி.பி. திட்டத்தின் மூலம் தலா ரூ.50 ஆயிரம் மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டாரம் புதுக்குடி ஊராட்சியில் உள்ள நரிக்குறவர் காலனியில் வசிக்கும் விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார நடவடிக்கைகளுக்காக பாரம்பரிய தொழிலான பாசிமணி, வளையல், காது வளையம் போன்ற தொழில்களை மேம்படுத்தும் நோக்கில் வங்கி மூலம் தனிநபர் கடன் உதவி கோரி மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை அலகு மூலம் மேற்கூறிய தொழில்களை மேம்படுத்த நோக்கில் வங்கி மூலம் தனிநபர் கடன் உதவி கோரிய விளிம்பு நிலை மக்களை நேரில் கள ஆய்வு செய்து 42 விண்ணப்பங்கள் பெறப்பட்டு வங்கி பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பாரத மாநில வங்கிகளின் மூலம் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு 18 நபர்களுக்கு தனிநபர் கடன் மாவட்ட தொழில் மைய பி.எம்.இ.ஜி.பி. திட்டத்தின் மூலம் தலா ரூ.50 ஆயிரம் மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக கிராமமக்கள் புகார்.
    • தேங்காய் எண்ணெய் ஆலைகள் அதிகளவில் உள்ளன.

    காங்கயம் :

    காங்கயத்தை அடுத்துள்ள நால்ரோடு துணை மின்நிலையத்திலிருந்து, நால்ரோடு, மரவபாளையம், கீரனூர், ஆலாம்பாடி, திட்டுப்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக கிராமமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இதுபற்றி விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:- காங்கயம் மற்றும் சுற்றுப்பகுதிகள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். இதுதவிர அரிசி ஆலைகள், தவிடு ஆலைகள் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆலைகள் அதிகளவில் உள்ளன. விவசாய பணிகளான தண்ணீர் பாய்ச்சுதல், போர்வெல்களிலிருந்து தண்ணீர் எடுத்தல் ஆகியவை மின்மோட்டார்கள் மூலமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அரிசி ஆலைகள் உள்ளிட்ட தொழில்களும் மின்மோட்டார்கள் மூலமே நடைபெறுகிறது.

    கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் விவசாய பணிகள் மட்டுமல்லாமல் அரிசி ஆலை பணிகளும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும் கடந்த 2 நாட்களாக இரவு நேரம் முழுவதும் மின்தடை ஏற்படுவதால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆலாம்பாடி உள்ளிட்ட கிராம பகுதியில் இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டு கிராமமே இருளில் மூழ்கியது.எனவே மின்வாரிய அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி மின் கோளாறுகளை உடனடியாக சரிசெய்து சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×