search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூதலூர்-வெண்டயம்பட்டி பழுதான சாலை சீரமைக்கப்படுமா?
    X

    ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கும் நவலூர்-ராயமுண்டான்பட்டி சாலை.

    பூதலூர்-வெண்டயம்பட்டி பழுதான சாலை சீரமைக்கப்படுமா?

    • சாலை தற்போது மிகவும் சிதிலமடைந்து கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்தும், பலஇடங்களில் ஜல்லிகள் இல்லாமல் காணப்படுகிறது.
    • விவசாய விளை பொருட்களை கொண்டு செல்லவும் இந்த சாலை பயனுள்ளதாக இருந்தது.

    பூதலூர்:

    பூதலூர் ஒன்றியத்தில் உள்ள வெண்டயம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் நவலூர். நவலூர் கிராமத்தின் அருகில் உள்ள உய்யக்குண்டான் நீடிப்பு வாய்க்கால் கரையில் ராயமுண்டான்பட்டியை இணைக்கும் 2.5 கிலோமீட்டர் தூர சாலை தற்போது மிகவும் சிதிலமடைந்து கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்தும், பலஇடங்களில் ஜல்லிகள் இல்லாமல் காணப்படுகிறது.

    வெண்டயம்பட்டி, ராயமுண்டான்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து நவலூர் செல்ல இந்த சாலை பயனுள்ளதாக இருந்தது.

    மேலும் விவசாய விளை பொருட்களை கொண்டு செல்லவும் இந்த சாலை பயனுள்ளதாக இருந்தது.ஜல்லிகள் பெயர்ந்து கிடப்பதோடு மட்டும் இல்லாமல் பல இடங்களில் வாய்க்கால் கரை அரித்தோடி குண்டு குழியாக காணப்படுகிறது.

    சரியானமுறையில் இந்த சாலை இல்லாததால் நவலூர் செல்ல பல கிலோமீட்டர் தொலைவு சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    பொது மக்கள் மற்றும் விவசாய விளை பொருட்களை எடுத்து வரவசதியாக உள்ள நவலூர்-ராயமுண்டா ன்பட்டி இடையிலான உய்யக்குண்டான் நீடிப்பு வாய்க்கால் கரை சாலையை சீரமைத்து தார் சாலை அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×