என் மலர்
நீங்கள் தேடியது "Expectation"
- சாலை தற்போது மிகவும் சிதிலமடைந்து கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்தும், பலஇடங்களில் ஜல்லிகள் இல்லாமல் காணப்படுகிறது.
- விவசாய விளை பொருட்களை கொண்டு செல்லவும் இந்த சாலை பயனுள்ளதாக இருந்தது.
பூதலூர்:
பூதலூர் ஒன்றியத்தில் உள்ள வெண்டயம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் நவலூர். நவலூர் கிராமத்தின் அருகில் உள்ள உய்யக்குண்டான் நீடிப்பு வாய்க்கால் கரையில் ராயமுண்டான்பட்டியை இணைக்கும் 2.5 கிலோமீட்டர் தூர சாலை தற்போது மிகவும் சிதிலமடைந்து கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்தும், பலஇடங்களில் ஜல்லிகள் இல்லாமல் காணப்படுகிறது.
வெண்டயம்பட்டி, ராயமுண்டான்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து நவலூர் செல்ல இந்த சாலை பயனுள்ளதாக இருந்தது.
மேலும் விவசாய விளை பொருட்களை கொண்டு செல்லவும் இந்த சாலை பயனுள்ளதாக இருந்தது.ஜல்லிகள் பெயர்ந்து கிடப்பதோடு மட்டும் இல்லாமல் பல இடங்களில் வாய்க்கால் கரை அரித்தோடி குண்டு குழியாக காணப்படுகிறது.
சரியானமுறையில் இந்த சாலை இல்லாததால் நவலூர் செல்ல பல கிலோமீட்டர் தொலைவு சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பொது மக்கள் மற்றும் விவசாய விளை பொருட்களை எடுத்து வரவசதியாக உள்ள நவலூர்-ராயமுண்டா ன்பட்டி இடையிலான உய்யக்குண்டான் நீடிப்பு வாய்க்கால் கரை சாலையை சீரமைத்து தார் சாலை அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் கழிவு நீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- இங்குள்ள அனைத்து கிராமங்களிலும் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியத்தில் 429 ஊராட்சிகள் உள்ளது. இங்குள்ள அனைத்து கிராமங்களிலும் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
தமிழகத்தில் நகரங்களை போல் கிராமங்களிலும் குடியிருப்புகள் பெருகி சாலைகளும், வீதிகளும் உருவாகி வருகிறது. முறையான உள்கட்டமைப்பு திட்டமிடல் இல்லாமல் கழிவுநீர் கால்வாய்கள் இன்றி சாலைகள் அமைக்கப் படுகிறது.
பெரும்பாலான கிராமங்களில் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கேற்ப மழை நீர், கழிவு நீர் செல்ல போதிய கால்வாய்கள் கட்டப்படவில்லை. இதனால் வீடுகள் முன்பு கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
மழைக்காலங்களில் கொசுக்கள் உருவாகி டெங்கு உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுகிறது. கால்வாய்கள் அமைக்க அதிக அளவில் நிதி ஒதுக்கீடு தேவை என்பதால் ஊராட்சி நிர்வாகங்கள் தீர்மானங்களை மட்டும் போட்டு வைத்துக் கொண்டு தடுமாறுகின்றன.
எனவே கால்வாய் இல்லாத கிராமங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து முறையான கால்வாய்களை அமைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு கிராம மக்களின் நீண்ட நாள் கனவை நனவாக்க முன் வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கிராம ஊராட்சிகளில் கால்வாய் பணிகள் விரைவில் நடைபெறும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
- நன்னிலம் பகுதியை பொருத்தமட்டில் பருவமழை எதிர்பார்ப்பை பொறுத்து அமைகிறது.
- தொழில் கூடங்கள் அமைவதற்கு வழிவகை காண வேண்டும்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதி விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்ட பகுதியாகும். படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு வேண்டி, பெருநகரங்களுக்கு சென்று விடுகின்றனர்.
தொழில் கல்வி பயின்றவர்கள் தொழில்கள் மேற்கொள்ளும் முனையும் போது, போதுமான இட வசதிகள், அரசின் சலுகைகள், தொழில் செய்வதற்கான உரிமங்கள் பெறுவதில், தொழில் கூடங்கள் அமைப்பதில் பிரச்சினைகள் உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.
விவசாயம் என்பது நன்னிலம் பகுதியை பொருத்தமட்டில் பருவ மழை எதிர்பார்ப்பைப் பொறுத்து அமைகிறது.
இப்பகுதி மக்களின் வருமானம் இயற்கை சூழலை ஒத்து அமைந்துள்ளதால், விவசாயம் இல்லாமல் பிற தொழில் மேற்கொள்வதற்கு மாவட்ட தொழில் மையங்கள் மூலம் தொழில் கூடங்கள் அமைத்தால் சிறுகுறு தொழில் முனைவோர் பயன்பெறுவதற்கும், தொழில் மேற்கொள்வதற்கும், ஏதுவாக அமையும் என்று கருதுகின்றனர்.
எனவே, விளைநிலங்கள் பாதிப்பில்லாமல், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், சிறுகுரு தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில், தொழில் கூடங்கள் அமைவதற்கு வழிவகை காண வேண்டும் என்று தொழில் முனைவோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆனைமடுவு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததால், கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 24-ந் தேதி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பியது.
- அணை முழு கொள்ளளவையும் எட்டும் என்பதால், ஆனைமடுவு அணை மற்றும் வசிஷ்டநதி ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மற்றும் கரையோர கிராம மக்களும், பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரு நூற்று மலை அடிவாரம் புழுதிக்குட்டை கிராமத்தில், வசிஷ்ட நதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகை யில், 263.86 ஏக்கர் பரப்பள வில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால் குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னமநாயக்கன்பா ளையம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பேளூர், குறிச்சி, கொட்ட வாடி, அத்தனுார்பட்டி ஏரிகளும், 20-க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்கள் நிலத்தடி நீராதாரமும், ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதியும் பெறுகின்றன.
16 ஆண்டுகளுக்கு பிறகு
16 ஆண்டுகளுக்கு பிறகு ஆனைமடுவு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததால், கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 24-ந் தேதி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் 65.45 அடியில் 248.51 மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்கி வைத்துக் கொண்டு, வினாடிக்கு 110 கனஅடி வீதம் அணைக்கு வந்து கொண்டிருந்த தண்ணீர் முழுவதும் வசிஷ்டநதியில் உபரிநீராக திறந்து விடப்பட்டது. இதனால் கடந்தாண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர், புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு, வாய்க்கால் மற்றும் ஆற்றில் திறக்கப்பட்டதால், கடந்த ஆகஸ்ட் 17-ந் தேதி, அணையின் நீர்மட்டம் 41 அடியாக குறைந்து போனது. அணையில் 80.73 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே தேங்கி நிற்கிறது.
நீர்மட்டம் உயர்ந்தது
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து 3 மாதமாக அவ்வப்போது பெய்து வரும் மழையால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 53 அடியாக உள்ளது. அணையில் 142 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கியுள்ளது. தற்போது வினாடிக்கு, வெறும் 5 கனஅடி தண்ணீர் மட்டுமே அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
விவசாயிகள் எதிர்பார்ப்பு
எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை பெய்தால் தான், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, அணை முழு கொள்ளளவையும் எட்டும் என்பதால், ஆனைமடுவு அணை மற்றும் வசிஷ்டநதி ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மற்றும் கரையோர கிராம மக்களும், பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆனைமடுவு அணையின் நீர்மட்டம் 52.53 அடியை எட்டியுள்ளதால், எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் பெய்யும் பருவ மழையில் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்தாண்டைப் போலவே நிகழாண்டும் அணை நிரம்புவதற்கான வாய்ப்புகள் உள்ளது என பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றும் கிராமமக்கள் எதிர்பார்ப்பு.
- இளம் சம்பா பயிர்கள் மழையால் பாதிக்கப்பட கூடும்.
பூதலூர்:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் சுற்று வட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இன்று காலையில் இருந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
கிராமப் பகுதிகளில் தாழ்வான தெருக்களில் தண்ணீர் சூழ்ந்தது.
பல இடங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறியது.
பூதலூர் ரெயில்வே கீழ்பாலத்திலும், ஜோதி நகர், ஜான்சி நகர், பாத்திமா நகர், இந்திரா நகரில் உள்ள தெருக்களிலும் மழை நீர் தேங்கியது.
பூதலூர் மணியார் தோட்டம் 4-வது தெருவில் மழை நீர் தேங்கி நிற்பதையும், அங்கு மின்கம்பம் சேதமான நிலையில் உள்ளதையும் பூதலூர் தாசில்தார் பெர்ஷியா, வருவாய் ஆய்வாளர் முருகானந்தம் பார்வையிட்டு மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
கிராமப் பகுதியில் உள்ள தெருக்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருப்பதால் கொசு தொல்லை அதிகமாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு விடுகிறது.
இதனால் உடனடியாக கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றும் கிராமமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக திருக்–காட்டுப்பள்ளி மற்றும் பூதலூர் பகுதியில் மேற்–ெகாள்ளப்பட்டு வரும் சம்பா நடவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல இளம் சம்பா பயிர்கள் மழையால் பாதிக்கப்பட கூடும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது பெய்து வரும் மழை காரணமாக குறிப்பிட்ட கடைசி தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற வகையில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் உரியவாறு ஆணைகளை பிறப்பித்து சிட்டா, அடங்கல்நகல் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
- திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
- நாற்றுகள் பாவுவதற்கு முன்பும், நடவுப் பணிக்கு முன்பும் அடியுரமாக டிஏபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களும், மேலுரமாக பொட்டாஷ், யூரியாவும் இடப்படும்
திருச்சி:
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு வழக்கத்தைவிட பருவ மழை நன்கு பெய்துள்ளது. இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதன் முழு கொள்ளளவான 120 அடியிலேயே நீடித்தது. அதேபோல் கர்நாடகாவில் பெய்த பலத்த மழையால் அங்கிருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் காவிரியிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
தொடர்மழை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுவதாலும் திருச்சி மாவட்டத்தில் இந்தாண்டு சம்பா சாகுபடி 50 ஆயிரம் ஹெக்டேராக ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். அதற்கான ஆயத்த பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்கள்.
குறிப்பாக திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் உள்ள அன்பில் நகர், கல்லிக்குடி, மாந்துரை, அபிஷேகபுரம், கூகூர், தண்ணியம், முள்ளால், செம்பரை, காட்டூர், பூவாளூர், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் மண்ணச்சநல்லூர், நொச்சியம், கிளியநல்லூர், எதுமலை,
மணிகண்டம் வட்டத்தில் நவலூர் குட்டப்பட்டு, பூங்குடி, மணிகண்டம், திருவெறும்பூர் வட்டத்தில் வேங்கூர், கீழகல்கண்டார் கோட்டை, முசிறி வட்டத்தில் அய்ய ம்பாளையம், குணசீலம், புத்தனாம்பட்டி, தொட்டியம் வட்டத்தில் காட்டுப்புத்தர், தொட்டியம், உப்பிலியபுரம் வட்டத்தில் எரகுடி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக சம்பா சாகுபடிக்கான பணிகள் தொடங்கியுள்ளன.
நாற்றுகள் பாவுவதற்கு முன்பும், நடவுப் பணிக்கு முன்பும் அடியுரமாக டிஏபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களும், மேலுரமாக பொட்டாஷ், யூரியாவும் இடப்படும். ஆனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொடக்க வேளர்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் போதுமான அளவுக்கு உரங்கள் இல்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனை கண்டித்தும், போதிய அளவு உரங்கள் வழங்கவும் வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு காலி உர சாக்குகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தாண்டு நல்ல பெய்து வருவதாலும், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்ந்து வருவதாலும் சம்பா சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 45 ஆயிரம் ஹெக்டேர் வரையில் சம்பா சாகுபடி நடைபெறும் என வேளாண்மைத்துறையினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முருகேசன் கூறுகையில், மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டு சம்பாவுக்கும் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மழையும் பரவலாக பெய்து வருவதால் சம்பா சாகுபடி பரப்பு வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிகரிக்கும், விவசாயிகளுக்கு விதை கிராமத் திட்டத்தின் மூலம் 20 கிலோ சான்றளிக்கப்பட்ட விதைகள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கி வருகிறோம்.
திருச்சி-3 கோ.ஆர்.50, டி.கே.எம்.13, விஐடி1 ஆகிய நெல் ரகங்கள் உயிர் உரங்கள் வழங்கப்படுவதுடன் விதை நேர்த்தி செய்து வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு 330 மெட்ரிக் டன் விதைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 50 சதவீத விதைகள் பல்வேறு மானியத் திட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து விவசாயிகளின் தேவையறிந்து அவற்றை பூர்த்தி செய்ய அந்தந்த வட்டார வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி மகசூலை பெருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.
- குறைந்தபட்சம் 3 கட்ட பதவி உயர்வு பெறுவது அவர்களுடைய பணித்தன்மையில் மாற்றத்தை உருவாக்கி, அவர்களுக்கான மனச்சோர்வை நீக்குவதாகவும் இருக்கும்.
- உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உரிய பதவி உயர்வு வாய்ப்புகளை உருவாக்கி வழங்கிட வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் திறப்புவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் அ.தி.அன்பழகன், மாநில துணைத் தலைவர் பி.நல்லத்தம்பி மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அதில் 5.8.11 முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டு வரும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன்படி தமிழகத்தில், உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் கீழ், உணவு பாதுகாப்பு பிரிவில், உணவு பாதுகாப்பு அலுவலர்களாக நாங்கள் பணிபுந்து வருகிறோம்.
ஒவ்வொரு அரசு ஊழியரும் தம்முடைய பணிக்காலத்தில் குறைந்த பட்சம் 3 கட்ட பதவி உயர்வு பெறுவது, அவர்களுடைய பணித் தன்மையில் மாற்றத்தை உருவாக்கி, அவர்களுக்கான மனச்சோர்வை நீக்குவ தாகவும் இருக்கும்.
இது குறித்து தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டில் 5.4.22 அன்று பங்கேற்று சிறப்புரையாற்றிய அமைச்சர் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உரிய பதிவு உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமான கோரிக்கை.
இது குறித்து அரசு பரிசீலித்து, விரைவில் தக்க முடிவெடுத்து, பதவி உயர்வு வழங்கும் " என்று உறுதியளித்தார். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எந்தவொரு பதவி உயர்வும் இல்லாமல் பணியாற்றி, அரசுப் பணியை நிறைவுசெ ய்யவுள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு, உரிய பதவி உயர்வு வாய்ப்புகளை உருவாக்கி, அவற்றை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் முதன்மைச் செயல் அலுவலர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலா ளர் ஆகியோர் பரிந்துரை ப்படியும், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்ட விதிகளின்படியும், பல்வேறு மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ளது போலவும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உரிய பதவி உயர்வு வாய்ப்புகளை உருவாக்கி வழங்கிட வேண்டும்.
உணவு கலப்பட தடுப்புச் சட்டம் 1954-ன்படி உணவு ஆய்வாளர் பயிற்சி முடித்து, உணவு ஆய்வாளராக பணியாற்றி, பின்னர் 5.8.2011 முதல் நடைமுறைக்கு வந்துள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன்படி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பயிற்சியும் பெற்று, உணவு பாதுகாப்பு அலுவலர்களாக கடந்த 11 ஆண்டுகள் பணியை முடித்துள்ளோம்.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விதிகளின்படி உரிய தகுதிகள் பெற்றிருந்தும் கடந்த காலத்தில் எதிர்பார்ப்பை நிறைவேற்றாததால் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கப்படாமல் இருந்ததை மாற்றி பணிப் பாதுகாப்பு உத்தரவை வழங்கிய அமைச்சர் எந்தவொரு பதவி உயர்வும் இல்லாமல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அரசுப் பணியை நிறைவு செய்யும் நிலையை போக்கி, உரிய பதவி உயர்வு வாய்ப்புக்களை உருவாக்கி, வழங்கிட வேண்டும்
இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
.நாகைமாலி எம்.எல்.ஏ உணவுபாதுகாப்பு அலுவலர்கள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து உரிய உத்தரவுகளை வழங்க அமைச்சரை கேட்டுக்கொண்டார்.
- கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக நடத்தப்படாமல் இருந்தது.
- இந்த ஆண்டு சீசன் இருக்கும்பொழுதே சாரல் திருவிழா நடத்த ப்படுமா என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகளிடையே எழுந்துள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை போதிய அளவு இல்லாததால் அருவிகளில் நீர்வரத்து சற்று குறைந்துள்ளது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்தே காணப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக நடத்தப்படாமல் இருந்து வந்த சாரல் திருவிழா இந்த ஆண்டு அரசு சார்பில் கோலாகலமாக நடத்தப்படும் என பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அருவி களுக்கு தண்ணீர் வரத்து குறைய தொடங்கியுள்ளதால் சீசன் இருக்கும்பொழுதே சாரல் திருவிழா நடத்த ப்படுமா என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகளிடையே எழுந்துள்ளது.
- நெல்லை-தென்காசி மாவட்ட மக்கள் இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்றவேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
- நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெறுவதால் ஆங்காங்கே பள்ளங்கள், மண் குவியல்கள் வைக்கப்பட்டு உள்ளது.
தென்காசி:
நெல்லை-தென்காசி இடையேயான சாலை 2 மாவட்டங்களை மட்டுமல்லாது இரு மாநிலங்களை இணைக்கும் மிக முக்கிய நெடுஞ்சாலையாகும்.
கோவில்கள்
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தென்காசி மற்றும் கேரளா செல்லும் வாகனங்கள் இந்த சாலையில் தான் செல்கிறது. மேலும் சிமெண்ட், மரம், ஓடு, காய்கறிகள் உள்ளிட்ட வையும் அதிக அளவில் இந்த சாலை வழியாக தான் வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது.
குற்றாலம் மற்றும் அதை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில், பண்பொழி குமாரசுவாமி கோவில், கேரளாவில் உள்ள அச்சன்கோவில், சபரிமலை போன்ற ஆன்மீக தலங்களுக்கு செல்பவர்களும் இந்த சாலையை தான் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
ரூ.430.71 கோடி
மேலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், ராணி அண்ணா கல்லூரி மற்றும் பல்வேறு தனியார் பொறியியல், தொழில்நுட்பம், கலை கல்லூரிகளும், பள்ளிக்கூடங்களும் இந்த சாலையில் அமைந்துள்ளதால் எப்போதுமே பரபரப்பாக காணப்படுகிறது.
நெல்லை-தென்காசி மாவட்ட மக்கள் இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்றவேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.430.71 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை முடிப்பதற்கு வருகிற ஆகஸ்ட் மாதம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
விபத்துகள்
இந்த சாலையில் பெரும்பாலும் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவற்றில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெறுவதால் ஆங்காங்கே பள்ளங்கள், மண் குவியல்கள் வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி விடுகின்றனர்.
எனவே போதுமான எச்சரிக்கை பலகைகள், வழிகாட்டி பலகைகள், இரவில் எச்சரிக்கை செய்யும் விளக்குகள், வாகனங்கள் செல்லும் பகுதியையும் பணிகள் நடக்கும் பகுதியையும் பிரிக்கும் வகையில் தடுப்புகள் அதிக அளவில் வைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதிவேக பஸ்கள்
தார் சாலையின் இருபுறமும் ஒரே நேரத்தில் பள்ளம் தோண்டி சாலை அமைக்கப்படும் பணிகள் நடைபெறுவதால் சாலையின் அகலம் குறைவு காரணமாக வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.
சாலை பணிகள் நடைபெறும் பகுதியில் வாகனங்கள் மாற்று பாதையில் செல்வதற்கு சரியான முறையில் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு உள்ளது.
புலம்பல்
மேலும் ஒரு நாளைக்கு குறைந்தது 3 விபத்துகளாவது ஏற்படுகிறது. உயிர் சேதம், பொருள் சேதம் என பல்வேறு இழப்புகள் ஏற்படுகிறது. நேற்று கீழப்பாவூர் யூனியன் அலுவலகம் அருகே தென்காசியில் இருந்து நெல்லை சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. ஆனால் மிகப்பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து பஸ் டிரைவர்களிடம் கேட்டால், தாமதமாக சென்றால் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாயும். இதனால் அலுவலக நடவடிக்கைகளுக்கு பயந்து நாங்கள் இவ்வாறு குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்றடைய வேண்டியுள்ளது என்று புலம்புகின்றனர்.
இந்த சாலை விபத்துகள் குறித்து சமூக ஆர்வலர் பாவூர்சத்திரம் பாண்டியராஜா கூறுகையில், நெல்லை-தென்காசி நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அனைத்து துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
- செங்கோட்டையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் ரெயிலானது, மதுரை ரெயில் நிலையத்தை 10.35 மணிக்கு சென்றடையும். அதைப்போல திண்டுக்கல் ரெயில் நிலையத்தில், திண்டுக்கல் மயிலாடுதுறை ரெயில் 11.30 மணிக்கு புறப்படும்.
- செங்கோட்டை- மயிலாடுதுறை ரெயிலை உடனடியாக இயக்க தென்னக ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி:
நெல்லையில் இருந்து மதுரை வழியாக செல்லும் ஈரோடு, மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் முக்கியமான ெரயில் ஆகும்.
2 ரெயில்களாக பிரிப்பு
கொரோனா காலத்திற்கு முன்பாக இந்த ரெயில் நெல்லையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கலில் 2 ெரயிலாக பிரிக்கப்பட்டு ஒரு ெரயில் திருச்சி, தஞ்சாவூா் வழியாக மயிலாடுதுறைக்கும், மற்றொரு ரெயில் ஈரோடுக்கும் சென்றது.
ரெயில்வே வாரியத்தின் உத்தரவின்படி இணைப்பு ரெயில்கள் அனைத்தையும் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
ஈரோடு - நெல்லை
எனவே தற்போது நெல்லையில் இருந்து ஈரோடு செல்லும் ரெயில் தனி ரெயில் சேவையாகவும், திண்டுக்கல்லில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரெயில் தனி ரெயில் சேவையாகவும் இயக்கப்பட உள்ளது. இதில் ஈரோடு - நெல்லை, மயிலாடுதுறை - திண்டுக்கல் ரெயில்கள் வருகிற 11-ந் தேதி முதலும், திண்டுக்கல்- மயிலாடுதுறை ரெயில் 12-ம் தேதியும், நெல்லை- ஈரோடு ரெயில் 13-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
புதிய எக்ஸ்பிரஸ்
இந்நிலையில் தென்காசி மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு செல்லும் ரெயிலை திண்டுக்கல்-மயிலாடுதுறை ரெயிலோடு இணைத்து செங்கோட்டை -மயிலாடு துறை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ரெயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. செங்கோட்டையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் ரெயிலானது, மதுரை ரெயில் நிலையத்தை 10.35 மணிக்கு சென்றடையும். அதைப்போல திண்டுக்கல் ரெயில் நிலையத்தில், திண்டுக்கல் மயிலாடுதுறை ரெயில் 11.30 மணிக்கு புறப்படும்.
இவ்விரு ரெயில்களின் நேரங்களும் இணைப்புக்கு ஒத்துப் போவதால் செங்கோட்டை- மதுரை ரெயிலை மயிலாடுதுறை வரை நீட்டிப்பு செய்யலாம். அதைப்போல மதியம் 11.25 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை -திண்டுக்கல் ரெயிலானது, திண்டுக்கல் ரெயில் நிலையத்தை மாலை 4 மணிக்கு சென்றடையும்.
அதைப்போல மதுரை- செங்கோட்டை ரெயில் மதுரையில் இருந்து மாலை 5.10- க்கு புறப்படும் என்பதால் மயிலாடுதுறை -திண்டுக்கல் ரெயிலை மதுரை- செங்கோட்டை ரெயில் உடன் இணைத்து இயக்குவது எளிது.
இந்த ரெயில் இயக்கு வதற்கு கூடுதல் ரெயில் பெட்டிகள் தேவை யில்லை. மேலும் தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு புதிய பகல்நேர இணைப்பு கிடைக்கும். எனவே செங்கோட்டை- மயிலாடுதுறை ரெயிலை உடனடியாக இயக்க தென்னக ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.