search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறந்தாங்கியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் ?
    X

    அறந்தாங்கியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் ?

    • அறந்தாங்கியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமையுமா? என்று பொதுமக்ககள் எதிர்பார்க்கின்றனர்
    • புதுக்கோட்டை பரந்து விரிந்த மாவட்ட மாக இருப்பதால் அரசின் சலுகைகள் மக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு

    அறந்தாங்கி,

    திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை பிரித்து கடந்த 1974-ம் ஆண்டு புதுக் கோட்டை மாவட்டம் உதய மானது .புதுக்கோட்டை மாவட்ட த்தில் புதுக்கோட்டை, அறந் தாங்கி, ஆலங்குடி, திருமயம், கந்தர்வகோட்டை, விராலி மலை என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.இதில் புதுக்கோட்டை , அறந்தாங்கி ஆகிய 2 நகரா ட்சிகளும், ஆலங்குடி , இலுப்பூர், அரிமளம், கீர னூர், கறம்பக்குடி, பொன்ன மராவதி, கீரமங்களம், அன் னவாசல் ஆகிய 8 பேரூரா ட்களும்,புதுக்கோட்டை, அறந்தா ங்கி, இலுப்பூர் ஆகிய 3 வருவாய் கோட்டங்களும் மற்றும் 12 வட்டங்கள் அடங்கிய சுமார் 20 லட்சம் மக்கள் தொகையை கொண்ட பெரிய மாவட்டமாக புதுக் கோட்டை திகழ்கிறது.பரந்து விரிந்த மாவட்ட மாக இருப்பதால் அரசின் சலுகைகள் மக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்களது தேவை களை விரைந்து செயல்ப டுத்தி கொள்வும், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தவும்,மாவட்டத்தின் 2-வது பெரிய நகராட்சியை கொண்ட அறந்தாங்கியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் ஒரு குழுவாக அமைந்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வரு கின்றனர்.குறிப்பாக அறந்தாங்கி சட்டமன்ற தொகுயில் 3 தாலுகாக்களும், உதவி கலெக்டர் அலுவலகம், வேளாண் பொறியியல் துறை அலுவலகம், சுகாதார அலுவலகம், மாவட்ட தலைமை மருத்துவமனை,மாவட்டக் கல்வி அலுவல கம், ஒருங்கிணைந்த நீதிம ன்றங்கள், சிறைச்சாலை, மின்வாரிய செயற்பொறி யாளர் அலுவலகம், போக்கு வரத்து பணிமனை, பொது ப்பணித் துறை உள்ளிட்ட அநேக அலுவலகங்களும் உள்ளன. இருந்த போதிலும் மாவட்டத்தின் தலைமை யகம் புதுக்கோட்டையில் உள்ளதால் இங்கிருந்து மக்கள் தொலைதூரத்தில் சென்று மாவட்ட கலெ க்டரை சந்திக்க வேணடி்யு ள்ளது.இது குறித்து ம.ஜ.க. மனித உரிமை பாதுகாப்பு அணி மாநில செயலாளர் முபாரக் அலி கூறுகையில்,அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதி மக்கள் தங்களுடைய அடிப்படை தேவைகளுக்கு 40,50 கிலோ மீட்டர் தூர த்தில் உள்ள மாவட்ட கலெ க்டர் அலுவலகத்திற்கு சென்று வர மிகவும் சிரம த்தை சந்திக்க வேண்டி யுள்ளது.இதனால் அறந்தாங்கி நகரை தலைமையிடமாகக் கொண்டு அறந்தாங்கி மாவ ட்டம் அமைத்து தரபல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்து வருகி ன்றனர்.அப்படி அமைக்கும் பட்ச த்தில் அதற்குரிய சட்டமன்ற தொகுதிகளாக அறந்தாங்கி ஆலங்குடி தொகுதிகளை சேர்த்து அமைத்துக் கொள் ளலாம் அல்லது அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியோடு பேராவூரணி தொகுதியை இணைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.அதே போன்று சி.ஐ.டி.யு. ஒருங்கிணைப்பாளர் கர்ணா கூறுகையில், புதுக் கோட்டைக்கு நிகராக அற ந்தாங்கியிலும் மக்கள் தொகை பெருக்கம் அடை ந்துவிட்டது.ஏற்கனவே அறந்தாங்கி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனை யாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதன் கட்டமை ப்புகள் சீரமைக்கும் பணிகள் தாமதமடைந்து வருகிறது.

    இதே அறந்தாங்கி மாவட் டமாக இருந்திருந்தால் பணி கள் விரைந்து முடிக்கப்பட்டி ருக்கும், அதே போன்று அறந்தாங்கியிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவ ட்டங்களுக்கு நேரடியாக பேருந்துகள் இயக்கப்படுகி றது,ஆனால் மக்கள் தொகை பெருகியபோதிலும் பேருந்து நிலையம் இன்னும் விரி வாக்கம் செய்யப்பட வில்லை. மேலும் தற்போது ள்ள நெருக்கடியில் காவல் நிலையம் இரண்டாக பிரிக்க வேண்டும் இதெல்லாம் சாத்தியப்பட வேண்டும் என்றால் அறந்தாங்கியை தலைைமயிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×