search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "expectant"

    • சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்கள் மீட்கப்படுவார்களா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    • நூற்றுக்கணக்கான நபர்கள் மதுரை சாலை ஓரங்களில் வசித்து வருகின்றனர்.

    மதுரை

    தமிழகத்தின் மிகப்பெரிய மாநகராட்சிகளில் மதுரையும் ஒன்றாகும். தூங்கா நகரம், கோவில் நகரம் என பல பெயர்களைக் கொண்ட மதுரைக்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது பெருமைக்குரிய விஷயமாக கருதப்படு கிறது.

    அதிலும் மீனாட்சி அம்மன் கோவில் உள்ளி ட்ட பல கோவில்க ளுக்கு வடமாநில பக்தர்கள் அதிகளவில் வருகிறார்கள். இது ஒரு புறமிருக்க, மற்றொரு புறமோ சாலைகளில் திரியும் ஆதரவற்றோர் எண்ணி க்கையும் அதிகமாகவே காணப்படு கிறது.

    அப்படி திரியக்கூடிய ஆதரவற்றோருக்கு அடைக்கலம் கொடுக்கும் இடமாக சாலையோரங்கள் தான். மதுரை மாநகரில் முக்கிய சாலையின் ஓரங்களில் ஆதரவற்ற வர்கள் வசித்து வருகி ன்றனர். அவர்கள் தங்குமிட வசதி மற்றும் நேரத்துக்கு உணவு கிடைக்காமல் அவதிப் பட்டு வருகின்றனர்.

    வயது வித்தியாசமின்றி ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கான நபர்கள் மதுரை சாலை ஓரங்களில் வசித்து வருகின்றனர். ரெயில் நிலைய முன்பகுதி, பாலம் மற்றும் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர்கள் உள்ளிட்டவைகளே, அவர்கள் தங்குமிடமாக இருக்கின்றன.

    சில வடமாநிலத்தினர் தங்களது குடும்பத்துடன் சாலை ஓரங்களில் வசிக்கின்றனர். அப்படி வசிப்பவர்களில் அதிகமாக முதியோர்கள் உள்ளனர். முதலில் ஏதாவது வேலை செய்து அன்றாடம் தங்களது செலவுக்கு வருமானம் தேடும் முதியவர்கள், அதன்பின் உழைக்க முடியாமல் கையேந்தும் நிலைக்கு சென்று விடுகின்றனர்.

    இவர்களில் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் உயிருக்கு போராடி கொண்டி ருப்பதை பார்க்க முடிகிறது. அவர்களை அந்த வழியாக செல்லக்கூடிய அரசு அதிகாரிகள் பார்த்த போதிலும், கண்டுகொ ள்ளாமல் சென்று விடுகின்றனர். இதனால் சிலர் இறந்ததும் அனாதை பிணங்களாக எடுத்துச் செல்லப்படு கின்றனர்.

    இவர்களும் நமது நாட்டின் குடிமக்கள் என்பதால் அவர்கள் மீது அரசு கவனம் செலுத்தி அவர்களின் நல்வாழ்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டி யது அவசிய மாகும். சாலையோரத்தில் தங்கியிருக்கும் சிலருக்கு மட்டுமே ஒருவேளை உணவு கிடைக்கிறது. மற்ற நேரங்களில் அவர்கள் பசியுடன் இருக்கின்றனர்.

    மதுரை நகரில் இப்படி தங்கியிருப்பவர்கள் எத்தனை பேர் என்பதை கணக்கெடுத்து, அவர்களுக்கு தங்குவதற்கு இட வசதி, உணவு மற்றும் மருத்துவ வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×