search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாராயணசாமி"

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிகப்படியான இடத்தை பிடித்து காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி வரும்.
    • நாம் கருத்து வேறுபாடுகளை மறந்து வருகிற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடவேண்டும்.

    புதுச்சேரி:

    ராகுல்காந்தி எம்.பி. பாதயாத்திரை மேற்கொண்டு ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் புதுவை காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நிகழ்ச்சி நடந்தது.

    புதுவை பிள்ளைத்தோட்டம் பெரியார் சிலை அருகே தொடங்கிய இந்த ஊர்வலத்துக்கு காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார்.

    இந்த ஊர்வலம் காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக வந்து ஆம்பூர் சாலை அருகே நிறைவடைந்தது.

    ஊர்வலத்தின் முடிவில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிகப்படியான இடத்தை பிடித்து காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி வரும். அப்போது ராகுல்காந்தி பிரதமராவார்.

    இந்தியா கூட்டணியை பார்த்து பிரதமர் மோடிக்கு பயம் வந்து விட்டது. சோனியாகாந்தி 17 கேள்விகள் கேட்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பினால், அதற்கு பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலத் ஜோஷி பதில் சொல்லுகிறார்.

    புதுவையில் கவர்னரும், முதலமைச்சரும் சேர்ந்து கியாஸ் சிலிண்டர் மானிய திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். ஆனால் மானியம் இன்னும் வரவில்லை. ஏனெனில் அந்த திட்டத்துக்கு ரூ.120 கோடி தேவை. ஆனால் அதற்கு நிதி ஒதுக்கவில்லை. நாம் கருத்து வேறுபாடுகளை மறந்து வருகிற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடவேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    • யாரும் நான் சொன்னால் கேட்பதில்லை என்று முதலமைச்சர் அழுது புலம்புகிறார்.
    • ஆளத்தெரியவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டியது தானே?

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி என்னால் எதுவும் செய்ய முடியாமல் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறேன் என்று விரக்தியாக பேசினார்.

    இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநில அரசின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக மத்திய அரசு பறித்து வருகிறது. இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் வாய்மூடி மவுனமாக இருக்கிறார்.

    என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. யாரும் நான் சொன்னால் கேட்பதில்லை என்று முதலமைச்சர் அழுது புலம்புகிறார். 1963 யூனியன் பிரதேச சட்டப்படி மாநில முதலமைச்சருக்கு அதிகாரம் இருக்கிறது.

    மாநில அரசின் அதிகாரங்களை எல்லாம் கவர்னரிடம் சரண்டர் செய்து விட்டு தற்போது என்னால் முடியவில்லை என ரங்கசாமி கூறுகிறார். ஆளத்தெரியவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டியது தானே?

    பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தால் அதிக நிதி கிடைக்கும். மாநில அந்தஸ்து பெறுவோம் என்ற வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டு தற்போது என்னால் எதுவும் செய்யமுடியவில்லை என்று முதலமைச்சர் கூறுவது கபட நாடகம்.

    புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜனதா ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு கலால்துறை, உள்ளாட்சித்துறை என அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. குப்பை வாகனம் டெண்ட ரில் ஊழல் என்றதும் அதனை தடுத்து நிறுத்திவிட்டனர்.

    போலீஸ் துறையில் ஆட்கள் தேர்வுக்கு ரூ.7 லட்சம் லஞ்சம் பெறப்படுகிறது என்று கூறியவுடன் அதனையும் சரி செய்துவிட்டனர் என்றார்.

    • பா.ஜனதாவிற்கு பிற கட்சிகளை விட சாதகமாக இருப்பது அமலாக்கம், வருமான வரி, சி.பி.ஐ. ஆகிய துறைகள் தான்.
    • அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில காங்கிரஸ் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    நாட்டின் ஒற்றுமைக்காகவும், மக்களை காக்கவும் தியாகம் செய்த கட்சி காங்கிரஸ். புதுவையில் நான் முதலமைச்சராக இருந்த போது மோடி, அமித்ஷா ஆகியோர் கிரண்பேடியை கவர்னராக நியமித்து மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவிடாமல் தடுத்தனர்.

    பொய் குற்றச்சாட்டுகளை அமைச்சர்கள் மீதும், முதல்வர் மீதும் சி.பி.ஐ.க்கு அனுப்பும் பணிகளை செய்து வந்தார். இதேநிலை தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது

    பா.ஜனதாவிற்கு பிற கட்சிகளை விட சாதகமாக இருப்பது அமலாக்கம், வருமான வரி, சி.பி.ஐ. ஆகிய துறைகள் தான். பொய் குற்றச் சாட்டுகளை கூறி எதிர்கட்சிகளை மிரட்டும் வேலையை மோடி, அமித்ஷா செய்து வருகின்றனர்.

    எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜனதா ஆட்சியை அகற்ற வேண்டும். ஜனநாயகத்தை மதிக்காமல் செயல்படும் மோடி, அமித்ஷாவை தூக்கி எறியும் வகையில், பல மாநிலங்களின் முதல்வர்கள், தலைவர்கள் குழுவாக வருகிற 23-ந் தேதி சந்திக்கும் கூட்டம் நடக்கிறது.

    புதுவை மாநிலத்தில் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தான் இருக்க வேண்டும். அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். ராகுல் பிரதமராக வர வேண்டும். நாகபாம்பை விட கொடியவர்கள் பா.ஜனதாவினர். பா.ஜனதாவை அழிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுவைக்கு கடந்த 2 ஆண்டுகளில் மத்திய பா.ஜனதா அரசு அளித்தது ரூ.250 கோடி நிதி மட்டும்தான்.
    • பா.ஜனதா பொய்யை மூலதனமாக வைத்து மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையை சேர்ந்த ரவுடிகள் தமிழக பகுதிகளில் சென்று கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் முதல்-அமைச்சர் ரங்கசாமி கண்மூடி உள்ளார்.

    என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சொத்து குவிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். கோவில் சொத்துக்களை எம்.எல்.ஏ.க்கள் வாங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதா 40 சதவீதம் ஊழலில் கமிஷன் பெற்றனர். புதுவையில் பா.ஜனதா கூட்டணி 20 சதவீத கமிஷன் பெறுகின்றனர். இது வரும்காலத்தில் 40 சதவீதமாக உயரும்.

    கர்நாடக மாநிலத்தில் மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் மற்றும் புதுவை விவசாயிகள் பாதிக்கப்படுவர். இதை புதுவை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும்.

    மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடிதான் நிதி அளிக்கப்பட்டது என்றும், தற்போது ரூ.2½ லட்சம் கோடி பா.ஜனதா ஆட்சியில் வழங்கியுள்ளதாக மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது.

    தமிழகத்திலிருந்து பெறப்படும் நிதியை திருப்பித்தந்துவிட்டு மந்திரி அமித்ஷா மார்தட்டியுள்ளார். குஜராத்துக்கு கடந்த 9 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் வருவதால் மக்களை ஏமாற்ற நிதி வழங்குவதாக கூறி வருகின்றனர்.

    தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என முதுகெலும்பு உள்ள முதல்-அமைச்சர் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார். ஆனால் புதுவை முதல்-அமைச்சர் தனது நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள கைகட்டி சேவகம் செய்கிறார்.

    புதுவைக்கு கடந்த 2 ஆண்டுகளில் மத்திய பா.ஜனதா அரசு அளித்தது ரூ.250 கோடி நிதி மட்டும்தான். பா.ஜனதா பொய்யை மூலதனமாக வைத்து மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர். புதுவை மக்கள் இதை ஏற்க மாட்டார்கள். தமிழகத்திலும், புதுவையிலும் பா.ஜனதாவுக்கு முடிவு கட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் நாளே செங்கோல் வளைந்து விட்டது என்று கூறியுள்ளார்.
    • தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் கருப்புகொடி ஏற்றுகின்றனர். கள்ளச்சாராய மரணங்கள் நடந்த போது கருப்புக்கொடி ஏற்றவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா கோயிலின் 186-வது குரு பூஜை விழா நடைபெற்றுது. கவர்னர் தமிழிசை கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. தமிழின் செங்கோலுக்கு இவ்வளவு மரியாதை, அங்கீகாரம் கொடுத்த போது தமிழகத்தில் இருந்து யாரும் புறக்கணித்திருக்க கூடாது. இதில் எதிர்கட்சியினர் சிலர் அரசியல் செய்கின்றனர் என்றார்.

    தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. தமிழுக்கு பெருமை சேர்க்கும் என நினைத்த நேரத்தில் வாக்கிங் ஸ்டிக்காக முடக்கியதை பெருமைப்படுத்தி இருக்கிறார்கள்.

    ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் நாளே செங்கோல் வளைந்து விட்டது என்று கூறியுள்ளார்.

    அவர்கள் இப்படி பேசுவது சரியானதல்ல எவ்வளவு மாற்றுக்கருத்து இருந்தாலும், தமிழர்களின் செங்கோலை அரசியலாக்கி இருக்க கூடாது. இப்படி ஒரு முயற்சியை நாம் மேற்கொள்ளவில்லை என்றால் வருங்காலத்தில் செங்கோலின் அருமை பெருமை மறைந்து போயிருக்கும்.

    எந்த மாநிலத்துக்கும் மொழிக்கும் கிடைக்காத மரியாதை நமக்கு கிடைத்திருக்கிறதது. புதிய பாராளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் காலையில் தமிழ் மட்டுமே ஒலித்தது. தமிழ் ஆதீனங்கள் மட்டும் தான் அங்கு இருந்தனர். இது தமிழுக்கு கிடைத்த மரியாதை.

    மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கூட தமிழ் மாநிலத்துக்கு கிடைத்த அங்கீகாரத்தை பார்த்து மகிழ்கின்றனர். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் கருப்புகொடி ஏற்றுகின்றனர். கள்ளச்சாராய மரணங்கள் நடந்த போது கருப்புக்கொடி ஏற்றவில்லை.

    தமிழர்களின் அடையாளம் நிலை நாட்டும் போது கருப்புக்கொடி ஏற்றுகின்றனர். அப்படியானால் இவர்களின் அடையாளத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள். திருவள்ளுவர் செங்கோல் என்பது மக்களாட்சியின் ஒரு அடையாளம் என்று சொல்லியிருக்கிறார்.

    ஆகவே செங்கோல் பற்றி தவறாக சொல்பவர்கள் எல்லோரும் அதன் உண்மை தன்மையை புரியாதவர்களாக இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கவர்னர் மீதான ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறியுள்ளாரே என நிருபர்கள் கேட்டதற்கு, நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு நான் சிரிக்கத்தான் செய்வேன் என்று கவர்னர் தமிழிசை பதிலளித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் 2 நாள் பயிற்சி முகாம் தனியார் ஓட்டலில் நடந்தது.
    • எதிர்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து சந்தித்தால், பா.ஜனதாவை வீழ்த்தலாம்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் 2 நாள் பயிற்சி முகாம் தனியார் ஓட்டலில் நடந்தது.

    இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சான்றிதழ் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    காங்கிரஸ் இல்லாமல் பா.ஜனதாவை வீழ்த்த முடியாது. எதிர்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து சந்தித்தால், பா.ஜனதாவை வீழ்த்தலாம். லோக்சபா தேர்தலில் புதுவையில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தற்போது உண்மையான தொண்டர்கள்தான் காங்கிரசில் உள்ளனர். 2 ஆண்டாக மத்திய பா.ஜனதா அரசு, ஊழல் நிறைந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நாம் நடத்தி வரும் போராட்டங்களை மக்கள் பார்க்கின்றனர்.

    காங்கிரஸ் ஆட்சி வந்தால் மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மத்திய அரசு புதுச்சேரிக்கு 1,250 கோடி அதிகம் தந்துள்ளதாக பா.ஜ.க. கூறியுள்ளது.
    • புதுவையில் பொதுப்பணித்துறையில் 20 சதவீத கமிஷன் வாங்குகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் அமைச்சர் முதலமைச்சர் ரங்கசாமிதான். அவர் உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்து மாணவர் சேர்க்கை நடைபெற ஏற்பாடு செய்யவேண்டும். இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

    மத்திய அரசு புதுச்சேரிக்கு 1,250 கோடி அதிகம் தந்துள்ளதாக பா.ஜ.க. கூறியுள்ளது. அதில் ரூ.700 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை, ரூ.200 கோடி 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதற்காக வழங்கப்பட்டது. உண்மையில் நமக்கு கிடைத்தது ரூ.350 கோடிதான்.

    புதுவையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படவில்லை. அதேபோல் தமிழ் கட்டாயம் என்று அறிவிக்கப்படவிலை. தமிழ் மண்ணில் தமிழ் புறக்கணிக்கப்படுவது வேதனையாக உள்ளது.

    புதுவையில் பொதுப்பணித்துறையில் 20 சதவீத கமிஷன் வாங்குகிறார்கள். கலால்துறை முறைகேடு தொடர்பாக நிதித்துறை செயலாளர் ராஜூ, கலால்துறை துணை ஆணையர் சுதாகர் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர் என நினைக்கிறோம்.

    ஆனால் உண்மையில் நகரப்பகுதியில் அமைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைக்கும் கண்ட்ரோல் ரூம் ரூ.170 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டரை மத்திய அரசு நிறுவனமான ரெயில்டெல்லுக்கு அல்லாமல் தனியார் நிறுவனத்துக்கு வழங்கும் வகையில் அவர்கள் இருவரும் சாதகமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அரசு செயலாளராக இருந்த அருண் தலைமை செயலாளருக்கு புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில் முகாந்திரம் இருந்ததால் அதனை தலைமை செயலாளர் மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ளார். உள்துறைதான் அவர்களுக்கு முக்கிய துறைகளை ஒதுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. அதன்பின்னர் தான் இருவரும் மாற்றப்பட்டு உள்ளனர். தலைமை செயலாளர் இதில் நடவடிக்கை எடுக்காதிருந்தால் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கும்.

    முதலமைச்சரின் உத்தரவு இல்லாமல் அவர்கள் இவ்வாறு நடந்திருக்க மாட்டார்கள். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளேன். ஆனால் அவர்கள் பதில் சொல்வதில்லை. எனக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மட்டும் பதில் சொல்கிறார். விரைவில் கவர்னர் மீதான ஊழல் புகாரையும் வெளியிடுவேன்.

    இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் ரங்கசாமி மாநில அந்தஸ்து குறித்து எதுவும் பேசவில்லை.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரங்கசாமி நிர்வாகத்தை நடத்துவதில் ஞானசூனியமாக செயல்படுவதால், அதிகாரிகள் நீட்டும் கோப்புகளில் ஏன் என்று கேட்காமல் கையெழுத்திட்டு வருகிறார்.
    • விஷ சாராயம் தயாரிக்க பயன்படுத்தும் மெத்தனால் புதுவையிலிருந்து சென்றுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் காரைக்காலில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    யூனியன் பிரதேசங்களின் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு ஆட்டிப்படைக்க வேண்டும் என்பதுதான் மோடி அரசின் வேலை. அதிகாரிகளை நிர்வகிக்கும் அதிகாரம் இல்லை என்றால் துணை நிலை ஆளுநர்களை மதிக்கமாட்டார்கள் என்பதால் புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செயல்படுகிறார்.

    முதலமைச்சர் ரங்கசாமி நிர்வாகத்தை நடத்துவதில் ஞானசூனியமாக செயல்படுவதால், அதிகாரிகள் நீட்டும் கோப்புகளில் ஏன் என்று கேட்காமல் கையெழுத்திட்டு வருகிறார்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் என டெல்லி சுப்ரீம்கோர்ட்டு அளித்த தீர்ப்பு புதுவை உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.

    இதை செயல்படுத்த கவர்னர் தமிழிசை மறுக்கிறார். அவரின் பகல் கனவு பலிக்காது.

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கள்ளச்சாராய உயிரிழப்புக்கு பொறுப்பேற்று 2 தமிழக அமைச்சர்களை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என கவர்னரிடம் மனு கொடுத்துள்ளார்.

    விஷ சாராயம் தயாரிக்க பயன்படுத்தும் மெத்தனால் புதுவையிலிருந்து சென்றுள்ளது. அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறிய புதுவை முதலமைச்சர் ரங்கசாமியை பதவிநீக்கம் செய்ய முடியுமா? பா.ஜனதாவினர் ஊருக்குத்தான் உபதேசம் செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளி மற்றும் கல்லூரி தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது.
    • முதலமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவையில் தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    பள்ளி மற்றும் கல்லூரி தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. தேர்வு என்பது வாழ்க்கையில் ஒரு பகுதிதான். வாழ்க்கை இன்னும் நிறைய இருக்கிறது. தேர்வு எழுதாதவர் பல பேர் வாழ்க்கையில் முன்னுக்கு வந்துள்ளனர். மாணவர்கள் எந்த ஒரு தவறான முடிவு எடுக்க வேண்டாம்.

    தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வைக்க வேண்டும், தன்னம்பிக்கை வைக்க மாரல் கிளாசஸ் நடத்த வேண்டும், தற்காப்பு கலைக்கான வகுப்புகள் வைக்க வேண்டும். இது குறித்து முதலமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    கவர்னருக்கு அதிகாரம் என்பதில் புதுவையில் கவர்னருக்கும், முதலமைச்சருக்கும் எந்த வகையிலாவது கருத்து வேறுபாடு வருமா? என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காத்துக்கொண்டிருக்கிறார். எங்களுக்குள் கருத்து வேறுபாடு வராது. டெல்லி நிலை வேறு, புதுவை நிலை வேறு, மற்ற யூனியன் பிரதேசங்களுக்கான நிலை வேறு.

    மக்கள் சார்ந்த விஷயங்கள் புதுவையில் சிறப்பாக நடைபெறுவதுதான் நாராயணசாமிக்கு கவலையாக இருக்கிறது என தெரிவித்தார்.

    அப்போது அவரிடம், மத்திய அரசின் ரூ.2 ஆயிரம் நோட்டு தடை குறித்து கேள்வி எழுப்பியபோது, இந்த தடை பற்றி எனக்கு கவலை இல்லை. நான் போட்டு இருக்கும் கோட்டும் ஒயிட், நோட்டும் ஒயிட். ரூ.2 ஆயிரம் நோட்டு தடை பற்றி இன்னும் அறியவில்லை. விபரங்களை அறிந்து பதிலளிக்கிறேன் என்றார்.

    கவர்னர் தமிழிசை டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மதுக்கடைகள் திறப்பால் புதுச்சேரி மக்கள் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள் என்று நாராயணசாமி கூறினார்.
    • புதுச்சேரி முதல்-அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்லி அண்ணாமலை வற்புறுத்துவாரா?.

    மதுரை

    புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நாராயண சாமி இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவி லில் சாமி தரிசனம் செய் தார். பின்னர் அவர் நிரு பர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகாவில்ஆட்சி செய்த பா.ஜனதா அரசில் ஊழல் அதிரித்தது. இதனை மக்களிடம் எடுத்து கூறிய தால் காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சிக்கு வந்து உள்ளது.

    கர்நாடக மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்கு றுதிகளை காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக நிறைவேற்றும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    கள்ளச்சாராயம் தொடர்பாக நடந்த பலி துரதிஷ்டவசமானது. இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளார். மரக்கா ணத்தில் கள்ளச்சாராயம் புதுச்சேரியில் இருந்து தான் வந்துள்ளது.

    ஆனால் புதுச்சேரி அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. குடியிருப்புகள், பள்ளி அருகில் மதுக்கடைகள் திறப்பதால் புதுச்சேரி மக்கள் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு முதல்-அமைச்சர் ரெங்கசாமிதான் காரணம்.

    தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பா.ஜனதா இரட்டை வேடம் போடு கிறது. திராணி இருந்தால் கள்ளச்சாராய விவ காரத்தில் புதுச்சேரி முதல்-அமைச்சரை ராஜி னாமா செய்ய சொல்லி அண்ணாமலை வற்புறுத்து வாரா?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடகத்தில் முத்தான திட்டங்களை அறிவித்ததின் மூலம் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
    • கள்ளக்சாராயம் தயாரிக்க மெத்தனால் புதுச்சேரியில் இருந்துதான் கொண்டு வரப்படுகிறது.

    பழனி:

    புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பழனிக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். மலைக்கோவிலுக்கு ரோப்கார் மூலம் சென்று சாயரட்சையின்போது தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தார். பின்னர் அடிவாரத்தில் அவர் ஓய்வு எடுத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் முத்தான திட்டங்களை அறிவித்ததின் மூலம் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பா.ஜனதாவை மக்கள் நம்ப தயாராக இல்லை. இனி நடைபெற உள்ள அனைத்து தேர்தல்களிலும் பா.ஜ.க. தோல்வியையே சந்திக்கும்.

    விழுப்புரம் பகுதியில் விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக சென்று பார்த்தது பாராட்டுக்குறியது. வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்சாராயம் தயாரிக்க மெத்தனால் புதுச்சேரியில் இருந்துதான் கொண்டு வரப்படுகிறது. புதுச்சேரியில் கடந்த 1½ ஆண்டுகளாக கள்ளச்சாராயம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் கலால்துறையில் ஊழல் அதிகரித்துள்ளது. இதில் அம்மாநில முதல்வர் நடவடிக்கை எடுக்க வில்லை. கள்ளச்சாரயம், சட்ட ஒழுங்கு பிரச்சினைக்காக போராட்டம் நடத்த உள்ளோம்.

    கவர்னர் தமிழிசை முதலமைச்சர் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளார். அவரின் கைப்பொம்மையாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செயல்படுகிறார். மாநிலத்தில் தொழில் வளம் முதல் எந்த வளமும் மேம்படுத்தப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராகுல்காந்தி பிரதமராக வாய்ப்பும் உருவாகி உள்ளது.
    • பா.ஜ.க. ஆட்சியில் கர்நாடக மக்கள் பல இன்னல்களை அனுபவித்துள்ளனர்.

    புதுச்சேரி :

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது. இதனால் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்து வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.

    புதுச்சேரியிலும் காங்கிரஸ் கட்சியினர் வெற்றியை கொண்டாடினார்கள். புதுவை வைசியாள் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமையில் பட்டடாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

    அப்போது முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடக மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் இணைந்து ஆட்சியை அமைத்தது. 1½ ஆண்டுகளில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் தங்களது அதிகார பலம், பணபலத்தை கொண்டு பா.ஜ.க. ஆட்சியை அமைத்தனர்.

    இந்த ஆட்சி அமைந்தது முதல் கர்நாடக மாநில மக்கள் பல இன்னல்களை அனுபவித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பாடுபட்டு இந்த வெற்றியை பெற்றுள்ளனர்.

    பிரதமர் மோடி பல்வேறு கூட்டங்களில் பேசியும், ஊர்வலம் நடத்திய நிலையிலும் கர்நாடக மாநில மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தெளிவான வெற்றியை கொடுத்து அரியணையில் அமர்த்தியுள்ளனர். இந்த தேர்தல் வெற்றியானது, நடைபெற உள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில தேர்தல்களுக்கு முன்னோட்டமாகும்.

    2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஆட்சியை பிடிக்கும். ராகுல்காந்தி பிரதமராக வாய்ப்பும் உருவாகி உள்ளது. கர்நாடக தேர்தல் மூலம் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×