search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்பார்ப்பு"

    • இரவு நேரங்களில் அடிக்கடி தொடர் மின் தடை ஏற்படுகிறது.
    • மின் பாதையில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமரு கல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதிக்கு திட்டச்சேரி துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி தொடர் மின் தடை ஏற்படுகிறது.

    பல மணி நேரம் தொடரும் மின் தடையால் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவியர்கள்,முதியவர்கள், நோயாளிகள், பொதுமக்கள் என பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    குத்தாலத்திலிருந்து பனங்குடி வரை காரை மேடு வழியாக மின் விநியோகம் செய்யப்படும் மின் பாதையில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து மின்கம்பிகளின் மீது படர்ந்து கிடப்பதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகவும் அதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    • பணிகள் தொடங்கி பல மாதங்கள் ஆகியும் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளது.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அடுத்த கொத்தங்குடி ஊராட்சி சாத்தனூர் கிராமத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை ஆரம்பிக்கப்பட்டது.

    பணிகள் தொடங்கி பல மாதங்கள் ஆகியும் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளது.

    இதன் அருகில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்றும் உள்ளது.

    மாணவர்கள் ஓய்வு நேரங்களில் அவ்வழியாக செல்வதும், விளையாடுவதும் ஆக உள்ளனர்.

    எனவே, பள்ளியும் அருகில் இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

    • பருவமழையும் பொய்த்து விட்ட நிலையில் நீராதாரங்கள் முற்றிலுமாக வற்றிப் போனது.
    • ஒரு சில தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிந்து விட்டது.

    உடுமலை:

    நீண்ட காலத்திற்கு நிலைத்து நின்று பலன் தரக்கூடிய நிலைப்பயிரான தென்னை விவசாயம் உடுமலை பகுதியில் பிரதான தொழிலாக உள்ளது.விவசாயியோடு சேர்த்து எண்ணற்ற தொழிலாளர்களின் குடும்பத்தை காப்பாற்றி வந்த தென்னை விவசாயம் இன்று குற்றுயிரும் குலைஉயிருமாக அழிவின் விளிம்பில் உள்ளது. கொப்பரை விலை வீழ்ச்சி, ஆட்கள் பற்றாக்குறை, பருவநிலை மாறுபாட்டால் நோய் தாக்குதல், பராமரிப்பு, இடுபொருட்கள் விலை உயர்வு, தேங்காய் மற்றும் இளநீருக்கு போதிய விலை இன்மை காரணமாக தேங்காய் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    ஒரு சிலர் தென்னை விவசாயத்தை கைவிட்டும் வருகின்றனர். இந்த நிலையில் வறட்சியும் தென்னை விவசாயிகளை கடுமையாக தாக்கி வருகிறது. பருவமழையும் பொய்த்து விட்ட நிலையில் நீராதாரங்கள் முற்றிலுமாக வற்றிப் போனது. அதன் தாக்குதலில் இருந்து சமாளிக்க முடியாமல் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.அதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக தண்ணீரை விலைக்கு வாங்கி தென்னை மரங்களுக்கு ஊற்றி காப்பாற்றி வந்தனர்.ஆனாலும் காற்று மற்றும் வெப்பத்தின் கோர தாண்டவத்திற்கு முன்பு விவசாயிகளின் முயற்சி வீணற்று போனது.கண்ணும் கருத்துமாக பிள்ளை போன்று பார்த்து பார்த்து வளர்த்த தென்னை மரங்கள் பலன் கொடுத்து வந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் துடித்து துடித்து மாண்டு போனது கண்டு விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

    ஒரு சில தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிந்து விட்டது. இதனால் வாழ்வாதாரத்திற்காக மாற்றுத் தொழிலை நாடிச்செல்ல வேண்டிய சூழல் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்றும் வகையில் உடுமலை பகுதியில் வறட்சியால் பட்டுப்போன தென்னை மரங்களை கணக்கீடு செய்து உரிய நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசு மற்றும் அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • அறந்தாங்கியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமையுமா? என்று பொதுமக்ககள் எதிர்பார்க்கின்றனர்
    • புதுக்கோட்டை பரந்து விரிந்த மாவட்ட மாக இருப்பதால் அரசின் சலுகைகள் மக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு

    அறந்தாங்கி,

    திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை பிரித்து கடந்த 1974-ம் ஆண்டு புதுக் கோட்டை மாவட்டம் உதய மானது .புதுக்கோட்டை மாவட்ட த்தில் புதுக்கோட்டை, அறந் தாங்கி, ஆலங்குடி, திருமயம், கந்தர்வகோட்டை, விராலி மலை என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.இதில் புதுக்கோட்டை , அறந்தாங்கி ஆகிய 2 நகரா ட்சிகளும், ஆலங்குடி , இலுப்பூர், அரிமளம், கீர னூர், கறம்பக்குடி, பொன்ன மராவதி, கீரமங்களம், அன் னவாசல் ஆகிய 8 பேரூரா ட்களும்,புதுக்கோட்டை, அறந்தா ங்கி, இலுப்பூர் ஆகிய 3 வருவாய் கோட்டங்களும் மற்றும் 12 வட்டங்கள் அடங்கிய சுமார் 20 லட்சம் மக்கள் தொகையை கொண்ட பெரிய மாவட்டமாக புதுக் கோட்டை திகழ்கிறது.பரந்து விரிந்த மாவட்ட மாக இருப்பதால் அரசின் சலுகைகள் மக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்களது தேவை களை விரைந்து செயல்ப டுத்தி கொள்வும், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தவும்,மாவட்டத்தின் 2-வது பெரிய நகராட்சியை கொண்ட அறந்தாங்கியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் ஒரு குழுவாக அமைந்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வரு கின்றனர்.குறிப்பாக அறந்தாங்கி சட்டமன்ற தொகுயில் 3 தாலுகாக்களும், உதவி கலெக்டர் அலுவலகம், வேளாண் பொறியியல் துறை அலுவலகம், சுகாதார அலுவலகம், மாவட்ட தலைமை மருத்துவமனை,மாவட்டக் கல்வி அலுவல கம், ஒருங்கிணைந்த நீதிம ன்றங்கள், சிறைச்சாலை, மின்வாரிய செயற்பொறி யாளர் அலுவலகம், போக்கு வரத்து பணிமனை, பொது ப்பணித் துறை உள்ளிட்ட அநேக அலுவலகங்களும் உள்ளன. இருந்த போதிலும் மாவட்டத்தின் தலைமை யகம் புதுக்கோட்டையில் உள்ளதால் இங்கிருந்து மக்கள் தொலைதூரத்தில் சென்று மாவட்ட கலெ க்டரை சந்திக்க வேணடி்யு ள்ளது.இது குறித்து ம.ஜ.க. மனித உரிமை பாதுகாப்பு அணி மாநில செயலாளர் முபாரக் அலி கூறுகையில்,அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதி மக்கள் தங்களுடைய அடிப்படை தேவைகளுக்கு 40,50 கிலோ மீட்டர் தூர த்தில் உள்ள மாவட்ட கலெ க்டர் அலுவலகத்திற்கு சென்று வர மிகவும் சிரம த்தை சந்திக்க வேண்டி யுள்ளது.இதனால் அறந்தாங்கி நகரை தலைமையிடமாகக் கொண்டு அறந்தாங்கி மாவ ட்டம் அமைத்து தரபல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்து வருகி ன்றனர்.அப்படி அமைக்கும் பட்ச த்தில் அதற்குரிய சட்டமன்ற தொகுதிகளாக அறந்தாங்கி ஆலங்குடி தொகுதிகளை சேர்த்து அமைத்துக் கொள் ளலாம் அல்லது அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியோடு பேராவூரணி தொகுதியை இணைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.அதே போன்று சி.ஐ.டி.யு. ஒருங்கிணைப்பாளர் கர்ணா கூறுகையில், புதுக் கோட்டைக்கு நிகராக அற ந்தாங்கியிலும் மக்கள் தொகை பெருக்கம் அடை ந்துவிட்டது.ஏற்கனவே அறந்தாங்கி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனை யாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதன் கட்டமை ப்புகள் சீரமைக்கும் பணிகள் தாமதமடைந்து வருகிறது.

    இதே அறந்தாங்கி மாவட் டமாக இருந்திருந்தால் பணி கள் விரைந்து முடிக்கப்பட்டி ருக்கும், அதே போன்று அறந்தாங்கியிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவ ட்டங்களுக்கு நேரடியாக பேருந்துகள் இயக்கப்படுகி றது,ஆனால் மக்கள் தொகை பெருகியபோதிலும் பேருந்து நிலையம் இன்னும் விரி வாக்கம் செய்யப்பட வில்லை. மேலும் தற்போது ள்ள நெருக்கடியில் காவல் நிலையம் இரண்டாக பிரிக்க வேண்டும் இதெல்லாம் சாத்தியப்பட வேண்டும் என்றால் அறந்தாங்கியை தலைைமயிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார்.

    • கோவை மாநகராட்சி சார்பில் சில மாதங்களுக்கு முன்பு, இந்த மருத்துவமனை முன்பாக சிறுநீர் கழிப்பிடம் ஒன்று வைக்கப்பட்டது.
    • தினமும் இங்கு சென்று பூட்டிய கதவை பார்த்து ஏமாந்து திரும்பி செல்லும் சூழ்நிலை தான் ஏற்படுகிறது.

    குனியமுத்தூர்,

    கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் இ.எஸ்.ஐ மருத்துவமனை உள்ளது.

    தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் இங்கு வந்து செல்வது வழக்கம். அதுமட்டுமின்றி அவ்விடத்தில் பஸ் நிறுத்தம் உள்ளதால் ஆயிரக்கணக்கான பயணிகளும் இங்கு நின்று பஸ் ஏறி செல்வது வழக்கம். இந்நிலையில் கோவை மாநகராட்சி சார்பில் சில மாதங்களுக்கு முன்பு, இந்த மருத்துவமனை முன்பாக சிறுநீர் கழிப்பிடம் ஒன்று வைக்கப்பட்டது.

    ஆனால் இன்றைய நாள் வரை அது பயன்பாட்டில் இல்லாமல் வெறுமனே நின்று கொண்டு காட்சியளிக்கிறது. இதனால் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு வருபவர்களும், பஸ் ஏற வருபவர்களும் அவசரத்துக்கு இதனை உபயோகப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    இப்பகுதியில் நீண்ட நாட்களாக சிறுநீர் கழிப்பதற்கு பொது கழிப்பிடம் இல்லாமல் இருந்தது. கோவை மாநகராட்சியின் முயற்சியின் மூலம் இப்பகுதியில் இந்த சிறுநீர் கழிப்பிடம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்த கழிப்பிடம் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.

    தினமும் இங்கு சென்று பூட்டிய கதவை பார்த்து ஏமாந்து திரும்பி செல்லும் சூழ்நிலை தான் ஏற்படுகிறது. எனவே கோவை மாநகராட்சி உடனே தலையிட்டு இதனை திறக்க வேண்டும். இதேபோன்று மாநகராட்சி பகுதி முழுவதும் வைக்கப்பட்டு, உபயோகமில்லாமல் இருக்கும் இந்த சிறுநீர் கழிப்பிடங்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர்.
    • பணிகள் தொடங்கி ஓராண்டை கடந்தும் இன்னும் பணிகள் முழுமையாக முடியவில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது. இதனால் கருவறையில் உள்ள அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர்.

    இந்த கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பா பிஷேகம் நடத்தப்பட்டது. 18 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கட்டமாக மூலவர் கோபுரம், ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களை பாலாலயம் செய்வதற்காக பாலாலய பூஜைகள் தொடங்கின.

    தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகின்றன.

    இருந்தாலும் பணிகள் தொடங்கி ஓராண்டை கடந்தும் இன்னும் பணிகள் முழுமையாக முடியவில்லை.

    குறிப்பாக ஆடி, ஆவணி மாதங்களில் மாரியமமன் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடத்தப்படும்.

    தற்போது கும்பாபிஷேகத்திற்காக பாலாலயம் செய்யப்பட்டதால் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்ப டவில்லை.

    இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    எனவே கோவில் திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மேற்குத்தொடர்ச்சி மலையில் மழை பெய்யும் போது சிற்றாறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
    • சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என கருதப்பட்டது.

     உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து 900 மீட்டர் உயரத்தில் வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகும் பல்வேறு சிற்றாறுகள், பஞ்சலிங்க அருவியாக கொட்டுகிறது.ஆண்டு முழுவதும் அருவியில் நீர் வரத்து, சராசரி உயரத்திலிருந்து சாரல் போல கொட்டும் தண்ணீர் என பஞ்சலிங்க அருவியின் சிறப்புகளால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து செல்கின்றனர். மேற்குத்தொடர்ச்சி மலையில் மழை பெய்யும் போது சிற்றாறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

    அப்போது அருவியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள கம்பிகளை முழுவதுமாக மூடி, பல அடிக்கு தண்ணீர் கொட்டும். திடீர் வெள்ளப்பெருக்கினால் அருவியில் கொட்டும் தண்ணீர் சீரான நிலைக்கு திரும்ப பல மணி நேரம் ஆகும்.

    கடந்த 2008ல் சிற்றாறுகளில் தண்ணீர் வரத்து பல மடங்கு அதிகரித்து பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்து கொண்டிருந்த 13 சுற்றுலா பயணிகள் தண்ணீரில், இழுத்து செல்லப்பட்டனர். பஞ்சலிங்க அருவியின் சீற்றத்துக்கு அதிக உயிர்ப்பலி ஏற்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என கருதப்பட்டது.

    அப்போதைய தி.மு.க., அரசு, உடனடியாக வனத்துறை, இந்து அறநிலையத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உட்பட அமைச்சர்கள் அடங்கிய ஆலோசனைக்கூட்டம் நடத்தியது.இக்கூட்டத்தில், பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக பல்வேறு வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.பல ஆண்டுகளாகியும் பஞ்சலிங்க அருவி மேம்பாட்டு திட்டங்கள் எதுவும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.சுற்றுலா பயணிகள் உடை மாற்ற தேவையான அறைகள் இல்லை. கழிப்பிட வசதியும் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இப்பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்து, பஞ்சலிங்க அருவி பாதுகாப்பான அருவி என்ற பெயரை நிலை நிறுத்த அனைத்து துறையினரை ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காற்றாலை மற்றும் சோலார் எரிசக்தி உற்பத்தி செய்து தங்கள் நிறுவனங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.
    • சர்வதேச சந்தைகளில் 'வளம் குன்றா வளர்ச்சி என்ற அடிப்படையில் இயங்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமையும், கவுரமும் கிடைக்கிறது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் கடந்த 2009-11 காலங்களில் ஏற்பட்ட மின்தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது. காற்றாலை மற்றும் சோலார் எரிசக்தி உற்பத்தி செய்து தங்கள் நிறுவனங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

    மத்திய, மாநில அரசுகளும் மின்சாரத்தை மட்டுமே சார்ந்து இயங்காமல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு மாற விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. திருப்பூர் பனியன் தொழிலை பொறுத்தவரை, ஒட்டுமொத்த மின்தேவைக்கு அதிகமாகவே காற்றாலை மற்றும் சோலார் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.

    சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மறுசுழற்சி தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. சர்வதேச சந்தைகளில் 'வளம் குன்றா வளர்ச்சி என்ற அடிப்படையில் இயங்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமையும், கவுரமும் கிடைக்கிறது.

    தமிழகத்தில் உள்ள நூற்பாலைகளும், காற்றாலை மற்றும் சூரியஒளி மின் உற்பத்தி செய்து, தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. இதனால், மின் கட்டண உயர்வு அவர்களை பாதிப்பதில்லை. மின்சார பயன்பாட்டுக்கான நிலை கட்டணத்தில் மட்டும் சலுகையை எதிர்பார்க்கி ன்றனர்.

    கோவையில் நடந்த தமிழக அரசின் தொழில்நுட்ப குழு கூட்டத்தில் புதுப்பித்தக்க எரிசக்தி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, பசுமை சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். அதனால் சர்வதேச சந்தைகளில் இந்திய நிறுவனங்களின் பங்களிப்பு உயரும் என்று தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் உரிமையாளர் சங்க (டாஸ்மா) தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:-

    தமிழகத்தில் காற்றாலை மற்றும் சோலார் கட்டமைப்பு வாயிலாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில், நூற்பாலைகளின் பங்களிப்பு மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு உள்ளது. காற்றாலையில் மட்டும் 3,500 மெகாவாட் கொள்திறன் அளவுக்கு மின்சாரம் உற்பத்தியாகிறது. இதேபோல் சோலார் மூலமாகவும், அதிக அளவு மின்சாரம் உற்பத்தியாகிறது.

    வெளிநாட்டு சந்தைகளில் பசுமை சான்றிதழ் பெற்ற நிறுவனங்களுக்கு அதிக முன்னுரிமையும், வர்த்தக வாய்ப்புகளும் கிடைக்கிறது. தமிழக அரசு காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, பசுமை சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

    கட்டண அடிப்படையில் வழங்கினால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும் என தொழில்நுட்ப குழு கூட்டத்தில் வலியுறுத்தினோம். கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர் காந்தி மற்றும் அரசு செயலர்கள் விரிவான அறிக்கையாக வழங்கினால் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

    சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி செய்து வரும் அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் பசுமை சான்று வழங்குவது மிகுந்த பயனளிக்கும்.இவ்வாறு அவர் கூறினார். 

    • விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்கள் மழையில் சிக்கி விணாவதை தடுக்க புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
    • விற்பனை கூட அதிகாரிகளோ, திருக்கோவிலூர் நகராட்சி நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலுாரை அடுத்துள்ள அரகண்டநல்லுாரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்படுகிறது. இங்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து, விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்து செல்கின்றனர். அந்த அளவுக்கு மாநில அளவில் பிரசித்தி பெற்ற ஒழுங்குமுறை விற்பனை கூடமாக இது விளங்குகிறது. இங்கு வரும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி அரசு பல்வேறு வசதிகள் செய்து வருகின்றது. அதன்படி விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்கள் மழையில் சிக்கி விணாவதை தடுக்க புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. முன்னதாக இங்கிருந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட சுவர் மற்றும் செங்கல் காரைகள் புதிய கட்டிடத்தின் முன்பாக கொட்டப்பட்டுள்ளது.

    இதனால் விவசாயிகள் தாங்கள் கொண்டுவரும் தானியங்களை புதிய கட்டிடத்தில் வைக்க முடியாமல் வெளியிலேயே வைத்துள்ளனர். மேலும், இதனை கொள்முதல் செய்யும் வியாபாரிகளும் தானியங்களை பாதுகாக்க முடியாமல் அவதியுறுகின்றனர். இந்த கட்டிட காரைகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இங்கு இருக்கிறது. இதனை அகற்ற விற்பனை கூட அதிகாரிகளோ, திருக்கோவிலூர் நகராட்சி நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, புதிய கட்டிடத்தின் எதிரில் இருக்கும் பழைய கட்டிடத்தின் காரைகளை அகற்றி விவசாயிகளின் நலன் காக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்கள் மீட்கப்படுவார்களா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    • நூற்றுக்கணக்கான நபர்கள் மதுரை சாலை ஓரங்களில் வசித்து வருகின்றனர்.

    மதுரை

    தமிழகத்தின் மிகப்பெரிய மாநகராட்சிகளில் மதுரையும் ஒன்றாகும். தூங்கா நகரம், கோவில் நகரம் என பல பெயர்களைக் கொண்ட மதுரைக்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது பெருமைக்குரிய விஷயமாக கருதப்படு கிறது.

    அதிலும் மீனாட்சி அம்மன் கோவில் உள்ளி ட்ட பல கோவில்க ளுக்கு வடமாநில பக்தர்கள் அதிகளவில் வருகிறார்கள். இது ஒரு புறமிருக்க, மற்றொரு புறமோ சாலைகளில் திரியும் ஆதரவற்றோர் எண்ணி க்கையும் அதிகமாகவே காணப்படு கிறது.

    அப்படி திரியக்கூடிய ஆதரவற்றோருக்கு அடைக்கலம் கொடுக்கும் இடமாக சாலையோரங்கள் தான். மதுரை மாநகரில் முக்கிய சாலையின் ஓரங்களில் ஆதரவற்ற வர்கள் வசித்து வருகி ன்றனர். அவர்கள் தங்குமிட வசதி மற்றும் நேரத்துக்கு உணவு கிடைக்காமல் அவதிப் பட்டு வருகின்றனர்.

    வயது வித்தியாசமின்றி ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கான நபர்கள் மதுரை சாலை ஓரங்களில் வசித்து வருகின்றனர். ரெயில் நிலைய முன்பகுதி, பாலம் மற்றும் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர்கள் உள்ளிட்டவைகளே, அவர்கள் தங்குமிடமாக இருக்கின்றன.

    சில வடமாநிலத்தினர் தங்களது குடும்பத்துடன் சாலை ஓரங்களில் வசிக்கின்றனர். அப்படி வசிப்பவர்களில் அதிகமாக முதியோர்கள் உள்ளனர். முதலில் ஏதாவது வேலை செய்து அன்றாடம் தங்களது செலவுக்கு வருமானம் தேடும் முதியவர்கள், அதன்பின் உழைக்க முடியாமல் கையேந்தும் நிலைக்கு சென்று விடுகின்றனர்.

    இவர்களில் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் உயிருக்கு போராடி கொண்டி ருப்பதை பார்க்க முடிகிறது. அவர்களை அந்த வழியாக செல்லக்கூடிய அரசு அதிகாரிகள் பார்த்த போதிலும், கண்டுகொ ள்ளாமல் சென்று விடுகின்றனர். இதனால் சிலர் இறந்ததும் அனாதை பிணங்களாக எடுத்துச் செல்லப்படு கின்றனர்.

    இவர்களும் நமது நாட்டின் குடிமக்கள் என்பதால் அவர்கள் மீது அரசு கவனம் செலுத்தி அவர்களின் நல்வாழ்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டி யது அவசிய மாகும். சாலையோரத்தில் தங்கியிருக்கும் சிலருக்கு மட்டுமே ஒருவேளை உணவு கிடைக்கிறது. மற்ற நேரங்களில் அவர்கள் பசியுடன் இருக்கின்றனர்.

    மதுரை நகரில் இப்படி தங்கியிருப்பவர்கள் எத்தனை பேர் என்பதை கணக்கெடுத்து, அவர்களுக்கு தங்குவதற்கு இட வசதி, உணவு மற்றும் மருத்துவ வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • புதிய ரெயில்களை இயக்க தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    • மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? என்று தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    விருதுநகர்

    2018 முதல் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த மதுரை-நெல்லை இரட்டை ரெயில் பாதைப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து கடந்த 7-ந் தேதி முதல் அனைத்து ரெயில்களும் இரு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் ரெயில் நிலையங்களில் முன் கூட்டி வந்த ரெயில்கள் எதிரே வரும் ரெயிலுக்காக காத்திருந்த நிலை மாறியுள்ளது. மேலும், பயண நேரமும் குறைந்துள்ளது.

    இந்த நிலையில் தென் மாவட்ட மக்கள் மற்றும் ரெயில் பயணிகள் கூடுதலான ரெயில்களை இந்த வழித் தடங்களில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குறிப்பாக வடமாநி லங்களில் இருந்து மதுரை வரை வரும் ரெயிலை நெல்லை வரை நீட்டிக்கவும், வடமாநி லங்களில் இருந்து கேரளா வழியாக நெல்லை வரை வந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களை மதுரை சந்திப்பு ரெயில் நிலையம் வரை நீட்டிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

    சேலம் மற்றும் திருச்சி கோட்டங்களில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை வரை கூடுதலான ரெயில்களை இயக்க வேண்டும். நீண்ட நாட்களாக சிறப்பு ரெயில்களாக இயங்கும் ரெயில்களை நிரந்தரமாக இயக்கவும், தென் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் ரெயில்கள் இயக்கவும் பயணிகள் எதிர்பார்க்கி ன்றனர்.

    சிறப்பு ரெயிலாக வாரத்தில் ஒரு நாள் மட்டும் இயக்கப்பட்டு வரும் நெல்லை-தாம்பரம்

    (அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக இயக்கப்படுகிறது) சிறப்பு ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும்.

    வாரத்தில் ஒரு நாள் மட்டும் வரும் மேட்டுப்பாளையம் -நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும். கொல்லம்-விருதுநகர்-மானாமதுரை-ராமேசுவரம் இடையே புதிய ரெயில்களை இயக்க வேண்டும்.

    புதிய வந்தே பாரத் ரெயில்கள்

    சென்னை-கன்னியாகுமரி வரையும், நெல்லையில் இருந்து -பெங்களூரு வரையும் செல்லும் வகையில் புதிய வந்தே பாரத் ரெயில்களை இயக்க வேண்டும் என மத்திய அரசுக்கும் ரெயில்வே அமைச்ச கத்திற்கும் ரெயில் பயணிகள் மற்றும் தென் மாவட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல் -மதுரை வரை இயங்கும் பயணிகள் ரெயிலை நெல்லை வரையும், மதுரை-ஜெய்ப்பூர் வரை இயங்கும் பிகானிர் எக்ஸ்பிரஸ் ரெயிலை நெல்லை வரையும், சண்டிகர்-மதுரை வரை இயங்கும் சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரெயிலை தூத்துக்குடி வரையும், மதுரை-சென்னை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலை நெல்லையில் இருந்து புறப்படும் வகையிலும் நீட்டிக்க வேண்டும்.

    விழுப்புரம்-மதுரை பயணிகள் ரெயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும். சேலம்-கரூர்-திருச்சி வரை இயங்கும் பயணிகள் ரெயிலை திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும். போடி-மதுரை வரை இயங்கும் பயணிகள் ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.

    கோவை-மதுரை வரை இயங்கும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரசை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.

    மானாமதுரை-மன்னார்குடி வரை செல்லும் டெமு ரெயிலை விருதுநகர் சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும். விருதுநகர் -மானாமதுரை வழியாக காரைக்குடி, திருச்சி வரை செல்லும் டெமு ரெயிலை பயணிகள் ரெயிலாக மாற்றி செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்.

    செங்கோட்டை-மதுரைக்கு அதிகாலை நேரத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு புதிய இணைப்பு ரெயில் விட வேண்டும். கேரள மாநிலம் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வரை இயங்கும் சிறப்பு ரெயிலை தினசரி ரெயிலாக மாற்றி இயக்க வேண்டும்.

    குருவாயூர்-புனலூர் வரை செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட திருப்பதி-கொல்லம் விரைவு ரெயிலை உடனே இயக்க வேண்டும்.

    2018-ல் அறிவிக்கப்பட்ட தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா ரெயிலையும் காலதாமதமின்றி இயக்க வேண்டும். தாம்பரம்-திருவாரூர்-காரைக்குடி வழியாக நெல்லை சந்திப்பு வரை அறிவிக்கப்பட்ட விரைவு ரெயிலை காலதாமதமின்றி இயக்க வேண்டும்.

    நெல்லையில் இருந்து குஜராத் மாநிலம் ஜாம் நகருக்கு செல்லும் விரைவு ரெயிலை மதுரையில் இருந்து புறப்பட செய்ய வேண்டும். நெல்லையில் இருந்து பிளாஸ்பூர் வரை செல்லும் விரைவு ரெயிலை மதுரை சந்திப்பிலிருந்து இயக்க வேண்டும்.

    அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கேரளா வழியாக கன்னியாகுமரி வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலை மதுரையில் இருந்து இயக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? என்று தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • சாலை தற்போது மிகவும் சிதிலமடைந்து கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்தும், பலஇடங்களில் ஜல்லிகள் இல்லாமல் காணப்படுகிறது.
    • விவசாய விளை பொருட்களை கொண்டு செல்லவும் இந்த சாலை பயனுள்ளதாக இருந்தது.

    பூதலூர்:

    பூதலூர் ஒன்றியத்தில் உள்ள வெண்டயம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் நவலூர். நவலூர் கிராமத்தின் அருகில் உள்ள உய்யக்குண்டான் நீடிப்பு வாய்க்கால் கரையில் ராயமுண்டான்பட்டியை இணைக்கும் 2.5 கிலோமீட்டர் தூர சாலை தற்போது மிகவும் சிதிலமடைந்து கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்தும், பலஇடங்களில் ஜல்லிகள் இல்லாமல் காணப்படுகிறது.

    வெண்டயம்பட்டி, ராயமுண்டான்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து நவலூர் செல்ல இந்த சாலை பயனுள்ளதாக இருந்தது.

    மேலும் விவசாய விளை பொருட்களை கொண்டு செல்லவும் இந்த சாலை பயனுள்ளதாக இருந்தது.ஜல்லிகள் பெயர்ந்து கிடப்பதோடு மட்டும் இல்லாமல் பல இடங்களில் வாய்க்கால் கரை அரித்தோடி குண்டு குழியாக காணப்படுகிறது.

    சரியானமுறையில் இந்த சாலை இல்லாததால் நவலூர் செல்ல பல கிலோமீட்டர் தொலைவு சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    பொது மக்கள் மற்றும் விவசாய விளை பொருட்களை எடுத்து வரவசதியாக உள்ள நவலூர்-ராயமுண்டா ன்பட்டி இடையிலான உய்யக்குண்டான் நீடிப்பு வாய்க்கால் கரை சாலையை சீரமைத்து தார் சாலை அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×