search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம்
    X

    ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம்

    சேலம் கோட்டத்தில் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 23 ஆயிரத்து 191 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில்வே நிலையங்களிலும் தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், பயணிகள் ரெயில்கள் நின்று செல்கின்றன. தினமும் இந்த ரெயில்களில் பயணிகள் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர்.

    அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் குழுவினர் அவ்வபோது சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள். அதன்படி கடந்த மே மாதத்தில் முறையான டிக்கெட் இன்றி பயணித்தவர், அதிக பார்சல் கொண்டு வந்தவர் உள்பட 23 ஆயிரத்து 191 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் 1.25 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×