search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிக்கெட்"

    • இதுவரை இல்லாத அளவிற்கு 2023-ம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் மெட்ரோ ரெயிலில் பயணித்துள்ளார்கள்.
    • வாட்ஸ்அப் டிக்கெட் மூலமாக மற்றும் பேடிஎம் ஆப் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்ட எட்டு ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2023-ம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் மெட்ரோ ரெயிலில் பயணித்துள்ளார்கள்.

    கடந்த 2022-ம் ஆண்டில் 6.09 கோடி பேர் பயணித்துள்ளார்கள். 2022-ம் ஆண்டை விட 2023-ம் ஆண்டில் 3.01 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளார்கள். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட், மற்றும் போன்பே போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் பேடிஎம் ஆப் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அண்ணாமலையார் கோவிலில் இருந்து பார்பதற்காக கோவில் இணைய தளத்தில் முன்பதிவு வசதி செய்யப்பட்டு இருந்தது.
    • 10.2 மணிக்கு முடிந்தது. 2 நிமிடத்தில் ஆயிரத்து 700 அனுமதி சீட்டுகளும் விற்று தீர்ந்தன.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஆகியவற்றை அண்ணாமலையார் கோவிலில் இருந்து பார்பதற்காக கோவில் இணைய தளத்தில் முன்பதிவு வசதி செய்யப்பட்டு இருந்தது.

    நாளை அதிகாலை ஏற்றப்படும் பரணி தீப தரிசனம் காண 500 ரூபாய் விலையில் 500 அனுமதி சீட்டுகளும், நாளை மாலை அண்ணாமலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீப தரிசனம் காண 600 ரூபாய் விலையில் 100 அனுமதி சீட்டுகளும், 500 ரூபாய் விலையில் ஆயிரம் அனுமதி சீட்டுகளும் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

    இதற்கான முன்பதிவு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. 10.2 மணிக்கு முடிந்தது. 2 நிமிடத்தில் ஆயிரத்து 700 அனுமதி சீட்டுகளும் விற்று தீர்ந்தன.

    இந்த இணையதளத்தில் அனுமதி சீட்டு பெற முயன்ற பெரும்பாலான பக்தர்கள் ஒரு அனுமதி சீட்டினை மட்டுமே பெறமுடிந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

    • மெட்ரோ ரெயில் சேவைக்கு இருக்கும் வரவேற்பை விரிவாக்கம் செய்வதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
    • பொது மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள சலுகையுடன் ஒரு நிபந்தனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களின் அதிநவீன போக்குவரத்து முறையாக அறிமுகமாகி இன்று அத்தியாவசிய போக்குவரத்து சேவையாக உருவெடுத்து இருக்கிறது சென்னை மெட்ரோ ரெயில். நகரின் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் துவங்கப்பட்டு, தற்போது நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதில் இருந்தே, மெட்ரோ ரெயில் சேவைக்கு இருக்கும் வரவேற்பை புரிந்து கொள்ள முடியும்.

    சென்னை மெட்ரோ ரெயிலில் தினசரி பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பொது மக்களுக்கு அவ்வப்போது சலுகைகளும் அறிவிக்கப்படுகின்றன.

    அந்த வகையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி ஒரு நாள் மட்டும் ரூ.5 கட்டணத்தில் பொது மக்கள் பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.

    ஆனால், அதற்கு ஒரு நிபந்தனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாடிக் க்யூஆர், பேடிஎம், வாட்ஸ்அப் மற்றும் போன்பே மூலம் பெறும் டிக்கெட்டுகளுக்கு மட்டும் இந்த சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • யு.டி.எஸ். செல்போன் செயலி தெற்கு ரெயில்வேயில் கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
    • யு.டி.எஸ். செல்போன் செயலி பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

    சென்னை :

    ரெயில் பயணிகள் முன்பதிவில்லாத ரெயில் டிக்கெட்டை பெற, டிக்கெட் கவுண்ட்டரில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை இருந்து வந்தது. இதனால், பயணிகளின் நலன் கருதி எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யு.டி.எஸ். செல்போன் செயலி தெற்கு ரெயில்வேயில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. பயணிகள் தங்களது ஸ்மார்ட் போனில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, முன்பதிவில்லாத டிக்கெட்டை எடுத்துக்கொள்ள முடியும்.

    இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. ஆனாலும், முக்கிய ரெயில் நிலையங்களில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே, இந்த செயலியை பயன்படுத்தி, முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க முடியும். யு.டி.எஸ். செல்போன் செயலியிலும் சில ரெயில் நிலையங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதை கிராமப்புறங்களில் உள்ள ரெயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்த பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில், தெற்கு ரெயில்வேயில் ஹால்ட் நிலையங்களில் யு.டி.எஸ். செல்போன் செயலியை பயன்படுத்தி, டிக்கெட் எடுக்கும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹால்ட் நிலையம் என்பது கிராமப்புறத்தில் உள்ள ரெயில் நிலையம் ஆகும். இதற்கு முன்பாக கிராமப்புற ரெயில் நிலையங்களில், டிக்கெட்டை பயணிகளுக்கு முகவர்கள் நேரடியாக வழங்குவார்கள். தற்போது, யு.டி.எஸ். செல்போன் செயலி மூலமாக பயணிகள் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

    மேலும், இந்த செயலி மூலம் சீசன் டிக்கெட், நடைமேடை டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட் ஆகியவற்றையும் பெற்றுக்கொள்ளலாம்.

    • பயணி அபராதம் செலுத்தவில்லை என்றால், 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
    • டிக்கெட் பெற்றும் பயணம் செய்ய முடியாமல் போனவர்களின் எண்ணிக்கை 1.65 கோடி ஆகும்.

    புதுடெல்லி :

    மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் சந்திரசேகர் குவார், ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பயணிகள் எண்ணிக்கை, அவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராத தொகை விவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டப்படி ரெயில்வேயிடம் கேட்டிருந்தார்.

    அதற்கு ரெயில்வே தெரிவித்த தகவல்படி, 2022-23-ம் ஆண்டில் ரெயில்களில் டிக்கெட் இன்றி அல்லது தவறான டிக்கெட்டுடன் பயணித்த 3.60 கோடி பயணிகளிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 200 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்கள் எண்ணிக்கை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் ஒரு கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது.

    2021-22-ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 2.70 கோடியாக இருந்தது. அப்போது ரூ.1,574 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டிருந்தது.

    இந்த 2022-23-ம் ஆண்டில் டிக்கெட் இல்லாமல் பயணித்து பிடிபட்டவர்களின் எண்ணிக்கை, பல சிறிய நாடுகளின் மொத்த மக்கள்தொகையைவிடவும் அதிகம் என்பது ஒரு சுவாரசிய தகவல்.

    ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து பிடிபடுபவர்கள், டிக்கெட்டுக்கான அசல் கட்டணத்துடன், குறைந்தபட்சம் ரூ.250 அபராதமாக செலுத்த வேண்டும்.

    அந்த பயணி அதை செலுத்த மறுத்தாலோ, அவரிடம் பணம் இல்லாவிட்டாலோ வழக்கு பதிவு செய்யப்பட்டு மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர்படுத்தப்படுவார். அவர் அதிகபட்சமாக ரூ.1,000 வரை அபராதம் விதிப்பார். அந்த பயணி அப்போதும் அபராதம் செலுத்தவில்லை என்றால், 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

    இதற்கிடையில், ரெயில்வேயின் தகவல்படி, 2022-23-ம் ஆண்டில் 2.7 கோடி பயணிகள் டிக்கெட் பெற்றிருந்ததும் காத்திருப்பு பட்டியலில் இருந்ததால் ரெயிலில் பயணம் செய்ய முடியவில்லை. இது முக்கிய வழித்தடங்களில் ரெயில் சேவை பற்றாக்குறையை காட்டுகிறது என பயணிகள் குறை தெரிவிக்கின்றனர்.

    முந்தைய நிதியாண்டில் இவ்வாறு டிக்கெட் பெற்றும் பயணம் செய்ய முடியாமல் போனவர்களின் எண்ணிக்கை 1.65 கோடி ஆகும்.

    • விருத்தாசலம் அருகே ெரயிலில் இருந்து விழுந்து அடையாளம் தெரியாத நபர் பலியானார்.
    • இறந்த கிடந்த நபரின் சட்டைப் பையில் 22-ந்தேதியிட்ட ரெயில் டிக்கெட் இருந்தது.

    கடலூர்:

    விருத்தாசலத்தில் இருந்து சென்னை செல்லும் ெரயில்வே இருப்பு பாதை அருகே ஆண் பிணம் கிடந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் விருத்தாசலம் போலீசாரிடம் தெரிவித்தனர். அவர்கள் விருத்தாசலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த கிடந்த நபரின் சட்டைப் பையில் 22-ந்தேதியிட்ட ரெயில் டிக்கெட் இருந்தது. இதில் இவர் பெண்ணாடத்தில் இருந்த தாம்பரம் செல்ல டிக்கெட் எடுத்துள்ளார். ரெயிலில் பயணம் செய்த அந்த நபர் தவறி விழுந்து இறந்து 3 நாட்கள் ஆகி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எப்படி வந்தது என்று பொதுமக்கள் கேள்வி
    • போலியாக அச்சிடப்பட்டவையா என்று அதிர்ச்சி

    ஜெயங்கொண்டம்

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் இயக்கப்படும் பேருந்துகளில் இயந்திரத்தின் மூலம் பயண சீட்டுகள் வழங்கப்பட்டாலும் 40% பேருந்துகளில் டிக்கெட் கிழித்தே வழங்கப்படுகிறது இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள விசாலாட்சி நகரில் அரசு பேருந்து கிழித்து வழங்கப்படும் பயண சீட்டு ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது சேலம் மற்றும் கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட பேருந்து பயண சீட்டுகள் ஒரே இடத்தில் குவிந்து கிடந்தன. 220 ரூபாய் பயண சீட்டிலிருந்து ஒரு ரூபாய் பயண சீட்டு வரை 300-க்கும் மேற்பட்ட பேருந்து பயண சீட்டுகள் ஒரே இடத்தில் குவிந்து கிடந்தது. அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பயண சீட்டுகள் ஒரே இடத்தில் எவ்வாறு கிடைக்கிறது என்பது மர்மமாக உள்ளது போக்குவரத்து கழகத்திலிருந்து டிக்கெட்டுகளை நடத்துனர்களுக்கு வழங்கும் போது டிக்கெட்டின் எண்கள் உள்ளிட்டவற்றை குறித்துக் கொண்டே நடத்துனருக்கு வழங்கப்படுகிறது மேலும் நடத்துனர்கள் இரவு நேரங்களில் கணக்கை ஒப்படைக்கும் போது டிக்கெட்டுகளின் எண்களின் அடிப்படையில் கணக்கை ஒப்படைக்க வேண்டும் எனவே அரசின் சார்பில் அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டாக இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என கூறும் சமூக ஆர்வலர்கள் பேருந்துகளில் வழங்குவதற்காக போலியாக டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு இவ்வாறு சிதறி கிடக்கின்றனவா என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பயண சீட்டுகள் ஒரே இடத்தில் குவிந்து கிடந்தது அப்பகுதி மக்களுடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத் தில் 7 ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • ரூ.1500 விலையிலான டிக்கெட்டுகள் கவுண்டரில் மட்டுமே விற்கப்பட்டன.

    சென்னை:

    16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 31-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது.

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத் தில் 7 ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 3-ந் தேதி முதல் ஆட்டம் சேப்பாக்கத்தில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை தோற்கடித்தது.

    சேப்பாக்கம் எம்.ஏ.சிதம் பரம் ஸ்டேடியத்தில் 2-வது ஐ.பி.எல். ஆட்டம் வருகிற 12-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

    ஏற்கனவே ஐ.பி.எல். போட்டிக்கு ரசிகர்களின் ஆர்வம் அதிகமாக இருந்தது. முதல் போட்டியில் சி.எஸ்.கே. வீரர்கள் சிறப்பாக ஆடியதால் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.

    இதனால் டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் நேற்று இரவில் இருந்தே ஸ்டேடியம் முன்பு திரண்டனர். காலையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். அவர்கள் டிக்கெட்டுகளை பெறுவதற்காக நீண்ட வரிசையில் நின்றனர். ரசிகர்கள் கூட்டம் திரண்டு இருந்ததால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    டிக்கெட் விற்பனை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. ஒருவருக்கு 2 டிக்கெட் வழங்கப்பட்டது.கவுண்டரிலும், ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட் விற்பனை நடந்தது.

    குறைந்தபட்ச டிக்கெட்டான ரூ.1500-யை வாங்குவதற்கு தான் ரசிகர்கள் பெரும் அளவில் வரிசையில் காத்திருந்தனர்.

    சி, டி, மற்றும் இ கேலரிகளுக்கான கீழ்தளத்தின் டிக்கெட் விலை ரூ.1500 ஆகும். இதுதவிர ரூ.2 ஆயிரம் (ஐ, ஜே, மற்றும் கே கேலரிகளின் மேல்தளம்), ரூ.2500 (ஐ, ஜே மற்றும் கே கேலரிகளின் கீழ்தளம்), ரூ.3000 (டி, இ கேலரிகளின் மேல்தளம்) டிக்கெட்டுகள் விற்பனையானது.

    ரூ.3 ஆயிரம் விலையிலான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டும் விற்பனையாகின. ரூ.2 ஆயிரம், ரூ.2500 விலையிலான டிக்கெட்டுகள் கவுண்டர் மற்றும் ஆன்லைனிலும் விற்பனை செய்யப்பட்டது. ரூ.1500 விலையிலான டிக்கெட்டுகள் கவுண்டரில் மட்டுமே விற்கப்பட்டன. 

    • கடந்த 2022-ம் ஆண்டில் சேலம் ரெயில்வே கோட்டத்தில் முறைகேடாக ரெயில் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டதாக 73 வழக்குகள் ஆர்.பி.எப்.போலீசார் பதிவு செய்துள்ளனர்.
    • இந்த 73 வழக்குகளிலும் முறைகேடாக கூடுதல் விலைக்கு ரெயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்த 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சேலம்:

    சேலம் கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்கள் வழியாக தினமும் 150-க்கும் மேற்பட்ட ரெயில்கள் தினசரி சென்று வருகின்றன. இந்த ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு டிக்கெட் எடுத்து முறைகேடாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக சேலம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசுக்கு (ஆர்.பி.எப்) புகார் வந்தது. இதையடுத்து போலீசார், முறைகேடாக டிக்கெட் விற்பனையில் ஈடுப டும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி.யில் பல்வேறு பெயர்களில் கணக்குகளை வைத்துக்கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து விற்பனை செய்பவர்களை பணபரிமாற்றத்தின் மூலம் கண்டறிந்து அவர்களை கண்காணித்து வருகின்றனர்.

    75 பேர் கைது

    அந்த வகையில் கடந்த 2022-ம் ஆண்டில் சேலம் ரெயில்வே கோட்டத்தில் முறைகேடாக ரெயில் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டதாக 73 வழக்குகள் ஆர்.பி.எப்.போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்த 73 வழக்குகளிலும் முறைகேடாக கூடுதல் விலைக்கு ரெயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்த 75 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்க

    ளிடம் இருந்து ரூ.28 லட்சம்

    மதிப்பிலான டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்த

    னர். மேலும் டிக்கெட் முன்பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட கணினி உள்ளிட்ட மின்னணு எந்திரங்களையும் கைப்பற்றினர்.

    ரூ.1 லட்சம் மதிப்பு

    நடப்பாண்டில் கடந்த 2 மாதங்களில் மட்டும் சேலம் ரெயில்வே கோட்டத்தில் 4 வழக்குகள் பதிவு செய்ய ப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து போலி பெயரில் எடுக்கப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான ரெயில் டிக்கெட்டுகளை ஆர்.பி.எப். போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    • ரெயில் டிக்கெட் பதிவு செய்ய புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • 10 மாதங்களில் மொபைல் போன் மூலம் 50.75 லட்சம் பயண சீட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    மதுரை

    ரெயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகள் எடுக்க, கடைசி நேரத்தில் வரும் பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டி உள்ளது. இதனை தவிர்க்க முன்பதிவு இல்லாத பயண சீட்டுகளை மொபைல் போன் மூலம் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி ப்ளே ஸ்டோரில் யூடிஎஸ் மொபைல் ஆப் செயலியை தரவிறக்கம் செய்து எளிதாக டிக்கெட் எடுக்கலாம். மேலும் சீசன்- பிளாட்பாரம் டிக்கெட்டுகளையும் பதிவு செய்யலாம். சீசன் டிக்கெட்டுகளை எளிதாக புதுப்பிக்கவும் இயலும்.

    அதாவது ரெயில் நிலையத்தில் இருந்து 15 மீட்டர் முதல் 20 கி.மீ. தொலைவு வரை வீட்டில் இருந்தே பயணச்சீட்டு பதிவு செய்து கொள்ளலாம். மொபைல் போனில் அன்ரிசர்வ் டிக்கெட் எடுக்கும் முறையில் காகிதம் இல்லாத- காகிதத்துடன் கூடிய பயண சீட்டுகள் உள்ளன. அதன்படி சுற்றுச்சூழலுக்கு

    காகிதம் இல்லாத பயணச் சீட்டு எடுக்க முடியும். மொபைல் போன் யூடிஎஸ் செயலியில் "காண்க டிக்கெட்" (SHOW TICKET option) பகுதியில் உள்ள பயணச்சீட்டை எடுக்கலாம். அதனை டிக்கெட் பரிசோதரிடம் காண்பித்துக் கொள்ளலாம். இது காகிதம் இல்லாத முறை ஆகும்.

    அடுத்தபடியாக காகிதத்துடன் கூடிய முறை. இதன்படி பயணச்சீட்டு பதிவு செய்யும்போது வந்த அல்லது குறுஞ்செய்தியில் வந்த அல்லது பதிவு வரலாற்றில் உள்ள பதிவு அடையாள எண் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி டிக்கெட் பதிவு ரெயில் நிலையத்தில் உள்ள தானியங்கி பயணச்சீட்டு பதிவு எந்திரத்தில் பயணச்சீட்டு அச்சிட்டு கொள்ளலாம்.

    அனைத்து ரெயில் நிலையங்களிலும் சிறு சிறு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருப்பது போல க்யூஆர் கோட், பயணச்சீட்டு அலுவலகம் அருகே காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை ஸ்கேன் செய்தவுடன் போக வேண்டிய ரெயில் நிலையத்தின் பெயரை பதிவு செய்து மின்னணு வசதி வாயிலாக பணம் செலுத்தி டிக்கெட்டை எளிதாக பதிவு செய்யலாம்.

    காகிதம் இல்லாத முறையில் டிக்கெட் எடுக்கும் போது மொபைல் போனில் பதிவு செய்த பயணச்சீட்டை டிக்கெட் பரிசோதகரிடம் காட்ட வேண்டும். இல்லையெனில் உரிய அபராதம் விதிக்கப்படும். தென்னக ரெயில்வேயில் கடந்தாண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு ஜனவரி மாதம் வரை கடந்த 10 மாதங்களில் மொபைல் போன் மூலம் 50.75 லட்சம் பயண சீட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் 2.51 கோடி பயணிகள், கூட்ட நெரிசல் இன்றி டிக்கெட் எடுத்து பயணம் செய்து உள்ளனர்.

    தென்னக ரெயில்வேயில் மொபைல் போன் பதிவு மூலம் பயண சீட்டு வருமானமாக ரூ.24.82 கோடி ஈட்டப்பட்டுள்ளது.

    • சேலம் ரெயில்வே கோட்ட பகுதியில் டிக்கெட்டு இன்றி பயணம் செய்தவர்களிடம் ரூ.12.2 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டது.
    • கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.5.1 கோடி மட்டுமே அபராதம் வசூலானது.

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் ரெயில்களில், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் உத்தரவின் பேரில் தீவிரமாக டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோர், முறைகேடாக பயணிப்போர், லக்கேஜ் எடுக்காமல் இருத்தல் போன்றவற்றை கண்டறிந்து டிக்கெட் பரிசோதகர்கள் அபராதத்துடன் கூடிய கட்டணத்தை வசூலித்து வருகின்றனர்.

    அந்த வகையில் நடப்பு நிதி ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரையில் 9 மாத காலத்தில் டிக்கெட் பரிசோதனை மூலம் ரூ.12 கோடியே 26 லட்சத்து 23 ஆயிரத்து 832 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.5 கோடியே 1 லட்சத்து 90 ஆயிரத்து 508 மட்டுமே அபராதம் வசூல் ஆகி இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது 69 சதவீதமாக அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    சேலம் கோட்டத்தில் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 23 ஆயிரத்து 191 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில்வே நிலையங்களிலும் தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், பயணிகள் ரெயில்கள் நின்று செல்கின்றன. தினமும் இந்த ரெயில்களில் பயணிகள் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர்.

    அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் குழுவினர் அவ்வபோது சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள். அதன்படி கடந்த மே மாதத்தில் முறையான டிக்கெட் இன்றி பயணித்தவர், அதிக பார்சல் கொண்டு வந்தவர் உள்பட 23 ஆயிரத்து 191 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் 1.25 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    ×