search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Expectation"

    • இரவு நேரங்களில் அடிக்கடி தொடர் மின் தடை ஏற்படுகிறது.
    • மின் பாதையில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமரு கல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதிக்கு திட்டச்சேரி துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி தொடர் மின் தடை ஏற்படுகிறது.

    பல மணி நேரம் தொடரும் மின் தடையால் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவியர்கள்,முதியவர்கள், நோயாளிகள், பொதுமக்கள் என பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    குத்தாலத்திலிருந்து பனங்குடி வரை காரை மேடு வழியாக மின் விநியோகம் செய்யப்படும் மின் பாதையில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து மின்கம்பிகளின் மீது படர்ந்து கிடப்பதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகவும் அதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    • பணிகள் தொடங்கி பல மாதங்கள் ஆகியும் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளது.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அடுத்த கொத்தங்குடி ஊராட்சி சாத்தனூர் கிராமத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை ஆரம்பிக்கப்பட்டது.

    பணிகள் தொடங்கி பல மாதங்கள் ஆகியும் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளது.

    இதன் அருகில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்றும் உள்ளது.

    மாணவர்கள் ஓய்வு நேரங்களில் அவ்வழியாக செல்வதும், விளையாடுவதும் ஆக உள்ளனர்.

    எனவே, பள்ளியும் அருகில் இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

    • அறந்தாங்கியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமையுமா? என்று பொதுமக்ககள் எதிர்பார்க்கின்றனர்
    • புதுக்கோட்டை பரந்து விரிந்த மாவட்ட மாக இருப்பதால் அரசின் சலுகைகள் மக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு

    அறந்தாங்கி,

    திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை பிரித்து கடந்த 1974-ம் ஆண்டு புதுக் கோட்டை மாவட்டம் உதய மானது .புதுக்கோட்டை மாவட்ட த்தில் புதுக்கோட்டை, அறந் தாங்கி, ஆலங்குடி, திருமயம், கந்தர்வகோட்டை, விராலி மலை என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.இதில் புதுக்கோட்டை , அறந்தாங்கி ஆகிய 2 நகரா ட்சிகளும், ஆலங்குடி , இலுப்பூர், அரிமளம், கீர னூர், கறம்பக்குடி, பொன்ன மராவதி, கீரமங்களம், அன் னவாசல் ஆகிய 8 பேரூரா ட்களும்,புதுக்கோட்டை, அறந்தா ங்கி, இலுப்பூர் ஆகிய 3 வருவாய் கோட்டங்களும் மற்றும் 12 வட்டங்கள் அடங்கிய சுமார் 20 லட்சம் மக்கள் தொகையை கொண்ட பெரிய மாவட்டமாக புதுக் கோட்டை திகழ்கிறது.பரந்து விரிந்த மாவட்ட மாக இருப்பதால் அரசின் சலுகைகள் மக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்களது தேவை களை விரைந்து செயல்ப டுத்தி கொள்வும், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தவும்,மாவட்டத்தின் 2-வது பெரிய நகராட்சியை கொண்ட அறந்தாங்கியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் ஒரு குழுவாக அமைந்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வரு கின்றனர்.குறிப்பாக அறந்தாங்கி சட்டமன்ற தொகுயில் 3 தாலுகாக்களும், உதவி கலெக்டர் அலுவலகம், வேளாண் பொறியியல் துறை அலுவலகம், சுகாதார அலுவலகம், மாவட்ட தலைமை மருத்துவமனை,மாவட்டக் கல்வி அலுவல கம், ஒருங்கிணைந்த நீதிம ன்றங்கள், சிறைச்சாலை, மின்வாரிய செயற்பொறி யாளர் அலுவலகம், போக்கு வரத்து பணிமனை, பொது ப்பணித் துறை உள்ளிட்ட அநேக அலுவலகங்களும் உள்ளன. இருந்த போதிலும் மாவட்டத்தின் தலைமை யகம் புதுக்கோட்டையில் உள்ளதால் இங்கிருந்து மக்கள் தொலைதூரத்தில் சென்று மாவட்ட கலெ க்டரை சந்திக்க வேணடி்யு ள்ளது.இது குறித்து ம.ஜ.க. மனித உரிமை பாதுகாப்பு அணி மாநில செயலாளர் முபாரக் அலி கூறுகையில்,அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதி மக்கள் தங்களுடைய அடிப்படை தேவைகளுக்கு 40,50 கிலோ மீட்டர் தூர த்தில் உள்ள மாவட்ட கலெ க்டர் அலுவலகத்திற்கு சென்று வர மிகவும் சிரம த்தை சந்திக்க வேண்டி யுள்ளது.இதனால் அறந்தாங்கி நகரை தலைமையிடமாகக் கொண்டு அறந்தாங்கி மாவ ட்டம் அமைத்து தரபல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்து வருகி ன்றனர்.அப்படி அமைக்கும் பட்ச த்தில் அதற்குரிய சட்டமன்ற தொகுதிகளாக அறந்தாங்கி ஆலங்குடி தொகுதிகளை சேர்த்து அமைத்துக் கொள் ளலாம் அல்லது அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியோடு பேராவூரணி தொகுதியை இணைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.அதே போன்று சி.ஐ.டி.யு. ஒருங்கிணைப்பாளர் கர்ணா கூறுகையில், புதுக் கோட்டைக்கு நிகராக அற ந்தாங்கியிலும் மக்கள் தொகை பெருக்கம் அடை ந்துவிட்டது.ஏற்கனவே அறந்தாங்கி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனை யாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதன் கட்டமை ப்புகள் சீரமைக்கும் பணிகள் தாமதமடைந்து வருகிறது.

    இதே அறந்தாங்கி மாவட் டமாக இருந்திருந்தால் பணி கள் விரைந்து முடிக்கப்பட்டி ருக்கும், அதே போன்று அறந்தாங்கியிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவ ட்டங்களுக்கு நேரடியாக பேருந்துகள் இயக்கப்படுகி றது,ஆனால் மக்கள் தொகை பெருகியபோதிலும் பேருந்து நிலையம் இன்னும் விரி வாக்கம் செய்யப்பட வில்லை. மேலும் தற்போது ள்ள நெருக்கடியில் காவல் நிலையம் இரண்டாக பிரிக்க வேண்டும் இதெல்லாம் சாத்தியப்பட வேண்டும் என்றால் அறந்தாங்கியை தலைைமயிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார்.

    • புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர்.
    • பணிகள் தொடங்கி ஓராண்டை கடந்தும் இன்னும் பணிகள் முழுமையாக முடியவில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது. இதனால் கருவறையில் உள்ள அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர்.

    இந்த கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பா பிஷேகம் நடத்தப்பட்டது. 18 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கட்டமாக மூலவர் கோபுரம், ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களை பாலாலயம் செய்வதற்காக பாலாலய பூஜைகள் தொடங்கின.

    தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகின்றன.

    இருந்தாலும் பணிகள் தொடங்கி ஓராண்டை கடந்தும் இன்னும் பணிகள் முழுமையாக முடியவில்லை.

    குறிப்பாக ஆடி, ஆவணி மாதங்களில் மாரியமமன் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடத்தப்படும்.

    தற்போது கும்பாபிஷேகத்திற்காக பாலாலயம் செய்யப்பட்டதால் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்ப டவில்லை.

    இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    எனவே கோவில் திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலை தற்போது மிகவும் சிதிலமடைந்து கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்தும், பலஇடங்களில் ஜல்லிகள் இல்லாமல் காணப்படுகிறது.
    • விவசாய விளை பொருட்களை கொண்டு செல்லவும் இந்த சாலை பயனுள்ளதாக இருந்தது.

    பூதலூர்:

    பூதலூர் ஒன்றியத்தில் உள்ள வெண்டயம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் நவலூர். நவலூர் கிராமத்தின் அருகில் உள்ள உய்யக்குண்டான் நீடிப்பு வாய்க்கால் கரையில் ராயமுண்டான்பட்டியை இணைக்கும் 2.5 கிலோமீட்டர் தூர சாலை தற்போது மிகவும் சிதிலமடைந்து கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்தும், பலஇடங்களில் ஜல்லிகள் இல்லாமல் காணப்படுகிறது.

    வெண்டயம்பட்டி, ராயமுண்டான்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து நவலூர் செல்ல இந்த சாலை பயனுள்ளதாக இருந்தது.

    மேலும் விவசாய விளை பொருட்களை கொண்டு செல்லவும் இந்த சாலை பயனுள்ளதாக இருந்தது.ஜல்லிகள் பெயர்ந்து கிடப்பதோடு மட்டும் இல்லாமல் பல இடங்களில் வாய்க்கால் கரை அரித்தோடி குண்டு குழியாக காணப்படுகிறது.

    சரியானமுறையில் இந்த சாலை இல்லாததால் நவலூர் செல்ல பல கிலோமீட்டர் தொலைவு சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    பொது மக்கள் மற்றும் விவசாய விளை பொருட்களை எடுத்து வரவசதியாக உள்ள நவலூர்-ராயமுண்டா ன்பட்டி இடையிலான உய்யக்குண்டான் நீடிப்பு வாய்க்கால் கரை சாலையை சீரமைத்து தார் சாலை அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் கழிவு நீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    • இங்குள்ள அனைத்து கிராமங்களிலும் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியத்தில் 429 ஊராட்சிகள் உள்ளது. இங்குள்ள அனைத்து கிராமங்களிலும் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

    தமிழகத்தில் நகரங்களை போல் கிராமங்களிலும் குடியிருப்புகள் பெருகி சாலைகளும், வீதிகளும் உருவாகி வருகிறது. முறையான உள்கட்டமைப்பு திட்டமிடல் இல்லாமல் கழிவுநீர் கால்வாய்கள் இன்றி சாலைகள் அமைக்கப் படுகிறது.

    பெரும்பாலான கிராமங்களில் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கேற்ப மழை நீர், கழிவு நீர் செல்ல போதிய கால்வாய்கள் கட்டப்படவில்லை. இதனால் வீடுகள் முன்பு கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

    மழைக்காலங்களில் கொசுக்கள் உருவாகி டெங்கு உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுகிறது. கால்வாய்கள் அமைக்க அதிக அளவில் நிதி ஒதுக்கீடு தேவை என்பதால் ஊராட்சி நிர்வாகங்கள் தீர்மானங்களை மட்டும் போட்டு வைத்துக் கொண்டு தடுமாறுகின்றன.

    எனவே கால்வாய் இல்லாத கிராமங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து முறையான கால்வாய்களை அமைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு கிராம மக்களின் நீண்ட நாள் கனவை நனவாக்க முன் வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    கிராம ஊராட்சிகளில் கால்வாய் பணிகள் விரைவில் நடைபெறும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    • நன்னிலம் பகுதியை பொருத்தமட்டில் பருவமழை எதிர்பார்ப்பை பொறுத்து அமைகிறது.
    • தொழில் கூடங்கள் அமைவதற்கு வழிவகை காண வேண்டும்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதி விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்ட பகுதியாகும். படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு வேண்டி, பெருநகரங்களுக்கு சென்று விடுகின்றனர்.

    தொழில் கல்வி பயின்றவர்கள் தொழில்கள் மேற்கொள்ளும் முனையும் போது, போதுமான இட வசதிகள், அரசின் சலுகைகள், தொழில் செய்வதற்கான உரிமங்கள் பெறுவதில், தொழில் கூடங்கள் அமைப்பதில் பிரச்சினைகள் உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

    விவசாயம் என்பது நன்னிலம் பகுதியை பொருத்தமட்டில் பருவ மழை எதிர்பார்ப்பைப் பொறுத்து அமைகிறது.

    இப்பகுதி மக்களின் வருமானம் இயற்கை சூழலை ஒத்து அமைந்துள்ளதால், விவசாயம் இல்லாமல் பிற தொழில் மேற்கொள்வதற்கு மாவட்ட தொழில் மையங்கள் மூலம் தொழில் கூடங்கள் அமைத்தால் சிறுகுறு தொழில் முனைவோர் பயன்பெறுவதற்கும், தொழில் மேற்கொள்வதற்கும், ஏதுவாக அமையும் என்று கருதுகின்றனர்.

    எனவே, விளைநிலங்கள் பாதிப்பில்லாமல், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், சிறுகுரு தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில், தொழில் கூடங்கள் அமைவதற்கு வழிவகை காண வேண்டும் என்று தொழில் முனைவோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆனைமடுவு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததால், கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 24-ந் தேதி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பியது.
    • அணை முழு கொள்ளளவையும் எட்டும் என்பதால், ஆனைமடுவு அணை மற்றும் வசிஷ்டநதி ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மற்றும் கரையோர கிராம மக்களும், பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரு நூற்று மலை அடிவாரம் புழுதிக்குட்டை கிராமத்தில், வசிஷ்ட நதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகை யில், 263.86 ஏக்கர் பரப்பள வில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால் குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னமநாயக்கன்பா ளையம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    பேளூர், குறிச்சி, கொட்ட வாடி, அத்தனுார்பட்டி ஏரிகளும், 20-க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்கள் நிலத்தடி நீராதாரமும், ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதியும் பெறுகின்றன.

    16 ஆண்டுகளுக்கு பிறகு

    16 ஆண்டுகளுக்கு பிறகு ஆனைமடுவு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததால், கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 24-ந் தேதி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் 65.45 அடியில் 248.51 மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்கி வைத்துக் கொண்டு, வினாடிக்கு 110 கனஅடி வீதம் அணைக்கு வந்து கொண்டிருந்த தண்ணீர் முழுவதும் வசிஷ்டநதியில் உபரிநீராக திறந்து விடப்பட்டது. இதனால் கடந்தாண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    அணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர், புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு, வாய்க்கால் மற்றும் ஆற்றில் திறக்கப்பட்டதால், கடந்த ஆகஸ்ட் 17-ந் தேதி, அணையின் நீர்மட்டம் 41 அடியாக குறைந்து போனது. அணையில் 80.73 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே தேங்கி நிற்கிறது.

    நீர்மட்டம் உயர்ந்தது

    இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து 3 மாதமாக அவ்வப்போது பெய்து வரும் மழையால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 53 அடியாக உள்ளது. அணையில் 142 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கியுள்ளது. தற்போது வினாடிக்கு, வெறும் 5 கனஅடி தண்ணீர் மட்டுமே அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    விவசாயிகள் எதிர்பார்ப்பு

    எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை பெய்தால் தான், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, அணை முழு கொள்ளளவையும் எட்டும் என்பதால், ஆனைமடுவு அணை மற்றும் வசிஷ்டநதி ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மற்றும் கரையோர கிராம மக்களும், பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    ஆனைமடுவு அணையின் நீர்மட்டம் 52.53 அடியை எட்டியுள்ளதால், எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் பெய்யும் பருவ மழையில் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்தாண்டைப் போலவே நிகழாண்டும் அணை நிரம்புவதற்கான வாய்ப்புகள் உள்ளது என பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றும் கிராமமக்கள் எதிர்பார்ப்பு.
    • இளம் சம்பா பயிர்கள் மழையால் பாதிக்கப்பட கூடும்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் சுற்று வட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இன்று காலையில் இருந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    கிராமப் பகுதிகளில் தாழ்வான தெருக்களில் தண்ணீர் சூழ்ந்தது.

    பல இடங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறியது.

    பூதலூர் ரெயில்வே கீழ்பாலத்திலும், ஜோதி நகர், ஜான்சி நகர், பாத்திமா நகர், இந்திரா நகரில் உள்ள தெருக்களிலும் மழை நீர் தேங்கியது.

    பூதலூர் மணியார் தோட்டம் 4-வது தெருவில் மழை நீர் தேங்கி நிற்பதையும், அங்கு மின்கம்பம் சேதமான நிலையில் உள்ளதையும் பூதலூர் தாசில்தார் பெர்ஷியா, வருவாய் ஆய்வாளர் முருகானந்தம் பார்வையிட்டு மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

    கிராமப் பகுதியில் உள்ள தெருக்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருப்பதால் கொசு தொல்லை அதிகமாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு விடுகிறது.

    இதனால் உடனடியாக கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றும் கிராமமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக திருக்–காட்டுப்பள்ளி மற்றும் பூதலூர் பகுதியில் மேற்–ெகாள்ளப்பட்டு வரும் சம்பா நடவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    அதேபோல இளம் சம்பா பயிர்கள் மழையால் பாதிக்கப்பட கூடும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    தற்போது பெய்து வரும் மழை காரணமாக குறிப்பிட்ட கடைசி தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற வகையில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் உரியவாறு ஆணைகளை பிறப்பித்து சிட்டா, அடங்கல்நகல் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

    • திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
    • நாற்றுகள் பாவுவதற்கு முன்பும், நடவுப் பணிக்கு முன்பும் அடியுரமாக டிஏபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களும், மேலுரமாக பொட்டாஷ், யூரியாவும் இடப்படும்

    திருச்சி:

    தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு வழக்கத்தைவிட பருவ மழை நன்கு பெய்துள்ளது. இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதன் முழு கொள்ளளவான 120 அடியிலேயே நீடித்தது. அதேபோல் கர்நாடகாவில் பெய்த பலத்த மழையால் அங்கிருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் காவிரியிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

    தொடர்மழை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுவதாலும் திருச்சி மாவட்டத்தில் இந்தாண்டு சம்பா சாகுபடி 50 ஆயிரம் ஹெக்டேராக ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். அதற்கான ஆயத்த பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

    குறிப்பாக திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் உள்ள அன்பில் நகர், கல்லிக்குடி, மாந்துரை, அபிஷேகபுரம், கூகூர், தண்ணியம், முள்ளால், செம்பரை, காட்டூர், பூவாளூர், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் மண்ணச்சநல்லூர், நொச்சியம், கிளியநல்லூர், எதுமலை,

    மணிகண்டம் வட்டத்தில் நவலூர் குட்டப்பட்டு, பூங்குடி, மணிகண்டம், திருவெறும்பூர் வட்டத்தில் வேங்கூர், கீழகல்கண்டார் கோட்டை, முசிறி வட்டத்தில் அய்ய ம்பாளையம், குணசீலம், புத்தனாம்பட்டி, தொட்டியம் வட்டத்தில் காட்டுப்புத்தர், தொட்டியம், உப்பிலியபுரம் வட்டத்தில் எரகுடி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக சம்பா சாகுபடிக்கான பணிகள் தொடங்கியுள்ளன.

    நாற்றுகள் பாவுவதற்கு முன்பும், நடவுப் பணிக்கு முன்பும் அடியுரமாக டிஏபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களும், மேலுரமாக பொட்டாஷ், யூரியாவும் இடப்படும். ஆனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொடக்க வேளர்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் போதுமான அளவுக்கு உரங்கள் இல்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதனை கண்டித்தும், போதிய அளவு உரங்கள் வழங்கவும் வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு காலி உர சாக்குகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தாண்டு நல்ல பெய்து வருவதாலும், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்ந்து வருவதாலும் சம்பா சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 45 ஆயிரம் ஹெக்டேர் வரையில் சம்பா சாகுபடி நடைபெறும் என வேளாண்மைத்துறையினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முருகேசன் கூறுகையில், மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டு சம்பாவுக்கும் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மழையும் பரவலாக பெய்து வருவதால் சம்பா சாகுபடி பரப்பு வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிகரிக்கும், விவசாயிகளுக்கு விதை கிராமத் திட்டத்தின் மூலம் 20 கிலோ சான்றளிக்கப்பட்ட விதைகள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கி வருகிறோம்.

    திருச்சி-3 கோ.ஆர்.50, டி.கே.எம்.13, விஐடி1 ஆகிய நெல் ரகங்கள் உயிர் உரங்கள் வழங்கப்படுவதுடன் விதை நேர்த்தி செய்து வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு 330 மெட்ரிக் டன் விதைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 50 சதவீத விதைகள் பல்வேறு மானியத் திட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து விவசாயிகளின் தேவையறிந்து அவற்றை பூர்த்தி செய்ய அந்தந்த வட்டார வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி மகசூலை பெருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார். 

    • குறைந்தபட்சம் 3 கட்ட பதவி உயர்வு பெறுவது அவர்களுடைய பணித்தன்மையில் மாற்றத்தை உருவாக்கி, அவர்களுக்கான மனச்சோர்வை நீக்குவதாகவும் இருக்கும்.
    • உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உரிய பதவி உயர்வு வாய்ப்புகளை உருவாக்கி வழங்கிட வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் திறப்புவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் அ.தி.அன்பழகன், மாநில துணைத் தலைவர் பி.நல்லத்தம்பி மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

    அதில் 5.8.11 முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டு வரும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன்படி தமிழகத்தில், உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் கீழ், உணவு பாதுகாப்பு பிரிவில், உணவு பாதுகாப்பு அலுவலர்களாக நாங்கள் பணிபுந்து வருகிறோம்.

    ஒவ்வொரு அரசு ஊழியரும் தம்முடைய பணிக்காலத்தில் குறைந்த பட்சம் 3 கட்ட பதவி உயர்வு பெறுவது, அவர்களுடைய பணித் தன்மையில் மாற்றத்தை உருவாக்கி, அவர்களுக்கான மனச்சோர்வை நீக்குவ தாகவும் இருக்கும்.

    இது குறித்து தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டில் 5.4.22 அன்று பங்கேற்று சிறப்புரையாற்றிய அமைச்சர் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உரிய பதிவு உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமான கோரிக்கை.

    இது குறித்து அரசு பரிசீலித்து, விரைவில் தக்க முடிவெடுத்து, பதவி உயர்வு வழங்கும் " என்று உறுதியளித்தார். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எந்தவொரு பதவி உயர்வும் இல்லாமல் பணியாற்றி, அரசுப் பணியை நிறைவுசெ ய்யவுள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு, உரிய பதவி உயர்வு வாய்ப்புகளை உருவாக்கி, அவற்றை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் முதன்மைச் செயல் அலுவலர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலா ளர் ஆகியோர் பரிந்துரை ப்படியும், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்ட விதிகளின்படியும், பல்வேறு மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ளது போலவும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உரிய பதவி உயர்வு வாய்ப்புகளை உருவாக்கி வழங்கிட வேண்டும்.

    உணவு கலப்பட தடுப்புச் சட்டம் 1954-ன்படி உணவு ஆய்வாளர் பயிற்சி முடித்து, உணவு ஆய்வாளராக பணியாற்றி, பின்னர் 5.8.2011 முதல் நடைமுறைக்கு வந்துள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன்படி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பயிற்சியும் பெற்று, உணவு பாதுகாப்பு அலுவலர்களாக கடந்த 11 ஆண்டுகள் பணியை முடித்துள்ளோம்.

    உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விதிகளின்படி உரிய தகுதிகள் பெற்றிருந்தும் கடந்த காலத்தில் எதிர்பார்ப்பை நிறைவேற்றாததால் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கப்படாமல் இருந்ததை மாற்றி பணிப் பாதுகாப்பு உத்தரவை வழங்கிய அமைச்சர் எந்தவொரு பதவி உயர்வும் இல்லாமல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அரசுப் பணியை நிறைவு செய்யும் நிலையை போக்கி, உரிய பதவி உயர்வு வாய்ப்புக்களை உருவாக்கி, வழங்கிட வேண்டும்

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

    .நாகைமாலி எம்.எல்.ஏ உணவுபாதுகாப்பு அலுவலர்கள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து உரிய உத்தரவுகளை வழங்க அமைச்சரை கேட்டுக்கொண்டார்.

    • கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக நடத்தப்படாமல் இருந்தது.
    • இந்த ஆண்டு சீசன் இருக்கும்பொழுதே சாரல் திருவிழா நடத்த ப்படுமா என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகளிடையே எழுந்துள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை போதிய அளவு இல்லாததால் அருவிகளில் நீர்வரத்து சற்று குறைந்துள்ளது.

    இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்தே காணப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக நடத்தப்படாமல் இருந்து வந்த சாரல் திருவிழா இந்த ஆண்டு அரசு சார்பில் கோலாகலமாக நடத்தப்படும் என பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில் அருவி களுக்கு தண்ணீர் வரத்து குறைய தொடங்கியுள்ளதால் சீசன் இருக்கும்பொழுதே சாரல் திருவிழா நடத்த ப்படுமா என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகளிடையே எழுந்துள்ளது.

    ×