search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழையால் பாதிப்பட்ட பயிர்களுக்கு விரைவில் நிவாரணம்
    X

    மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிரை அமைச்சர் ரகுபதி பார்வையிட்டார்.

    மழையால் பாதிப்பட்ட பயிர்களுக்கு விரைவில் நிவாரணம்

    • கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    • பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்க ஏதுவாக 12 புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன.

    நாகப்பட்டினம்:

    கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பலபகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இதனால் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த இளம் நெற்பயிர்கள் மழை நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் பகுதிகளை அமைச்சர் ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

    பின்னர் செய்தியாளர்க ளிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை மீட்டு தங்க வைக்க ஏதுவாக, மாவட்டத்தில் மண்டல அளவிலான குழுக்கள், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து வட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    பாதிக்கப்படும் மக்களை மீட்டு தற்காலிக பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்க ஏதுவாக 12 புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன.

    இதில் ஒரு முகாமில் 300 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் மக்களை மீட்க மாவட்ட நிர்வாகத்திற்கு துணையாக 5000 முதல்நிலை பொறுப்பாளர்களும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அபாய குறைப்பு முகமை சார்பில் 300 தன்னார்வலர்களுக்கான பேரிடர் கால பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

    தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 206 மரம் அறுக்கும் இயந்திரம், 4,300 மணல் மூட்டைகள், 40,000 சாக்கு பைகள், 2,115 சவுக்கு மரங்கள், 59 நீர் இறைக்கும் இயந்திரம், 24 நீர் உறிஞ்சும் இயந்திரம், 163 லைப்பாய், 142 லைப் ஜாக்கெட் மற்றும் தேவையான மீட்பு உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    பொது சுகாதாத்துறை சார்பில் மருந்து பொருட்கள் மற்றும் இதர வசதிகள் தயார்நிலையில் உள்ளது.

    மின் பகிர்மான கழகம் சார்பில் 4,500 மின் கம்பம், 100 மின்மாற்றிகள், 120கி.மீ. மின் கம்பிகள் போன்ற மின்சாதன உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், தற்போது பெய்துள்ள கனமழையின் காரணமாக 16,000 ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதேபோல குறுவை நெற்பயிர் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    விரைவில் நிவாரண கிடைக்க நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.

    Next Story
    ×