search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Destitute"

    • ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • ரூ.18 ஆயிரத்து 700-ஐ ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்கினர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத்துறை சார்பாக வெம்பக்கோட்டையில் உள்ள சிபியோ ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் கைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட், செஸ் போன்ற விளையாட்டு உபகரணங்களும், இல்லத்திற்கு தேவையான உபயோக பொருட்களும் வழங்கப்பட்டது.

    இதில் துறை தலைவர் பெமினா, உதவி பேராசிரியர்கள் வைரமுத்து, மதுமதி மற்றும் 48 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து குழந்தைகளுக்கு மத்திய உணவு வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஆங்கித்துறை மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் ரூ.18 ஆயிரத்து 700-ஐ ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்கினர்.

    • சேப்பாக்கம் மைதானம் அருகே உள்ள ஆதரவற்றோர் சிறுவர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம்.
    • இரவில் பசியுடன் தூங்கச் செல்பவர்களின் பசியை போக்கும் விதத்திலேயே இதனை 2 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறோம்.

    சென்னை:

    சென்னையில் சாலை யோரம் வசிக்கும் ஆதர வற்றோர்களுக்கு பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட விசேஷமான தினங்களில் சாப்பாடு வாங்கி கொடுக்கும் பழக்கத்தை பலர் வைத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் காலை உணவு மற்றும் மதிய உணவுகளையே வழங்குவார்கள். இரவு நேரங்களை கணக்கிட்டு பலரும் உணவு வழங்குவதில்லை.

    இந்நிலையில் சென்னையில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் பசியை போக்கும் வகையில் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து 'சென்னை ரொட்டி பேங்க்' என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி தினமும் இரவு உணவை வழங்கி வருகிறார்.

    2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் லத்திகாசரணுடன் சுஜாதா விஸ்வநாத், மகாதேவன், நிசாத் பசீர், ராஜீவ் ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

    சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மெண்டல் ஹெல்த் (ஐ.எம்.எச்) மையத்தில் சேர்த்து சிகிச்சை பெறும் பெரும்பாலானோர் வறுமையில் வாடுபவர்களாகவே உள்ளனர். இதுபோன்ற நபர்களை சிகிச்சைக்காக அழைத்து வருபவர்கள் தங்களது கூலி வேலையை விட்டுவிட்டே அவர்களோடு வந்து தங்குகிறார்கள்.

    இப்படி ஐ.எம்.எச்.சில் இரவில் தங்குபவர்களுக்கு இரவு உணவை வழங்க வேண்டும் என்கிற நோக்கத்துக்காக தொடங்கப்பட்ட இந்த உணவு வழங்கும் திட்டத்தை பின்னர் படிப்படியாக விரிவுபடுத்த இருக்கிறோம் என்றார் முன்னாள் டி.ஜி.பி. லத்திகா சரண்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, ஐ.எம்.எச். மையத்தில் உணவு வழங்கி விட்டு சேத்பட்டில் 25 திருநங்கைகளுக்கு உணவு வழங்கப்படும். சேப்பாக்கம் மைதானம் அருகே உள்ள ஆதரவற்றோர் சிறுவர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம் என்றார்.

    மும்பையில் எனது 'பேட்ஜ்மேட்' ஆன சிவானந்தன் என்பவர் அங்கு 'ரொட்டி பேங்க்' என்ற பெயரில் மும்பை வாசிகளுக்கு இரவு உணவை ரொட்டியாக வழங்கி வருகிறார். அதுவே எங்களது இரவு சாப்பாடு வழங்கும் திட்டத்துக்கு முன்னோடியாகும்' என்று கூறிய லத்திகா சரண் தினமும் 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் இரவில் பசியுடன் தூங்கச் செல்பவர்களின் பசியை போக்கும் விதத்திலேயே இதனை 2 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார். தமிழக காவல் துறையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் பதவிகளை வகித்த லத்திகா சரண் பணி காலத்தில் பல்வேறு உதவிகளை பலருக்கும் செய்து உள்ளார். ஓய்வுக்கு பிறகும் அதுபோன்ற பணியை அவர் தொடர்ந்து பசியாற்றி வருவது பாராட்டுக்குரியது தான்.

    • ஆதரவற்றோர்களை மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும்.
    • அவர்க ளுக்கு போதிய வசதி ஏற்படுத்தி கொடுத்து மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் பெரும்பாலும் பஸ் நிலையங்கள், கோவில், சுற்றுலா தலங்களுக்கு அருகே மனநிலை பாதிக்கப் பட்டவர்கள், ஆதவற்ற முதியோர்கள் என பலர் சுற்றித் திரிகின்றனர். இவற் றில் பெரும்பாலானோர் மனநிலை பாதிக்கப்பட்ட வர்கவே இருக்கிறார்கள். குறிப்பாக ராமேசுவரம், ஏர்வாடி, தேவிபட்டினம் பகுதிகளில் அதிகம் இவர் களை பார்க்க முடிகிறது.

    துணிகளை மூட்டைக ளாக கட்டிக்கொண்டும், கால்களில் புண்களோடும், காயங்களோடும் நடக்க முடி யாமல் ரோட்டில் ஊர்ந்து சென்று கொண்டி ருக்கின்ற னர். சிலர் அவர்கள் மீது கற்களை எறிவது, வம்பிழுப் பது என அதிகம் தொந்தரவு செய்கின்றனர். இதனால் இவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பரிதாபப் பட்டு யாரேனும் இவர்க–ளுக்கு உணவு அளித்தால் தான் உண்டு. இல்லையேல் பட்டினிதான். அதை அவர்க–ளுக்கு சொல்லவும் தெரிய–வில்லை.

    இவர்களை அதிகாரிகள் கண்காணித்து முறையான மருத்துவம் அளித்து காப்ப–கங்களில் அனுமதிக்க வேண்டும். அதே நேரத்தில் பொதுமக்களும் பொறுப் புணர்ந்து செயல்பட வேண் டும். இதுபோன்று இருப்ப வர்களை துன்புறுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இதுபோல் சுற்றித்திரிவோர் அதிகம். மாவட்டம் தோறும் அரசு காப்பகங்கள் அதிகப்படுத்த வேண்டும். இதோடு அவர்களுக்கு போதிய வசதி ஏற்ப டுத்தி கொடுத்து மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்கள் மீட்கப்படுவார்களா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    • நூற்றுக்கணக்கான நபர்கள் மதுரை சாலை ஓரங்களில் வசித்து வருகின்றனர்.

    மதுரை

    தமிழகத்தின் மிகப்பெரிய மாநகராட்சிகளில் மதுரையும் ஒன்றாகும். தூங்கா நகரம், கோவில் நகரம் என பல பெயர்களைக் கொண்ட மதுரைக்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது பெருமைக்குரிய விஷயமாக கருதப்படு கிறது.

    அதிலும் மீனாட்சி அம்மன் கோவில் உள்ளி ட்ட பல கோவில்க ளுக்கு வடமாநில பக்தர்கள் அதிகளவில் வருகிறார்கள். இது ஒரு புறமிருக்க, மற்றொரு புறமோ சாலைகளில் திரியும் ஆதரவற்றோர் எண்ணி க்கையும் அதிகமாகவே காணப்படு கிறது.

    அப்படி திரியக்கூடிய ஆதரவற்றோருக்கு அடைக்கலம் கொடுக்கும் இடமாக சாலையோரங்கள் தான். மதுரை மாநகரில் முக்கிய சாலையின் ஓரங்களில் ஆதரவற்ற வர்கள் வசித்து வருகி ன்றனர். அவர்கள் தங்குமிட வசதி மற்றும் நேரத்துக்கு உணவு கிடைக்காமல் அவதிப் பட்டு வருகின்றனர்.

    வயது வித்தியாசமின்றி ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கான நபர்கள் மதுரை சாலை ஓரங்களில் வசித்து வருகின்றனர். ரெயில் நிலைய முன்பகுதி, பாலம் மற்றும் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர்கள் உள்ளிட்டவைகளே, அவர்கள் தங்குமிடமாக இருக்கின்றன.

    சில வடமாநிலத்தினர் தங்களது குடும்பத்துடன் சாலை ஓரங்களில் வசிக்கின்றனர். அப்படி வசிப்பவர்களில் அதிகமாக முதியோர்கள் உள்ளனர். முதலில் ஏதாவது வேலை செய்து அன்றாடம் தங்களது செலவுக்கு வருமானம் தேடும் முதியவர்கள், அதன்பின் உழைக்க முடியாமல் கையேந்தும் நிலைக்கு சென்று விடுகின்றனர்.

    இவர்களில் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் உயிருக்கு போராடி கொண்டி ருப்பதை பார்க்க முடிகிறது. அவர்களை அந்த வழியாக செல்லக்கூடிய அரசு அதிகாரிகள் பார்த்த போதிலும், கண்டுகொ ள்ளாமல் சென்று விடுகின்றனர். இதனால் சிலர் இறந்ததும் அனாதை பிணங்களாக எடுத்துச் செல்லப்படு கின்றனர்.

    இவர்களும் நமது நாட்டின் குடிமக்கள் என்பதால் அவர்கள் மீது அரசு கவனம் செலுத்தி அவர்களின் நல்வாழ்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டி யது அவசிய மாகும். சாலையோரத்தில் தங்கியிருக்கும் சிலருக்கு மட்டுமே ஒருவேளை உணவு கிடைக்கிறது. மற்ற நேரங்களில் அவர்கள் பசியுடன் இருக்கின்றனர்.

    மதுரை நகரில் இப்படி தங்கியிருப்பவர்கள் எத்தனை பேர் என்பதை கணக்கெடுத்து, அவர்களுக்கு தங்குவதற்கு இட வசதி, உணவு மற்றும் மருத்துவ வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • மாநகராட்சி முகாமில் தங்கி உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • முகாம் அலுவலகம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    நெல்லை:

    உலக வீடற்றவர்கள் தினத்தையொட்டி டவுன் குறுக்குத் துறை மாநகராட்சி முகாமில் தங்கி உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையை மேற்கொள்ளும் வகையில் மாநகராட்சி மருத்துவர், செவிலியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

    . மேலும் குறுக்குத்துறை முகாம் அலுவலகம் வண்ண கலர் பேப்பர்கள் ஒட்டப்பட்டு கலர் கண்ணாடி, பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் வண்ண வண்ண விளக்குகள், ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விழாவையொட்டி தச்சை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் குப்பைகள் அகற்றப்பட்டு பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு பொடி தூவப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டிருந்தது.

    • மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.1கோடி மதிப்பிலான கடனுதவியை இ-சேவை, வணிக வள மையம் தொடக்கங்கியது.
    • ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சின்னஇலந்தைகுளம் கிராமத்தில் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுயஉதவி கூட்டமைப்பு குழு சார்பில் இ-சேவை மையம், வட்டார வணிக வள மையம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து மகளிர் சுய உதவி குழு சார்பில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் உணவு தானிய பொருட்கள் கண்காட்சி அமைக்கப்பட்டுசிறந்த சிறுதானிய உணவிற்கான பரிசுகள் வழங்கப்பட்டது.

    மேலும் இந்த மையத்தின் மூலம் 8-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுவிற்கு மாவட்ட திட்ட இயக்குனர் காளிதாசன் ரூ.75 லட்சத்திற்கான காசோலையை வழங்கி தொடங்கி வைத்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு மகளிர் குழு தலைவர் ஹெலன்கீதா தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் வெள்ளைபாண்டி, வட்டார மேலாளர் மகாலெட்சுமி, யூனியன் சேர்மன் பஞ்சு, மகளிர் குழு செயலாளர் மணிமேகலை, பொருளாளர் சகாயகில்டா மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர்.

    இதேபோன்று அலங்கா நல்லூர் யூனியன் அலுவ லகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் தொழில் முனைவோர்கள் வாழ்வாதார மேம்பாடு அடையும் பொருட்டு, வட்டார வணிக வள மையம் தொடங்கப்பட்டு இந்த மையத்தின் மூலம் 100 தொழில் முனைவோர்களுக்கு மாவட்ட திட்ட இயக்குனர் காளிதாசன் ரூ.25 லட்சத்திற்கான கடன் தொகையை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர்கள் கதிரவன், பேரூராட்சி பிரேமா, ஊராட்சி மன்ற தலைவர் முருகன், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் முத்துசெல்வி, ராதிகா, கலாராணி, உமாதேவி, தேவி மற்றும் வட்டார இயக்க மேலாண்மை பணியாளர்கள் மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    ×